Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார் மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டாலி முக்டோ ரஷ்யாவில் விளையாட்டுத்துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் ரஷ்…

  2. இத்தாலிய வீதிகளில் சீன பொலிஸார் ரோந்து 2016-05-15 09:29:57 இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது சீன பொலிஸார் நால்வர் பணியாற்றுகின்றனர். இத்தாலிக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வத ற்காக பரீட்சார்த்த நடவடிக்கையாக இத் திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீன மக்கள் தமது நாட்டு பொலிஸாரை இலகுவாக இனங்காண் பதற்காக சீனாவில் தாம் அணியும் சீருடைகளையே …

  3. இந்து கோயிலில் லண்டன் முஸ்லிம் மேயர் வழிபாடு சுவாமி நாராயண் கோயிலில் வழிபாடு நடத்திய லண்டன் மேயர் சாதிக் கான். பிரிட்டன் தலைநகரான லண்டனின் புதிய மேயராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட முஸ்லிம் மேயர் சாதிக் கான், புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இதுதொடர்பான படங்கள் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. லண்டனின் நாஸ்டென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கோயிலுக் குச் சென்ற கான், அங்கு நடைபெற்ற சில சடங்குகளிலும் பங்கேற்றார். அங்குள்ள பொதுமக்களுடன் உரை யாடுவது மற்றும் கோயில் பூஜாரி ஒருவர் இவரது கையில் கயிறு கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் பகிரப்பட்டு வருகின்றன. இது…

  4. ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியரான முத்ரீம் ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் - வுட்டம்பேர்க் (baden württemberg) மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம் ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் (stuttgart) நகருக்கு குடிபெயர்ந்துள்ளத…

  5. வங்கதேசத்தில் பலத்த மழை: மின்னல் பாய்ந்து 42 பேர் பலி வங்கதேசத்தில் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘நார்வெஸ்டர்’ புயலுடன் கூடிய மழை பெய்ததில், மின்னல் பாய்ந்து பெண்கள், குழந் தைகள் உட்பட 42 பேர் பலியாகினர். அதிகபட்சமாக வடமேற்கு பாப்னா வில் 8 பேரும், சிரஜ்கஞ்ச் மற்றும் ராஜ்ஷாகி மாவட்டங்களில் தலா 5 பேரும் மின்னல் பாய்ந்து இறந்தனர். கிஷோர்கஞ்ச் மற்றும் பிரம்மன்பாரியா மாவட்டங்களல் தலா 4 பேர் மின்னலுக்கு பலியாகினர். டாக்காவில் மழையில் நனைந்த படி கால்பந்து விளையாடிக் கொண்டி ருந்த 2 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் 7 பேர் பலியான தாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலு…

  6. பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு! புதுடெல்லி: நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில், D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டைச் சுற்றி…

  7. இன்றைய நிகழ்ச்சியில் * மத்திய தரைக்கடலில் மனிதக்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தோற்றுவிட்டதாக பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு விமர்சனம்; லிபிய கரையோரம் மேலும் குடியேறிகள் மீட்பு. * பெருமளவு பங்குகளை விற்கும் சவுதி அரசின் பெட்ரோலிய நிறுவனம்; அரம்கோ நிறுவனத்துக்கு செல்ல பிபிசிக்கு அரிய வாய்ப்பு. * மருந்துக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய காச நோய்க்கு எதிரான போராட்டம்; நோயில் இருந்து தப்பிய கென்ய நோயாளியை சந்தித்தது பிபிசி. ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  8. சிரியாவில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேலினால் இந்த வாரம் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயர் ஹிஸ்புல்லா தளபதியான முஸ்தபா பட்ரெட்டினே கொல்லப்பட்டதாக லெபனானிய ஷியா குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 1982ஆம் ஆண்டு தொடக்கம், இஸ்லாமிய தடுப்பாற்றலின் பெரும்பாலான நடவடிக்கையில் பட்ரெட்டினே பங்கேற்றதாக, அவரின் மரணத்தை அறிவிக்கும் இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, அவரை சிறந்த ஜிஹாதி தலைவராக வர்ணித்துள்ளது. 55 வயதான பட்ரெட்டினே, ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட அதிகாரி என்பதோடு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டோடு இணைந்து மோதலில் ஈடுபடும் ஹிஸ்புல்லாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான…

  9. உகண்டா ஜனாதிபதி பதவியேற்பில் மஹிந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை உகண்டா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பதவியேற்ப்பு நிகழ்வில் அந்நாட்டு சமூக வலையத்தளங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6339

