உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
அண்மையில் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சி பேராளர் மாநாட்டில்.. பிரித்தானியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும்.. அகதி விசா நடைமுறைகளில் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் அது இருக்கும் என்றும்.. அகதி அந்தஸ்து கிடைத்தாலும் நிரந்தர வதிவுரிமை என்பது எனி எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கூற முடியாது என்றும்.. அகதி அந்தஸ்து எந்த நாட்டுக்கு எதிராகக் கோரப்பட்டதோ அந்த நாட்டில் நிலைமைகள் முன்னேறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படக் கூடிய வகையில் மாற்றங்கள் வர உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரசா மே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். The overhaul also includes a new system of "safe return reviews" so asylum seekers…
-
- 22 replies
- 1.9k views
-
-
பிரிட்டனில் 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டபோது. | படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் பயணத்தை சிறப்பிக்கும்விதமாக, லண்டனில் ஒரு மாத காலத்துக்கு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நவம்பர் 12 முதல் 14ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், லண்டன் வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், மோடியின் வருகையை முன்னிட்டு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஒரு மாத காலத்துக்கு இயங்கும் இந்த பேருந்து சேவை மோடியின் பயண இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும். இதே போல தற்காலிக ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரிட்டனில் அயல் நாட்டுப் பிரதம…
-
- 0 replies
- 508 views
-
-
சிரியாவில் ரஷ்ய தூதரம் மீது தாக்குதல் நடந்ததால் பதற்றம் ரஷ்ய தூதரகம் வெளியே ஆசாத் மற்றும் புடினுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பேரணி. |கோப்புப் படம்: ஏஎப்பி. தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது 2 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சிரியாவில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் வந்ததால் சம்பவத்துக்கு அவர்களின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு அளித்தார். தொடர்ந்து ஐ.…
-
- 0 replies
- 528 views
-
-
எழும்புக் கூடுகளுடன் விமான பாகம் மீட்பு - மாயமான மலேஷிய விமானமா? தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தெற்கு உபியான் டாவி-டாவி அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. ஆனால், விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையில் பி…
-
- 0 replies
- 511 views
-
-
குழந்தைகளிடம் போர்கள் ஏற்படுத்தும் தாக்கம் ( மனதை உருக்கும் வீடியோ) போர் என்பது எப்போதுமே பெரியவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை விட போரின் தாக்கத்தை தாங்கி உயிருடன் வாழ முயல்பவர்களுக்கே அதன் வலி அதிகம். அதுவும் அகதியாக புது இடத்தில் வாழ்வை தொடங்கியும், கொடூரமான அந்த போரின் நினைவுகளின் பாதிப்பை இந்த சிறு குழந்தையிடம் கூட பார்க்க முடிகிறது. சிறியாவில் இருந்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த நிலையே. அயிலான் குர்தி என்ற சிறுவனின் மறைவை உலகமே பேசியது. ஆனால் இன்றளவும் குழந்தைகள் போலீஸ் உடை அணிபவர்களை பார்த்து பயந்து போகிறார்கள். கேமராவை, துப்பாக்கி என நினைத்து கைகளில் உயர்த்திய குழந்தையை உலகம் நிச்சயம் மறந்திருக்காது. துருக்கி ந…
-
- 1 reply
- 349 views
-
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை மீது தற்கொலைத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை களைக் குறிவைத்து தலிபான்கள் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினர். வெடிப்பொருள் நிரப்பிய காரை மோதச் செய்து இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காபூல் நகரின் ஜாய்சிர் பகுதியில் நடந்த இத்தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, குண்டுஸ் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் தலிபான் தீவிரவாதி களுக்குக் கிடைத்த மிகப்பெரு வெற்றியாக இது கருதப்படுகிறது. குண்டுஸ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கார்வெடி குண்டுத் தாக்குதலை மேற் …
-
- 0 replies
- 305 views
-
-
பலஸ்தீன முஸ்லிம் பெண்ணை இஸ்ரேல் இராணுவம் சுடும் காட்சி (காணொளி) பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார். கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 06 பலஸ்தீனிய முஸ்லிம்களை இஸ்ரேல் இராணுவம் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இஸ்ரேலிய படை…
-
- 9 replies
- 2.2k views
-
-
சீனாவின் நான்ஜிங் நகரில் நடந்த போர்க்கால படுகொலைகள் தொடர்பான ஆவணங்களை சர்வதேச ஆவணக் கோப்பு ஒன்றில் சேர்க்கும் ஐநாவின் கலாசார பாரம்பரியங்களுக்கான நிறுவனத்தின் முடிவுக்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1937-ம் ஆண்டில் நான்ஜிங் நகரை ஜப்பானிய படையினர் கைப்பற்றியபோது நடந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் சீனாவின் ஆவணங்களை யுனெஸ்கோவின் உலக-நினைவுகளுக்கான பதிவேட்டுக் காப்பகம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் முன்னாள் தலைநகரான நான்ஜிங்கில் சுமார் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக சீனா கூறுகின்றது. சிப்பாய்கள் அல்லாத பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் ஜப்பானிய அரசாங்கம், யுனெஸ்கோவின் இந்த ஆவணக் கோப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக் கூட…
