வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா? என்று புலம்பும் அளவுக்கு பவர்ஸ்டாரின் பாப்புலாரிட்டி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. போகின்ற இடமெல்லால் “நான் என் ஆசைத்தம்பி டைரக்டர் ஷங்கரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், ஆனால் அவர் அண்ணே... நான் உங்களோட தீவிரமான ரசிகன் என்று என்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்” என போகிற போக்கில் அதிர்ச்சி குண்டுகளை தூக்கி போட்டு விட்டுப்போகும் பவர்ஸ்டார் புத்தாண்டிலும் ஒரு அதிர்ச்சி குண்டைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறார். ஆமாம், ‘நண்பன்’ படத்திற்கு பிறகு டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்து வரும் ‘ஐ’. படத்தில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ரோபோ கெட்டப்பில் வருகிறார் என்பது தான் அந்த வெடிகுண்டு. ஏற்கனவே இந்தப…
-
- 0 replies
- 808 views
-
-
ஜெயம்ரவி ஹீரோவாக நடித்து வரும் பூலோகம் படத்தில் ட்ராய் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த நாதன் ஜோன்ஸ் வில்லனாக நடிக்கிறார். 'சம்திங் சம்திங்' படத்துக்குப் பிறகு ஜெயம்’ ரவி, த்ரிஷா இணைந்து நடித்து வரும் படம்தான் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை டைரக்ட் செய்த ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையாக தயாராகி வருகிறது இந்தப் படம். ஏற்கெனவே அவர் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திலும் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அதேபோல இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வில்லனாக முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகர…
-
- 2 replies
- 738 views
-
-
இந்தக் கேள்விக்கான பதில் பல பேருக்கு தெரியாமல் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் சிம்புவை தனுஷ் ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. விஜய்டிவியில் ‘லொள்ளுசபா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை வம்படியாகக் கூப்பிட்டு தனது ‘மன்மதன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் “சிம்பு உங்களுக்கு அறிவில்லையா?” என்று திட்டியும் கூட சிம்பு சந்தானத்தை அந்தப்படத்தில் நடிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் அவர் நடித்த அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பும் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட சந்தானம் தான் இன்று தமிழ்சினிமாவில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அ…
-
- 0 replies
- 511 views
-
-
சினிமாவில் ஆண் வாரிசுகளை தான் அறிமுகம் செய்ய வேண்டுமா...?! மகளை அறிமுகம் செய்து வைத்து அர்ஜூன் கேள்வி!! பட்டத்து யானை படத்தில் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யாவை சென்னை, அண்ணாசாலையில் உள்ள ரெயின் ட்ரீ நட்சத்திர ஓட்டலில் நடிகர் அர்ஜூன் கையை பிடித்து அழைத்து வந்து பத்திரிக்கை மற்றும் மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவில் நடிகர் அர்ஜூன், அவரது மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை கதாநாயகர் விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மகள் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் அர்ஜூன் நான் எத்தனையோ முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறே…
-
- 1 reply
- 744 views
-
-
நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் நீர்ப்பறவை திரை விமர்சனம் -அமிர்தம் சூர்யா (கல்கி-வார இதழில் பிரசுரமானது) ------------------------------------------ ‘குழந்தைக்குப் பாலூட்டும் அழகிய பெண்ணின் கலைப்படைப்பு சிற்பம், தானொரு தாய்என்பதை பிரச்சாரம் செய்தபடியே இருக்கும்’ என்பார் அறிஞர் அண்ணா. அதுபோல கோலிவுட் குத்தாட்ட, வெற்று குண்டு சப்தங்களுக்கிடையே அழகிய கடலும், கடல் சார்ந்த நெய்தலும் வாழ்க்கையைக் கூவியபடி வந்திருக்கும் கலைப்படைப்பு ‘நீர்ப் பறவை’. அப்பறவை இரு விஷயங்களைப் பிரசசாரம் செய்கிறது. 1. ‘திகட்டும்படி’ குடியின் கேகட்டைச் சொல்லித் திருத்தும் வழியைச் சொல்வது. 2. கடல் எல்லையில் தினம் தினம் இல…
-
- 0 replies
- 645 views
-
-
