உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி? பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ் மெகரிஷி நேற்று விவரித்தார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 2 தீவிரவாதிகள் அங்கு மறைந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய வீரர்கள் 7 பேரும் வீர மரணம் அடைந்தனர். இந்த நிலையில் பதன்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயல…
-
- 0 replies
- 470 views
-
-
மதகுரு கொலை:இரானில் சவுதி தூதரகம் தாக்கப்பட்டது பிரபலமான ஷியாப் பிரிவு முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைபவேற்றியதை அடுத்து, தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்துக்குள் இரானிய போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர். nசவுதி அரசுக்கு எதிராக இரானில் போராட்டம் அப்படி நுழைந்த அவர்கள் தூதரக் கட்டிடத்துக்கும் தீ வைத்துள்ளனர். எனினும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியது. ஆனால் சவுதி அரேபிய ராஜ வம்சத்துக்கு எதிரான கருத…
-
- 1 reply
- 650 views
-
-
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அமைந்துள்ள மசார் இ ஷெரீப் பகுதியை காட்டும் கூகுள் மேப் புகைப்படம். ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் குறித்து ஆப்கனுக்கான இந்திய தூதர் அமர் சின்ஹா கூறும்போது, "தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தூதரகத்தை சுற்றிவளைத்துள்ள தீவிரவாதிகளை அப்புறப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார். இந்நிலையில், தூதரகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆளுநர் அட்டா முகமது நூர் தெரிவித்துள்ளார். நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவ…
-
- 0 replies
- 422 views
-
-
பதான்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு: ராணுவம் சுற்றிவளைப்பு பதான்கோட் விமானப் படை தளத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் | படம்: ஏ.பி. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விமானப் படை தளத்தை சுற்றி கூடுதலாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விமானப் படை தளத்தினுள் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பதான்கோட் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் நகரைச் சேர்ந்தவ…
-
- 0 replies
- 578 views
-
-
இந்தியாவில் நில அதிர்வு: 6 பேர் பலி; 100 பேர் காயம் 04-01-2016 10:27 AM இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 4.36 மணியளவில் உணரப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/162973/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.y1kZbH7O.dpuf
-
- 0 replies
- 481 views
-
-
சுவீடன் எல்லை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது [ Monday,4 January 2016, 05:17:55 ] ஐரோப்பிய நாடான சுவீடன் எல்லைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது. இதன்பிரகாரம் டென்மார்க்கில் இருந்து தமது நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என சுவிடன் அறிவித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்குடன் சுவிடன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஊரெட்ன்சென்ட் பாலம் ஊடாக ரயில், பேரூந்து அல்லது படகு சேவை மூலம் நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் உரிய ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ப…
-
- 0 replies
- 448 views
-
-
யேர்மனியில் இதுவரை அகதிகளாக விண்ணப்பித்தோர் தொகை, 2008: 28,000 2012: 77,700 2013: 127,000 2014: 202,800 2015: 425,000 Ludwigsburger Kreiszeitung
-
- 1 reply
- 536 views
-
-
மெக்சிக்கோவின் பெண் மேஜர் பதவி ஏற்று இரண்டாவது நாள் சுட்டுக்கொலை [ Sunday,3 January 2016, 06:15:46 ] பதவி ஏற்று இரண்டாவது நாளில் மெக்சிக்கோவின் பெண் மேஜர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ தென் பிராச்தியதிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டெமிக்ஸ்கோ நகரத்தில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை மேஜராக பதவி ஏற்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இனந்தெரியாத நான்கு நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்காண்டதாகவும் இரண்டு நபர்களை பொலிஸார் சுட்டு கொன்றுள்ள அதேவேளை தப்பியோடிய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இத…
-
- 2 replies
- 589 views
-
-
