Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1,500 பனைகள் தீயில் எரிந்து நாசம் – மன்னார் ஓலைத்தொடுவாயில் சம்பவம்!! மன்னார் மாவட்டத் ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயில் எரிந்து நாசமாகியது. தீபற்றியதை அடுத்து, மக்களும் மாவட்டத்தில் இருந்த படையினரும் பல மணிநேரம் தண்ணீர் பவுசர்களின் துணையுடன் தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் காரணமாக சுமார் ஆயிரத்து 500 பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பனைகள் மூலம் பரவிய தீ இறுதியில் இரு வீடுகள் மீதும் பரவியது. இதன் இறுதியில் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தீ அணைக்கப்பட்டதுஎனத் தெரிவிக்கப்படு…

  2. மஹிந்தவின் போராட்டத்தின் பின்னணியில் சீனா: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு (எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் முன் னெடுக்கப்பட்ட பேரணி உட்பட வேலைநிறுத்தப் போராட் டங்களுக்கு நிதி அனுசரணை சீனாவே வழங்குகிறது. நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக் கவே சீனா இவ்வாறு செயற்படுகின்றது. எமது நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என சீனாவிடம் நான் சிரம்தாழ்த்தி வேண்டுகின்றேன் என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க தெரிவித்தார். அத்துடன் பொன்சேகாவுக்கு அருகில் இருந்த பாதாள உலகக் கோஷ்டி ஒருவரை கைது செய்ததை போன்று ஏனைய அமைச்சர்களின் பதாள உலகக் கோஷ்டியினரை கைது செய்ய வேண்டும் என்…

  3. இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஒரு தொகை கஞ்சாவுடன் இருவர் கைது தமிழகத்தின் வேதாரண்யம் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 192 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் அடிக்கடி கடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை பொலிஸார் ரோந்து படகின் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல்படை டி.எஸ்.பி. கலித்தீர்த்தானுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இத…

  4. திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்…

  5. வாள்வெட்டுக் கும்பல் தப்பி சென்ற கார் மீட்பு; ஒருவர் கைது மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டு தப்பித்த போது, அந்தப் பகுதியைச் சேரந்த இளைஞர்கள் துரத்திச் சென்றனர். எனினும் கும்பல் ஓடித் தப்பித்தது. கும்பல் பயணித்த காரின் சக்கரம் ஒன்று காற்றுப் போனதால் அதனை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பித்தது. இந்த நிலையிலேயே காரை கொடிகாமம் பொலிஸ…

  6. மத்தல குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு – சிறிலங்கா அமைச்சர் மத்தல விமான நிலையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மத்தல விமான நிலையத்தை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மத்தல விமான நிலையத்தை கூட்டாக இயக்குவது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் இந்தக் கருத்து கொழும…

  7. ஐ.நாவில் இந்தியாவுக்கு சிறிலங்கா ஆதரவு – திருப்பதியில் ரணில் அறிவிப்பு ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்குவதற்கு சிறிலங்கா முழுமையான ஆதரவு வழங்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதியில் வழிபாடு செய்வதற்காக நேற்றுமுன்தினம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் மாலை சென்னை வந்த அவர், அங்கிருந்த இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்குச் சென்றார். …

  8. சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா சீனாவிடம் இருந்து சிறிலங்கா ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். ”இந்தக் கடன் தொகையின் முதற் பகுதியான 500 மில்லியன் டொலர் இந்த மாதம் சிறிலங்காவுக்கு கிடைக்கும். எஞ்சிய 500 மில்லியன் டொலர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கிடைக்கும். சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறப்படும் இந்தக் கடனை எட்டு ஆண்டுகளில் சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டும். மூன்று ஆண்டு விலக்குக் காலத்துடன் கூடிய இந்தக் கடனுக்கு, 5.25 வீதம் வட்டி செலுத்தப்பட வேண்டும். ஏனைய அனைத்துலக கடன் வழங்குனர்களை விட,சீனக் கடன் விதிமுறைகள் மேன்ம…

  9. வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர் நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மன்னம்பிட்டியவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “அனைத்துலக அழுத்தங்களில் இருந்து போர் வீரர்களை இந்த அரசாங்கம் தான் விடுவித்திருக்கிறது. சில அரசியல்வாதிகள், லிப்டன் சதுக்கத்தில் நின்று கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, போர் வீரர்களை பாதுகாக்க வேண்டும் என்று காலம் கடந்த முழக்கங்களை எழுப்பி தமது அரசியல் நோக்கங்களை அடைய முனைகின்றனர். அரசாங்கத்துக்கு எதிரான இந்த முழக்கங்கள் இப்போது க…