-
- 0 replies
- 1k views
-
-
டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் அக்.24-ல் ஏலம்: ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு இங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்த உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் பலியாயினர். இந்நிலையில் கப்பலில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஒன்று, அதில் பயணம் செய்து, பின்னர் லைப் போட் மூலம் தப்பித்த ஆபிரகாம் லிங்கன் சாலமன் என்ற பயணியிடம் இருந்தது. அந்த மெனு கார்டு கடந்த வாரம் ஆல்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ.5.82 கோடிக்கு …
-
- 3 replies
- 834 views
-
-
சீனாவில் 50 வழிச் சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து சீனாவில் கடந்த 6-ம் தேதி போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 50 வழிச் சாலை சீனாவில் ஒரு வார கால தேசிய விடுமுறை முடிவுக்கு வருவதையொட்டி கடந்த 6-ம் தேதி ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் பெய்ஜிங் திரும்ப முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீன மக்கள் குடியரசு உருவான நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 1 வாரத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. சீன மக்கள் இதனை நீண்டதூர சுற்றுலா செல்லும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தேசிய விடுமுறை முடிவுக்கு வருவதற்கு முதல் நாளான கடந்த 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் பெய்ஜிங் திரும்ப முயன்றதால் கடும் போக்கு…
-
- 0 replies
- 435 views
-
-
துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு துருக்கியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் உடல்கள் கொடிகளால் மறைக்கப்பட்டுள்ளது| படம்: ஏ.பி. துருக்கி தலைநகர் அங்காராவில் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமைதிப் பேரணிக்காக மக்கள் திரண்டிருந்த இடத்தில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறும்போது "15 பேரது உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்தேன். ஆங்காங்கே மனித உடல்களின் பாகங்கள் கிடக்கின்றன" என்றார். சம்பவம் குறித்து பிரதமர் அஹ்மெட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கியுள்ளார். இரட்டை…
-
- 2 replies
- 539 views
-
-
”பெற்ற மகனானாலும் இதுதான் கதி” - ஊழல் செய்த அமைச்சரை ஊரைக் கூட்டி டிஸ்மிஸ் செய்த கெஜ்ரிவால் டெல்லியில் கட்டிட உரிமையாளரிடம் ரூபாய் 6 லட்சம் லஞ்சம் வாங்கிய டெல்லி உணவுத்துறை அமைச்சர் ஆசிம் கானை முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து, "ஊழல் புகார் வந்தால் எனதுபெற்ற மகனாக இருந்தாலும் நான் பொறுக்க மாட்டேன்" என உணர்ச்சி பொங்கிட கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இது குறித்த எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின்…
-
- 0 replies
- 778 views
-
-
சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிப்பு: வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு மத்திய அரசு கண்டனம் கஸ்தூரியை மீட்க உடனடி நடவடிக்கைக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.நந்தகோபாலிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள். | படம்: சி.வெங்கடாசலபதி சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்டம் மூங்கிலேரியைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த 55 வயத…
-
- 4 replies
- 1.3k views
-
-
உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன? Reuters சமூக வலைத்தளங்களின் சமூக பொறுப்பு குறித்து தொடர்ந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன AFP இந்திய காவல்துறையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் அவர்கள் மீதான புகார்களை நம்பும்படி செய்வதாக உள்ளன இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஒரு தலித் குடும்பத்தை காவல்துறையினர் ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவிய காணொளிச் செய்தியின் பின்னணியை ஆராய்கிறார் பிபிசி ஹிந்தி சேவையின் சுஷில்குமார் ஜா கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை திடீரென்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஏமனில் திருமண கோஷ்டி மீது சவுதி கூட்டுப் படை தாக்கியதில் 15 பேர் பலி ஏமனில் திருமண கோஷ்டியினர் மீது சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப் பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். தாமர் மாகாணத்தில் உள்ள சன்பன் நகரில், ஹவுதி புரட்சிப் படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பழங்குடியின தலைவர் ஒருவரின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, சவுதி கூட்டுப் படையினர் அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சில அதிகாரிகளும் சாட்சிகளும் தெரிவித்தனர். ஆனால் தங்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதுகுறித்து சவுதி கூட்டுப்படையினர் கருத்து எதுவும் சொல்லவில்லை. கடந்த 28-ம் தேதியும் ஒரு திருமண நிகழ்ச்…
-
- 0 replies
- 371 views
-
-
பெருமை .. சிறுமை .. பொலிவியா பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன. “முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான். ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை. பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்…
