ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சட்டத்தரணியை கைதுசெய்ய முயற்சி -எம்.றொசா்ந்த் புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக இளம்பெண் சட்டத்தரணியொருவர், இன்று காலை நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தார். அவரது சேலையில் புத்தரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த நீதிமன்ற பொலிஸார், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தனர். அதையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்த வந்த பொலிஸ் அணியொன்று, குறித்த சட்டத்தரணி நீதிம…
-
- 2 replies
- 1.7k views
-
-
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தொடர நடவடிக்கையெடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சபாயாகரான நீங்கள் இந்த சபைக்கு அறிவித்திருந்தீர்கள். அதன்படி சட்ட மா அதிபரினால் அது த…
-
- 0 replies
- 374 views
-
-
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சர்வதேசத்திடம் மனு கையளிப்பு இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர். தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறியிருந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். …
-
- 0 replies
- 690 views
-
-
தேர்தலில் களமிறங்க மாட்டேன் - நஸீர் அஹமட் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், சொந்த தொழில் சார்ந்த விடயங்களில் முழு நேரம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நான் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை சீராக முன்னெடுத்ததுடன் அதற்கான நிதி மூலங்கள் பல்வேறு வழிகளிலும் பெற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் தற்போது அபிவிருத்தி என்பது வெறும் பூச்சியமாகவே உள்ளது. ஒருபக்கம் அபிவிருத்தியை முன்னெடுத்த அதேவேளை மறுபக்கம் மட்டக்களப்பு மாவட்ட…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து கட்டளை வழங்கியுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட கட்சியின் செயலாளர், பொருளாருக்கு எதிராக இந்த இடைக்கால தடைக் கட்டளையை வழங்கிய யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன், எதிர்வரும் 2 ஆம் திகதி பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கினார். தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கட்சியைச் சார்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூ…
-
- 0 replies
- 571 views
-
-
புலி உறுப்பினர்கள் மூவரின் கோரிக்கை நிராகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும், உறுப்பினர்கள் மூவரின் கோரிக்கை, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (18) நிராகரிக்கப்பட்டது. தங்களுக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானதி ராஜரத்னவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். எனினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கில்லையெனத் தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கை, அத்தருணத்திலேயே விசாரணைக்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்…
-
- 0 replies
- 634 views
-
-
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் ஆகியவற்றின் தாமதத்திற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறதென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறதெனவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ச…
-
- 0 replies
- 314 views
-
-
போர்க்குற்றம்சாட்டப்பட்ட இருதரப்புக்கும் பொதுமன்னிப்பு – சம்பிக்க ரணவக்க யோசனை போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “இந்தச் சூழலில் போர் தொடர்பான குற்றங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்க வேண்டும். சிறிலங்கா இராணுவத்துக்கு உதவிய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், இதன் கீழ் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த…
-
- 1 reply
- 649 views
-
-
கறுப்புத் துணியால் வாய்களை மூடி முல்லைத்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!! முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தித் தொழில் செய்யத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து நேற்று முல்லைத்தீவு மீனவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவுக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகத் திரண்ட மீனவர்கள் தமது வாய்களில் கருப்புத் துணி கட்டி அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். கடந்த மாதம் முல்லைத்தீவுக்கு வந்த கொழும்பு மீன்பிட…
-
- 0 replies
- 446 views
-
-
மெத்தைக்குள் மறைத்து கஞ்சா கடத்தல்- கிளிநொச்சியில் சம்பவம்!! சூட்சுமமான முறையில் மெத்தைக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட கஞ்சா கிளிநொச்சிப் பொலிஸாரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டது. அதேசமயம் முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தில் 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் உள்ள புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நேற்று நண்பகல் கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் மெத்தைகள் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை மறித்…
-
- 0 replies
- 505 views
-
-
கிழக்கில் உயிர்த்தெழும் மாவீரர் துயிலுமில்லங்கள்! கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளன.இதற்கான பணிகளை மாவீரர்களின் உறவுகள் மேற்கொண்டு வருகின்றனர். தரவை மாவீரர் துயிலுமில்லம்? தரவை மாவீரர் துயிலுமில்லம் தொடர்பாக தரவை மாவீரர் பணிக்குழுவின் தலைவராகிய விசாகரத்தினம் அவர்கள் மாவீரர் துயிலுமில்லம் குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். தரவை மாவீரர் துயிலுமில்லமானது 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று ஆறாயிரத்திற்கு ( 6000) மேற்பட்ட மாவீரர் செல்வங்கள் அங்கே விதைக்கப்பட்டுள்ளனர். யுத்த மௌனிப்பிற்குப் பின் முதல் முதலாக சென்றவருடம் மாவீ…
-
- 0 replies
- 362 views
-
-
பாரிய மாற்றங்களுடன் வருகின்றது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! – அமைச்சரவை அனுமதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் நகல் வடிவத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அந்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைவிட பல விட யங்களில் மேன்மையான அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சட்டத்தின்படி – * இதன் கீழ் கைதுசெய்யப்படுவோர் 48 மணி நேரத்துக்குள் நீதிவான் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். * தடுப்புக் காலம் உத்தரவு ஆகக் கூடியது எட்டு வாரங்களுக்கு மட்டுமே வழங்கலாம். * இரண்டு வாரத்தின் பின்னர் தடுப்புக் காவலை நிராகர…
-
- 1 reply
- 428 views
-
-
