ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம் 2009 இல் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இ…
-
- 7 replies
- 914 views
- 1 follower
-
-
நல்லூரில் வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடு யாழ்.நல்லூர் ஆலய திருவிழா கால வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு நேற்று காலை நடைபெற்றது. இதன் போது நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்குது தொடர்பில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத்தமாக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்விகோரல் முடிந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 407 views
-
-
வன்முறைகளைக் கட்டுப்படுத்த – பல பொலிஸ் குழுக்கள் களத்தில்!! யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-, அண்மைய நாள்களில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. கொக்குவில், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய இடங்கள் அதிக வன்முறைகள் நடந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ப…
-
- 0 replies
- 363 views
-
-
எதிரணியினருக்கு பதவியை கோர முடியாது - சம்பந்தன் உத்தியோகப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை கோருவதற்கான உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகித்துக்கொண்டு அதே கட்சியை சேர்ந்தவர்கள் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. இதற்கேற்றவகையிலேயே பொது எதிரணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினர் கோரி வருகின்றனர். இதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் அவர்கள் கைய…
-
- 0 replies
- 381 views
-
-
வடக்கு வீடமைப்பு விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை (நமது நிருபர்) அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானமில்லை வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் விட யம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக்கூட்டத்திலும் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் அடுத்தவாரம் மீண்டும் ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் நேற்று முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது நல்லிணக்க அமைச்சினால் வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அ…
-
- 0 replies
- 260 views
-
-
கொக்குவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த, இலக்கத் தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் இன்று (30.07.18) மாலை இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகப் காவற்துறை தகவல்கள் தெரிவித்தன. கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துடன், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தித் தப்பித்தது. இந்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்…
-
- 1 reply
- 521 views
-
-
சபை அமர்வினை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்து நேற்றைய தினம் யாழ்.மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்விலிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்தது. மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை அமர்வின் போது, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக சக உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் நேற்றைய தினமும் எதிர்ரொலித்தது. இதன் போது அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்…
-
- 0 replies
- 198 views
-
-
விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இது தொடர்பாக, ரொபேர்ட் ஹில்டன், தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களின் கீழ், சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 497 views
-
-
மத்தலவில் தரையிறங்கிய உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான, அன்ரனோவ் ஏஎன்-124 ருஸ்லான், மத்தல விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியிலேயே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று அதிகாலை 1.40 மணியளவில், மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தது. உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்றான ஏஎன்-124 கனரக மற்றும் பருமமான சுமைகளை ஏற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை விமானம் சிறிலங…
-
- 0 replies
- 256 views
-
-
மைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், பல்வேறு துறைகளில்- குறிப்பாக, சக்தி உள்ளிட்ட …
-
- 0 replies
- 317 views
-
-
சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்க வாய்ப்பு சிறிலங்காவுக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்கு, சீனா போர்க்கப்பல் ஒன்றைக் கொடையாக வழங்கவுள்ளது என்று அண்மையில் கொழும்பில் நடந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழாவில், சீன பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வேய் தெரிவித்திருந்தார். இது குறித்து சீன ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங், ” மேலும் ஒன்று அல்லது இரண்டு போர்க்கப்பல்களை சிறிலங்காவுக்கு சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சிற…
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த காவற்துறையினர், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி…
-
- 1 reply
- 428 views
-
-
முன்னாள் போராளிகளைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் – வெற்றிச்செல்வி… முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களாக? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்? எங்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை, தாய், அக்கா, என்னுடைய மாமன், மாமி, மச்சாள், என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, அயலவர்கள், என்னுடைய கிராமம் எல்லாவற…
-