  10. மொரி­ஷியஸ், தென் ஆபி­ரிக்­காவில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு சிதை­வுகள் எம்.எச்.370 விமா­னத்­திற்­கு­ரி­யவை மொரி­ஷியஸ் தீவு மற்றும் தென் ஆபி­ரிக்கக் கடற்­க­ரை­களில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு விமான சிதை­வுகள் காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தின் சிதை­வுகள் என பெரும்­பாலும் நிச்­ச­ய­மா­கி­யுள்­ள­தாக மலே­சிய மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் நேற்று வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தனர். மேற்­படி விமா­ன­மா­னது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் கோலா­ லம்பூர் நக­ரி­லி­ருந்து பீஜிங் நக­ருக்கு பய­ணித்த வேளை காணா­மல்­போ­னது. இத­னை­ய­டுத்து அந்த விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்கும் முக­­மாக தென் இந்து சமுத்­தி­ரத்தில் 120,000 சதுர கிலோ­மீற்றர் பரப்ப…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * ஊழலுக்கு எதிரான லண்டன் ஒன்றுகூடல்; பிரிட்டிஷ் அரசின் மாநாட்டில் குழுமும் உலகத்தலைவர்கள், நிதிமேலாளர்கள், ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள். * இராக்கின் ஃபலுஜா நகரில் பட்டினிச் சாவுகள்; முற்றுகையில் இருக்கும் நகருக்குள் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேகத் தகவல்கள். * வடகொரியாவில் முதலில் அணிவகுப்பு, பிறகு அரசியல் இறுதியில் பாப் இசை; பெண்கள் பாப் குழுவின் இசையுடன் முடிவுக்கு வரும் வடகொரிய அரசியல் மாநாடு ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  12. 'முஸ்லிம்களுக்கு தடை' வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பிரச்சாரம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என கூறினார். இது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாக்ஸ் ரேடியோவுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், "முஸ்லிகள் அடிப்படைவாத பயங்கரவாதம் என்பது அதிமுக்கிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்குள…

  13. வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள் வட கொரிய ஆளுங் கட்­சியின் 4 நாள் கூட்டம் பூர்த்­தி­யா­னதைக் கொண்­டாடும் வகையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு அந்­நாட்டின் தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் – சங் சதுக்­கத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் மெழு­கு­வர்த்­தி­களை ஏந்தி நட­ன­மா­டினர். அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் கூடி­யி­ருந்த கூட்­டத்தின் முன்­பாகத் தோன்றி கையை அசைக்­கவும் மக்கள் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­தனர். இதன்­போது 'கொரிய தொழி­லாளர் கட்­சியின் 7 ஆவது கூட் டம் நீடூழி வாழ்க' என பொருள்­ படும் வாச­கத்தைக் கொண்ட இராட்­சத கொடி காட்­சிப்ப­டுத்தப்பட்­டது. அத்­துடன் அந்­நாட்டில் 1980 ஆம் ஆண்­டுக்குப் பின் மு…

  14. பெண் செய்தியாளரிடம் வரம்புமீறிய பிரெஞ்ச் நிதி அமைச்சர் பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார். பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது) எனினும் அவரை துன்புறுத்தியதானக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். மாநாடு ஒன்றில், அந்தப் பெண் செய்தியாளரின் உள்ளடை எலாஸ்டிக்கை தான் பிடித்து இழுக்கவில்லை எனக் கூறியுள்ள சபா(ன்)ங், எனினும் அவரது உடை குறித்து பேசி அவரது பின்புறத்தை தொட்டதை ஒப்புக் கொண்டார். பிரெஞ்ச் நாடாளுமன்றத்திலுள்ள பசுமைக் கட்சியின் எட்டு பெண் உறுப்பினர்கள், துணை சபாநாயகர் டெனி போபான், தங்களை பாலியல் ரீதியாகத் தாக்கி, ஆபாசமான குறுஞ்செய்த…

  15. இன்றைய நிகழ்ச்சியில் * சீன அதிகாரிகள் மரியாதை இல்லாமல் நடப்பவர்கள்'' என்கிற பிரிட்டிஷ் அரசியின் கருத்தை ஒளிபரப்பிய போது சீனாவில் பிபிசி தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது! * அடையாளம் இடப்படாத நூற்றுக்கணக்கான அகதிகளின் கல்லறைகள்; ஐரோப்பாவுக்கான பயணம் அவர்களுக்கு கைகூடவில்லை என்பதன் அடையாளம் இவை! * ஆழக்கடலின் மடியில் அழகான பொக்கிஷம்; நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிய நீர்மூழ்கி ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  16. இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இராக்கில் நடந்த மிக மோசமான குண்டுத் தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சத்ர் மாவட்டத்தில் காலை நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஷியாக்களை விரோதிகளாகக் கருதும் இந்த அமைப்பு அடிக்கடி அவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை நட…

