உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27052 topics in this forum
-
லண்டன், பிரிட்டனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்ற அதிகளவில் முயற்சி செய்துவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள முக்கிய அரசியல்வாதிகளை கொல்ல தனியாக ஒரு தற்கொலைப்படையையே ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதாக சண்டே எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு சென்று மீண்டும் திரும்பியுள்ள சந்தேகத்திற்குரிய 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பிரிட்டனில் சர்வ சாதாரணமாக வீதிகளில் உலா வருவதாக அங்குள்ள பாதுகாப்பு ஏஜென்ஸிகள் எச்சரித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்டு வரும் எம்.பி.க்களை குறிவைத்து பட்டியல் போட்டு கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மெட்ரோபோலிடன் பகுதிகளில் உள்ள மந்திரிகளுக்கு உச்ச…
-
- 0 replies
- 514 views
-
-
மாஸ்கோ, ரஷியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தெற்கு ரஷியாவில் உள்ள மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 19 பேரது சடலங்கள் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மருத்துவமனையில் மரப் பலகையினால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. http://www.dailythanthi.com/News/World/2015/12/13112908/Fire-at-Russian-hospital-kills-21.vpf
-
- 0 replies
- 541 views
-
-
கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம் கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார். இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார். தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தா…
-
- 1 reply
- 1.6k views
-
-
பாகிஸ்தானின் பழங்குடிகள் பகுதியில் குண்டு வெடிப்பு-15 பேர் பலி பாகிஸ்தானில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குர்ரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி, ஏராளமானவர்கள் காயம் பழங்குடிகள் பிரதேசமான குர்ரம் பகுதியின் தலைநகர் பராச்சினாரிலுள்ள துணிகள் அங்காடியில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு காரணமாக அந்த அங்காடி சிதறிப் போனது. இச்சமவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தமது பிடியில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள இந்த நகரத்தில் ஷியாப் பிரிவு முஸ்லிம்களே பெரும்…
-
- 0 replies
- 523 views
-
-
பாரிஸ் உடன்பாடு: ஒரு திருப்புமுனை-அதிபர் ஒபாமா புவி மேலும் வெப்பமடைவதை தடுக்கும் நோக்கில் பாரிஸில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு உலகுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். I அனைத்து நாடுகளும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை குறைக்க உடன்பட்டுள்ளன கரியமில வாயுவின் வெளியேற்றத்தை இதுவரை இல்லாத வகையில் தடுக்கவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளை தவிர்க்கவும், நாடுகள் உடன்பட்டுள்ளதற்கான உறுதிப்பாடு இதன்மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தி தேவைகளை முன்னெடுக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு…
-
- 0 replies
- 550 views
-
-
தீவிரவாதம் பாதித்த நாடுகளில் அமெரிக்க படைகள் குவிப்பு : அதிபர் ஒபாமா தகவல் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான், ஐஎஸ், அல்-காய்தா ஆகிய தீவிரவாத அமைப் புகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, துருக்கி, சோமாலியா, ஏமன், லிபியா, நைஜர், கேம்ரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, எகிப்து, ஜோர் டான், கொஸோவோ ஆகிய நாடு களில் நவீன ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்த அறிக் கையில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது கு…
-
- 0 replies
- 495 views
-
-
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: மோடி - அபே முன்னிலையில் கையெழுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (இடது); இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது) | பட உதவி: பிஐபி. இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று (சனிக்கிழமை) டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தொடர்ந்து இருநாட்டுப் பிரதமரும் இந்திய - ஜப்பானிய தொழிலதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் இருநாடுகளுக்க…
-
- 0 replies
- 549 views
-
-
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்க தில்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்புக் கொண்டுள்ளதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.தில்லி தமிழ்க் கல்விக் கழகபள்ளிகளில் மகாகவி பாரதியாரின் 134-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் லோதி எஸ்டேட் பள்ளி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆர்வலரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் பேசியதாவது: பெண் சமத்துவத்தை தனது கவிதைகளில் பாடி வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் பாரதி. விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தனது கவிதைகள் ம…
-
- 0 replies
- 576 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரண பொருட்கள் பல்வேறு தரப்பினரால் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதவிக்கரம் நீட்டியவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே உள்ளது.அந்த வரிசையில் தற்போது சபரிமலை தேவசம்போர்டும் இணைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீளவும், வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் சபரிமலையில் சிறப்பு ஹோமமும், வழிபாடும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சபரிமலையில் நேற்று தேவசம்போர்டு கூட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 449 views
