உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை ஒன்று விமர்சனம் செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப…
-
- 7 replies
- 809 views
-
-
தன்னை கேலி செய்த நிகழ்ச்சியை கடுமையாக சாடிய டிரம்ப் அமரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நையாண்டி நிகழ்ச்சியான "சாட்டர்டே நைட் லைவ்" என்ற நிகழ்ச்சியில் அலெக் பால்ட்வின் என்ற நடிகர் தன்னை போன்று நடித்தது மிக மோசமாக இருந்தது என அந்நிகழ்ச்சியை கடுமையாக சாடியுள்ளார். அந்த நிகழ்ச்சி "பார்க்கதக்கதன்று" மற்றும் "முற்றிலும் ஒருதலை பட்சமானது" என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் டிரம்ப். டிரம்ப் வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக டிவிட்டரில் அதிக கவனம் செலுத்துவதாக சமீபத்திய நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டது. முன்னதாக முக்கிய பிரசார நன்கொடையாளரின் வீட்டில் நடைபெற்ற "கதாநா…
-
- 1 reply
- 464 views
-
-
ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லருக்கு பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த பழைமையான கார்கள் தற்போது கிடைத்துள்ளது. பாரிஸ்: இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். நாஜிக்களிம் கையில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது விலையுயர்ந்த கார்களை மத…
-
- 0 replies
- 511 views
-
-
பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை க்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மே…
-
- 0 replies
- 301 views
-
-
தைவானுடன் ட்ரம்ப் நெருங்குவதால் சீனா கோபமா?- அறிந்திட 5 தகவல்கள் இடது: அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் | இடது: தைவான் அதிபர் சாய் இங் வென் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமெரிக்கா உடனான உறவில் பாதிப்பு இல்லை என சீனா கூறியுள்ளது. இது தொடர்பான 5 தகவல்கள்: * சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதன்படி, தைவானுடனான தூதரக உறவை அமெரிக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முறித்துக் கொண்டது. அரசியல், சமூக பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் சீனாவ…
-
- 0 replies
- 472 views
-
-
அமெரிக்காவிலிருந்து பயங்கரவாதத்தை விரட்ட அனைத்தையும் செய்வேன்: டொனால்டு ட்ரம்ப் ஆவேசப் பேச்சு ஓஹியோ மாகாணத்தில் பேசும் டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏஎப்பி. அமெரிக்கா ஒன்று படவேண்டுமென்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், இதற்காக அனைத்தையும் செய்வேன் என்று டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். மதவெறியையும், தவறான எண்ணங்களையும் ஒரு போதும் இனி அனுமதிக்க முடியாது என்றார் ட்ரம்ப். சின்சினாட்டியில் மக்கள் முன் உரையாற்றிய ட்ரம்ப் கூறியதாவது: பயங்கரவாதத்தை அமெரிக்காவிலிருந்து விரட்ட நம் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்தையும் செய்வோம். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் யார், இவ…
-
- 0 replies
- 437 views
-
-
இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது. இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு போராளிகள் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றும், கார் குண்டு மற்றும் கடத்தல் என மத்திய கிழக்கு நாடுகளில் ப…
-
- 1 reply
- 420 views
-
-
அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் என்பது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.6 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. அமெரிக்காவில் வேலையில்லா சதவீதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் இதன் காரணமாக இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் சுமார் 1,78,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு வலுவான பொருளாதாரத்தை உ…
-
- 0 replies
- 326 views
-
-
மோடி: சர்க்காரா... ரிப்பேரா? (வீடியோ) கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்று தெரிவித்து, கடந்த மாதம் 8-ம் தேதி, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, இந்தியாவில் எந்த சாமான்ய மக்களும் எதிரிகள் அல்ல. 60 சதவீதம் அளவுக்கு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு, குறைந்தது, அதற்கு ஈடாகவோ அல்லது சற்றுகுறைந்த விகிதத்திலோ மாற்று கரன்சிகளை அச்சடித்து, வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் அல்லவா இந்த அதிரடி நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டிருக்க வேண்டும்? பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மற்ற துறை அமைச்சர்களுக்கே அன்றைய தின…
-
- 0 replies
- 337 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் பிபிசி பேசியது. * நைஜீரியாவில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்று ஹொங்காங்கின் பிரபலம் ஒருவர் பேசுகிறார். இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு சீன எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி போராளி அவர்.
-
- 0 replies
- 241 views
-
-
இந்தியாவில் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம், வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணம், வருமான வரி கட்டிய பணத்தில் தங்கம் வாங்கியிருந்தால், வரி விதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட வருமான வரி சட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கம்: புதிய வருமான வரிசட்டத்தில், நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. வருமான வரி சட்டம் 1961 ன் கீழ் பழைய வரிகளே தொடரும். வருமானத்துறை சோதனையின் போது, கூடுதல் தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். முன்னர் 30 சதவீதமாக இருந்த வரி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின்படி திருமணமான பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத ப…
-
- 1 reply
- 416 views
-
-
ஓய்வு பெற்ற தளபதியை பாதுகாப்பு செயலராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நடைபெறுகின்ற முதலாவது பேரணியில், ஓய்வு பெற்றிருக்கும் ஜேம்ஸ் மேட்டிஸை புதிய பாதுகாப்பு செயலராக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர் 'பைத்தியக்கார நாய்' என்று அறியப்படும் முன்னாள் சிறப்புப் படை வீரரான மேட்டிஸ், தன்னுடைய போர் தந்திர சிந்தனை, கடுமையான மொழி பயன்பாடு மற்றும் இரானிடம் நம்பிக்கையின்மை ஆகிய பண்புகளால் பிரபலமானவர். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பரந்த அளவிலாக போர்க்கள அனுபவம் பெற்றவர். தளபதி ஜார்ஜ் பேட்டனை போல செயல்படுகிற மற்றும் நம்மில் சிறந்தவர் ஜேம்…
-
- 0 replies
- 444 views
-
-
அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை: ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு ஒரு முறை போதும்! ஃபிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒல்லாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, நாட்டு மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நான்கரை ஆண்டுகாலம் இந்த நாட்டை உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்திய தான், இந்த நாட்டின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்குப் பார்வையிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை என்று தெரிவித்துள்ளார். பிரபல தர வரிசையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள ஒல்லாந்த…
-
- 2 replies
- 373 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எச் ஐ வி தடுப்பு மருந்துச் சோதனை ஆரம்பமாகியுள்ளது. * மாபெரும் மயானமாக அலெப்போ நகர் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.அரசாங்க படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைகிறது. * உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பவழப்பாறைத் தொடர் அழிவை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமடைதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.