  17.  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் 'கிழக்கின் ட்ரம்ப்' கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அதிகமான வாக்குகளைப் பெற்றதையடுத்தே, இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியாக 4 ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர், அப்பதவிக்கு மீளப் போட்டியிட முடியாது என்பததால், தற்போதைய ஜனாதிபதியான பெனிக்னோ அக்கினோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட 71 வயதான றொட்ரிகோ டிட்டேர்ட்…

  18. இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார்; * சவுதியின் மதப்போலிசாரால் கடிக்கப்பட்ட பெண்; நன்னடத்தையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மதப்போலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன; * உலகில் உள்ள தாவர வகைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு; நான்கு லட்சம் தாவர இனங்களில் ஐந்தில் ஒன்று அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.

  19. பெயரில்லா கல்லறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்தியதரைக்கடலை கடக்க முயற்சித்த போது பலியான குடியேறிகளில் 1250 க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக பிபிசியின் விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. அனேகமான இந்த உடல்கள் கரையொதுங்கிய நிலையில் அல்லது மீனவர்களால் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கிரேக்கம் துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முழுவதுமாக குறைந்தது 70 பகுதிகளிலிருந்து பிபிசியின் விசாரணை இதனை கண்டறிந்துள்ளது. மரணமடைந்த குடியேறிகளது உடல்கள் அனைத்தையும் இனங்காண தாம் போராடி வருவதாக ஒப்புக்கொண்டுள்ள அந்த நாடுகளின் உள்ளுர் அதிகரிகள், உள்ளுர் தான்னார்வ பணியாளர்களின் உதவியுடன் இந்தப் பணியை முன்னெடுத்துவருவதுடன், பெரும் எண்ணிக்…

  20. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகன் ஆப்கானிலிருந்து மீட்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஸா ஜிலானியின் மகன் ஆப்கானிஸ்தாலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸஃப் ரஸா ஜிலானி ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் கூட்டு முயற்சியில் அலி ஹைதர் ஜிலானி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டிருந்தப்போது ஜிலானி துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டார. ஒரு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர…

  21. இத்தாலியில் பிறந்திருந்தாலும் எனது கடைசி மூச்சு இந்திய மண்ணில் தான் இருக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உருக்கமாக பேசியுள்ளார். கேரளாவில் பிரச்சாரம் றேம்கொண்ட சோனியாகாந்தி திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இத்தாலியில் சோனியாவுக்கு உறவினர்கள் இருப்பதாக தமிழக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கேலி செய்ததை கடுமையாக விமர்சித்தார். இத்தாலியில் பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை என்று கூறிய அவர், நான் அங்கு பிறந்ததால் உறவினர்கள் இருக்க தான் செய்வார்கள் என்றார். 1968-ம் ஆண்டு இந்திராகாந்தியின் மருமகளாக இந்தியா வந்ததாக சோனியாகாந்தி கூறினார். இது போன்ற விவரங்களை வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் இத்தாலியில் தான் பிறந்ததத…

  22. ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள். இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளிய…

  23. லண்டன் மேயர் சாதிக் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிப்பேன்: டிரம்ப் லண்டன் மேயர் சாதிக் கான் | படம்: ராய்ட்டர்ஸ் லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதிக் கானுக்கு விலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவார் என அந்நாட்டின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களுள் ஒருவரான டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னதாரணமாக…

  24. இந்து மதத் தலை­வர்­களை கொன்றால் தென் ஆ­பிரிக்­காவில் வேலை, பணம் இந்துமதத் தலை­வர்­களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபி­ரிக்­காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்­ராஹிம் சதித் திட்டம் தீட்­டிய தகவல் அம்­ப­ல­மாகி உள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜ­ராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்­காலி, பிரக்னேஷ் மிஸ்­திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்­ரா­ஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்­றனர். இதில் தொடர்­பு­டைய 10 பேரை கைது செய்து விசா­ரணை நடத்­தி­யதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்­டு­வெ­டிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்­கி­லிட்­ட­தற்கு பழிக்குப் பழி­யாக 2 பேரை கொலை செய்­த­தாக கூறி­யுள்­ளனர். எனினும் தேசிய…

  25. இன்றைய நிகழ்ச்சியில் * எல்லைக்காவலை தீவிரமாக்குகிறது துனிஷியா; இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் ஆபத்தைத் தடுப்பதில் தீவிரம். * மட்டுப்படுகிறது கேனடாவின் காட்டுத்தீ; குளிர்ச்சியான பருவநிலையால் தீயைக்கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை. * பசியாற்றும் பஞ்சாபிகள்; லண்டனில் அதிகரித்துவரும் வீடற்றவர்களின் வயிற்றுப்பசியை போக்கும் சீக்கியர்கள் குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.