-
-
பனிக்கட்டியாக மாறிய சீனாவின் மஞ்சள் ஆறு: கப்பல் போக்குவரத்து பாதிப்பு! பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய நதியான மஞ்சள் ஆறு பருவநிலை மாற்றத்தால் பனிக் கட்டியாக உறைந்து வருவதால் கப்பல் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி, மத்திய சீனாவில் உள்ள மஞ்சள் ஆறு. இதன் இன்னொரு பெயர் சீனாவின் துயரம் என்பதாகும். இதற்கு ஏற்றவாறு இந்த நதி இப்போது பருவநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. மஞ்சள் ஆறு பாயும் பகுதிகளில் கடும் குளிர் பொழிந்து வருவதால், நதியின் மேற்பகுதியில் முழுவதுமாக பனிக் கட்டிகள், பாளம் பாளமாக மிதந்து செல்கின்றன. இதனால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனிக் கட்டிகள் 4 கிலோ…
-
- 0 replies
- 842 views
-
-
கடாபியின் மகன் ஹன்னிபல் லெபனானில் கடத்தப்பட்டு விடுதலை லெபனானில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த முன்னாள் லிபியத் தலைவர் முகம்மது கடாபியின் மகன் விடுவிக்கப்பட்டிருந்தார். இவரைக் கடத்திய குழு, லிபியாவில் பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன ஷியா மதகுருவின் தகவல்களைக் கோரியிருந்தது. நேற்று, உள்ளூர் அல்-ஜடீட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ஒன்றில் தோன்றிய ஹன்னிபல் கடாபி, மதகுரு மௌசா அல்-சதார் பற்றிய தகவல்களை வைத்திருப்பவர்களை முன்வருமாறு கோரியிருந்தார். நான் தேவையானவர்கள் என நினைக்கும் மக்கள் கேட்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் அவற்றை தாமதமில்லாமல் உடனடியாக வெளிக்கொணருமாறும் இந்த வேதனை …
-
- 0 replies
- 681 views
-
-
காபூலின் இராஜதந்திர பகுதியில் தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் இராஜதந்திரிகளின் பிரதேசத்தை குண்டு வெடிப்பு ஒன்று தாக்கியுள்ளது. ஆரம்பக்கட்ட பொலிஸ் தகவல்களின் படி, குறைந்தது மூன்று தாக்குதலாளிகள், தாக்குதலில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜதந்திரிகளின் அலுவலகங்கள், அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள், அரசாங்க விருந்தினர் வீடுகள் என்பன அமைந்துள்ள, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷிர்பூர் பகுதியில் கார்க் குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் உள் விவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலிலுள்ள வைத்தியசாலையில் ஏழு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், எத்தனை பேர் கொ…
-
- 0 replies
- 513 views
-
-
ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் கைது! ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்காக சூடான் வழியாக லபியா செல்ல முயற்சித்துள்ளார். இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் கூறுகையில், '' நஷீரின் தந்தை துபாயில் ஒரு கார் நிற…
-
- 0 replies
- 685 views
-
-
புகையிரதத்தில் திடீர் தீ ; 700 பயணிகள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர் [ Saturday,12 December 2015, 04:12:47 ] லண்டன் மெரில்போனில் புகையிரதத்தில் திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து அதில் பயணித்த 700 பயணிகள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர். காற்றுச் சீரமைப்பு அலகில் ஏற்பட்ட கோளாறே இந்த தீ விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பவில்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது குறித்த புகையிரதத்திலிருந்து புகை வெளியேறியதாக தெரிவித்துள்ள சில்டர்ன் புகையிரத நிலைய அதிகாரிகள், அந்த நிலையத்திலிருந்தான அனைத்து பயணங்களையும் தற்கால…
-
- 0 replies
- 527 views
-
-
சவூதியில் முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்கவுள்ள பெண்கள் [ Saturday,12 December 2015, 03:41:00 ] சவூதி அரேபியாவில் நடைபெறுகினற் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் அந்நாட்டுப் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்கவுள்ளனர். சவூதியில் இன்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாகனம் செலுத்துவது உள்ளிட்ட பல விடயங்களில் பெண்களுக்கு முதலிடத்தை வழங்க மறுத்துவருகின்ற சவூதி அரசாங்கம், இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கான மற்றும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தம் 978 பெண்கள் போட்டியிடுகின்…
-
- 0 replies
- 565 views
-
-
கோலாலம்பூர்: 'உரிமையாளர் தெரியாத' விமானங்கள், உரிமை கோரும் நிறுவனம் ஸ்விஃப்ட் ஏர் கார்கோ நிறுவனம் இந்த விமானங்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக விற்பனை ரசீதை பிபிசியிடம் கொடுத்துள்ளது மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரின் விமான நிலையத்தில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவந்த மூன்று போயிங்-747 விமானங்களும் தமக்கே சொந்தமானவை என மலேஷிய சரக்கு விமான நிறுவனம் ஒன்று கூறியுள்ளது ஸ்விஃப்ட் ஏர் கார்கோ என்ற அந்த நிறுவனம், அந்த விமானங்களை மலேஷிய விமான நிலையத்திடமிருந்து திரும்பப்பெற முயன்றுவரும் நிலையில், விமானங்கள் பதிவு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது இந்த விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க மலேஷிய விமானநிலைய அலுவலகம் பத்திரிகையில் விளம…
-
- 0 replies
- 669 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் வருமா வராதா உடன்பாட்டுக் காலக்கெடு சனிக்கிழமை வரை நீட்டிப்பு! - பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சில் அதிகரிக்கும் அதிரடி சோதனைகள் - கைது நடவடிக்கைகள்! மதத்தின் அடிப்படையில் தாம் இலக்குவைக்கப்படுவதாக முஸ்லிம்கள் அச்சம்! - நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்ன? இல்லற வாழ்வில் 90 ஆண்டுகளை கடந்துள்ள ஜோடியைக் கேட்கலாம்!
