ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கரை ஒதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்! புத்தளம் கடற்கரையில் காலாவதியான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள் கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துக் கழிவுப் பொருட்கள் ஆபத்தை தரக்கூடியவையா என்பது தொடர்பாக பிரதேச மக்களிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருட்களில், காலாவதியான மருந்துப் பொருட்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசி வகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த சில நாட்களாக புத்தளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அ…
-
- 0 replies
- 614 views
-
-
மஹிந்தவுடன் சிறுபான்மை கட்சி தலைவர்கள்; வைரலாகும் புகைப்படங்கள் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டட வளாகத்தினுள் இடம்பெற்றிருந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான, அமைச்சர் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ம…
-
- 1 reply
- 743 views
-
-
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நிதியை வழங்கவுள்ளது அமெரிக்கா சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு அதிகளவு பாதுகாப்பு நிதியை அளிப்பதற்கு வழி செய்யும், 2019ஆம் நிதியாண்டுக்கான 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். சீனா, ரஷ்யாவுக்குப் போட்டியாக, அமெரிக்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே, இந்தப் பாரிய நிதி ஒதுக்கப்படவுள்ளது. பாரிய- பலமான இராணுவத்தைக் கட்டியெழுப்பும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு அமைய, 716 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்கு, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் அங்கீகா…
-
- 0 replies
- 369 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதொன்றே. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ராஜபக் அணி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், அது எப்பவோ சாத் தியமாகி இருக்கும். அப்படியயாரு எண்ணம் மகிந்த ராஜபக் அணியிடம் அறவே இல்லை. இதற்குக் காரணம் தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதைவிட, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவ ராக இருப்பதுதான் தமக்குப் பாதுகாப்பு என்பது மகிந்தவின் தரப்பினர்க்கு நன்கு தெரியும். இதன்காரணமாகவே அவர்கள் சம்பந்தர் இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். மகிந்த தரப்பின் இந்த…
-
- 1 reply
- 497 views
-
-
கைவிடப்பட்டது முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் முல்லைத்தீவு மாவட்;டத்தில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10 வது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதியினை இரத்துசெய்யக்கோரியும் கடந்த 2 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உறவை ரஸ்யாவும் விஸ்தரிக்கின்றது இலங்கை படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ள ரஸ்யா இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஸ்யாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை இதற்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இலங்கை ரஸ்யா இணைந்த செயற்குழுவின் கீழ் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடாபான விபரங்கள் அமைச்சரவையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சார்பில் ரஸ்ய அதிகாரிகளை சந்தித்த இலங்கை அதிகாரிகள் இலங்கையின் முப்படையினருக்கும் ரஸ்யா பயிற்சிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளனர். ரஸ்யாவில் உள்ள இ…
-
- 0 replies
- 237 views
-
-
வவுனியாவில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்பு வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது சடலத்தின் எச்சங்கள் காணப்பட்ட இடத்திலுள்ள மரம் ஒன்றில் கயிறு கட்டப்பட்டுள்ளதுடன் சடலம் பல நாள் சென்றுள்ள நிலையில் மண்டையோடு மாத்திரமே மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் என சந்தேகிக்கப்படுபவரின் ஆடைகள், பாதணி மற்றும் சில ஆவணங்களும் பொலிஸாரினால் மீட்கப்ட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆவணத்தில் பி.முத்தையா உப்புக்குளம் வயது 60 என்…
-
- 0 replies
- 368 views
-
-
‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு!! இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
-
