Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மலேசிய முருகன் கோவிலை தாக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவில் அதிக பகதர்கள் வந்து செல்லும் வழிபாட்டுத்தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இந்த கோவில், பொழுதுபோக்கு மையம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 3 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மலேசிய தீவிரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று மலேசியா நாட்டின் சுதந்திர தினம் என்பதால் நேற்று மாலை இந்தத் தாக்குதலை நடத்திட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது. முதல் தீவிரவாதியை செலங்கோர் மாநிலத்தில் வைத்து கையெறி குண்டுகள், துப்பாக்கியுடன் கடந்த 27-ம் திகதியும், மற்ற இரண்டு தீவிரவாதிகளை 29-ம் திகதியும் பொலிஸ…

  2. ஒரே விமானத்தில் பணியாற்றி பாகிஸ்தான் பைலட் சகோதரிகள் சாதனை பாகிஸ்தான் பைலட் சகோதரிகள் மர்யம் மசூத், எரூம் மசூத். பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (பிஐஏ) பைலட்களாக பணியாற்றும் சகோ தரிகள் இருவர், போயிங் 777 ரக விமானத்தில் சேர்ந்து பணியாற் றினர். இதன் மூலம் ஒரே விமானத் தில் பணியாற்றிய முதல் பைலட் சகோதரிகள் என்ற சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து பிஐஏ செய்தித் தொடர்பாளர் தன்யல் கிலானி கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் மர்யம் மசூத், எரூம் மசூத் என்கிற 2 சகோ தரிகள் பைலட்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இரு வரும் வெவ்வேறு விமானத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலை யில் சமீபத்தில் இருவரும் ஒரே விமானத்தில் பணியாற்ற நேரிட்டது. இதன…

  3. இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பின் முக்கிய போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்; அவரை தாங்கள் குறிவைத்ததாக அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவிப்பு. * சிங்கப்பூரில் ஸிகாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு; அதன் பரவலைத்தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது அரசாங்கம். * பறவையின் பறக்கும் திறனை புரிதுகொள்வதில் விஞ்ஞானிகள் வெற்றி; பறக்கும் ரோபோக்களை உருவாக்க இது உதவும் என்று நம்பிக்கை.

  4. மத்திய தரைக்கடலில் பச்சிளம் குழந்தைகளுடன் 3,000 குடியேறிகளை மீட்கும் பணி மத்திய தரைக் கடலில் தவிக்கும் மேலும் 3,000 குடியேறிகளை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், லிபியா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எரித்ரியா மற்றும் சோமாலிய கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் . மீட்கப்பட்டவர்களில் மிகவும் இளையவர்கள் பிறந்து ஒரு வாரமே ஆன இரட்டையர்கள் ஆவர். கடலில் சீற்றம் குறைவாகவும், அமைதியாகவும் இருந்ததால், கடலில் ஐரோப்பாவிற்கு படகில் செல்லும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்க…

  5. டெல்லி வெள்ளம்: படகு கேட்ட ஜான் கெர்ரி! #DelhiFloods⁠⁠⁠⁠ ‘‘நாம் வெளியே செல்ல வேண்டும் என்றால், நிச்சயம் படகு தேவைப்படும்’’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கிண்டலாகக் கூறும் அளவுக்கு டெல்லியில் மழை கொட்டோ கொட்டு எனக் கொட்டுகிறது. டெல்லியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து ட்ராஃபிக்கில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. டெல்லி மக்கள் நேற்றே பெரும் அவஸ்தையை அனுபவித்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்துவருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல வழிந்து ஓடுவதால், முக்கியச் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன. வாகனங்கள் நத்தைபோல ஊர்ந்துசென்றதால், அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் ப…

  6. அரச அலுவலகங்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸ் பிரதமரின் திடீர் விஜயம் ; கடமைக்கு சமுகமளிக்காத 9 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! 2016-08-31 11:46:41 துபாயின் அமீ­ரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபா­யி­லுள்ள அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு மேற்­கொண்ட திடீர் விஜ­யத்­தின்­போது, உயர் அதி­கா­ரிகள் பலர் அலு­வ­லங்­களில் இல்­லா­தி­ருப்­பதைக் கண்­ட­றிந்­துள்ளார். இதை­ய­டுத்து 9 சிரேஷ்ட அதி­கா­ரிகள் உட்­பட அதி­கா­ரிகள் பலரை பணி­ய­லி­ருந்து ஓய்வு பெறு­மாறு அவர் உத்­த­ர­விட்­டுள்ளார். 65 வய­தான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் பிர­த­ம­ரா­கவும் பதவி வகிப்­ப­துடன்,…

  7. 2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 1000 கோடியை எட்டும் - இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் உலக மக்கள் தொகை எதிர்வரும் 2050-ம் ஆண்டில் 1000 கோடியை எட்டிவிடும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு உலக மக்கள் தொகை மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் கடந்த சில நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளதார சமூக விவகாரங்களுக்கான திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 1000 கோடி எட்டும் போது ஆசிய நாடுகளின் மக்கள் தொகை 5.30 கோடியாக அதிகரிக்கும் என்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் மக்கள் தொகை 250 கோட…

