உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை பற்றி புகார் கொடுப்பதற்காக, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த புதன்கிழமை, ‘ஹெல்ப்லைன்’ எனப்படும் தொலைபேசி புகார் சேவையை தொடங்கி வைத்தார். அதற்கு அபரிமிதமான வரவேற்பு காணப்படுகிறது. 23 ஆயிரத்து 500 பேர் அச்சேவையை பயன்படுத்தி புகார் கொடுத்தனர். இந்நிலையில், ‘ஹெல்ப்லைன்’ தொடங்கிய மூன்றே நாட்களில், நேற்று 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் ஈஸ்வர் சிங், சந்தீப் குமார். இருவரும் ஜனகபுரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தன்னிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பதாக, இனிப்பகம் நடத்தி வரும் ஒருவர் தொலைபேசி புகார் சேவையில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, 2 போலீசாரும் மாமூல் கேட்பதை அவர்களுக்கு தெரியாமல் ஒலிப்பதிவு …
-
- 0 replies
- 388 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலால் நரேந்திர மோடிக்கு எந்த ஒரு சவாலும் இல்லை என்று சத்தீஷ்கார் மாநில முதல் மந்திரி ராமன் சிங் கூறியுள்ளார். பாரதீய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று ராமன் சிங் கூறியுள்ளார். மேலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 11 தொகுதியிலும் வெற்றி பெறும். மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Rahul-Kejriwal-no-challenge-for-Modi-Raman-Singh-on-PM-post
-
- 0 replies
- 385 views
-
-
கோவாவில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் கலந்து கொண்டு பேசிவருகிறார். நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி ஊழல் விவகாரத்தில் வெட்கம் இல்லாமல் உள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் கனிம வளங்களின் ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும் என்று மோடி கூறியுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டடோர்களிடம் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த பணம் கோவாவில் கட்டிட விபத்தில் பலியானோர்களுக்கு வழங்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Congress-is-shameless-about-corruption-says-Modi-in-Goa
-
- 0 replies
- 335 views
-
-
கோவா மாநிலம் பனாஜியில் பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதே பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், மக்களும் அதனை செய்ய முனைப்புடன் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், இன்பத்திலும் துன்பத்திலும் நாட்டு மக்களுடன் இருப்பது பாரதீய ஜனதா கட்சியே. பாரதீய ஜனதா தலைவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களே. பரிக்காரை முதல் மந்தியாக ஆக்கிய கோவா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவில் மட்டுமே தங்களை போன்ற சாதாரணமக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டீ விற்ற என்னை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது பாரதீய ஜனதாவே என்று நரே…
-
- 0 replies
- 311 views
-
-
ஆம் ஆத்மி கட்சியின் வித்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் செயல்படாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெற்ற ஆதரவை பெறாது என்று அவர் கூறியுள்ளார். தானேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முண்டே செய்தியாளர்களிடம் பேசிய போது “ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி மற்றும் மக்களின் ஆதரவை நாட்டில் வேறு எந்த பகுதியிலும் பெற முடியாது” என்று கூறியுள்ளார். “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்துள்ளது”. பாரதீய ஜனதா கட்சி நாட்டின் மற்ற க…
-
- 0 replies
- 299 views
-
-
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இருந்துவருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான குமார் விஷ்வாஸ், இன்று அமேதி தொகுதி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இளவரசன் ராகுல் காந்தி குடிசைக்குள் சென்று சாப்பிடுகிறார். ஆனால், குடிசைவாசிகளுக்காக இதுவரை அவர் ஒரு குரலும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:- அமேதி தொகுதி மக்களுக்கு காந்தி குடும்பத்தினர் நிறைய செய்து இருக்கின்றனர். அத்தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றென்றும் காந்தி குடும்பத்திற்கு உண்டு. ஆகையால் அவர்களை இங்கு எம்.பி.யாக தேர்வ…
-
- 0 replies
- 319 views
-
-
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தற்போது ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் 9 சிலிண்டர்களே வழங்கப்பட்டு வருகிறது. இது நடுத்தர குடும்பத்து மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர்களை பெற ஒவ்வொரு தடவையும் ரூ.1,500–க்கு மேல் செலவிட வேண்டியதுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தினால் மக்கள் பாதிப்பு குறையும் என்று கூறப்பட்டது. ஆனால் கடந்த 3–ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் அதுபற்றி ஆலோசிக்கவில்லை என்றார். இதற்கிடையே மக்களை கவர வேண்டுமானால் சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எப்படி செயல் படுத்துவது என்று மத்திய பெட…
