உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு : பிரஞ்சு நீதி அமைச்சர் ராஜினாமா பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்ற பிரஞ்சுப் பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலான கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ்டியான் தோய்பிரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் இஸ்லாமியவாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல…
-
- 0 replies
- 334 views
-
-
இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடிய தேசியகீதம் குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் வருகையை வரவேற்றுள்ள அவரது மகள் ஸ்ருதி ஹாசன், கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார். http://www.nakkheeran.in/
-
- 1 reply
- 635 views
-
-
அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் மரணம் அண்டார்டிகாவை தனியாக நடந்து கடக்க முயன்ற ஹென்ரி ஒர்ஸ்லி அண்டார்டிகா பகுதியை யாருடைய உதவியும் இன்றி தனியாக நடந்தே கடக்க முயன்றுகொண்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த சாகச நடைபயண ஆய்வாளர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயற்படாமல் போனதால் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. இறந்தவரின் பெயர் ஹென்ரி ஓர்ஸ்லி. அவருக்கு வயது 55. இவர் முன்னாள் இராணுவ அதிகாரி. கடந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் களைத்துவிட்டதாகவும் தனது உடலில் தண்ணீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிட்டதாகவும் வானலைகள் மூலம் அவர் உதவி கோரியதைத் தொடர்ந்து மீட்பு விமானத்தின் மூலம் சிலிக்கு கொ…
-
- 1 reply
- 604 views
-
-
டென்மார்க்: அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் சட்டத்துக்கு அனுமதி வரலாம் ஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். எனினும் ஒருவரது திருமண மோதிரங்கள் போன்ற உணர்வுபூர்வமான …
-
- 0 replies
- 427 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நெடுநாள் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு! அவரது கணக்கில் விழுந்த பெருந்தொகை, சௌதி அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என்கிறார் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி! - ரஷ்ய அதிபர் புடின் ஊழல் செய்துள்ளார் என்கிறது அமெரிக்க கருவூலத்துறை! புடின் லஞ்சம் பெற்றதற்கு உதவியதாக கூறுபவர்களிடம் பிபிசி விசேடப் புலனாய்வு! - அத்துடன்.. பிரிட்டனின் ராயல் வெல்ஷ் படைப்பிரிவுக்கு ஒரு புதிய வரவு! பட்டாளத்தில் ஆடு!
-
- 0 replies
- 512 views
-
-
பெல்ஜியம் - 1 பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை. பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அ…
-
- 11 replies
- 1.4k views
-
-
அமெரிக்க பனிப் புயலில் 30 பேர் பலி மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் பகுதியில் பனியால் மூடப்பட்ட வாகனங்கள். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை உறைய வைத்த பனிப்புயலால் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 1869-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிகப்பெரிய பனிப்புயல் வீசியது. அப்போது 26.8 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படிந்தது. அதன்பின் சுமார் 147 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோனாஸ் என்று பெயரிடப்பட்ட பனிப்புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை இப்போது உறைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வீசிய இந்தப் பனிப்புயலால் சுமார் 10 மாகாணங்களில் தோராயமாக 68.1 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படிந்துள்ளது. பனிப்புயலின் சீற்றம் குறைந்துள்ள நிலை…
-
- 0 replies
- 441 views
-
-
டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்: ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டம். ராஜபாதையில் அணிவகுப்பை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே பார்வையிட்டு வருகின்றனர் நாட்டின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றுவரும் இவ்விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே சிறப்பு விரு…
-
- 1 reply
- 759 views
-
-
இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்! லண்டன்: இங்கிலாந்து கடற்கரையில் திமிங்கலங்கள் இறந்து ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் கடற்கரையிலும், ஒடிசா மாநிலத்தின் கடற்கரையிலும் ஏராளமான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், 'இந்திய கடற்பகுதியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தின் கடற்கரையில், மெகா சைஸ் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 603 views
-
-
- பனிப்புயலில் மூழ்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதி தலைதூக்கத் தடுமாற, கடும்குளிரில் நடுநடுங்குகிறது கிழக்கு ஆசியா! - இராக்கில், வகுப்புவாத வன்செயல்கள் தொடர்ந்தாலும், தென்படுகிறது மெலிதான மாற்றம்! ஒரு சில இடங்களில், ஊர் திரும்பும் சுன்னி குடும்பங்களை ஷியா ஆயுதக்குழுக்கள் வரவேற்கின்றன! - அத்துடன்.... உலகின் ஆகப் பெரிய கடலை, துடுப்பு போட்டே கடந்த நான்கு பெண்கள்! பிரிட்டிஷ் மங்கையர் உலக சாதனை!
