Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அதன்போது மிஷெல் ஒபாமா பொலிவூட் பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க- இந்திய இசைக்குழுவான "கோல்டு ஸ்பாட் குழு' வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமாவின் அரச நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை மிஷெல் ஒபாமா, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது மிஷெல் ஒபா…

  2. லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள நியஸ்டன் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து ஆலயம் உள்ளது. தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார்.அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்க…

  3. பாகிஸ்தானிய தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் அடுத்த தலைவராக மௌலான பஸ்ளுள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவ் இயக்கத்தின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார். மௌலான பஸ்ளுள்ளா 2007 முதல் 2009 ஆம் வரை பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள சுவட் பள்ளத்தாக்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கொடூரமான முறையில் அவர் அப்பகுதியில் ஆட்சி நடத்தி வந்ததுடன் இராணுவம் பின்னர் அப்பகுதியை கைப்பற்றியிருந்தது. தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஹகிமுல்லா மெசுட் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்டார். இதனையடுத்தே தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை மௌலான பஸ்ளுள்ளா ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மௌலான பஸ்ளுள்ளா த…

  4. நைஜீரியாவில் குழந்தை உற்பத்தி தொழிற்சாலை! [sunday, 2013-11-03 19:18:14] சில பொருட்களை ரகசியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நபர்களைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நைஜீரியா நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டிற்கு ரகசியமாக அந்த குழந்தைகளை விற்பனை செய்துவந்த ஒரு ரகசிய கும்பல் நேற்று நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 கர்ப்பிணி பெண்களை பொலிசார் மீட்ட…

  5. கடும்போக்குக் குழுக்களிடம் சிக்கி இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாறுவதைத் தடுக்க, நோர்வே அரசானது புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்காக பத்து அமைச்சுக்கள் இணைந்து செயலாற்றவுள்ளன. "கடும்போக்கு வாதம் அதிகரித்துவருகிறது." என்று கூறிய நீதியமைச்சர் அண்டர்ஸ் அனண்ட்சன் (Anders Anundsen) தீவிரவாதம் சர்வதேச அளவில் வலுப்பெறும் போது, வித்தியாசமாகச் சிந்திப்பதும், முன்பிருந்ததை விட விதிமுறைகளை வலுவாக்குவதும் அவசியமான ஒன்றாகிறது என்றார். ஐந்து அமைச்சர்களும் அரச செயலாளர்களும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி, கடும்போக்குவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பது பற்றி கலந்துரையாடினர். வேறுபட்ட அமைச்சுக்கள் இச்செயலாக்கத்தில் ஈடுபடுத்தப்படும். "நாம்…

  6. பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர். அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்…

  7. "மிஸ் ஆசியா" பசிபிக், அழகியின் மகுடம் மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல். மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்ற ஷ்ரிஷ்டி ராணாவுக்கு அளிக்கப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட மகுடம் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரிஷ்டி ராணா(21) பட்டத்தை வென்றார். அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. அவர் கொரியாவில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். ராணா தன்னுடைய மகுடத்திற்கு சுங்க வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் அந்த மகுடத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற பரிசுகளுக்கு வரி விலக்கு பெற மத்திய கலால் மற்றும் சுங்க வரி…

  8. இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது குறித்து இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை கோரியுள்ளது இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கோரியுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறனினால், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களுக்காக நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூர் மாவட்;ட வில்லார் என்னும் கிராமத்தில் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெயரில் நினைவுத் தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8-10ம் திகதிகளில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கனடா, சிங்கப…