    • 2 replies
    • 445 views
  8. வந்துவிட்டது பேராபத்து .! பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிரபலமான டோயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில்…

  9. இன்றைய நிகழ்ச்சியில் * கடலில் காப்பாற்றப்பட்ட குடியேறிகள்; திங்களன்று மட்டும் 6500 பேர் மத்திய தரைக்கடலில் இருந்து மீட்கப்பட்டனர். * அதிகம் அறியப்படாத சுகாதார நெருக்கடியில் தென் ஆப்ரிக்கா; கர்ப்பகாலத்தில் பெண்களின் மது அருந்தும் பழக்கம் கருவின் சிசுவை மோசமாக பாதிப்பதாக எச்சரிக்கை. * நகரங்களை நோக்கி நகரும் சீனாவின் கிராமத்துப் பெண்கள்; காதலுக்கு ஏங்கும் ஆண்கள் நிறைந்த சீன கிராமம் ஒன்றுக்கு சென்ற பிபிசி, அங்குள்ள ஆண்கள் நிலவரம் குறித்து சேகரித்த செய்தித்தொகுப்பு.

  10. விமானத்தில் இருந்து கீழே விழுந்த எண்ணெய் தாங்கி : மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் எண்ணெய் தாங்கி கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானத்தில் உள்ள 2 எண்ணெய் தாங்கிகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது அதில் ஒரு எண்ணெய் தாங்கி விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென்று அந்த எண்ணெய் தாங்கி குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப…

  11. இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன. பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/artic…

  12. பிரான்ஸ் குடியேறிகள் பிரிட்டனில் தஞ்சம் கோரலாமா? பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட் பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ராட், பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவை இன்று சந்திக்கும் போது, குடியேறிகள் பிரான்ஸில் இருக்கும்போது ஜக்கிய ராஜ்யத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பம் செய்கின்ற கருத்தை நிராகரிப்பார் என்று மூத்த பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதிக்க இவ்விரு அமைச்சர்களும் பாரிஸில் சந்திக்கின்றனர். பிரெஞ்சு உள்துறை அமைச்சரான பெர்னார் காஸ்நோவ் நகரத்திற்கு வெளியே இருக்கும் முகாம் ஒன்றில் வாழ்ந்து வரும் குடியேறிகள், பிரான்ஸ் மண்ணில் இருந்து கொண்டே பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை வ…

  13. 'இன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும் என் தேசமே?' சிதையும் சிரியா சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது குடியிருப்புப் பகுதிகள் மீது தீமூட்டும் ஆயுதங்கள் (incendiary weapons) வீசப்பட்டன. அதில், காயமடைந்த ஒரு சிறுவனுக்கு முதலுதவி அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் மருந்துகளும் இல்லாததால், அந்தச் சிறுவனின் உடம்பிலுள்ள தீக்காயங்கள் மீது சேற்றைப் பூசி சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஹோம்ஸ் மாகாணத்தை, அதிபர் பஷார் அல் ஆஸாதின் படையினர் சுற்றிவளைத்து உள்ளனர். மேலும், அவர்கள் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருத்துவப் பொருட்களை உள்ளே அனுமதிக்காததால் பொதுமக்கள் பெரும் சி…

  14. மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஏராளமான குடியேறிகள் மீட்பு கடந்த திங்கள்கிழமையன்று மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 6500 குடியேறிகளை மீட்கும் முயற்சியில் தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கோப்புப் படம் கடந்த சில வருடங்களில் குடியேறிகளை காப்பாற்றும் முயற்சிகளில், தனித்தனியான 40 பல தேச மீட்பு பணிகளை உள்ளடக்கிய மீட்பு நடவடிக்கை நடைபெற்ற கடந்த திங்கள்கிழமை மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக அமைந்தது என்று தாங்கள் அனுப்பிய செய்தியில் இத்தாலி கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. தங்களை மீட்க வந்த மீட்பு கப்பலை அடையும் முயற்சியில், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் பலரும் கட…

  15. இன்றைய நிகழ்ச்சியில் * லிபியாவின் சியர்த் நகரை மீட்க அரச படைகள் கடும் போராட்டம்; இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்புடனான மோதல் முன்னரங்கிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். * நைஜீரியாவின் வடநகரான பாமாவின் இன்றைய நிலவரம் குறித்த பிபிசியின் நேரடித்தகவல்; போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பிய நகரம் இன்று கொடும் பஞ்சத்தின் பிடியில். * செவ்வாய் கிரக வாழ்க்கை எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் ஹவாய் எரிமலைக்கருகே ஓராண்டு வாழ்ந்து பரிசோதித்த விஞ்ஞானிகளின் அனுபவப் பகிர்வு.