-
- 0 replies
- 661 views
-
-
முஸ்லிம்களை வரவேற்கும் பெருவாரியான அமெரிக்கர்கள்: ஊடக ஆய்வில் தகவல் ட்ரம்ப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். |படம்:ஏஎப்பி. குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சை நிராகரிக்கும் வகையில் சுமார் 57 சதவீத அமெரிக்கர்கள் தங்களது நாட்டினுள் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க விரும்புவதாக கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. என்பிசி மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க தடை விதிக்கலாம் என்றும் 18 சதவீதத்தினர் இத…
-
- 0 replies
- 485 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு எதிரான ஆன்லைன் யுத்தம்! உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான ஆன்லைன் யுத்தத்திற்கு தேதி குறித்திருக்கிறது பிரபல ஹேக்கிங் இணையதளமான ‘அனானிமஸ்’ (Anonymous). ஏற்கனவே ஐ.எஸ். அமைப்பின் பல்வேறு உறுப்பினர்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற இணையதள பக்கங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியதோடு மட்டும் இல்லாமல் அவற்றை ஹேக் செய்திருக்கும் இந்த ‘அனானிமஸ்’ இப்பொழுது அறிவித்திருப்பது ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான “உலகின் உச்சக்கட்ட கோப வெளிப்பாட்டு நாள்” (#OpDayofRage). இதற்காக வரும் டிசம்பர் 11-ம் தேதியைக் (இன்று) குறித்து வைத்திருக்கும் இவர்கள், அந்த நாளில் உலக நெட்டிசன்கள் அனைவரும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர…
-
- 0 replies
- 715 views
-
-
'ஹைட்ரஜன் குண்டு வெடிக்க தயாராக உள்ளது' - வட கொரிய அதிபர் பேச்சால் அதிர்ச்சி கிம் ஜோங் உன் தங்களது நாட்டின் இறையாண்மையை தக்கவைத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க தயார் நிலையில் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறினார். அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வரும் வட கொரியாவின் முக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ராணுவத் தளத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாக பார்வையிட்டார். அப்போது அங்கு ராணுவத்தினர் இடையே பேசிய கிம் ஜாங் உன், "வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடு. வடகொரியா தனது இறையாண்மையை மேலும் காத்துக்கொள்ள அணுகுண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்க வைக்க தயார் நிலையில் உள்ளது…
-
- 1 reply
- 642 views
-
-
வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடிவரும் குர்டிஷ் இன போராளிகளின் தகவலின்படி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு பெண்கள் மிகவும் பயமாம்.வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஓட ஓட விரட்டிவரும் குர்டிஷ் மக்கள் பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவில் சுமார் 10,000 தொண்டர் போராளிகள் இருக்கின்றனர். வட சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் இருந்து பல இடங்களையும் விடுவிப்பதில் இவர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது.இந்த படைப்பிரிவில் உள்ள 21 வயது டேல்ஹேல்தேன் என்ற பெண் போராளி சி. என். என் ஊடகத்துக்கு வழங்கிய தகவலின் படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தாங்கள் இஸ்லாத்தின் பெயரில் சண்டையிடுவதாக நம்புகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் எவராவது குர்டிஷ் இன பெண்களால் கொல்லப்பட்டால் சொர்க்கத்த…
-
- 0 replies
- 584 views
-
-
2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. தற்போது 62 சதவீதம் முஸ்லீம்கள் ஆசிய-பசுபிக் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.இதில் பாகிஸ்தானைவிட இந்தியாவில் தான் …
-
- 0 replies
- 664 views
-
-
தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த ருவாண்டா பெண் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 567 views
-
-
சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை' குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர் சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன. முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர். நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர…
-
- 1 reply
- 537 views
-
-
யேமன் பள்ளிக்கூடங்களை தெரிந்தே தாக்குகிறது சௌதி: அம்னெஸ்டி குற்றச்சாட்டு சௌதி அரேபியாவும் அதன் கூட்டணியும் யேமனில் வேண்டுமென்றே பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமை பிரச்சார அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றஞ்சாட்டியுள்ளது. சௌதி தலைமையிலான கூட்டணி யேமனில் கடந்த மார்ச்சில் விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகூடங்கள் இயங்கவில்லை என்றும், அவற்றில் கால்வாசி அளவானவை முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறுகிறது. சௌதி அரேபியா யேமனில் சர்வதேச விதி மீறல்களைச் செய்யப்பயன்படுத்துவதால், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்த வேண்டும் என அம்னெஸ…
-
- 0 replies
- 494 views
-