- 0 replies
- 710 views
-
-
வீட்டைக் கட்டியெழுப்ப- ஒற்றுமை அவசியம்- மாவை எம்.பி. வலியுறுத்து!! கூட்டமைப்பின் அத்திவாரக் கட்டமைப்பு சரியாக உள்ளது. வீட்டைக் கட்டியெழுப்ப நீங்கள் எங்களைப் பலமடையச் செய்யவேண்டும். நாங்கள் ஒற்றுமையாகப் பலமாகச் செயற்படவேண்டும். ஒற்றுமை கொள்கை அடிப்படையிலேயே இருக்கவேண்டும். அதனைவிடுத்து அறிக்கைகள் விடுவதும், போலித்தனமாகச் செயற்படுவதும் ஒற்றுமை அல்ல. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். வரணியில் மக்கள் குறைகேள் அலுவலகம் நேற்…
-
- 0 replies
- 584 views
-
-
ரயில் சேவைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம் மாற்று வழிக்கு தயாராகிறது அரசு நா.தினுஷா சம்பள உயர்வுக் கோரிக்கையினை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கங்களுக்கு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். எனினும் அவர்கள் , தொடர்ந்தும் பிடிவாதமாக செயற்பட்டால் அரசாங்கம் மாற்று வழிகளைக் கையாளும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த புதன்கிழமை பிற்பகல் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி புகையிரத ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனால் மக்கள் பாரியளவில் அசௌகரியங்களை எதிர்கொண்டனர…
-
- 1 reply
- 343 views
-
-
புலம் பெயர்ந்த மக்களுக்கு பிறப்பு, குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும்,நாளை திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் குறித்த சேவைகள் இடம் பெறும இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் த…
-
- 0 replies
- 347 views
-
-
13ஆவது சீர்திருத்தத்தை இல்லாதொழித்து மாவட்ட நிர்வாகசபை முறைமைக்கு முயற்சி லியோ நிரோஷ தர்ஷன் திட்ட யோசனை இந்தியாவிடமும் கையளிப்பு இலங்கை அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழித்து மாவட்ட நிர்வாக சபை முறைமையுடனான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் தேசிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவான திட்ட யோசனையை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கையளித்துள்ளார்.மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இத்திட்ட யோசனை கையளிக்கப்பட்டுள்ளது.1987 ஆம் ஆண்டு தேசிய இனப்…
-
- 0 replies
- 382 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொல்லியல் சான்றுகளை மீட்கும் பணிகள் ஆரம்பம்! யாழ்ப்பாணத்தின் இரு பகுதிகளில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் காணப்படும் ஒல்லாந்தர் கால கோட்டை மற்றும் அதற்கு முற்பட்ட கால துறைமுக சான்றுகளை மீட்கும் வகையில் இவ் ஆய்வு பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அத் துறைமுகம் புனரமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அங்கிருக்கும் வரலாற்று தொல்லியல் சான்றுகளை மீட்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது. இதேபோன்று அல்லைப்பிட்டி பகுதியிலும் பண்டைய சீன பொருட்களை கண்டறியும் நோக்கில் அகழ்வுப் பணி…
-
- 1 reply
- 763 views
-
-
50 சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் தொடருந்து சாரதிப் பயிற்சி சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் சாரதிகள், அடிக்கடி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் அரசாங்கமும் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்கிறது. இந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவத்தின் கவசப் படைப்பிரிவைச் சேர்ந்த 50 பேரை புதுடெல்லிக்கு அனுப்பி, தொடருந்து சாரதி பயிற்சி அளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு இந்திய தொடருந்து வழித்தடங்களில் …
-
- 2 replies
- 541 views
-
-
ராணுவத்தினர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை | வாள் வெட்டுக்காறர்களை கட்சி அலுவலகத்திலேயே மறைத்து வைத்திருந்தார்கள் - தர்சானந்த்
-
- 0 replies
- 370 views
-
-
மகிந்தவோ, கோத்தாவோ இப்படி வெட்கக்கேடான காரியங்களைச் செய்யவில்லை!! அரசியல் ரீதியாக பழிவாங்கி தன்னை ஓரம்கட்டுவதற்கான பாரியசதித் திட்டமொன்று அரசாங்கத்திற்குள் இருந்தே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின்தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில்ஒருவரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பகிரங்கமாககுற்றம்சாட்டியிருக்கின்றார். கடந்த சில வாரங்களுக்குள் தன்னுடன் இருந்தஇளைஞர்கள் மூவரை போதைப்பொருட்களை அருகில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் சரத் பொன்சேகா, தன்னை பழிவாங்குவதற்காகவே இவ்வாறான வெட்கக் கேடான நடவடிக்கைகள் இடம்பெறு…