-
- 12 replies
- 3.5k views
-
-
2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு! ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், உடலில் உயிரணுக்கள் செயல்படும் விதத்தை தீர்க்கமாக அறிந்து கொள்…
-
- 7 replies
- 2k views
-
-
மூழ்கி விபத்துக்குள்ளாகிய அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகள் நிறுத்தம்![Thursday 2015-10-08 14:00] அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பஹாமஸிற்கு அருகே 33 பேருடன் மூழ்கி விபத்துக்குள்ளான எல் பாரோ அமெரிக்க சரக்கு கப்பலை தேடும் பணிகளை நேற்றுடன் (புதன்கிழமை) நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.735 அடி நீளமான குறித்த சரக்கு கப்பலானது, மூழ்கி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனை தேடும் முயற்சியில் பல தேடுதல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. அதன்போது கப்பலின் பாகங்கள், உயிர் காக்கும் அங்கிகள் மற்றும் கொள்கலன்கள் என்பன மீட்கப்பட்டதுடன், ஒரே ஒரு சடலம் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எவரையும் உயிருடன் மீட்க …
-
- 0 replies
- 660 views
-
-
ரூ.8.46 கோடி லஞ்ச குற்றச்சாட்டில் ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்சி ஜான் ஆஷ். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ8.46 கோடி) லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2013 செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான…
-
- 1 reply
- 603 views
-
-
ஆப்கன் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறுதலானது: அமெரிக்க ராணுவம் ஆப்கானுக்கான அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல். | படம்: ப்ளூம்பெர்க் ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல், தவறுதலாக நேர்ந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரை தாலிபான்கள் கடந்த திங்கள்கிழமை கைப…
-
- 2 replies
- 761 views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பதிக்க முடியாமல் தத்தளித்து வரும் பாரதிய ஜனதா கட்சி கணிசமான மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழவா சமூகத்தின் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலத்தில் 22% இஸ்லாமியர்களும் 19% கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரியும் மிகவும் வலுவான 'ஆளும் கட்சியாக' மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. இதனால் பாரதிய ஜனதா கட்சியால் இம்மாநிலத்தில் நுழையவே முடியாத ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: ஜெர்மனி நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு பெங்களூருவில் உள்ள ஜெர்மனியின் ராபர்ட் போஷ் பொறியியல் நிறுவனத்துக்கு நேற்று சென்ற ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஊழியர்களுடன் உரையாடினார். உடன் பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ பெங்களூருவில் நடைபெற்ற இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்…
-
- 0 replies
- 575 views
-
-
ஏமனில் ஹோட்டல் மீது தாக்குதல்: 12 பேர் பலி ஏமன் நாட்டில் ஹோட்டல் ஒன்றின் மீது நேற்று குண்டு வீசப்பட்டதில் 12 பேர் இறந்தனர். ஏமன் நாட்டில் பதவியில் இருந்த அகற்றப்பட்ட அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதியின் கீழ் பிரதமராக பணியாற்றிய பஹாஹ் மற்றும் அரசு அதிகாரிகள் அந்நாட்டின் தெற்கில் உள்ள துறைமுக நகரான ஏடனில் தங்கியுள்ளனர். ஏடனில் இவர்கள் தங்கியிருக்கும் அல் கசார் ஹோட்டல் மீது கிளர்ச்சியாளர்கள் நேற்று ராக்கெட் மூலம் குண்டு வீசினர். இதில் ஐக்கிய அரபு அமீரக படை வீரர்கள் பலர் உள்பட 12 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதில் ஏமன் அதிகாரி கள் இறந்தனரா?, தாக்குதலின் போது பிரதமர் பஹாஹ், ஹோட்டலில் இருந்தாரா என்று தெரியவில்லை. இது தொடர்பாக ஏமன் அதிகாரிகள் தரப்பி…
-
- 0 replies
- 363 views
-
-
இப்படி ஒரு சோதனையா... ராணுவ சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்!! டெல்லி: ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் வழக்கமாக பயன்படுத்தும் பிரத்யேக விமானம் திடீரென பழுதடைந்ததால் ராணுவ சரக்கு விமானம் மூலம் அவர் இந்தியா வந்து சேரநேரிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் இந்தியா வரும்போதெல்லாம் விமானம் ரூபத்தில் அவருக்கு சிக்கல் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார் ஏஞ்செலா மேர்கல். அப்போது அவரது விமானம் ஈரான் மீது பறப்பதற்கு அந்நாடு உரிய அனுமதியை வழங்கவில்லை. இதனால் அந்த விமானம் துருக்கி வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. …
-
- 0 replies
- 737 views
-
-
மத்திய அரசு பள்ளிகளில் மீண்டும் ஜெர்மன் மொழிப் பாடம் கோப்புப் படம் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மீண்டும் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் பயிலும் மாணவர்கள் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழியை தேர்வு செய்து படிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல்மொழியாக ஆங்கிலமும், இரண்டாவதாக பிராந்திய மொழியும், மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு நவீன இந்திய மொழியும் கற்றுத் தரப்பட்டு வந்தன. வெளிநாட்டு வேலைவாய்ப்பைக் கர…
-
- 1 reply
- 1.3k views
-