-
- 1 reply
- 841 views
-
-
உத்தர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் ஜக்தீஷ்பூர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு இளைஞர் அமைப்பினர் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது 2வது முறையாக அவருக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையாகும். லக்னோ நகரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, குமார் விஸ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை ஒன்றை தூக்கி வீசினார். இந்நிலையில், அமேதி நகரில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஜன் விஸ்வாஸ் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் கறுப்பு கொடி காட்டினர். வருக…
-
- 0 replies
- 477 views
-
-
புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற…
-
- 23 replies
- 1.5k views
-
-
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர அரசு ஊழியர் சங்கம், ஒருங்கிணைந்த ஆந்திரா போராட்டம் குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சீமாந்திரா பகுதியில் வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் மட்டும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினங்களில் மத்திய – மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பேருந்துகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/01/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…
-
- 0 replies
- 370 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி. பாராளுமன்ற தேர்தலில் அவர் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவார். நிதின் கட்காரிக்கு நாக்பூர் தொகுதிக்கான சீட் கொடுக்கப்பட்டு இருப்பது அதிகாரப்பூர்வமானதாகும். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அருகே பாரதீய ஜனதா பெண்கள் பேரணி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சீனியர் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், கட்காரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். நாக்பூர் தொகுதி பாரதீய ஜனதாவுக்கு சவாலானவை ஆகும். இதை சுஷ்மா சுவராஜ் ஒப்புக்கொண்டார். 4 முறை காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. 1996–ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜனதா அந்த தொகுதியை வென்றது. இதனால் தற்போது நிதின் கட்காரியை நிறு…
-
- 0 replies
- 364 views
-
-
பாராளுமன்றத்தேர்தலில் ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது அரசியல் குரு– அவர் பிரதமரானால் மகிழ்ச்சி’’ என கருத்து தெரிவித்து இருந்தார். இது கட்சியில் ஷிண்டேக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஷிண்டே தான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் செய்தியாளர்களிடம் சரத்பவார் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் எனது நண்பர் மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று தான் கூறினேன். சரத்பவார…
-
- 0 replies
- 273 views
-
-
வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 300-ல் 231 இடங்களைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமரான ஹசினா இன்று பிரதமராக பதிவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் ஹமீத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 48 பேர் கொண்ட மந்திரி சபையும் பதவி ஏற்றுக்கொண்டது. இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். http://www.maalaimalar…
-
- 0 replies
- 365 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஈரான் தவிர 30 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இப்பேச்சுவார்த்தை நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிபர் ஆசாத்தின் படைகளும், கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிளர்ச்சியாளர்களிடமும் பிரிவினை ஏற்பட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 85 பொதுமக்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான பொதுமக்கள் உயிருக்குப் பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். …
-
- 0 replies
- 479 views
-
-
கிறிஸ்தவப் பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் செலேகா எனப்படும் போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக விளங்கினர். இவர்கள் ஆதரவுடன் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிபர் பதவியைக் கைப்பற்றிய மிகைல் ஜோடோடிடா, பின்னர் அந்த இயக்கத்தை அதிகாரபூர்வமாக கலைப்பதாக அறிவித்தார். ஆனால் இதனை மறுத்த போராளிக் குழுக்கள் தொடர்ந்து இன வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த வன்முறைகளில் 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஐ.நா.வின் 4,000 அமைதிப்படை வீரர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 1,600 வீரர்களும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அண்டை நாடான சாடிலிருந்து வந்த செலேகா போராளிகளுக்கு உ…
-
- 0 replies
- 483 views
-
-