'டெல்லி பெல்லி' ரீமேக்கான "சேட்டை" படத்தில் தமன் தன்னோட மியூசிக்ல ஒரு அமேஸிங் குத்துப் சாங் ஒன்னு போட்ருக்கார். அதாவது, 'எதைத்தான் கண்டு விட்ட புதுசா' என்ற பாடலுக்கு பின்னி மில்லில், கல்யாணோட கோரியோகிராபியில், கொஞ்சம் காமெடியா டான்ஸ் ஆடியிருக்கார் பிரேம்ஜி. பிஜோய் நம்பியார் டைரக்சன்ல ஆக்சன் திரில்லர் மூவியாக உருவாகியிருக்கும் படம் "டேவிட்". இந்த படத்தில விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பிரசாந்த் பிள்ளை, அனிருத், ரெமோ என மூன்று மியூசிக் டைரக்டர்ஸ் கம்போஸ் செய்துள்ளார்கள். படத்தில் மொத்தம் 12 சாங்ஸ் உள்ளது. ஜனவரி 3-ல் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெற உள்ளது. சமீபத்தில் ரிலீஸ் ஆன 'நீதானே என் பொன் வசந்தம்' பட…
-
- 0 replies
- 677 views
-
-
கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம். ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல. தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!) போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும். யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழ்த் திரையுலகில் 2012ம் ஆண்டின் பாட்டு ராசா யார் என்று கேட்டால் நா.முத்துக்குமாரின் பெயர்தான் முதலில் வருகிறது. கடந்த ஆண்டில் முத்துக்குமார் 103 பாடல்களை எழுதி அசத்தியுள்ளார்.தன்னம்பிக்கைப் பாடலாகட்டும், குத்துப் பாட்டாகட்டும், துள்ளல் இசைப் பாடலாகட்டும், எதாக இருந்தாலும் விதம் விதமாக தருவதில் முத்துக்குமாருக்கு நிகர் அவர்தான். 2012ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் அத்தனையிலும் முத்துக்குமாரின் பாட்டு முத்திரை பதிந்துள்ளது விசேஷமானது. http://123tamilcinema.com/2013010223398.html
-
- 0 replies
- 517 views
-
-
எப்போதாவது மணிரத்னம் படங்கள் மட்டும் இந்தியாவுக்கு வெளியே நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும். இன்று அந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம். அட்டைக்காப்பியான தெய்வத்திருமகள்கூட ஐப்பானில் விருது வாங்கியதாக ஃபிலிம் ஓட்டினார்கள். முன்னேற்றம்தானே…? அடுத்த மாதம் 16 முதல் 19 ஆம் தேதி வரை பாரிஸில் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள் போன்ற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நல்லவேளையாக இந்தமுறை காப்பி படங்களை அனுப்பாமல் தமிழிலிருந்து வழக்கு எண் படத்தையும், பீட்சாவையும் அனுப்பியிருக்கிறார்கள். இரண்டுமே நல்ல படங்கள், அசலானவை. ஏதாவது விருது கிடைத்தால்கூட ஆச்சரியமில்லை. http://123tamilcinema.com/2013010223410.ht…
-
- 0 replies
- 458 views
-
-
கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 919 views
-
-
புத்தாண்டின் முதல் சுப நிகழ்ச்சியாக தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் இணைந்து நடித்த திருமதி தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. ஜெயா தொலைக்காட்சிக்காக நடந்த வீ4 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடுவில் இந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொண்டார் ராஜகுமாரன். எவர்கிரீன் நாயகி தேவயானியின் 75 வது படம் என்ற அடையாளத்தோடும் பெருமிதத்தோடும் நடந்த இந்த நிகழ்வு, ராஜகுமாரனை பொருத்தவரை இன்னொரு அதிர்ஷ்டம். (முதல் அதிர்ஷ்டம் தேவயானி என்பதை நாம் சொல்ல தேவையில்லை) இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். மனைவியுடையான் பைனான்சுக்கு அஞ்சான் என்பதை தட்டு தடுமாறி நிரூபித்த ராஜகுமாரன், 'இப்ப தேவயானி மேடம் பேசுவாங்க' என்று பவ்யம் காட்டியதையெல்லாம் வெகுவாக ரசித்தது கூட்டம். …
-
- 0 replies
- 800 views
-
-
2012 இல் அதிக வசூல் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில் டிஸ்னி தயாரித்த 'The Avengers', லயன்ஸ்கேட் தயாரித்த 'The Hunger Games' என்பன முக்கியமானவை. சுமார் 220 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட The Avangers 607.2 மில்லியன் அமெரிக்க டாலர் குவித்தது. 152.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட The Hunger Games 403.8 மில்லியன் டாலருக்கு வசூல் குவித்தது. இவற்றை விட The Lorax, 21 Jump Street, Journey 2: The Mysterious Island, Chronicle என்பனவும் நல்ல படங்களாக பெயர் வாங்கின. 2013ம் ஆண்டுக்கான ஹாலிவூட் திரையுலகம் என்ன மாதிரியான திரைப்படங்களுக்காக காத்திருக்கிறது என தற்போது பார்ப்போம். கடந்த 80 வருடங்களாக நாம் பார்த்து வரும் அனைத்துவகையான திரைப்படங்களும் செக்கனுக்கு 24 Fram…