- 1 reply
- 623 views
-
-
மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் : மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்களின் புனித வணக்கஸ்தலமான மடு தேவாலயம், பௌத்த மற்றும் இந்து மக்களினதும் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. வருடாந்த மடு திருவிழாவின்போது மட்டுமன்றி வருடம் முழுவதும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் மடு தேவாலயத்திற்கு வருகை த…
-
- 1 reply
- 418 views
-
-
மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு பணிகள் 44 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) 44ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. விசேட சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரைக்கும் 60 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள மனி…
-
- 1 reply
- 297 views
-
-
வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சிசிரிவி காணொலிப் பதிவின் ஊடாக நிரூபிக்க முடியும் என யாழ்ப்பாணம் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய இடங்களிலுள்ள 2 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்ச…
-
- 0 replies
- 330 views
-
-
யுத்தத்திற்கு பிறகு இதுதான் எங்கள் பலம்!! |
-
- 0 replies
- 245 views
-
-
அபிவிருத்திகள் குறித்த திட்டங்களை குழப்ப இடமளிக்கப்பட மாட்டாது… மாநகரத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் திட்டங்களை குழப்பகின்ற வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாதென மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் உறுப்பினர் வி.மணிவண்ணண் தன்னுடைய அபிவிருத்தி வேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழப்புவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு தமது கட்சி உறுப்பினர்களின் ச…
-
- 0 replies
- 252 views
-
-
“புனி” மட்டக்களப்பு பன் பாய்களின் சமூக அழகியல் ஒரு இன வரலாற்று ஆவணமாக. கணபதி சர்வானந்தா…. முன்னைய நாட்களில் எமது சமூகக் கொண்டாட்டங்களிலும், விழாக்களிலும் புற் பாய் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.. ஒரு குடும்பத்திற்குரிய சொத்துகளில் புற்பாய்கள் அதிகம் இருக்கும். புற் பாயில் புடுத்துறங்குவதென்பது ஒரு அலாதியான அனுபவம். இந்தப் புற் பாய்களுக்குப் பின்னால் ஒரு சமூக வரலாறும், அரசியலும், சமூகக் கதைகளும் அதிகம் இருக்கின்றன. அத்தகைய பெருமைமிக்க புற் பாய்கள் ஒரு இனத்தின வரலாற்றைப் பேசியதை கண்டோம். கடந்த மே 9ஆம் திகதி தொடக்கம் 18வரை யாழ்.பல்கலைக் கழகத்தில் ஒரு காண்பியல் கண்காட்சி நடைபெற்றது. மட்டக்களப்பு பன் பாய்களின் சமூக அழக…
-
- 3 replies
- 709 views
-
-
ஜப்பான் நாட்டு தொழிலாளர் இருவரின் முறைகேடான நடத்தைக்கு அபராதம் மன்னாரில், ஜப்பான் நாட்டு நிறுவனத்தில் பொறியியலாளராக கடமையாற்றி வரும் ஒருவரை துன்புறுத்திய ஜப்பான் நாட்டுப் பிரஜைகள் இருவரை மன்னார் நீதிமன்ற நீதிவான் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் ஜப்பான் நாட்டுப் பிரஜைகள் இருவர் தன்னை துன்புறுத்தி, முறைகேடான விதத்தி தடுத்து வைத்திருந்ததாக சட்டத்தரணிகளினூடாக பாதிக்கப்பட்ட நபர் மன்னார் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் குறித்த இந்த வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 316 views
-
-
முல்லைத்தீவில் தேடுதல் வேட்டை – புலிச்சீருடை, வெடிபொருள்கள் மீட்பு!! முல்லைத்தீவு சாலை பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்துள்ளதாக நம்ப்படும் இடம் ஒன்றில், மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்க அமைய நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்போது விடுதலைப்புலிகள் பாவித்த கனரக இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள், விடுதலைப் புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை வலைஞர்மடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு இன்று தோண்டுத் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் குறித்த பகுதிக்கு ந…
-
- 2 replies
- 347 views
-
-
தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாண இளைஞர் Colombo (News 1st) பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார். ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்ம…
-
- 7 replies
- 2k views
-
-
அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல் அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது. 1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. 378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் …
-
- 8 replies
- 658 views
-
-
வவுனியாவில் மருந்தகம், தனியார் வைத்தியசாலையில் திடீர் தேடுதல் வவுனியாவில் இயங்கி வரும் வைத்தியசாலை, மருந்தகங்கள், ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வவுனியா சுகாதார அமைச்சர் அங்கிருந்து சிகிச்சைக்கு புறம்பான மருந்து வில்லைகள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுள்வேத வைத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டோம். இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் வைத்த…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையில் சீனா நேரடி முதலீடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக, மேலும் 146 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்ய, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நிதியை முதலீடு செய்வது தொடர்பில் சீன நிறுவனமும் இலங்கை துறைமுக அமைச்சும் இணைந்து தீர்மானம் மேற்கொண்டுள்ளன எனவும், குறித்த நிதி தனியார் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். நேரடி முதலீட்டுக்காக கிடைக்கப்பெற்றுள்ள இந்நிதி, இலங்கை அரசாங்கமும் சீன நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திட்டங்களுக்கமையக் காணப்படுகிறது என…
-
- 0 replies
- 345 views
-