மாற்றியளிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ்! 2 நிமிடம் மட்டும் பிரபஞ்ச அழகியான கொலம்பியா அழகி! 2015-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வழங்கும் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செய்த தவறால், கொலம்பியா நாட்டை சேர்ந்த அரியட்னா குடியர்ரெஸ், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே பிரபஞ்ச அழகியாக இருந்தார். முதலில் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பிய அழகியை பிரபஞ்ச அழகியாக அறிவித்து விட்டார். அவரும் மகிழ்ச்சியில் திளைக்க, சற்று சுதாரித்த தொகுப்பாளர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு, தான் தவறாக அறிவித்து விட்டதாகவும், உண்மையிலேயே பட்டம் வென்றது ஃபிலிபைன்ஸ் சேர்ந்த பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச்தான் என அறிவிக்க, உர்ட்ஸ்பட்ச் சற்றுநேரம் செய்வதறியாமல் திகைத்தார். பாவம் அரியட்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஐக்கிய ராஜ்ஜியம் அளவுள்ள பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியை உருவாக்குகிறது பிரிட்டன் அசென்ஷன் தீவையொட்டிய கடற்பரப்பில் உலகின் மிகப்பெரிய மர்லின் மீன்கள் வாழ்கின்றன தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் இருக்கும் அசென்ஷன் தீவையொட்டிய கடலுக்குள் ஏறக்குறைய ஐக்கிய ராஜ்ஜியம் அளவுக்கு பெரியதொரு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பை உருவாக்கும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா, சிலி மற்றும் நியூசிலாந்த் ஆகிய மூன்று நாடுகளுமே தமது கடற்பரப்புகளை பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தன. கடற்பகுதிகளை பாதுகாக்க அரசுகள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுப்பது தற்போது உலக அளவில் வேகம் பிடித்து வருகிறது. அசென்ஷன் தீவை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பில் உலகில…
-
- 0 replies
- 634 views
-
-
பதான்கோட்டில் மேலும் இரு தீவிரவாதிகள் இருப்பதாகத் தகவல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இருக்கும் விமானப் படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், அங்கு மேலும் இரு தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ள பதன்கோட்டின் இருக்கும் அந்த விமானப் படைத் தளத்தில் தாக்குதலாளிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்ந்துள்ளது. இத்தாக்க…
-
- 1 reply
- 567 views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்! புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். http://www.vikatan.com/news/india/57129-former-cpi-general-secretary-ab-bardhan-passes-awa.art
-
- 1 reply
- 660 views
-
-
சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் சவுதி அரேபியாவில் நேற்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவ…
-
- 0 replies
- 560 views
-
-
டெல்லி புகையிரத நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் [ Sunday,3 January 2016, 05:40:34 ] டெல்லி - கான்பூர் புகையிரத நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை பயங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில் ஆயுததாரிகள் ஊடுருவி, மறைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 72 மணிநேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி புகையிரத நிலையத்தில் பல புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில தாமதமாக புறப்பட்டுச் செல்வதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழ…
-
- 0 replies
- 378 views
-
-
சீன ஆயுதப் படையில் மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஆயுதப் படையை ஒருங்கிணைத்து நவீனமயப்படுத்தும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக மூன்று புதிய இராணுவ பிரிவுகளை அந்நாடு அமைத்துள்ளது. சீனாவின் அணு ஆயுதக்கிடங்கை கட்டுபடுத்தும் ஒரு ஏவுகணை கட்டளை பிரிவு, தந்திரோபயமாக உதவிப் படைப்பிரிவு மற்றும் புதிய இராணுவ ஜெனரல் பிரிவு ஆகியவை இந்த புதிய பிரிவுகளில் அடங்கும். ஒரு வலுவான இராணுத்துக்கான சீனாவின் கனவை நனவாக்க இந்த மாற்றங்கள் உதவும் என்று அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு விழாவில் உரையாற்றிய அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். புதிய சீர்த்திருத்தங்களின் ஒரு பகுதியாக மக்கள் விடுதலை இராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை சீன…
-
- 2 replies
- 629 views
-
-
உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை : ஜெர்மனி வெளிநாட்டு உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று ஜெர்மனிய அதிகாரிகள் கோரியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெளிநாட்டு உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று ஜெர்மனிய அதிகாரிகள் கோரியுள்ளனர். ஜெர்மனியின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற உறுதியான தகவல் வெளிநாட்டு உளவுச் சேவைகளிடமிருந்து ஜெர்மனிய காவல்துறைக்கு கிடைத்தப்பிறகு, அந்நகரில் இரண்டு ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீவிரவாதிகளை தடுக்க, உளவுச்…
-
- 0 replies
- 396 views
-
-
சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ஆவார். இவர் 31 மாகாணங்களில் உள்ள 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளார். ஹாங்காங் உள்பட பல நகரங்களிலும் இதனை விற்பனை செய்து வந்து உள்ளார். சன் என…
-
- 0 replies
- 428 views
-
-
