உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சீன செயற்பாட்டாளர்களுக்கு சிறைத்தண்டனை. * ஐரோப்பிய குடியேறிகள் ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாக துருக்கி மிரட்டல். ஜெர்மனியுடனான அந்த நாட்டின் உறவு மோசமடைகிறது. * ஆப்ரிக்கா எங்கிலும் ஊட்டச்சத்தின்மைக்கு தீர்வாக மீன் பிஸ்கெட்டுகள்.
-
- 0 replies
- 432 views
-
-
இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் சென்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவில் உள்ள Aceh மாகாணம், தொன்றுதொட்டு இஸ்லாமிய முறைகளை பின்பற்றி வரும் மாகாணம் ஆகும்.இந்த மாகாணத்தில், ஓரினச்சேர்க்கை உறவு, திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வது, காதலர்களாக வெளியில் சுற்றுவது என்பது மிகவும் தவறானது மட்டுமல்லாமல் அதனை இஸ்லாமிய சட்டமும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று, அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டத்தின் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பவே முடியாது. இந்நிலையில், இந்த மாகாணத்தை சேர்ந்த ஜோடிகள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஜாலியாக டேட்டிங் சென்றுள்ளனர்.இவர்களது…
-
- 0 replies
- 483 views
-
-
பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது இஸ்லாமியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என பிரித்தானியவை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கூறிய ஓடியோ வெளியாகியுள்ளது.இஸ்லாம் தலைவரான Imam Ali Hammuda என்பவர் பிரித்தானியாவில் உள்ள Cardiff Al-Manar மசூதியில், சிறுவயது ஜிகாதிகளை அமர வைத்து, அவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார், அதில் ஒரு பகுதியாக, பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.அதில் தவறேதும் இல்லை, பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதை இஸ்லாமிய மதம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என அவர்களுக்கு மூளைச்சலவை செய்துள்ளார். இவர் பேசியது, நிருபர் ஒருவரால் ரகசியமாக ஓடியோ வடிவில் பதிவுசெய்யப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது, பாலஸ்தீனத்த…
-
- 0 replies
- 572 views
-
-
கொல்லப்பட்ட பாதிரியாருக்கான தேவாலய பிரார்த்தனையில் முஸ்லிம்கள் பிரான்ஸ் தேவாலயமொன்றில் பாதிரியார் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து, பிரெஞ்சு மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனையில் அங்குள்ள முஸ்ஸிம்கள் கலந்து கொண்டிருப்பதனை படங்களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18346#sthash.vjRVtc4x.dpuf
-
- 0 replies
- 231 views
-
-
டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை வெளியிட்டது நியூயார்க் போஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டியும், கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி ஆக்ளி ஆபீஸ்" (The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது போன்ற ஆற்றல்மிக்க அ…
-
- 2 replies
- 775 views
-
-
ஹிலரி கிளிண்டனை ''சாத்தான்'' என்று அழைத்த டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது சொந்த கட்சியினரிடமிருந்தே கடுமையான தாக்குதல்களை சந்தித்து வரும், அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், தனது போட்டியாளருமான ஹிலரி கிளிண்டனை '' சாத்தான் '' என்று வர்ணித்ததுள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிட கட்சியின் நியமனம் பெறும் போட்டியில், ஹிலரியிடம் பணிந்துவிட்டார் என்று பெர்னி சாண்டர்ஸ் மீது தாக்குதல் தொடுத்தார். தொழில் அதிபரான டிரம்ப் உரையாற்றுகையில், ''பெர்னி சாண்டர்ஸ் அந்த சாத்தானுடன் ஒரு ஒப்பந…
-
- 0 replies
- 325 views
-
-
துருக்கி அதிபர் எர்துவானைப் பிடிக்க முயன்ற 11 கமாண்டோக்கள் கைது துருக்கியில் இருவாரங்களுக்குமுன், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தொடக்கத்தில் அதிபர் ரெசீப் தாயிப் எர்துவானை பிடிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ராணுவ குழு ஒன்றை துருக்கி சிறப்பு படையினர் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் தனது விடுமுறையைக் கழிக்க, மர்மாரிஸ் என்ற சுற்றுலா வாசத்தலத்தில் தங்கியிருந்தார். அதற்கு வெளியே சட்டவிரோதமாக வந்திருந்த 11 கமாண்டோக்கள் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, ரகசியமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அதிபர் எர்துவான் தப்பியோடினார். …
-
- 1 reply
- 440 views
-
-
துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம் ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியிலுள்ள ஜெர்மனியின் மூத்த ராஜிய அதிகாரி ஒருவரை அழைத்து துருக்கி கண்டனம் தெரிவித்திருக்கிறது. கலோனில் நடைபெற்ற துருக்கிய அதிபர் ஆதரவு பேரணி நடைபெறும்போது, எர்துவான் உரையாற்றுவது, அரசியல் முறுகல் நிலையை தூண்டும் என்று அஞ்சி, அதற்கு அனுமதி கோரி எர்துவான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஜெர்மனியின் அரசியல் சாசன நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் மேற்குலக நாடுகளில…