    • 6 replies
    • 997 views
  9. ஒரு இந்தியனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையே நடக்கும் விவாதத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நண்பர் செல்வம் தமிழன். தமிழர் குறித்து இந்தியனுக்கு இருக்கும் ஐயங்களை தெளிவு படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். -------------------------------------------------------------- இந்தியன்: தமிழ் தேசியம் என்கிறீர்களே..நீங்கள் இருப்பது இந்திய தேசம்தானே? உங்களுக்கேது தேசியம் தேசம் ? தமிழன்: இந்தியா என்பது தேசமல்ல நாடு இந்தியன்: நாட்டிற்கும் தேசத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு கண்டுபிடித்துவிட்டீர்? தமிழன்: நான் கண்டுபிடிக்கவில்லை நாடு , தேசம் இதற்கு உங்கள் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கம் பாருமய்யா.ஒரு நாடு ஒரு தேசம் ஆகவும் இருக்கலாம்.பல தேசமாகவும் இருக்கலாம்.இந்தியா பல தேசம் …

    • 0 replies
    • 701 views
  10. ‘நாளுக்கு நாள் தொழில் செய்வதே கஷ்டமாகிக் கொண்டு வருகிறது. வேலைக்கு எடுக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் என்று அனைத்து செலவுகளையும் சமாளிக்கும் அளவுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அப்படி எல்லாம் செய்தால் நமது லாபம் குறைந்து விடும்.” என்று கவலைப்படுகிறார்கள், முதலாளிகள். இந்த கவலையை தணிப்பதற்காக தொண்டு நிறுவனங்கள் புதுப் புது வழிகளை கண்டு பிடிக்கின்றனர். உழைக்கும் மக்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கான உத்திகளை உருவாக்கிக் கொடுத்து, உயிர் வாழத் தேவையான குறைந்த பட்ச கூலி கூட கொடுக்காமல் வேலை செய்ய உழைக்கும் மக்களை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். லண்டன் மாநகரில் வேலை இழந்தவர்கள் ஒன்று சேர்ந்து, தமது வாழ்வுரிமைக்காக போராடத் தேவையில்லாமல் வேறு வேலை கிடைக…

  11. கோவா: கோவை அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற ஊரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் பரவியதும் 60க்கும் மேற்பட்ட காங்கிரஸார் அந்த இடத்தில் கூடி போராட்டத்தில் குதித்தனர். தர்ணா நடத்தினர். போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தமிழ் அமைப்பு ஒன்று விட்டுச் சென்ற கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் த…

  12. திருவனந்தபுரம்: வருமான வரி சோதனை நடத்தப்படும் என்ற காங்கிரசாரின் மிரட்டல் காரணமாகவே, எம்.பி. மீதான பாலியல் புகாரை நடிகை சுவேதாமேனன் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த படகு போட்டியில் கொல்லம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப், நடிகை சுவேதாமேனன் கலந்து கொண்டனர். இந்நிலையில், பீதாம்பர குரூப் தன்னை தொட்டு செக்ஸ் சில்மிஷங்கள் செய்ததாக நடிகை சுவேதாமேனன் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பீதாம்பர குரூப் எம்.பி. மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பீதாம்பர குரூப் கைது செய்யப்படலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டது. இதனிடையே, கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்தி…

  13. சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும், அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இசைப்பிரியா தொடர்பாக வெளியான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ள ஜெயந்தி, ராஜபக்சே அரசு மனித உரிமை மீறல், போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். தமிழக மக்களை பொறுத்தவரை இது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்று தெரிவி…

  14. DR கொங்கோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரதான போராளி அமைப்புக்களில் ஒன்றான M23 அமைப்பு போராளி அமைப்பும் கொங்கோ அரச படைகளுடனான போரில் பின்னடைவை கண்டதை அடுத்து ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு.. முழுமையான அரசியல் வழிமுறையில் போராடப் போவதாக சூளுரைத்துள்ளனர். கொங்கோவில் 2012 முதல் M23 அமைப்பு போராளிகள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8,00,000 மக்கள் இடம்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்தப் போராட்ட முடிவினை அறிவித்துள்ள போராளி தலைவர்கள்.. ஆயுதங்களைக் களையுமாறும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும்... போராட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனை பிரதான இராணுவ வெற்றியாகச் சித்தரிக்கும் கொங்கோ அரசு.. இது கொங்கோ மக்களின் வெற்றி என்ற…

