ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
வான் பயணங்களுக்கு -22 லட்சம் ரூபா செலவிட்ட வடக்கு முதல்வர்- 4 ஆண்டுகளில் -48 பயணங்கள் – வேறெந்த முதல்வருக்கும் இல்லாத சலுகை!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றுவர கடந்த 4 ஆண்டுகளில் 22 லட்சம் ரூபாவை வான் பயணங்களுக்காக மட்டும் செலவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வானூர்திச் சேவையை வழங்கும் ஹெலி ருவர்ஸ் நிறுவனம் கொழும்பு சென்று யாழ்ப்பாணம் திரும்புவதற்கு தற்போது 29 ஆயிர…
-
- 0 replies
- 174 views
-
-
பசிலின் மனைவியின் அமைப்பிற்கு பணம் வழங்கிய துறைமுகநிறுவனம்- மீண்டும் சர்ச்சை முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இது குறித்த சர்ச்சை மீண்டும் மூண்டுள்ளது. கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது. மே 21 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது. …
-
- 0 replies
- 267 views
-
-
பிரபாகரன் எழுந்து வந்து வடக்கு மக்களிடம் மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார். புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ள அறிவிப்பு குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். http://thinakkural.lk/article/14495
-
- 7 replies
- 974 views
-
-
அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டிற்கு விற்கப்படும் நிலை – கோட்டா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய நீதி மற்றும் சமாதானம் தற்போது இல்லாமலாக்கப்பட்டு வருவதாகவும் அவரால் விசேடமாக அமைக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் துறைமுகம் போன்ற திட்டங்கள் தற்போது வெளிநாட்டிற்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலன்னாவ ராஜமகா விகாரையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் அம்பாந்தோட்டை துறைமுகமானது நாட்டின் சொத்து என்ற ரீதியில் முக்கியத்துவம் பெற்றாலும் வியாபார ரீதியில் இந்த துறைமுகத்தினால…
-
- 0 replies
- 287 views
-
-
இணைந்தா? பிரிந்தா? முடிவு கூட்டமைப்பிடம் : சுயநலம் மிக்கவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்கிறார் முதலமைச்சர் சி.வி. நேர்காணல்:- ஆர்.பி வாரவெளியீட்டுக்கு விசேட செவ்வி வடக்கு அரசியலில் தொடர்ந்தும் நீடிக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணிப்பதா? இல்லை வேறு தளத்தில் பயணிப்பதா? என்பதை கூட்டமைப்பே முடிவு செய்ய வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய அரசியல் வலுவான நிலைக்கு வரவேண்டும் என்றால் அதற்கு சுயநலம்மிக்கவர்களும் வேற்றாருக்கு மேளம் தட்டுகின்றவர்களும் இனங்காணப்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்திடமிருந்து தனி…
-
- 1 reply
- 441 views
-
-
மாகாண சபைத்தேர்தலை நடத்தக்கோரி போராட்டத்தில் குதிக்கிறது மஹிந்த அணி ஆர்.ராம் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வெள்ளம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் முதற்போராட்டம் பொலனறுவையில் இருந்து ஆரம்பிப்பதா இல்லை அநுராதபுரத்திலிருந்து ஆரம்பிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் ஆயுட்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் …
-
- 0 replies
- 162 views
-
-
வேட்பாளராக கோத்தாவை களமிறக்கும் மஹிந்த அணி : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி எம்.சி.நஜிமுதீன் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து நிலவிய இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை மையப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு நிலவி வந்தது. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜப…
-
- 0 replies
- 179 views
-
-
முதலமைச்சருடன் பேசுவதற்கு தயார் தவறுகளை ஏற்பின் அமைச்சைத் துறப்பேன் : டெனிஸ்வரன் ஆர்.ராம் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். மேல்நீதிமன்ற அறிவிப்பையடுத்து கேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்திருந்தார். இதன்போது என்னை அமைச்சுப்பதவியிலிருந்து நீக்கியமைக்கு கூறியிருந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பாய் இருந்தன. நான் குற்றமிழைக்காதவன் என்பதை எனக்கு ஆண…
-
- 0 replies
- 335 views
-
-
அரசியல் கைதிகளின் உறவுகளை 17ஆம் திகதி சந்திக்கிறார் சம்பந்தன் ஆர்.ராம் அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 17ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இந்தவிடயம் குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக புதிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை வி…
-
- 0 replies
- 270 views
-
-
பாராளுமன்றத்தில் 50 பேரை தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் – மனோ கணேசன் பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரில் 50 பேரைத் தவிர ஏனையவர்கள் அங்கிருக்கத் தகுதியற்றவர்கள் எனவும் அவர்களிடம் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பைக் கொடுக்க வேண்டாம் எனவும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். தகுதியற்றவர்வர்கள் மழைக்கு கூரையின் கீழ் ஒதுங்குவது போல் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள் எனவும் அமைச்சர் கூறினார். பாணந்துறை ஶ்ரீ சுமங்கல மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழி தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகும் தகுதிகள் உள்ள பலர் பா…
-
- 0 replies
- 119 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் ‘திரிகண்ட்’ போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் உபால் குண்டு, சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்திய தளபதி றிழயர் அட்மிரல் நிசாந்த உலுகெத்தன்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதரக துணைப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி சேகர் மிஸ்ராவும் கலந்து கொண்டார். மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இந்தப் போர்க்கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டுப்…
-
- 0 replies
- 323 views
-
-
அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அமெரிக்காவின் அமைதிப் படையணியின் தொண்டர்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, அவர்களுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்ட விதிக்களின் கீழ், அமெரிக்காவி…
-
- 0 replies
- 256 views
-