-
- 0 replies
- 453 views
-
-
எல்லோரும் புத்தாண்டை சரக்கு, கூத்து, கும்மாளம் என குஷியோடு கொண்டாடிக் கொண்டிருக்க, நம்ம ‘தல’ அஜித் மட்டும் மிகவும் பொறுப்பான தனது புதிய படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து கொளவதற்காக மும்பைக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அஜித் நடித்து வரும் 53-வது படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் டைரக்ட் செய்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, ராணா, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல்குல்கர்னி, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடித்து வருகிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப்படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்தப்படப்பிடிப்ப…
-
- 0 replies
- 677 views
-
-
சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த தெலுங்கு நடிகை சுவாதி சொந்தமாக புரொடக்ஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறாராம். தமிழில் சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுவாதி தெலுங்கில் பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு அதே சசிக்குமாரின் ‘போராளி’ உட்பட ஒன்றிரெண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்து விட்டு மீண்டும் அவரது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கே போய்விட்டார். ஆந்திராவில் சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளினியாக வாழ்க்கையை ஆரம்பித்த சுவாதி இப்போது சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையே புதிதாக படங்களை தயாரிக்க முடிவெடுத்திருக்கும் அவர் ஒரு புரொடக்ஷன் கம்பெனி …
-
- 0 replies
- 314 views
-
-
டைரக்டர் விஜய் டைரக்ஷனில் ‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடித்து வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதிய படத்துக்காக மும்பையிலுள்ள பிஸியான ஏரியாவான மாஹிம் ஏரியாவை செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் டைரக்டர் விஜய். ‘துப்பாக்கி’ படத்துக்குப் பின் இளையதளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பை மும்பையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்திய டைரக்டர் விஜய் அந்தப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் மும்பையில் எப்போதுமே பிஸியாக இருக்கும் பிரபல ஏரியாவான மாஹிம் ஏரியாவில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று போலீஸார் எச்ச…
-
- 0 replies
- 602 views
-
-
கும்கியின் வெற்றியில் முதல் பலனை அனுபவிப்பது அதன் ஹீரோ விக்ரம் பிரபு தான். ஏற்கனவே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 'இவன் வேறமாதிரி' என்ற படம் துவங்கப்பட்டு சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது 'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் யூடிவி தயாரிப்பில் 'சிகரம் தொடு' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விக்ரம் பிரபுவும் இன்னொரு கார்த்தி போல முதல் பட வெற்றியில் சிகரத்தை தொட்டு விட்டார். வாழ்த்துக்கள் அவருக்கும், கௌரவ்விற்கும். http://www.soundcameraaction.com/cinema-news/item/1187-vikram-prabhu-signs-3rd-film-with-utv-titled-sigaram-thodu
-
- 0 replies
- 676 views
-
-
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான, “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்ற படத்தை, பெரிதும் நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், படம், ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக, ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன. இதனால், கவலையடைந்துள்ளார், அவர். “என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள். தெலுங்கிலும்…
-
- 1 reply
- 538 views
-
-