  15. சில நேரங்கள்ல, நமக்கு இருக்குற பெரிய பெரிய ஆசைகள் விடுத்து, குட்டி குட்டியா நமக்கு பிடிச்ச விசயங்கள பத்தி யோசிச்சு பாத்தோம்னா மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கும். எப்பவாவது நீங்க உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ன்னு பட்டியல் போட்டு பாத்துருக்கீங்களா? நான் கூட பட்டியல் போட்டு பாத்ததில்ல, இத எழுத ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி வரைக்கும்.... பேஸ் புக்ல ஒருநாளு என்னோட ப்ரென்ட் கார்த்திக், உங்களோட சின்ன சின்ன பிடித்தங்கள பட்டியலிடுங்களேன் கேட்டுருந்தார். அப்போ தான் கட கடன்னு பட்டியல் போட ஆரம்பிச்சேன்.... அப்படி என்ன பட்டியல் போட்டன்னு நீங்க கேட்டீங்கனா, அதுக்கு தான் நான் அத இங்க குடுத்துருக்கேன்.... எனக்கு பிடிச்ச பத்து விஷயம்னா... 1. ஏதோ ஒரு வகையில நான் சுதந்திரமா இரு…

  16. லீஸ் எனப்படும் இரண்டு வயதுக்குழந்தை இரண்டு நாட்களாக இறந்து போன தாயுடன் தனியே இருந்துள்ளது. Lédignan (Gard) மத்தியில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழந்து வந்த இவரது தாய் வலிப்பு நோயால் இறந்து போயுள்ளார். தனது மகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பில் பதிலேதும் இல்லாததை அடுத்து அவர் காவற்துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் பின்னர் முதலுதவிப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கதவை உடைத்து உள்ளே போனபோது கட்டிலில் உயிரற்ற உடலமாக இந்த இளம் பெண் இருந்துள்ளார். அருகேயே குழந்தையும் இருந்துள்ளது. இவர்களால் பெண்ணின் உடலமும் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தை அங்கிருந்த பிஸ்கட்களை உண்டு 48 மணித்தியாலம் இருந்துள்ளது. குழந்தையைப் பேரனும் பேத்தியும் பெறுப்பேறறுள்ளனர். இற…

  17. ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய மங்கள்யான் செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் தொழில்நுட்பத்திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 450 கோடி ரூபாய் செலவில் மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஸ்தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது. இதற்காக போர்ட் பிளேர், பெங்களூரூ அருகே உள்ள பைலாலு, புருனே ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் முன்னேற்பாட்டுப் பணிகளில் விஞ்ஞானிகள்…

  18. உலகத் தமிழர்கள் அனைவரும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இசைப்பிரியா படுகொலை உள்ளிட்டவற்றால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதமர் மதிக்க வேண்டும். எனவே 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்று அந்தோணி கூறியுள்ளாராம். Read more at: http://tamil.oneindia.in/news/india/3-key-union-ministers-including-k-antony-oppose-pm-s-chogm-visit-186578.html#slide398439 ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன்தான், பிரதமர் இலங்கைக்குப் போயாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படிப் போகாவிட்டால் இலங்கை, சீனா பக்கம் போய் விடும் என்று மத்திய அரசை அவர் பயமுறுத்தி வருகிறாராம். மேலும் ராஜபக்சே இந்தியாவுக்குக் கொடுத்த வா…