-
- 1 reply
- 421 views
-
-
செக்ஸ் குற்றவாளிகள் போக்கிமான் - கோ விளையாட வருகிறது தடை பாலியல் குற்றவாளிகள் பரோலில் இருக்குபோது போக்கிமான் - கோ விளையாட்டை விளையாடுவதை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் தடை செய்யவுள்ளது. மிகவும் பிரபலமான இந்த இணையதள விளையாட்டை விளையாடுகின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாகாண ஆளுநர் ஆன்ரூ குவோமோ தெரிவித்திருக்கிறார். இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றிதிரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர். இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்…
-
- 0 replies
- 645 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * டொனால்ட் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம். தனது வேதனையை ஏளனம் செய்ததாக அமெரிக்க முஸ்லிம் போர்வீரனின் தாய் குற்றச்சாட்டு. * ரியோ ஒலிம்பிக்ஸ்ஸுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அங்கு நீர் மாசடைந்தது குறித்த அதிர்ச்சி அறிக்கை ஒன்று வந்துள்ளது. ஏற்பாடுகள் சரியில்லை என்றும் குற்றச்சாட்டு. * ஐரோப்பாவின் தெற்கு கரையோர குகைகளில் நியாண்டர்தால் மனித குலம் குறித்த புதிய தகவல்கள்.
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியாவின் இரண்டாவது ஆட்சி மொழி தமிழ்? தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வடநாட்டு பா.ஜ.க எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை! இந்திய பாராளுமன்றதில் உள்ள தமிழக எம்பிக்கள் ஒருக்கணம் வியப்பில் மூழ்கினர். அதற்கு காரணம் பாஜகவின் ராஜ்ய சபை உறுப்பினர் தருண் விஜய் தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று எழுப்பியதால் தான். தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது என்று பாராளுமன்றத்தில் பறைசாற்றினார் தருண் விஜய்.…
-
- 0 replies
- 2.7k views
-
-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானிடமிருந்து அந்த பகுதிகளை விடுவித்து மீட்டெடுக்க பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவங்க வேண்டும். என்ன தைரியத்தில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என நவாஸ் செரிப் சொல்கிறார் என எனக்கு தெரியவில்லை. நமது குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து விட்டது. ஒரு கோழை நாடு வலிமை வாய்ந்த நம் நாட்டின் பகுதியை கைப்பற்ற நினைக்கும் போது நாம் இங்கே சும்மா உட்கார்ந்து கொண்டு இர…
-
- 1 reply
- 360 views
-
-
ஆஸ்திரேலியா: தடுப்பு மைய உரிமை மீறல் புலனாய்வின் தலைவர் பதவி விலகல் ஆஸ்திரேலியாவில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறலை விசாரிப்பதற்காக அமைத்திருந்த புலனாய்வின் தலைவர், நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த பதவிலியிருந்து விலகியுள்ளார். உள்நாட்டு பழங்குடியினத் தலைவர்களிடம் இருந்து ஆதரவு இல்லாததை முன்னாள் நீதிபதியான பிரேயின் மார்டின் குறைகூறியிருக்கிறார். தடுப்பு காவல் மையம் ஒன்றின் காவலர்கள், அங்குள்ள பெரும்பாலும் பழங்குடியின, பதின்ம வயதான இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதையும், தாக்குவதையும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதை அடுத்து இந்த புலனாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்கு பிர…
-
- 0 replies
- 481 views
-
-
ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/9660
-
- 0 replies
- 437 views
-
-
ஜெர்மனி: அதிபர் ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் காணொளி உரைக்கு தடை ஜெர்மனியின் கலோனில் துருக்கிய அதிபரின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பேரணியில், காணொளி இணைப்பு மூலம் அதிபர் ரிசீப் தயிப் எர்துவான் உரையாற்றுவதை ஜெர்மனி தடைசெய்திருப்பது, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது. எர்துவானின் செய்தியை தடை செய்ததற்கான உண்மையான காரணத்தை அறிய துருக்கி ஆவலாக இருக்கிறது என்று அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் காலின் கூறியுள்ளார். ஜெர்மனியில் வாழும் துருக்கிய அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்கும் இந்த பேரணியில், துருக்கியின் விளையாட்டுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்…
-
- 2 replies
- 412 views
-
-
