வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
பிப்ரவரி வரவுகள் : மாறும் தேதிகள் 2006க்கும் 2007க்கும் இடையே பல படங்கள் திரையிட திட்டமிடப்பட்டு, சில திரைக்கு வந்து, பல தாமதமாகி, தேதிகள் மாறி என கோலிவுட் வட்டாரம் வழக்கத்தைவிட சற்று அதிக பரபரப்புடன் இருக்கிறது. தீபாவளி முதலே பல படங்களின் படபிடிப்பு தாமதமாகியது. எடிட்டிங் போன்ற படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளும் பல படங்களுக்கு தாமதமாகி பொங்கல் சமயம் பல படங்கள் திரைக்கு வர நெருக்கடி ஏற்பட்டது. மேலும் விஜய், அஜித் படங்களோடு தங்கள் படங்களையும் வெளியிட பல தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. எனவே தங்கள் படங்களுக்கு ஏற்ற ரிலீஸ் தேதிகள் அமைக்க படவுலகும் திரைப்பாளர்களும் பரபரக்கின்றனர். இவற்றின் விளைவாக 2007 பிப்ரவரியில் எக்கச்சக்கசக்கமான புதிய திரைப்படங்கள் திரைக்கு வ…
-
- 0 replies
- 868 views
-
-
சினிமா ஆர்வலர்களின் கண்களுக்கும் கருத்துகளுக்கும் தீனிபோட சென்னையில் 'சினிமா டுடே' திரைப்பட விழா தொடங்கியது. திரைப்பட ஊடகம் தொடங்கப்பட்டு பவள விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் சர்வதேச திரைப்படவிழா (Film panorama) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்குகளில் தொடங்கப்பட்டது. நடிகர்கள் ஜெயம்ரவி, அருண்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், நடிகைகள் சினேகா, கஸ்தூரி, கீர்த்திசாவ்லா ஆகியோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய படவிழா நாளை வரை நடக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 30 படங்கள் தினமும் 10 ப…
-
- 0 replies
- 975 views
-
-
'திருமகன்' உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா. இவரை அருண் என்பவர் கடத்தி விட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் 'ராமுடு மஞ்சு பாலுடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக தனது தாய் தம்பியுடன் ராஜமுந்திரி சென்றிருந்தார் ப்ரீத்தி. மொத்தம் 13 நாள்கள் ஷுட்டிங். ஒன்பது நாள்வரை பிரச்சனை ஏதுமில்லை. பத்தாவது நாள் காலை ப்ரீத்தியின் தம்பிக்கு உடல்நலமில்லாமல் போக, அவரது தாயார் ஹோட்டலில் ப்ரீத்தியின் தம்பியுடன் தங்கியிருந்திருக்கிறார். ப்ரீத்தி படப்பிடிப்புக்கு தனியாக சென்றுள்ளார். மாலையில் ப்ரீத்தி வர்மா திரும்பி வரவில்லை. படப்பிடிப்பு குழுவிடம் கேட…
-
- 0 replies
- 766 views
-
-
கவர்னேட்டரின் காதல் மனைவி! காலையில் கல்யாணம்.. மாலையில் டைவர்ஸ் என்று வாழும் அமெரிக்க வி.ஐ.பி&க்களுக்கு மத்தியில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு ஸ்வாஷ்னெகர் & மரியா ஷ்ரிவர் தம்பதி மட்டும் ஆச்சர்ய விதிவிலக்கு! அமெரிக்கர்களால், ‘கவர்னேட்டர்’ என்று அன்போடு அழைக்கப்படும் அர்னால்டு கடந்த 2003&ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் முக்கிய மாகாணமான கலிபோர்னியாவின் கவர்னராக இருக்கிறார் (அவர் நடித்து சூப்பர்ஹிட்டான ‘டெர்மினேட்டர்’ படத்தின் பெயரையும் கவர்னரையும் சேர்த்துதான் ‘கவர்னேட்டர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்)! இந்த ரியல் ஹீரோவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது மரியா ஷ்ரிவர் என்ற காதல் மனைவிதான்! சமீபத்தில் ‘யாஹ¨’ நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்…
-
- 0 replies
- 963 views
-
-
Cast:Jayam Ravi, Bhavana, Vijay Kumar, Lal Direction:S.Ezhil Music:Yuvan Shankar Raja Watch This Movie <<< ON WEB NOW
-
- 1 reply
- 1.2k views
-
-
அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…
-
- 3 replies
- 1.4k views
-
-
இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்தில் லைட்மேன் வேலைசெய்வது கூட பெருமையான விஷயம்தான். அந்த வகையில் கடைசிநேரத்தில் சந்தியாவும் 'சிவாஜி'யில் முக்கிய பங்காற்றுகிறார். கதாநாயகி ஸ்ரேயா இருக்கும்போது சந்தியாவுக்கு என்ன வேலை.... என்று நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்குள் 'சிவாஜி'யில் சந்தியாவின் ரோல் என்ன என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த போன், சந்தியாவின் மொபைலை எழுப்பியது. போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த நொடியே சந்தியாவின் முகமுழுவதும் பூரிப்பு பூத்தது. படத்தில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யார்யாரையோ தேர்வு செய்து பார்த்தும் ஒருவரும் தேரவில்ல…
-
- 1 reply
- 959 views
-
-
போக்கிரி v போக்கிரி காட்சி 1 http://www.youtube.com/watch?v=msljxCJ8lwI http://www.youtube.com/watch?v=_8-vWUdDpx8 காட்சி 2 http://www.youtube.com/watch?v=Ddq2E00z7dY http://www.youtube.com/watch?v=J-qKk5LFHSM காட்சி 3 http://www.youtube.com/watch?v=f_KWO3dvcMw http://www.youtube.com/watch?v=8MH70rVPIGc காட்சி 4 http://www.youtube.com/watch?v=2ogl4J4_D_c http://www.youtube.com/watch?v=sRgMRyprBj0
-
- 6 replies
- 2k views
-
-
இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…
-
- 0 replies
- 770 views
-
-
சென்னை விமான நிலையத்தில் ரஜினி கண்ணெதிரே பெண் டாக்டரை அவமானப்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறி அம்பலத்திற்கு வந்துள்ளது. சென்னை தி.நகரில் மில்லினியம் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருபவர் அய்யாதுரை. இவரது மகள் டாக்டர் உமா தனபாலன், மகன் சிவாவும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் சென்னை வந்த இவர்கள் இருவரும் ஜனவரி 13-ந் தேதி அமெரிக்காவுக்கு லூப்தான்சா விமானத்தில் திரும்பிச்செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர். இந்நிலையில் டாக்டர் உமாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் டிக்கெட்டை ரத்து செய்து பிப்ரவரி (இம்மாதம்) 5-ந் தேதிக்கு மாற்றிக்கொண்டார். விமான பயண விதிமுறைப்படி, உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழை சமர்பித்தால் அபராதத்தொகை இல்லாமல் மாற்றியமைக்கப்பட…
-
- 7 replies
- 2.2k views
-
-
http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com
-
- 0 replies
- 1.1k views
-
-
சிம்பு புத்தியை காட்டிவிட்டார்நயன் பாய்ச்சல் தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் மிக நெருக்கமாக படம் எடுத்துவிட்டு அதை இப்போது இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார் சிம்பு. இதன் மூலம் அவர் தனது புத்தியை காட்டிவிட்டார் என நயனதாரா பாய்ந்துள்ளார். சிம்புநயனதாரா இடையே உருவான திடீர் காதல் திடீரென புட்டுக் கொண்டது. இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கொஞ்ச காலமாக இருவருமே அமைதியாக இருந்தனர். இந் நிலையில் நயனதாராவோடு ஹோட்டல் ரூமில் சிம்பு மிக நெருக்கமாக இருந்த படங்கள் வலம் வர ஆரம்பித்துள்ளன. சோபாவில் அமர்ந்தபடி நயனதாராவை கட்டி அணைத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் இருவரும் உதடுகளை…
-
- 17 replies
- 5.7k views
-
-
டி. ராஜேந்தரின் அதே டன்டனக்கா டன்க்கனக்க.... சத்தம்தான் டிஜிட்டல் ஒலி அலைகளில். சட்டமன்ற உறுப்பிரனரான டி. ராஜேந்தந்தர் நீதி, நேர்மைக்கு உதாரண புருஷராக திகழ்பவர். ஆளுங்கட்சி அமைச்சரின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அவ்வப்போது வில்லனுக்கு எதிராக தொடைதட்டிக்கொண்டு குஸ்திபோட தயங்காதவர். இந்நிலையில் கல்லூரியில் நன்றாக படிக்கும் அமைச்சரின் மைத்துனரான அஜிசுடன் காதல் கொள்கிறார் டி. ஆரின் தங்கை ஷீலா. வீட்டில் வேலை செய்யும் மும்தாஜ் டி.ஆரை ஒருதலையாக காதலிக்கிறார். எதிரி என்றும் பாராமல் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற அமைச்சரின் வீடு தேடிச்சென்று மாப்பிள்ளை கேட்கும் டி.ஆர் வில்லனாலும் வில்லி பத்மா நாராயணாலும் அவமானப்படுத்தப்படுகிறார். காதலனுடன் தங்கையை சேர்த்துவைக்கமுடியா…
-
- 4 replies
- 1.6k views
-
-