  19. மேற்கு நோர்வேயில் நடைபெற்ற ஒரு பேருந்து வண்டிக் கடத்தலின் போது மூவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் உள்ளூர் தகவல்களின் படி ஐம்பது வயதுமிக்க கடத்தல் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், மேற்படி சம்பவம் திங்கள் மாலை சோன் – பியோர்டன் (Sogn og Fjordane ) பிரதேசத்தில் உள்ள அர்டால் (Ardal) பட்டினத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது . TV-2 ஒலிபரப்பாளருக்கு வழக்குத் தொடுனர் ஜோர்ன் லஸ்சே ரெவ்ஸ்னர் (Jorn Lasse Revsnes) பேருந்தில் மூவர் மரணித்த நிலையில் இருந்தனர் என உறிதிப்ப்படுத்தியுள்ளார் . ஒரு ஆணும் , இரு பெண்களும் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். கத்தியுடன் காணப்பட்ட சந்தேக நபரை அங்கு வீதி விபத்து என விரைந்த தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட…

  20. சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 இன்று காலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த த…

  21. டாக்ப்லாடெற் (Dagbladet) நாளிதழ் மேற்கொண்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் நோர்வேயில் கடும்போக்கு இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கருத்துப்படி சுமார் 200 கடும்போக்கு இஸ்லாமியர் நோர்வேயில் தற்போது உள்ளனர். நோர்வேயில் ஷரீஆ சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே அவர்கள் அனைவரதும் பிரதான நோக்கம். இவர்கள் அதிகம் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்டவர்கள். நோர்வே பாதுகாப்பு முகவாண்மை இவர்களைக் கண்காணித்து வருகிறது. மதம் மாறிய நோர்வேஜியன்கள், வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்கான், பாகிஸ்தான், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, கிழக்காபிரிக்கா முதலான நாடுகளைப் பின்னணியாகக் கொண்ட குடிவரவாளர்கள், இளைஞர்களை இந்தக் கடும்போக்கு குழு கொண்டிருப்பதாக அவ்வாய்வு மே…

  22. பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பலியான 14வயது சிறுமி. ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளிலேயே டிரக் ஒன்று மோதியதால் விபத்தில் பலியான 14 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான டிரக் டிரைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்ற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோடை விடுமுறை திறந்து டொரண்டோவில் பள்ளி திறக்கப்பட்டது. மிகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் பள்ளி மாணவர்கள் முதல் நாள் பள்ளிக்கு சென்றனர். C.W. Jefferys Collegiate Institute என்றா பள்ளியில் படிக்கும் Violet Liang என்ற 14 வயது சிறுமியும் மிகவும் ஆசையோடு பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் டிரக் ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த சிறுமி பர…

    • 0 replies
    • 403 views
  23. 2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும் பரபரப்பு. எங்கோ எதற்கோ மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? அந்த சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும் அணிந்த 39 வயது மனிதர் மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது. ஏர…

  24. இம்மாதம் 15ம் தேதி, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதா, அடுத்தக் கட்டமாக நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் நாளை, தீபாவளியன்று, சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் கருத்து கேட்க, மத்திய அமைச்சர் வாசன் திட்டமிட்டுள்ளார். கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்டறிந்த பின், முக்கிய முடிவை வாசன் எடுப்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரட்டம் தீவிரமாக நடந்த போது, அப்போதைய முதல்வர் காமராஜருக்கு, டில்லியிலிருந்து, இந்தி மொழியில் கடிதம் வந்தது, அந்தக் கடிதத்தை கிழித்தெறிந்து, அதே கவரில் …

  25. 3 நவம்பர், 2013 வங்கதேசத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு தீர்ப்பாயமொன்று வெளிநாடுகளில் வாழும் இரண்டு வங்கதேசத்தவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரின்போது கல்வியியலாளர்களும் ஊடகவியலாளர்களுமாக 18 பேரின் படுகொலைகளில் பங்கெடுத்தமைக்காகவே இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனில் வாழும் சௌத்ரி முயீன் உதின் என்பவரும் அமெரிக்கப் பிரஜையான அஷ்ரஃபுஸாமான் கானும் பாகிஸ்தானுக்கு உதவிய ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் தீர்ப்பாயத்திடம் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கு விசாரணைகளுக்காக வங்கதேசத்துக்கு வருமாறு இருவருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.