கிளிநொச்சியில் காணப்பட்ட பொலன்னறுவைக் காலத்து புராதன கட்டிடத்தின் எச்சத்தினை இடிச்சு தரைமட்டமாகி விட்டார்கள் என்று கொழும்புப் பத்திரிகைகள் குமுகின்றன. இந்த விசயமாக யாழ் பத்திரிகைகளில் செய்திகள் இல்லை. கரைச்சி பிரதேச சபை அதிகாரிகளினால் பாரிய இயந்திரங்களின் துணையுடன் நடத்தப்படட இந்த தரை மட்டம் நிகழ்வினை கிளிநொச்சி பா ம உறுப்பினர் சிறிதரன் முன் நின்று நிறைவேற்றினார் என்கிறது செய்தி. புத்தர் வந்து ஒக்காரப் போறார் என்று இடிச்சுபோட்டார்கள் என்று சொல்ல வாற மாதிரி இருக்கு செய்தியும் பின்னூட்டமும். இது உண்மையானது என்பது படங்களில் இருந்து தெரிந்தாலும், இடிக்கப்பட்டது புராதன கட்டிட எச்சமா என்பது தெரியவில்லை. (ஏனெண்டா எங்கட ஆட்களுக்கு அந்தளவுக்கு துணிவு இல்…
-
- 0 replies
- 533 views
-
-
சிறிலங்காவை பௌத்த நாடு என்று மோடியிடம் ஏற்றுக் கொண்டாரா சம்பந்தன்? சிறிலங்காவை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக் கொள்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்டவர்களைக் கொண்ட இந்தக் குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன் பின்னர், டெக்கான் குரோனிக்கல் நாளிதழ், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செவ்…
-
- 4 replies
- 653 views
-
-
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்கு தமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்து வைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்கு தமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபி இன்னு திங்கட்கிழமை காலை துணைவேந்தர் விக்னேஸ்வரனால் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/95962/
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கு -கிழக்கு இணைப்பு வீதி -அமைக்கும் பணி இந்தியாவிடம்!! வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து, கிழக்கு மாகாணத்தின் திருகோண மலைக்கான வீதி அமைக்கும் பணி உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் வீதிகளை அமைக்கும் பணி சீனாவிடமிருந்து பிடுங்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.புவிசார் அரசியல் கரிசனைகளை அடுத்தே இலங்கை அரசு இந்த …
-
- 8 replies
- 1.1k views
-
-
இறுதிப் போரில் பொது மக்களை புலிகள் சுட்டனர் - எனக்கு கவலையே இல்லை - மஹிந்தவின் பிரத்தியேக பேட்டி அண்மையில் இந்தியாவிற்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ. தனது நெருங்கிய இந்திய நண்பனான சுப்ரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று இலங்கை - இந்தியா என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அத்துடன் ராகுல்காந்தி, நரேந்திர மோடி உட்பட இன்னும் சிலரைச் சந்தித்தது மட்டுமன்றி பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், இந்திய ஊடகமான தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில், இறுதி யுத்தம் தொடர்பிலும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பிலும் , தமிழர்கள…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு IF இந்திய- சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி 17ஆம் நாள் நிறைவடைந்தது. துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களாக, நடந்த ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும், 1000 கடற்படையினர் பங்கேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின், சுமித்ரா கிர்ச், கோரா டிவ் ஆகிய போர்க்கப்பர்களும், இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தியும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன. இந…
-
- 4 replies
- 731 views
-
-
வட மாகாணத்திற்கு புதிய தாதி உத்தியேகத்தர்கள் உட்பட வைத்திய நிபுணர்களும் நியமனம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். -வடமாகாணத்திற்கு என தெரிவு செய்யப்பட்ட 71 தாதி உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 12 தாதி உத்தியோகத்தர்களும், மன்னார் மாவட…
-
- 0 replies
- 546 views
-
-
வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைத்தார் சிறிலங்கா அதிபர் வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவையும், அங்குள்ள ஐந்து சிறிலங்கா தூதுரக அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. வியன்னாவில் இருந்த சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவுடன் கடந்தவாரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச 4 மணி நேரம் முயற்சித்தும், பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடைசியாக, அங்குள்ள காவல்காரர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்துள்ளார். தூதரகத்தில் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதற்குப் பின்னர், குறிப்பிட்ட காவல் காரர், பிரியானி விஜேசேகரவுக்க…
-
- 1 reply
- 449 views
-
-
இலங்கையில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் ஒரு பொக்கிஷம்: சபாநாயகர் புகழாரம் மீனவர்களும் வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கின்றார்கள், அவர்களின் பிரச்சினை மனிதநேய அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாட்டில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் அவர்களை பாராட்டுவது எங்களது கடமை என நான் நினைத்தேன். நாங்கள் மிக அன்பாக போற்றுக…
-
- 2 replies
- 513 views
-
-
சிங்களத் தலைவர்களின் மனநிலை மாறவில்லை- சித்தார்த்தன் எம்.பி.!! தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற மனநிலையி லேயே சிங்களத் தலைவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களது அந்த மனநிலையில் சிறுதுளி மாற்றம் கூட இன்னும் ஏற்படவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91ஆவது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலக மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
மீண்டும் யுத்தம் ஏற்படாமல் இருக்க வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (17.09.2018) காலை வழங்கி வைத்துள்ளார். நிர்வாக பிரதிப்பிரதம செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் தலைமயில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வர…
-
- 0 replies
- 416 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம் – சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் நாளை(திங்கட்கிழமை) ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய இன்று அங்கு சென்றிருந்தார். அங்கு சென்று கைதிகளை சந்தித்த பின்னர் ஆதவன் செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், மேற்குறித்த உறுதி மொழியை வழங்கினார்.…
-
- 6 replies
- 673 views
-
-
150 மில்லியன் ரூபா பெறுமதியா இயந்திரங்கள் கடத்தல்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீது வழக்கு! நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 150 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிர…
-
- 3 replies
- 709 views
-