இதுவொன்றும் புது விஷயமில்லை. 'குஷி' படத்தில் வரும் 'மொட்டு ஒன்று மலர்ந்திட....' பாடலில் எம்.ஜி.ஆர். போல நடன அசைவுகளை விஜய்யை வைத்து செய்திருப்பார் சூர்யா. 'நியூ' படத்தில் வரும் 'படகோட்டி' படப் பாடலான 'தொட்டால் பூ மலரும்...' ரீ-மிக்ஸ் இன்னொரு உதாரணம். 'திருமகன்' படத்திலும் உண்டு எம்.ஜி.ஆர். காப்பி. இதில் இடம் பெறும் சிலம்ப சண்டையை எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்து அப்படியே அமைத்திருக்கிறார்கள். 'பெரிய இடத்து பெண்' போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர். போட்ட கம்பு சண்டைகளை சி.டி. யில் போட்டுப் பார்த்து அப்படியே 'திருமகனில்' பெர்பார்ம் செய்திருக்கிறார் சூர்யா. 'வியாபாரி' க்குப் பிறகு இவரும் ஷக்தி சிதம்பரமும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'உங்க வீட்டு பிள்ளை' என்று பெயர் வைத்திர…
-
- 0 replies
- 967 views
-
-
பிக்பிரதர் நிகழ்ச்சியில் வென்று உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கும் ஷில்பா ஷெட்டி தனது குடும்பம் மீது அதிகம் பாசம் கொண்டவர். தனது நலனுக் காக பெற்றோர் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர் கூறியதா வது:- திருமண விஷயத்தில் பெற்றோரின் தேர்வே மிகவும் சரியாக இருக்கும் எனவே அவர்களின் கருத்துக்கு அதிக மதிப்பளிக்கிறேன். என் காதலனுடன் டேட்டிங் செல்ல தாயும், தந்தையும் அனுமதித்தால் கூட தனியாக டேட்டிங் செல்ல முடியாது. எனது தங்கை மற்றும் வீட்டில் உள்ள ஒரு ஆண் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். பார்ட்டி களில் தனியாக கலந்து கொள்ள முடியாது. இது மற்றவர்களுக்கு விநோதமாக தெரியலாம். ஆனால் எங்கள்…
-
- 6 replies
- 1.5k views
-
-
தெலுங்கு படவுலகில் தமிழ் கலைஞர்களுக்கு தனிமரியாதை கிடைத்து வரும் காலம் இது. தமிழர்கள் என்றால் யோசிக்காமல் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். சென்ற வருட தெலுங்குபட 'ஹிட்' லிஸ்ட் தமிழர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. சென்ற வருடம் வெளியான படங்களில் 'ஸ்டாலின்', 'பொம்மரிலு' படங்கள் மட்டுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழர்கள். ஸ்டாலினை ஏ.ஆர். முருகதாஸும், பொம்மரிலுவை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரும் இயக்கியிருந்தனர். தவிர, தமிழ் படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு அதிக வசூலை ஈட்டி வருகின்றன. இதனால் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் தெலுங்கு நட்சத்திரங்கள். செல்வ…
-
- 0 replies
- 818 views
-
-
உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் ஒரே மாதிரியானவையே. பிரபலமானவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அன்று அந்த செய்தியே பிரதான நியூஸ்! திங்கள்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் அபிஷேக்பச்சன். அமிதாபச்சனின் மகன், பாலிவுட் நடிகர் என்பதுடன் ஐஸ்வர்யாராயின் வருங்கால கணவர் என இவர்மீது ஏகப்பட்ட புகழ் வெளிச்சம். வட இந்திய பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் அபிஷேக்கின் பிறந்தநாளை அவரை விட உற்சாகமாக கொண்டாடின. மக்களின் அடிப்படை பிரச்சனையான காவிரி நீர் பங்கீட்டையும் இந்த கொண்டாட்டம் பின்னுக்கு தள்ளிவிட்டது. பிறந்த நாள் அன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருந்த அபிஷேக்பச்சன் விமானம் மூலம் மும்பை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அமிதாப்பச்சன். உடன் ஐஸ்வ…
-
- 0 replies
- 899 views
-
-
மலையாளிகளுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம். எடுத்ததற்கெல்லாம் கொடி பிடிப்பது இவர்களின் பிரதான வியாதி. இந்த வியாதிக்கு மருந்தாகியிருக்கிறார் நடிகை பத்மப்ரியா. மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் பத்மப்ரியா, பேட்டியொன்றில், டப்பிங் வேறு ஆள்கள் பேசுவதால் என்னுடைய கேரக்டர் முழுமையாக பிரகாசிக்க முடியாமல் போகிறது என்றார். இதே கருத்தை எல்லா மொழி நடிகர்களும் காலம் காலமாக கூறிவருவதுதான். மேலும், சொந்தக்குரலில் பத்மப்ரியா பேசி நடித்த 'கறுத்த பட்சிகள்' படம் அவருக்கு விருது பெற்று தந்திருக்கிறது. இந்த காரணத்தினால்தான் சொந்தக்குரலில் பேசுவது மற்றவர்கள் டப்பிங் கொடுப்பதைவிட மேலானது என கருத்து தெரிவித்திருந்தார். மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இது போதாதா? உடனே கொடி பிடித்து…