-
- 0 replies
- 328 views
-
-
பழைய முறையில் தேர்தலை நடாத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சூளுரை தேர்தல் முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடாத்தி, வாக்கெடுப்பின் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மருதமுனையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “புதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முடிவுகட்டும் நோக்கில் …
-
- 0 replies
- 215 views
-
-
யாழ்.மாநகர சபை ஆணையாளர் - த.ஜெயசீலனுடன் வீரகேசரியின் பிரத்தியேக நேர்காணல்
-
- 0 replies
- 425 views
-
-
போராட்டம் ஒன்றை தவிர வேறு வழியில்லை - சிவகரன் அரசாங்கம் எங்களை ஸ்தம்பித நிலையில், எங்களை சலிப்படைய வைத்திருந்தால் நாங்கள் மனோ நிலையில் இருந்து மாற்றம் பெற்று மறந்து விட்டு எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாக போக வைக்கின்ற செயற்பாட்டை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக அரசாங்கம் செய்து வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இங்கு வேளை செய்கின்ற அமைப்புக்…
-
- 0 replies
- 205 views
-
-
யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்…. வடமாகாணத்தில் அபிவிருத்திக்கான எந்தப் போராட்டங்களும் இடம்பெறவில்லை… ஆளுநர் றெஜினோல்ட் குரே.. வடமாகாணத்தில் அரசியல்வாதிகளும் பொது மக்களும் அபிவிருத்திக்காக போராட்டம் நடத்துவது கிடையாது. என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் நேற்றையதினம் (09-08-2018) ஆளுநர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில…
-
- 1 reply
- 506 views
- 1 follower
-
-
வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸார் வீதி ரோந்து- துண்டு அறிக்கைகள் விநியோகம்!! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர். http://newuthayan.com/story/09/வாள்வெட்டுக்குழுக்களை-கட்டுப்படுத்த-பொலிஸார்-வீதி-ரோந்து-துண்டு-அறிக்கைகள்-விநியோகம்.html
-
- 3 replies
- 579 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சரை வெளியேற்றுவதுதான் ஒரே இலக்கு. தமிழினத்தை அழித்தவர்களும் அவர் களுக்கு முண்டுகொடுத்தவர்களும் இன்னும் உறங்கவும் ஓயவும் இல்லை. தமிழினம் தலைநிமிரக்கூடாது என்பதில் இவர்கள் கடும்பிடியாக நிற்கின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தம் இனத்தாலும் சிங்கள இனத்தாலும் சர்வ தேசத்தாலும் ஏமாற்றப்பட்டவர்களாகிவிட்டனர். உயிரிழப்பைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற நிலையில், தமிழ் மக்களின் உரிமைக் காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினரும் தங்களின் கடமைப் பொறுப்புக்களை மறந்து விட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எங்ஙனம் தங்கள் கைக்குள் வைத்திருப்பதென்பதை நல் லாட்சி நன்றாக அறிந்து அதற்கேற்றாற்போல் செய்ய,வரவு செலவுத் திட்டத்தை…
-
- 0 replies
- 572 views
-
-
யாழ் ஊடகவியலாளர் உதயராசா சாளின் உட்பட ஐவர் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர் தனித்தனியாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வீதி வலம் வந்திருந்தார். இது தொடர…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கைது! சிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் இன்று அதிகாலை வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியாவிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் பிரவேசித்து பெண் ஒருவரை அடித்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 9ஆம் திகதி குருமண்காட்டில் உள்ள இரண்டு பிள்ளைகளின் தாயொருவரையே அவர் வீடு புகுந்து தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான குறித்த பெண் மீது இதற்கு முன்னரும், சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. இந்தநிலையிலேயே அவர் இன்று கைது செய்யப…
-
- 0 replies
- 475 views
-
-
தேர்தல் அறிவித்தால்தான் யாருடன் கூட்டணி என்று அறிவிப்பேன் ; விக்கி வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன் சேருவது என்பதை தேர்தல் காலத்திலேயே தீர்மானிப்பேன் இப்போது அது தேவையில்லை. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இக் கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களால், நீங்கள் தம்முடன் கூட்டு சேர்ந்…
-
- 0 replies
- 328 views
-