  10. 75,000 பெண்களின் நுண்கடன்கள் இரத்து முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது பெயர்ப்பட்டியல்களை மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு வடக்கு, கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன் பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன்கள் ஓகஸ்ட் மாதம் முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கடன்தள்ளுபடி செய்யப்படும் பெண்கள் பற்றிய விபரங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார…

  11. வடக்கில் சீனாவின் தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்தியா:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையின் வடக்கில் சீனாவில் தலையீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் விசேட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு பயணம் செய்து, இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இலங்கையின் வடபகுதிக்குள் சீனா பிரவேசிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் …

    • 8 replies
    • 1k views
  12. விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு! புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? இந்துக்கள் அதிகமாக வாழும் இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான். கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம்தான் புத்த பகவான். பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள…

  13. மாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்? கேள்வி எழுப்புகிறார் தவராசா மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா. அவர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:- கேள்வி: பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவேன் என முதலமைச்சர் மத்திய அரசிற்குச் சவால் விட்டிருக்கின்றாரே இது தொடர்பாக…

  14. போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை சந்தித்த த.தே. கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் இரண்டாவது நாளாக போராட்டத்தினை மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். இன்நிலையில் எதிர்வரும் 07 ஆம்திகதி பாராளுமன்றில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஒத்திவைப்பு பிரோரணையினை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இன்று கடற்தொழ…

  15. மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற ஊடகவியலாளரகள் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட மஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகளை புகைப்படம் எடுக்க சென்ற ஊடகவியலாளர்கள‍ை வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேசியக் கொள்கையொன்று இல்லாமல் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வுப்பெற்று தருமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்க்ள பல்…

  16. "பொலிஸ் அதிகாரத்தை கோரும் தார்மீகம் சி.வி.க்கு இல்லை" (எம்.சி.நஜிமுதீன்) வடக்கு முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத சி.வி. விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரம் கோருவது தார்மீகமற்ற செயலாகும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடக்கில் இடம்பெறறும் குற்றச் செயல்களை இருவார காலப் பகுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் அவரால் கட்டுப்படுத்த க…

  17. “இனவாதத்தீயை அணைக்கும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்த்துவோம்” நாட்டிலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகளுக்கு தீனிபோடும் சமூகமாக நாங்கள் இருக்காது, அந்த நடவடிக்கைகளை எவ்வாறு அணைக்க முடியுமோ அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எழுச்சிபெறும்பொலன்னறுவை” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இன்று தமன்கடுவ, திவுலான அல்/அக்ஸா மஹாவித்தியாலயத்தில், புதிய இரண்டுமாடி கட்டடத்தைத் திறந்துவைத்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் எம்.எச்.பாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி வி…

  18. ”ஆயுதப் போராட்டம் நிறைவுபெற்றாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லை” ஆயுதப் போராட்டம் முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லையென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கிடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போ…

  19. "சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது" (இராஜதுரை ஹஷான்) எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க தெரிவித்தார். இது தொடரபில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் எதிர்கட்சி பதவி எப்போதும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டு அரசாங்கத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுவரை காலமும் பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்படவில்லை. குறிப்பாக மாகாண சபை தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது…

  20. 440 பைகளில் பொதியிடப்பட்டது மன்னார் புதைகுழி எச்சங்கள் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 47ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டை யோடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியி…

  21. ‘துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லவே மாட்டோம்’ அழகன் கனகராஜ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், கடந்த சில வாரங்களாக, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று, பல்வேறான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளனர். பிரதமர் கிழக்குக்கு சென்றிருந்த போது, அங்கு பல பிரதேசங்களுக்கும் அவரை அழைத்துச் சென்றிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த கோகொல்லாகம, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எடுத்தியம்பினார். பிரதமரின் கிழக்கு விஜயத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளும் இ…

  22. ரிஷாத்தின் மனு நிராகரிப்பு வில்பத்து சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் காடழிப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/

  23. புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஆளுநரை சந்தித்துள்ளனர் (படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக வடமாகாணத்தில் போதை…

    • 5 replies
    • 1.4k views
  24. கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல் ; சித்திரவதை, அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயது சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது காணாமல் போயிருந்தனர். காணாமல்போன சிறுமிகள் இருவரும் வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கொண்டு சென்று தடுத்து வைத்திருந்த நிலையில் இரு சிறுமிகளும் அங்கிருந்து வெளியேறி அயலவர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர். அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட இரு…

  25. திருப்பதியில் ரணில் ; கருணாநிதியின் குசலமும் விசாரிப்பு திருப்­பதி வெங்­க­டா­ச­ல­ப­தியை வழி­ப­டு­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்தார். இவ­ரது வரு­கை­யை­யொட்டி பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன. இந்த விஜயத்தின்போது வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நலன் தொடர்பில் அவரது புதல் வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு விசாரித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகளுக்கும் அதிகமாக திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.