-
- 0 replies
- 320 views
-
-
அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 8 பேர் பலி அமெரிக்காவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரியது என்று கருதப்படும் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் பனி புயல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் வாஷிங்டன் டி சியில் முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்துள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கோரியதை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுவாக்குவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்: பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே சந்திப்பு | படம்: ஆர்.வி.மூர்த்தி பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தவே தான் இந்தியா வந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே தெரிவித்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே 3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு வந்தார். சண்டீகர் வந்தடைந்த ஹொலாந்தேவை, புகழ்பெற்ற ராக் கார்டனில் ஹொலாந்தேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரான்ஸ் …
-
- 0 replies
- 185 views
-
-
ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்ற மீண்டும் முயற்சி ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றக் கோரும் பிரகடனம் ஒன்றில், ஒரேயொரு மாநிலத்தை தவிர இதர அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். nஆஸ்திரேலியாவில் எலிசபெத் மகாராணி எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை ஆஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது. எனினும் அப்படியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இப்போது முன்னுரிமை இல்லை என, முன்னர் குடியரசுக் கொள்கையை ஆதரித்த தலைவரும், இப்போது நாட்டின் பிரதமராகவும் இருக்கும் மால்கம் டர்ண்புல் கூறியுள்ளார். மன்னர் ஆட்சியை கைவிட்டு, ஆஸ்திரேலியவை குடியரசாக மாற்ற வ…
-
- 0 replies
- 380 views
-
-
பாரிஸ் தாக்குதல் தொடர்பிலான கணொளி வெளியிட்டனர் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் [ Monday,25 January 2016, 06:09:12 ] இஸ்லாமிய அரசு (IS) ஆயுததாரிகள் பாரிஸ் தாக்குதல் தொடர்பிலான கணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியில் ஒன்பது பேர் துப்பாக்கிகளுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணொளியில் சிறைக்கைதி ஒருவரின் தலை துண்டிக்கப்படுதல் மற்றும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ஆயுததாரிகள் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருத்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த பாரிஸ் நகர தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்கள் குறித்த தகவல்களும் குறித்த காணொளியில் காணப்படுவதாகவும் சுட…
-
- 1 reply
- 355 views
-
-
தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி அமெரிக்காவை பனிப்புயல் ஒருபுறம் தாக்கியிருக்க மறுபுறம் தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டையும் எதிர்பாராத கடும்பனி தாக்கியுள்ளது. தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறையவே அதனால், 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வழமையாக மிதமான குளிருடன் கூடிய காலநிலையைக் கொண்ட தாய்வானில், திடீரென அதீத குளிர் தாக்கியதில், வெப்பமூட்டிகளின் வசதி இல்லாமல் வாழ்ந்த பெரும்பாலும் முதியவர்களே இறந்தவர்களில் அதிகமாகும். சீனா மற்றும் ஜப்பான் உட்பட தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் கடுமையான குளிரை எதிர்கொள்ள தடுமாறுகின்றன. தென்கொரியாவில் ஜெஜு விடுமுறைக்கால சுற்றுலா தலத்தில்,…
-
- 0 replies
- 644 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: -விமான சேவைகள் ரத்து! [Monday 2016-01-25 07:00] தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் கா…
-
- 0 replies
- 413 views
-
-
இஸ்ரேலிய படையினரால் 13 வயது சிறுமி சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரை குத்திக்கொல்ல முயற்சித்தார் என்ற பெயரில் 13 வயதான சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லைப் பகுதியில் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் வீரரை குத்திக்கொல்ல முயன்றதாக 13 வயது பலஸ்தீனச் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனாடா பகுதியில் இருக்கும் முகாமில் தங்கியிருந்த சிறுமி கையில் கத்தியுடன் ஓடிவந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இராணுவ வீரர் அவரை சுட்டு…
-
- 0 replies
- 358 views
-
-
காணாமால் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு? கடந்த இரு வருடங்களுக்கு முன், காணாமால் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் தாய்லாந்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் நோக்கி போய் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்சின் எம். எச். 370 விமானம் திடீரென்று மாயமானது. எவ்வளவோ தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் என்னவாயிற்று என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு ரீயூனின் தீவு பகுதியில் உடைந்த விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடைத்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் காண…
-
- 1 reply
- 411 views
-
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் January 24, 2016 09:25 pm அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதுமில்லை. http://tamil.adaderana.lk/news.php?nid=76358
-
- 0 replies
- 312 views
-
-
தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதி மூவர் ஸ்தலத்திலே சாவு கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். சிரம்பான் கோலாலம்பூர் விரைவுச் சாலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 'Universiti Kebangsaan Malaysia' அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்களை மோதிய BMW கார், நிற்காமல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் சடலங்கள்…
-
- 1 reply
- 460 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் ஷி ஜியாங் பகுதியில் பனியின் தாக்கம் தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 392 views
-
-
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி! [Sunday 2016-01-24 09:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது. இதனிடையே ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலை ரஷ்யாவின் போர் விமானங்கள் நடத்தியதாக சிரிய கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்…
-
- 0 replies
- 411 views
-
-
பாகிஸ்தானில் நில நடுக்கம்: - பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்! [Sunday 2016-01-24 08:00] பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. அது அஷ்காசாமுக்கு 13 கி.மீ. மேற்கில், 90.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 80 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது. பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்…
-
- 0 replies
- 400 views
-
-
அமரிக்காவின் ஒறிகன் மாநிலத்தில் நடு இரவில் போக்குவரத்துச் செறிந்த வீதியில் காணப்பட்ட சிறு பிள்ளை பொலிஸ் ஒருவரால் காப்பாற்றப்பட்டு குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டது. http://www.bbc.com/news/world-us-canada-35390683?SThisFB
-
- 2 replies
- 432 views
-
-
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று வெளியிட்டார். சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டன. சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களை நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அதற…
-
- 0 replies
- 521 views
-