ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கீத் நொயாரிடம் வாக்குமூலம் : சி.ஐ.டி.அதிகாரிகள் இருவர் அவுஸ்திரேலியாவுக்கு (எம்.எப்.எம்.பஸீர்) பாதுகாப்பு செயலாளருக்கு கேள்விக் கொத்து அனுப்பி வைப்பு கடத்தப்பட்டு, சித்திரவதை, தாக்குதலுக்கு உள்ளான த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயாரி டம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவின் மெல் பேர்ன் நகருக்கு சென்றுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ.திசேரா, சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக…
-
- 0 replies
- 210 views
-
-
தீர்வை நோக்கிய பயணத்துக்கு- மகிந்த ஒத்துழைக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் !! முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பல நெருக்கடியான விடயங்கள் தொடர்பான நீண்ட நேரம் கலந்துரையாடினர். அரசியல் ரீதியான அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பாகவும், வடக்கின் நிலைமைகள், அங்கு முன்னெடுப்பதற்கு இருந்த செயற்பாடுகள் ஏன் இப்போது தடைப்பட்டுள்ளன என்பது தொடர்பான விடயங்களை அவர்கள் என்னிடம் முன்வைத்தனர். இவ்வாறு எதிர்க்கட…
-
- 1 reply
- 176 views
-
-
"புதிய அரசியலமைப்பை தாமதப்படுத்தினால் நல்லிணக்கம் பாதிப்படையும்" (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளை அரசாங்கம் மந்தகதியிலேயே முன்னெடுத்து வருகின்றது. அதனால் பாதிக்கப்படுவது தேசிய நல்லிணக்க முயற்சிகளேயாகும், அந்த முயற்சிகள் ஊக்கம் பெறவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கும் விரைவாக செயற்பட்டு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். தேசிய சமாதான பேரவையின் சர்வமத குழுவின்…
-
- 0 replies
- 285 views
-
-
ஐதேக செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது விஜயகலா குறித்த விசாரணை அறிக்கை விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இன்று ஐதேக செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நான்கு பேர் கொண்ட குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்திருந்தது. இந்தக் குழு தமது விசாரணைகளை முடித்துள்ளதாகவும், சிறிகோத்தாவில் இன்று நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தி…
-
- 0 replies
- 175 views
-
-
இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர் சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செல்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது ஏனெனில், இந்தியா கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிகம் தலையிடாத ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு பற்றிய கேள்விக்கு அவர், “அது இப்…
-
- 0 replies
- 196 views
-
-
நீரிழிவு நோயைத் தடுக்கும் புதிய அரிசியை அறிமுகப்படுத்துகிறது சிறிலங்கா நீரிழிவு நோயைத் தடுக்கக் கூடிய புதிய நெல் இனத்தை சிறிலங்கா அறிமுகப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நிலையிலேயே, இந்த புதிய நெல் இனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நெல் இனத்துக்கு, நிரோஜி என்று பெயரிடப்பட்டுள்ளது. குறைந்தளவு கிளைசிமிக் அளவைக் கொண்ட சிவப்பு பாஸ்மதி வகையைச் சேர்ந்த இந்த நெல், குறைந்தளவு மாச்சத்தைக் கொண்டிருப்பதால், குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த…
-
- 0 replies
- 285 views
-
-
யாழ். குடாநாட்டில் 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் – என்கிறார் தளபதி யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து படைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று டிவிசன்கள் நிலை கொண்டுள்ளன. இவற்றைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். கடந்த 2017 மார்ச் மாதம், யாழ். படைகளின் கட்டளைத் தள…
-
- 0 replies
- 134 views
-
-
10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே, இதுபற்றிய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம், ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். எனினும், இந்த விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை…
-
- 0 replies
- 200 views
-
-
சிறிலங்கா அதிபருடன் அமெரிக்காவின் பசுபிக் இராணுவத் தளபதி பேச்சு அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் பங்கேற்றது. இதன்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை மற்றும் அனர்த்தங்களின் போதான ஒத்துழைப்புகளுக்கு அமெரிக்க ஜெனரல் இணக்கம். தெரிவித்தார்.…
-
- 0 replies
- 120 views
-
-
சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத…
-
- 10 replies
- 1.8k views
-
-
அடுத்த ஜனாதிபதி சர்வாதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை! ஞானசார தேரர் பரபரப்பு பேச்சு நாட்டு மக்களின் மனங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும் எனவும், அதில் எமக்கு முக்கியமில்லை எனவும் அவர் பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். கண்டியில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? யார்? வேட்பாளர்களாக நிறுத்தப்பட போகின்றார்கள் என்பது குறித்து தற்போது கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப…
-
- 0 replies
- 478 views
-
-
சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொள்வனவு? சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும், அரசுத் துறை நிறுவனமான, பாக்கொக் டொக் நிறுவனத்திடம் இருந்தே ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. பாங்கொக் டொக் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று, கடந்த 13ஆம் நாள் .சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவதற்கான தமது திட்ட முன்மொழிவையும், அது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையையும்…
-
- 5 replies
- 559 views
-
-