  16. தமிழர்களைக் கொலை செய்த ரயில் பாதை! - அதிரவைக்கும் ஆவணப்படம் வரலாற்றை நாம் முழுமையாக அறிந்துவைத்து இருப்பதில்லை. நாம் அறிந்துகொள்ள நினைத்தாலும் அவை நம்மிடம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் நாம் வரலாறு மீதும், அதுகுறித்த ஆவணங்கள் மீதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் விளைவு அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவதே இல்லை. அப்படி நாம் அக்கறை செலுத்தாத ஒரு கொடூர வரலாற்றை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறது, ‘சயாம் பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம். 10 ஆண்டுகளாகச் சேகரிப்பு! ‘ரெட் டீ’ என்ற நாவல், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழகத் தோட்டத்தொழிலாளர்களின் அவல வாழ்வை நுட்பமாகப் பேசியிருந்தது. மிகவும் அதிரவைத்த அந்தக் கொடுமைகளை எல்லாம்வ…

  17. உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார் இம்பா கோத்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார். இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் க…

  18. மனைவியின் சடலத்தை சுமந்த மஜ்கியை தேடும் பஹ்ரைன் அரசர்! ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் தானா மஜ்கி என்பவரின் மனைவி அமர்ந்தேயி காச நோய் காரணமாக பவானிபட்னா மருத்துவமனையில் இறந்து போனார். மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்ல மஜ்கியிடம் பணம் இல்லை. கெஞ்சி பார்த்தும் அமரர் ஊர்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. வேறு வழியில்லாத நிலையில், இறந்து போன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு தனது கிராமம் நோக்கி நடக்கத் தொடங்கினார் மஜ்கி. கூடவே மஜ்கியின் மகளும் அழுதபடியே சென்றார். தோளில் சடலத்துடன் ஒருவர் நடப்பதையும் சிறுமி ஒருவர் அழுதபடியே சென்றதையும் பார்த்த பின்னரும் யாரும் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர்…

  19. விக்டோரியா அரசியின் கீரிடத்தை வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல தடை விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கீரிடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது. இதற்கு கேட்கப்படும் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஒரு பிரிட்டிஷ் நபர் கொடுத்து வாங்காத வரை, 1840 ஆம் ஆண்டு அவர்களின் திருமணத்திற்காக இளவரசர் ஆல்பிரட் வடிவமைத்த இந்த வைரக் கீரிடம் வெளிநாட்டுக்கு போய்விட வாய்ப்பு உள்ளது. இந்தக் கிரீடமும், இந்தக் கிரிடத்திற்கு இணையான, இளமையான விக்டோரியா அரசியின் அதிகாரப்பூர்வ புகழ்பெற்ற உருவம் பொறிக்கப்பட்ட உடையில் சொருகப்படும் ஊசி என இரண்டு ஆபரணங்களும் தனிச்சிறப்பு மிக்கவை. பி…

  20. பஸ்ஸில் உயிரிழந்த மனைவி: கைக்குழந்தையுடன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய், இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மல்லி பாய் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ராம் சிங் லோதி உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயார் ஆகியோருடன் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பஸ்சில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த கண்டக்டர் அவர்களை பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தினார். ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் மனம் கரையவில்லை. ந…

  21. ஜெர்மனியில் பாக்.,க்கு எதிராக போராட்டம்: மோடிக்கு ஆதரவாக கோஷம் பெர்லின்: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக ஜெர்மனியில் போராட்டம் நடந்தது. பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதாக டிவி செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தியும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், பலுசிஸ்தான் விவகா…

  22. இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது நால்வர் கொல்லப்பட்ட நிலையில் மீதமிருந்த மூவர் தப்பிக்…

  23. ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம். ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் …

  24. புலிகளையும் வளர்த்துவிட்டு இந்திய படையினரையும் அழித்தது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் போது விடுதலை புலிகளுக்கு உதவியதாகவும் இந்திய இராணுவ படையினர் மூலம் உதவியதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது வெடிபொருட்களையும் இராணுவ படைத்தரப்பினரையும் வழங்கி புலிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டிருந்தது பின்னர் சமாதானத்திற்கான இந்திய படைகளையும் இலங்கைக்கு அனுப்பியிருந்தது. அதன் காரணமாகவே சுமார் 1000 இந்திய படையினர்கள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் வெங்கையா நாயிடு தெரிவித்துள்ளார். தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சி போலியான குற்றச்சாட்டுகளை …

  25. சிரியாவில் தொடர் குண்டு தாக்குதலில் 15 பேர் பலி சிரியாவில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் வான்வழியாக தொடர் குண்டு தாக்குதல் நடந்ததில் குறைந்தது 15 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கோப்புப்படம் இந்த சம்பவம் குறித்து பிரிட்டனை சேர்ந்த சிரியா மனித உரிமை குழுவினர் பேசுகையில், அரசு விமானம் பல நிமிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீசிய பேரல் குண்டுகள் ஒரு முகாமிற்கு அருகில் விழுந்து வெடித்தன. இங்கு தான் கடந்த வாரம் இதுபோன்ற குண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்காக நடந்த இரங்கல் நிகழ்வில் இருந்தவர்கள் கூடியிருந்தார்கள். இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.