ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பக்கச்சார்பாகச் செற்படுவதாகவும் அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிகை எடுக்குமாறும் கோரி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இன்று (18) ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழி, கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், “இம்மாகாணத்தில், ஆட்சியாளர்களின் ஒருபக்கச் சார்பான செயற்பாடுகளுக்கு அடிபணிந்து சில அரச நிர்வாகங்கள் செயற்படுத்தப்பட்டதன் காரணமாக, சமூகங்களுக்கு மத்தியில் இன முரண்பாடுகள் ஏற்பட்டதே வரலாறாகும்” எனக் கூறியுள்ளார். “இம் மாகாணத்தில் உயர் பதவிகளுக்காக, அரசியல் ரீதியாக நியமன விதிமுறைக்கு முரணாக நி…
-
- 1 reply
- 819 views
-
-
-எஸ்.குகன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்றடவையாக, 3 வருடங்களில் காய்க்கும் உயர் ரக தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன என்று, யாழ்ப்பாணப் பிராந்திய தென்னைப் பயிர்செய்கைச் சபையின் முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார். இது தொடர்பாகத் தொடர்ந்துரைத்த அவர், இந்தத் தென்னங்கன்றுகள், கைபிரட் தென்னை இனத்தைச் சேர்நதவையெனவும் ஒரு பயனாளிக்கு 2 தென்னம் கன்றுகள் வீதம் 20,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளனவெனவும் கூறினார். எனவே, உரிய பராமரிப்பு, நிலவசதிகள் உள்ளவர்கள், பிரதேசத்தில் உள்ள கற்பகதருச் சங்கங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனக் கேட்டுக்கொண்ட அவர், இதற்கான பதிவுகள் நிறைவடைந்தவுடன் இரண்டு வாரங்களில் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுமெனவும் கூறி…
-
- 0 replies
- 407 views
-
-
இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி by : Yuganthini இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை, வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளமை தேசத்துரோக செயற்பாடென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 31/1 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தம…
-
- 4 replies
- 1.1k views
-
-
அரச நிறுவனங்களினல் 180 நாட்கள் பூர்த்தி செய்த மற்றும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளகர்கள் , சாரதிகள் நிரத்தர பணியில் அமர்த்தப்படவுள்ளனர். இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது பொது நிர்வாக அமைச்சு இது குறித்த தீர்மாத்தினை நடைமுறைபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75964
-
- 0 replies
- 388 views
-
-
(என்.ஜி.இராதாகிருஷ்னண்) பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக பணியாற்றிய மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் அக்கட்சியிலிருந்து வெளியேறி ' கொழும்பு மாவட்ட தமிழர் மகாசபை ' என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு - பிரைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுடன் இனி எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது சமாதான நோக்கோ இல்லை எனவும் அதே வேளை பிரபாகணேஷனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இராஜேந்திரன் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நான் இரு தடவைகள் நகரசபை உறு…
-
- 0 replies
- 532 views
-
-
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40 - 1 பிரேரணையிலிருந்துஇலங்கை அரசாங்கம் விலகுவதற்குஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று பேரவையின் உறுப்பு நாடுகள்உறுதியளித்ததாகஜெனிவா சென்று திரும்பிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும்2021 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள இந்த ஜெனிவா பிரேரணையைகால அட்டவணையின் அடிப்படையில்விரைவாக அமுல்படுத்தவேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர்எதிர்வரும்24 ஆம் திகதிஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்இந்தக் கூட்டத் தொடரில்இலங்கை குறித்துஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்அ…
-
- 1 reply
- 631 views
-
-
த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது. பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்…
-
- 44 replies
- 5k views
-
-
பொறுமையிழந்த விக்கியிடம் சூடு வாங்கிய கஜேந்திரகுமார்! தமிழ் மக்கள் கூட்டணிமீதும் அதன் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தொடர்பாகவும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தொடர்பான பலவிடயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடகவியலாளர் கேள்விகள் கேள்விகள்:-“தமிழ்த் தேசியமக்கள் முன்னணி”யினர் நீங்கள் ஒற்றையாட்சிஅரசியலமைப்புக்குள் தமிழ் மக்களைஏமாற்ற…
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்! “சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசுகள் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது.” இவ்வாறு தெரிவித்தார் கோட்டாபய அரசின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் கொழும்பில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறு…
-
- 0 replies
- 342 views
-
-
2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சஜித் by : Dhackshala 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும், 238 துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்தோடு, இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 7 ஆம் திகதி அரசாங்கத்தால் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க, 2020ஆம் ஆண்டு ஆர…
-
- 0 replies
- 232 views
-
-
ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு! by : Jeyachandran Vithushan நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) அறிக்கைவெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை இணைந்து இழைத்த வரலாற்று துரோகத்தின் காரணமாகவே இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இல…
-
- 0 replies
- 297 views
-
-
விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் – செ.கஜேந்திரன் விக்னேஸ்வரன் என்பவர் ஒரு மாயமான் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் மக்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு பின்னால் வராமல் தனக்குப் பின்னால் வர வைக்கின்ற ஒரு ஏமாற்று நாடகத்தினை முன்னெடுத்து வருகிறார் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.இன்று விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றார். கூட்டமைப்பு தென்னிலங்கைக்கு விலைபோய்விட்டதாக கூறுகின்றார். ஆனால் இவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை நாங்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினோம். அவரை வை…