-
- 0 replies
- 316 views
-
-
யுத்தத்தினால் குடிநீரின்றி உயிரிருந்தும் உயிரற்றவர்களாக மாறிய குழந்தைகள் ; உலகை உலுக்கிய அதிர்ச்சி குடிக்க தண்ணீர் மற்றும் பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர். ஹசன்ஷாம் அகதி முகாமிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒருவருக்கு 2 வயதும் மற்றொருவருக்கு 9 வயதாவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், இது என…
-
- 0 replies
- 392 views
-
-
பிக் மேக் பர்கரை கண்டுபிடித்த ஜிம் டெலிகட்டி 98வது வயதில் காலமானார் மெக் டொனால்ட்ஸின் பிக் மேக் பர்கரை உருவாக்கிய மைக்கேல் ஜிம் டெலிகட்டி தன் 98 வது வயதில் காலமானார். ஜிம் டெலிகட்டி 1967ல், மைக்கெல் ஜிம் டெலிகட்டி, பன்றி இறைச்சி, லெட்டூஸ் கீரை, ஊறுகாய், வெங்காயம் மற்றும் ஒரு தனித்துவமான சாஸ் இவை அனைத்தையும் ஒரே பர்கரில் இருக்கும்படியான ஒரு சூத்திரத்தை கண்டுபிடித்தார். அமெரிக்காவில் ஜிம், மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முதல் வர்த்தக உரிமையை பெற்று 1950களில் பல மெக்டோனால்ட் உணவகங்களை நடத்தினார். ஜிம் டெலிகட்டியை ''மாபெரும்'' மனிதர் என்றும், தங்கள் பிராண்ட் மீது அவர் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம்…
-
- 0 replies
- 643 views
-
-
அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சொந்த வர்த்தக வேலைகளை விட்டுவிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக செயல்படும் தனது பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான முடிவை எடுப்பதற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது தொழிலுக்கும் தனது பதவிக்கும் இடையில் முரண்பாடு வராமல் இருக்க இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அடுத்தடுத்த டிவிட்டர் செய்திகளில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை, டிசம்பர் மாதத்தின் இடைத் தேதிகளில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர…
-
- 3 replies
- 410 views
-
-
வைரலாகும் நவாஸ் ஷெரிஃப் - டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்,.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் போனில் பேசியுள்ளார். நவாஸ் பற்றி ட்ரம்ப் பேசியதை அப்படியே அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். President Trump said Prime Minister Nawaz Sharif you have a very good reputation. You are a terrific guy. You are doing amazing work which is visible in every way. I am looking forward to see you soon. As I am talking to you Prime Minister, I feel I am talking to a person I have known for long. Your country is amazing with tremendous opportunities. Pakistanis are one of the most intelligent people. …
-
- 0 replies
- 598 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார்: ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார் என ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார் வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. “நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிச்செல்லுக்கு மந்திரி பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது. ஒரு பெண், முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆகி…
-
- 0 replies
- 226 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கான, ரசிகர்கள் அஞ்சலி. விபத்து குறித்த புலன்விசாரனைகளும் ஆரம்பித்துள்ளன. * மொசூல் நகரைக் கைப்பற்றும் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு இன்னும் சிக்கியுள்ளவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் நிலையை ஆராய்கிறது பிபிசி. * பெண்களை பணிக்கமர்த்தி ஊழலை களைய முயல்கிறது மெக்ஸிகோ. அந்த நாட்டின் பெண் காவல் அதிகாரி ஒருவரை நூறு பெண்கள் தொடருக்காக சந்தித்தது பிபிசி.
-
- 0 replies
- 375 views
-
-
பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/13980 கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ? பொலிவியாவிலி்ருந்து கொலம்பிய…
-
- 7 replies
- 1k views
-
-
பைலட்கள் வேலைநிறுத்தம்: லுப்தான்ஸா நிறுவனத்தின் 876 விமானச் சேவைகள் இன்று ரத்து ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிர்வாகத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான விமானிகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 876 விமானங்களின் இயக்கம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராங்ப்ரட்: ஐரோப்பா மற்றும் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஜெர்ம…
-
- 0 replies
- 273 views
-
-
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு ஏற்படும்: டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் எச்சரிக்கை அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது:- அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சு…
-
- 0 replies
- 291 views
-
-
76 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து ; கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”…
-
- 0 replies
- 334 views
-
-
மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை: ஹவானாவில் மிகப் பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் வகையில் ஒரு மிகப் பெரிய பேரணி தற்போது கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடந்து கொண்டிருக்கிறது. ஹவானா புரட்சி சதுக்கத்தில் பேரணி ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த…
-
- 0 replies
- 318 views
-