“ஏண்டா இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தோம்...” என்று புலம்பித்தவிக்கும் அளவுக்கு ஜெயம்ரவிக்கு டென்ஷனை உண்டு பண்ணிய டைரக்டர் அமீர் ஒருவழியாக ‘ஆதிபகவன்’ படத்தை முடித்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் புரொடக்ஷனில் இருந்த இந்தப்படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாமே முடிந்து விட்டது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நீதுசந்திரா நடித்திருக்கிறார். அதிபயங்கரமான சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் நீது. நிஜ வாழ்க்கையில் தற்காப்புக் கலைகளை கற்றுவரும் நீது சமீபத்தில் தான் கொரிய தற்காப்புக்கலையில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை வாங்கியிருந்தார். அந்த பயிற்சி அனுபவம் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது என…
-
- 0 replies
- 562 views
-
-
'ரவுடி ரத்தோர்' படம் கொடுத்த மிரட்டலான வசூலில் கொஞ்சம் தெம்பாக இருக்கும் பிரபுதேவா இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழுக்கு வருகிறார். ஆமாம், ஹிந்தியில் ரிலீஸான ஏ.பி.சி.டி( Any Body Can Dance ) என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப்படத்தை அவர் தமிழில் டைரக்ட் செய்ய மிக ஆவலாக இருக்கக் காரணம் என்னவென்றால் இது ஒரு 3டியில் வெளிவந்த முதல் டான்ஸ் படமாகும். ஹிந்தியில் இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனரான ரெமோ டிசோஸா டைரக்ட் செய்ய, யுடிவி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப்படத்தில் பிரபுதேவாவும் கணேஷ் ஆச்சார்யாவும் நிஜ நடன இயக்குனர்களின் கேரக்டர்களில் நடித்திருந்தார்கள். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெள…
-
- 4 replies
- 809 views
-
-
உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் இசைப்பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் ஒரு புதிய ஹிந்திப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனது இனிமையான குரலாலும், இளமையான கவர்ச்சியாலும் உலக இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் பிரபல பாப் இசைப்பாடகி ஸ்ப்ரிட்னி பியர்ஸை ஒரு புதிய ஹிந்திப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற மலையாளப் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சதானந்தம் ஹிந்தியில் தயாரிக்கப்போகும் ஒரு புதிய படத்தில் தான் ஸ்பிரிட்னியை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்தப்படத்தில் படத்தின் கதைப்படியே ஸ்ப்ரிட்னியின் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்தின் டைட்டில் பாடலாக அமையும…
-
- 0 replies
- 403 views
-
-
பூ ஒன்று புயலானது என்கிற படத்தின் மூலம்தான் நடிகை விஜயசாந்தி கொஞ்சம் அதிரடி நாயகியாக மாறினார். அது தெலுங்கு பட ரசிகர்களுக்குப் பிடித்து போகவே, வைஜயந்தி ஐ பி எஸ், லாக்கப் என்று தொடர்ந்து அதிரடிப் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் நடிகை விஜயசாந்தியின் தெலுகு படங்களை தமிழில் டப் செய்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட்தான். இதே பார்முலாவை இப்போது, நடிகை அனுஷ்காவுக்காக கையில் எடுத்துள்ளனர் தெலுகு திரைப்படத்துறையினர். அனுஷ்காவும் பல வருடங்களாக உள்ள தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டார் இடம் காலியாக உள்ளதை ராணி ருத்ரமாதேவி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மூலம் மிக நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார். டெல்லி, சிறீவைகுண்டம் பா…
-
- 0 replies
- 551 views
-
-
ஹைதராபாத்தில் தெலுங்கு மொழியில் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய கமல், விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்புவது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கலந்து கொண்டு, பாடல் சி டி யை வெளியிட, தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார். தாசரிநாராயணராவ் பேசும்போது, விஸ்வரூபம் படத்தை டி டி ஹெச்சில் ஒளி பரப்புவத்தின் மூலம், கமல்ஹாசன் புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். இப்படிப்பட்ட தைரியம் நிச்சயம் யாருக்கும் வராது. டெல்லி, சிறீவைகுண்டம் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிரான கலையுலக பிரமுகர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு : புக…
-
- 0 replies
- 645 views
-
-
"விஸ்வரூபம்" டி டி எச் வருமானம் 300 கோடியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 19:12 ஜிஎம்டி நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத…
-
- 0 replies
- 339 views
-
-