சோமாலியாவில் இருந்து செயல்படும் அல்ஷபாப் போராளிகள் ஷரியா சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இந்த அல்ஷபாப் போராளிகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு படை சோமாலியாவிற்கு உதவி வருகிறது. இதில் கென்ய ராணுவத்தினர் 7 ஆயிரம் பேரும் போராளிகளுக்கு எதிராக அங்கு சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பக்கத்து நாடான கென்யாவிலும் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கென்யா மற்றும் எத்தியோப்பா எல்லையோரம் சோமாலியாவின் கார்பராஹே என்னுமிடத்தில் அவர்கள் அமைத்திருந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கென்யா விமானப்படை விமானம் அந்த போராளிகளின் முகாமை தாக்கி அழித்தது. அப்போது முகாமிலிருந்த 30 போராளிகள் கொல்ல…
-
- 0 replies
- 331 views
-
-
கடந்த 2011 ஆம் ஆண்டில்தான் சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடு அந்தஸ்தினைப் பெற்றது. உள்நாட்டுக் கலவரங்கள் அங்கு இன்னும் ஓயாத நிலையில், சென்ற மாதம் முன்னாள் துணைப்பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். போர், பென்டியு ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய இந்தப் பிரிவினர் அங்குள்ள யூனிட்டி எண்ணெய் வயல்களையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த இரு பிரிவினருக்குமிடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா.வும் முயன்றன. எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனிடையில் உள்நாட்டில் தொடர்ந்து வரும் இரு தரப்பினரின் சண்டையில் மலக்கல் பகுதியில் தங்கள் …
-
- 0 replies
- 376 views
-
-
Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி Tributes were paid Thursday to a high school student who officials say foiled a suicide bomb attack in an act of “bravery” that cost him his life. Aitazaz Hassan, 17, was killed instantly - but police and school officials said the lives of up to 1,500 other students at the school in Pakistan had been saved. "My son did a heroic job and I am proud of his bravery,” said the boy’s grieving father, Mujahid Ali. பெஷாவர், ஜன. 10– பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாத…
-
- 3 replies
- 556 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார். எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140111_arialsharon.shtml
-
- 1 reply
- 258 views
-
-
10 January 2014 லஞ்சம் மற்றும ஊழல் பற்றி புகார் தெரிவிக்க அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு இலக்கத்தில் இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஊழல் புகார்களை 1031 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/article1993586.ece
-
- 0 replies
- 386 views
-
-
பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி சிவ சேனா கட்சி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பரிசோதனையாக இருக்கும். மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். மக்களவைத் தேர்தலில் சிவ சேனா-பா.ஜ…
-
- 0 replies
- 239 views
-
-
அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று அவரும் அவரது மந்திரிகளும் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர். தங்கள் குறைகளை கூற ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த சந்திப்பில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து கெஜ்ரிவாலின் முன்னாள் கூட்டாளியும், அன்னா ஹசாரேவின் முக்கிய உதவியாளருமான கிரண் பேடி கூறியதாவது:- அனைத்து நல்ல நிர்வாகமும், பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. அநேக முக்கிய போலீஸ் அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களை சந்திக்கின்றனர். அங்கே ஒரு முறையான திட்டம் வகுக்கப்படுகிறது. அங்கே ஒரு வெளிப்படைத் தன்மை இருக்கிறது. அது தெருக்களில…
-
- 3 replies
- 462 views
-
-
2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். சோனியா சுற்றுப் பயணத் திட்டத்தை பிரியங்கா வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7–ந்தேதி கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு ஏற்ப சோனியா எந்தெந்த நகரங்களில் பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் காங்கி…
-
- 1 reply
- 306 views
-
-
டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், மக்கள் குறைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி சனிக்கிழமை தோறும் தலைமை செயலகம் முன்பு உள்ள மைதானத்தில் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து (மக்கள் சபை கூட்டம்) மனுக்களைப் பெற்று குறைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் காலை 7 மணி முதலே மக்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். இதனால் டெல்லி தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகள் மூடப்பட்டன. என்றாலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் நடந்தே வந்து சேர்ந்தனர். 9.30 மணிக்கு கெஜ்ரிவாலும், அவரது மந்திரிகளும் வந…
-
- 2 replies
- 396 views
-
-
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 256 views
-