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம் பஞ்சாபின் பதன்கோட் விமானப்படை தளத்தில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்: ஏஎன்ஐ. பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு …
-
- 1 reply
- 534 views
-
-
சவுதி சியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பிரபல சியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. சவுதி சியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பயங்கரவாத குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் இவரும் அடங்குவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி முடியாட்சியை விமர்சித்ததை அடுத்து 2012இல் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எந்தவிதமான வன்செயல்களிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அவரது கைதை அடுத்து அந்த நாட்டின் சியா சிறுபான்மையினர் மத்தியில் போராட்டங்கள் வெடித்தன. அவரது மரண தண்டனை குறித்த செய்திக்கு, அந்த பிராந்தியத்தின்…
-
- 0 replies
- 598 views
-
-
சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின பிபிசி இணையதள கட்டமைப்பில் நடந்த சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் சில மணி நேரம் முடங்கின மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள் பார்க்க இயலாது என்கிற அறிவிப்புச் செய்தியை மட்டுமே அவர்கள் பார்த்தனர். DDOS (Distributed Denial Of Service) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இணைய தாக்குதல் கார…
-
- 1 reply
- 377 views
-
-
மோசமான வானிலை... பயங்கர சூறாவளி... அலறிய 351 பயணிகள்... இதன் பின் என்ன நடந்தது? (வீடியோ) நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த கனடா விமானம் ஒன்று மோசமான வானிலை, பயங்கர சூறை காற்றில் சிக்கி சேதம் அடைந்ததோடு, விமானத்தில் இருந்த 351 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். https://au.news.yahoo.com/a/30469929/air-canada-turbulence-leaves-21-in-hospital-after-flight-from-hell/ ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான AC088 என்ற விமானம் கடந்த டிசம்பர் 30ம் தேதி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரிலிருந்து கனடாவில் உள்ள டொரன்டோ நகருக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 332 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களுக்…
-
- 0 replies
- 621 views
-
-
ஆப்கான், பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியிலும் லேசான தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் ஜார்ம் என்ற இடத்துக்கு தென் கிழக்கே 35 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகள், அதாவது டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத…
-
- 0 replies
- 329 views
-
-
ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு நாட்டை துரத்தும் துரதிர்ஷ்டம்! (வீடியோ) பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆவிகளை விரட்ட, பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஆயிரம் குடிசை வீடுகள் தீக்கிரையானது. பிலிப்பைன்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி, அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கமான அரசின் அறிவுறுத்தல்களுக்கு இடையே, கோலாகலமாக துவங்கியுள்ளது பட்டாசு கொளுத்தும் இந்த சடங்கு. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இந்த சடங்கில், சிறுவர்கள் உள்ளிட்…
-
- 0 replies
- 479 views
-
-
புதிய தகவல் : புதின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கெஞ்சிய கடாஃபி! லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி, தனது மகனை ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அணுகி அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மம்மர் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி படையினரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டார். இவர் தனது 2வது மகனுக்கு ரஷ்ய அதிபர் புதினின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்தாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் மூலம் ரஷ்யாவுக்கும் தனக்குமுள்ள உறவு வலுப்பெறும் என்றும், அதனால் லிபியாவில் தானும் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கலாம் என்று ஆசைப்பட்ட …
-
- 0 replies
- 769 views
-
-
தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து புத்தாண்டில் ஜொலித்த உலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர சாலையில் பொதுமக்கள் பெருந்திரளாக கூடி புத்தாண்டை வரவேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட் டது. கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 பேர் உயிரிழந்தனர். 350 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக் காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை யடுத்து அந்த நாடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செ…
-
- 0 replies
- 490 views
-