-
- 1 reply
- 395 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் முற்றாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் Feb 19, 20200 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சைப் பெற்றுவந்த சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளார். இவரின் உடலில் இருந்த வைரஸ் முற்றாக நீங்கியுள்ள நிலையில் இவர் முற்றாக குணமடைந்துள்ளார். இதன்படி இன்று முற்பகல் வைத்தியசாலையிலிருந்து அவர் வெளியேறி சென்றுள்ளார். வைத்தியசாலையிலிருந்து வெளியேறி செல்லும் போது வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அவரால் நன்றி தெரிவிக்கப்பட்டது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்-தொற்றிய-…
-
- 0 replies
- 257 views
-
-
கிழக்கு ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடு: ஜனாதிபதியிடம் கோரிக்கை! பல இனங்கள், பல மதங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்லின சமூகங்களைக் கொண்ட பல மொழிகள், பல கலாசாரங்களை உடைய சமூக அமைப்பே இங்குள்ளன. கிழக்கில் தமிழர் 40வீதமும், முஸ்லிம்கள் 37வீதமும் சிங்களவர்கள் 23வீதமும் வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த பல வருடங்களாக இம்மாகாணத்தில் ஆட்சியாளர்களின் பக்கச்சார்பான செயற்பாடுகளினால் சில அரச நிர…
-
- 0 replies
- 353 views
-
-
அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது! ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். புதிய கூட்டணி மற்றும் அதன் சின்னம் குறித்து இறுதி முடிவை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கூடியது. குறித்த செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த மாதம், இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராகவ…
-
- 0 replies
- 285 views
-
-
சாய்ந்தமருது நகரசபை 2022, மார்ச் மாதம் 20 ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியானது. 1987 ஆம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 உள்ளூராட்சி சபைகள் காணப்பட்டது. அந்த நான்கு சபைகளும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா கொண்டுவந்த பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அதனை மீண்டும் பிரித்து சாய்ந்தமருது பகுதியை ஒரு நகர சபையாக உருவாக்கி தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் நவம்பர் எழுச்சி, டிசம்பர் புரட்சி என பல்வேறு போராட்டம் நடாத்தியதுடன், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகரசபைக்க…
-
- 9 replies
- 942 views
-
-
மிகவும் கெட்ட பெயரெடுத்த தளபதிகளில் ஒருவரை இராணுவத்தளபதியாக நியமித்தபோது அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் எவ்வாறு நினைத்திருக்க முடியும்? இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்திருக் கும் பயணத்தடை தொடர்பில் பி.பி. சி.யின் முன்னாள் செய்தியாளரும், இலங்கையில் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக வாதி டும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரான்சிஸ் ஹரிஸன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். 'இராணுவத்தளபதியா கவும் பின்னர் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் சவேந்திர சில்வாவை பதவியுயர்த்திய இலங்கை அரசாங்கத்தின் செயல் சர்வதேச சட…
-
- 2 replies
- 536 views
-
-
வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். …
-
- 1 reply
- 660 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை..! சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை.! தமிழீழ விடுதலை புலிகளின் கொள்ளைகளை காவிக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கா க சம்மந்தன், சுமந்திரன் போன்றவா்கள் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அமைச்சா் லக்ஸ்மன் யாப்பா அபேவா்த்தன கூறியுள்ளாா். அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தொிவித்துள்ளார் .அரசியல் தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை…
-
- 0 replies
- 478 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) அமெரிக்காவினால் விசா வழங்கமால் மறுக்கப்பட்டதில் முதலாவதாக நானே பாதிக்கப்பட்டேன். அப்போது இதுதொடர்பாக பேசாதவர்கள் தற்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு அது பற்றி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்காகும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும் தற்போதைய இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். https:/…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கை அரசாங்கமானது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனா சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்…
-
- 1 reply
- 361 views
-
-
-எஸ்.நிதர்ஷன் யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் உருவான தர்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில், 3 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம், இன்று பிற்பகல் 5 மணயளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லூரி மாணவனும் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இருவருக்கிடையில் தர்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே இரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மாணவா்களில் ஒருவர், வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்து வந்து, மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனை அவதானி…
-
- 2 replies
- 725 views
-
-
கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் 50 ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பெரும்பான்மை பிரதிநிதிகளாக உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டு அரசுகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கட்சி. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 256 views
-
-
கோட்டாவிடம் மஹிந்த முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டு நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், “நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட கடந்த ஐந்து வருட காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியாது…
-
- 1 reply
- 354 views
-
-
சஜித் பிரேமதாசவை கூட்டமைப்பினர் பின்பற்ற வேண்டும்- பந்துல சஜித் பிரேமதாச கொண்டுள்ள நாட்டுப்பற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “பிரிவினைவாதத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறியாக இருக்கின்றனர். இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்ப…
-
- 1 reply
- 637 views
-