-
நல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம், அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளது. சில அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர். இதுவே, சிறிலங்கா இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளத…
-
- 0 replies
- 170 views
-
-
யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்த போதும், போர் முடிவுக்கு வந்த பின்னர், நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன், புனரமைக்கப்பட்டது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, இந்த கோட்டையில் சிறிலங்கா இராணுவம் தளத்தை அமைக்கவுள்ளது. யாழ். கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் தளம் அமைப்பதற்கு, இடத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வட ம…
-
- 0 replies
- 361 views
-
-
டெனீஸ்வரன் வழக்கு – உச்சநீதிமன்றத்தை நாடினார் முதலமைச்சர் விக்கி வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தம்மை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடியற்றது என்று அறிவிக்கக் கோரி, வட மாகாண அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் விக்ரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு -கடந்தவாரம் வழங்கிய இடைக்கால உத்தரவில், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ம…
-
- 0 replies
- 264 views
-
-
மக்களுக்காக எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார்! – விஜயகலா மகேஸ்வரன் வடக்கிலே மக்கள் பல துன்பங்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்ட 10 கோடி ஏற்றுமதி பயிர் நடுகைச் செயற்றிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே 90 ஆயிரம் குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாக் கொண்டு இருக்கின்றார்க…
-
- 9 replies
- 820 views
-
-
விடுதலைப்புலிகள் அழியும்வரை குண்டுதுளைக்காத வாகனத்தில் சென்றவர் சம்பந்தர்
-
- 0 replies
- 455 views
-
-
கூட்டமைப்பிடம் போனஸ் ஆசனத்தைக் கோரும் ரெலோ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்…
-
- 0 replies
- 477 views
-
-
கழிவுகளால் நிரம்பி வழியும் கிளிநொச்சி பொதுச்சந்தை கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் வியாபார நிலையங்களின் கழிவுகள் ஒரு வாரமாக அகற்றப்படாது காணப்படுகிறது எனவும், கரைச்சி பிரதேச சபைக்கு பொறுப்பான ஊழியரிடம் தெரிவித்த போதும் நேற்று வரை கழிவுகள் அகற்றப்படவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதனிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, வியாபாரிகளின் கருத்தில் உண்மையில்லை என்றும் அவ்வாறு ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என்பது பொய்யான தகவல் என்றும் தெரிவித்…
-
- 1 reply
- 527 views
-
-
பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நடுகை யாழில் ஆரம்பம்! பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நடுகை திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று (சனிக்கிழமை) யாழில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை விவசாய அமைச்சர் தயாகமகே ஆரம்பித்துவைத்தார். வடக்கு மாகாண விவசாய, சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சு ஏற்பாடுசெய்த இந்நிகழ்வு, திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் பத்து கோடி ஏற்றுமதிப் பயிர்களை நடுவதற்கான பாரிய திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் தொடக்க நிகழ்வே இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்றுமதிப் பயிர்கள் …
-
- 0 replies
- 564 views
-
-
வடக்கில் அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவை ஆரம்பம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் வட மாகணத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், “1990” சுபாஸ்அரிய எனும் அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். இதற்கமைய, இச்சேவை, இம்மாதம் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்துக் 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் யாழ். மாவட்டத்துக்கு 7 அம்பியூலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்குகு 4 அம்பியூலன்ஸ் வண்டிகளும், மன்ன…
-
- 0 replies
- 496 views
-
-
வவுனியா காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் திலீபனின் தூபிக்கு மலரஞ்சலி வவுனியா காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று நல்லூர் ஆலய சூழலில் உணவுதவிர்ப்பை மேற்கொண்டுவருவதுடன் தியாகி திலீபனின் தூபிக்கு சென்று மலரஞ்சலியும் செலுத்தினர். http://newuthayan.com/story/14/வவுனியா-காணாமலாக்கப்பட்டவர்களின்-உறவுகள்-திலீபனின்-தூபிக்கு-மலரஞ்சலி.html
-
- 0 replies
- 232 views
-
-
யாழ் கோட்டையை இராணுவத்திடம் தாரை வார்ப்பதற்கு எதிராக போராட்டம்! July 6, 2018 தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான யாழ் கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்கு வாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. இராணும் முகாம் அமைப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி நடைபெறுகின்ற இப் போராட்டத்திற்கு சகலரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.pagetamil.com/10688/
-
- 0 replies
- 323 views
-
-
அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழ் தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் … சிறைச்சாலையில் இருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழே இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மூலம் யாருக்கு அழைப்பு எடுக்கப்பட்டது மற்றும் அவருக்கு மூன்று தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் எப்படி கிடைத்தன என்பதை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சிறைச்சாலையில் இருக்கும் அர்ஜூன் அலோசிய…
-
- 0 replies
- 410 views
-
-
அலிசாகிர் மௌலானா மூலம், கருணாவை கொழும்புக்கு கொண்டு சென்றவர் ரணில் விக்கிரமசிங்கவே… தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணாவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அலிசாகிர் மௌலானா மூலம் கொழும்புக்கு வரழைத்ததாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறினார். அத்துடன் கருணாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து, கட்சியின் உப…
-
- 0 replies
- 272 views
-