-
- 0 replies
- 821 views
-
-
'நேதாஜி', 'கவிதை' படங்களை இயக்கியவர் G. கிச்சா. இவர் தற்போது நந்தாரகு என்ற பார்ட்னர் துணையுடன் 'நண்பனின் காதலி' படத்தை தயாரித்து இயக்குகிறார். 'காதலர் தினம்', 'புன்னகை தேசம்', 'பார்வை ஒன்றே போதுமே' படங்களை தொடர்ந்து குணால் நடிக்கும் இந்த படத்தில் 'விசில்' படத்தில் நடித்த ஆதித்யாவும் இன்னொரு நாயகன். கதாநாயகியாக 'காதல் எப்.எம்' படத்தில் நடித்த ஷிவானி சிங் நடிக்கிறார். கோவாவுக்கு வேலைக்கு செல்லும் விக்ரமாதித்யா கடற்கரையில் ஷிவானி சிங் -ஐ கண்டதும் முதல் பார்வையிலேயே காதல் கொள்கிறார். ஷிவானியின் வீட்டிற்கு எதிரிலேயே தங்கி அவளை தன் வசப்படுத்த செய்யும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. விக்ரமாதித்யா அறையில் தங்குவதற்கு வரும் குணால், விக்ரமாதித்யாவின் காதல் விளைய…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆர்வக்கோளாறில் அகல கால் வைக்க நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் பாடம் கற்க வேண்டிய முகவரி காமெடியன் கருணாஸ். பாப் சிங்கராக இருந்து இயக்குனர் பாலாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கருணாஸ். 'நந்தா', 'பிதாமகன்' என அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர், மற்ற காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்தார். இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்த அதிசயம் என்றாலும் இப்போது கருணாஸின் சினிமாக்கேரியர் அவரது லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் போலவே நொண்டி அடிக்க ஆரம்பித்துள்ளது. கால்ஷீட்டுகளும், காசுகளுமாக நிரம்பி வழிய ஆரம்பித்தபோது வேறொரு தொழிலில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டார். அதன்படி ஆசை வார்த்தை காட்டிய சகாக்கள் ஐடியாப்படி ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் ஐடியா…
-
- 2 replies
- 1.2k views
-
-
முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை சென்னை, பிப். 6- நடிகர் அஜீத்குமார் "கிரீடம்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார். காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறா…
-
- 2 replies
- 1.1k views
-
-
Cast: Jeeva, Pooja, delhi ganesh, Ghana Ulaganathan Camera: Egambaram Music: Dina Art: GK Lyrics: Yugabharathi Story Screenplay Dialogue Direction: subramania siva http://lovetack.com/pori/watch1.html
-
- 1 reply
- 1.2k views
-
-
டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…
-
- 0 replies
- 1k views
-
-
பானு. தமிழ்நாட்டுக்கு 'தாமிரபரணி' கொடுத்திருக்கும் மலையாள தேவதை. படித்தது ப்ளஸ்டூ, நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என சூப்பர் குட் பயோடேட்டாவுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பேச்சில், சிரிப்பில், பார்வையில் என பானுவின் எல்லா செயல்பாடுகளிலும் தடுமாறி விழுகிறது மனசு. "என்னோட முதல் படம் 'அச்சன் உறங்காத வீடு.' லால்ஜோஸ் சார் இயக்கிய படம். படம் சூப்பர் ஹிட்டாக, மலையாள வாலிபர்களின் மனசுக்குள் எனக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டது. ஹரி சார் தாமிரபரணிக்கு நடிக்க கூப்பிட்டப்ப அவருடைய படங்களை பற்றி கேள்விப்பட்டு அடுத்த நிமிடமே ஓ.கேன்னு தலையாட்டிட்டு தமிழ்நாட்டுக்கு ப்ளைட் ஏறிட்டேன். இதோ இப்போ பானுவா உங்க முன்னாடி. 'தாமிரபரணி' வெற்றி படமானதுல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் விஷாலோ…
-
- 2 replies
- 1.6k views
-