விஜயகலாவிடம் 3 மணிநேரம் விசாரணை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றிய முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்றைய தினம் (24) திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 3 மணி நேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியை எழுச்சிக்காகவேயன்றி , விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லையென்றும்,குறித்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்தது குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின…
-
- 2 replies
- 564 views
-
-
தமிழர்களின் உணர்வுகளை நல்லாட்சி புரிந்து கொள்ளவில்லை – அமைச்சரவையில் மனோ காட்டம்! தமிழ் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள குறிப்பு ஒன்றிலேயே அமைச்சர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், ‘இன்று காலை அமைச்சரவையில் வடக்கு, கிழக்கில் வீடு கட்டுதல் தொடர்பில் கடும் வாத, விவாதம் ஏற்பட்ட போது நான் ஜனாதிபதியை பார்த்து சுத்த சிங்களத்தில் சொன்னது. அமைச்சரவையில் அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள், வ…
-
- 2 replies
- 481 views
-
-
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்- செம்மணியில் அகழ்வு!! யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி அமைக்கும் பணிகள் மேற்கோண்டபோது மனித எலும்புக்கூடொன்று அண்மையில் தென்பட்டது இந்த நிலையில் குறித்த பகுதியை தோண்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது யாழ். மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மயூரன் முன்னிலையில் , இந்த குழியை தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. மிஸ் பண்ணிடாதீங்க...!! http://newuthayan.com/story/10/சட்ட-…
-
- 2 replies
- 431 views
-
-
அரசாங்கத்தின் அரசியல் துணிகரமே எமது வெற்றிக்கு வழி வகுக்கும் - சாலிய பீரிஸ் காணாமல்போனோர் பற்றி அலுவலகத்தின் மீதான விமர்சனங்கள், வடக்கில் நடைபெற்ற அமர்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த அனுபவங்கள், எதிர்காலச் செயற்பாடுகள், சவால்களை தாண்டி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்கள், போராடும் உறவுகள் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்தாவது, கேள்வி:- வடக்கிற்கு சென்று காணாமல்போனோரின் உறவினர்களை நேரடியாகச் சந்தித்திருந்தீர்கள் அந்த அனுபவத்தினைக் குறிப்பிடுங்கள்? பதில்:- வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏ…
-
- 0 replies
- 287 views
-
-
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பை துரிதமாக சட்டமாக்கவும் - முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பை துரிதமாக சட்டமாக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக தொடர்ந்து காலதாமதப்படுத்துவதானது முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் செய்யும் அநீதியாகும் என முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன. கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியில் இதுதொடர்பாக நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் சட்டத்…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ்ப்பாணக்கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் - பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று கல்லூரி முன்றலில் முன்னெடுத்திருந்தனர். கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டேவிட் சதானந்தன் சொலமனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. குறித்த போராட்டம் தொடர்பில் பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது , …
-
- 0 replies
- 663 views
-
-
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களால் பெருமளவு பணம் – நகைகள் கொள்ளை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பலே இந்த துணிகர கொள்ளைய…
-
- 1 reply
- 284 views
-
-
எலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தமிழர் பிரதேசங்களில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைவதாகவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இவை குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்,மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிண…
-
- 1 reply
- 294 views
-
-
கடனைத் திருப்பித் தரவில்லை பேரவை -குற்றஞ்சாட்டுகிறார் அமைச்சர் டெனீஸ்வரன்!! தமிழ் மக்கள் பேரவை தன்னிடம் இருந்து கடனாகப் பெற்ற இரண்டு லட்சம் ரூபா பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை இதுவரை திருப்பி வழங்காதமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைத் தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார். தனது குற்றச்சாட்டுப் பற்றி டெனீஸ் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்கள் பே…
-
- 0 replies
- 253 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழில் பெயர் வைத்தல் அவசியம்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மத்திய அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்களின் பெயர்கள் உட்பட அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலேயே பாவிக்க வேண்டுமென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதன் போது மாவட்டத்தில் முன்னெட…
-
- 0 replies
- 376 views
-
-
இந்திய மீனவர்கள் 7 பேர் கைது சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/…
-
- 0 replies
- 249 views
-
-
சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் சீனா – போர்க்கப்பலையும் வழங்குகிறது சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய், “இந்த ஆண்டு சிறிலங்காவின் முப்படையினருக்கும் சீனா, பல்வேறு பயிற்சிநெறிகளையும் தொடர்ந்து வழங்கியது. சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமிய…
-
- 1 reply
- 205 views
-
-
சிறிலங்கா பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ பணியகமான அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், இந்தோ – பசுபிக் ஒத்துழைப்பு மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான செயல்முறைகள் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார். அவரும், சிறிலங்கா பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அதேவே…
-
- 0 replies
- 244 views
-