பிரிட்டனில் நிலவும் தற்கால அடிமை முறையை அகற்ற பிரதமர் தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறையை ஒழிக்க தெரீசா மே தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே தலைமை தாங்கவிருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து மனிதர்களை கடத்துவதோடு தொடர்புடைய அடிமைமுறை காட்டுமிராண்டித்தனமான தீமை என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார். அடிமை முறைமைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓராண்டுக்கு முன்னர், பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தாலும், காவல்துறையினருக்கும், குற்றவியல் நீதி அமைப்புகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் இன்னும் முரண்பாடுகள் இருப்…
-
- 0 replies
- 375 views
-
-
சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். பாஸ்போர்ட்கள் நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உதவி கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்…
-
- 1 reply
- 599 views
-
-
இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்: போப் பிரான்சிஸ் போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று, திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை சேவை ஒன்றை நடத்தியிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் உலக இளைஞர்கள் திருவிழாவின் ஒரு பகுதியாக தென் நகரமான கிராகோவில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுக்கிறார்கள் என கணிக்கப்படுகிறது. மாலையில் போர் பிரான்சில் வழிநடத்திய திருவிழிப்பு ஜபத்தை தொடர்ந்து பலரும் இரவிலிருந்தே அங்கு முகாமிட்டிருந்தனர். கணி…
-
- 0 replies
- 403 views
-
-
எது நடக்கக் கூடாதோ, அது நடந்தே விட்டது. போக்கிமான் கோ செல்போன் கேம் மூலம், இந்தியாவில் முதல் விபத்து பதிவாகி விட்டது. ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜியில், பட்டையைக் கிளப்பும் போக்கிமான் கோ, செல்போன் உலகில் இப்போதைய நம்பர் ஒன் கேம். நிஜ உலகின் விர்ச்சுவல் சீன்களை மிக்ஸ் பண்ணி, செல்போன் கேம் உலகில் புது யுக்தியைக் கையாண்டு, கேம் பிரியர்களை அடிக்ட் ஆக்கிவிட்டது, போக்கிமான் கோ. இந்த கேமில் வரும் பூச்சிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று, மாடியில் இருந்து தவறி விழுந்தவர்கள், நேருக்கு நேராக காரில் மோதியவர்கள் என்று இப்போது அமெரிக்காவில் ஜாலி பாதி; பீதி மீதி என்கிற ரீதியில் உலா வருகிறது போக்கிமான். இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருந்த போக்கிமான் கோ கேமை, ஆங்காங்கே ‘கபாலி’ திருட…
-
- 0 replies
- 527 views
-
-
35 குர்து தீவிரவாதிகளை கொன்றது துருக்கி ராணுவம் இராக்கின் எல்லை அருகே தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை அழிக்க முயன்ற 35 குர்து இன தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. ஹக்காரி மாகாணத்தில் உள்ள க்யூகர்கா மாவட்டத்தில் நடந்த மோதலில் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிகேகே என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், ராணுவ தளத்தை நெருங்கிய போது அவர்கள் உளவு விமானம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். ஓர் ஆண்டுக்கு முன்பு, துருக்கி ராணுவத்திற்கும் பிகே கே என்ற அமைப்பிற்கும் இடையே இருந்த போர் நிறுத்தம் முறிந்த பின் துருக்கி ராணுவம் கிளர்ச்சிய…
-
- 0 replies
- 378 views
-
-
கனடாவில் பின்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் கத்தியுடன் நுழைந்த நபரால் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து பேருந்து ஒன்று பிஞ்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் கத்தியுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளர். இதை கவனித்த பயணி ஒருவர் அச்சத்தில் அலறியபடி சக பயணிகளுக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக பயணிகள் அனைவரும் அந்த பேருந்து ஓட்டுனரிடம் முறையிடவே அந்த நபரை பேருந்தினுள் சிறை வைத்துவிட்டு மொத்த பயணிகளும் பேருந்து ஓட்டுனரும் வெளியேறியுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியப…
-
- 0 replies
- 357 views
-
-
பிரித்தானியாவை சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு செ…
-
- 0 replies
- 317 views
-
-
ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் புகுந்த இருவர், மூத்த பாதிரியார…
-
- 1 reply
- 338 views
-
-
பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவர் கைது பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் மோண்ஸ் பகுதியில் உள்ள ஏழு வீடுகள் மற்றும் லீஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக …
-
- 1 reply
- 302 views
-
-
தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களை கொண்ட சூடான காற்றடைத்த பலூன் 16 பேருடன் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் ஷெரீப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அந்த பலூன், ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது.. பலூனில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/07/160730_america_texas
-
- 0 replies
- 287 views
-