ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
மகிந்தவின் ஆட்சியில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட நல்லாட்சி என சொல்லப்படும் ஆட்சியில் இல்லை! வேலையற்ற பட்டதாரிகள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள்கூட இன்றைய காலத்தில் இல்லை என்று வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கூறுகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியல் தேர்வு குறித்தும் பல்வேறு அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். 5ஆயிரம் பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது…
-
- 0 replies
- 464 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் sdr கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் எனும் மாணவன் கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தின் 16 வது மாடியில் மின் தூக்கி பொருத்துவதற்காக விடப்பட்டிருந்து பகுதிக்குள் சென்று கீழே வீழ்ந்ததில் மரணமடைந்திருந்தார். சீனா மற்றும் இலங்கையை சே…
-
- 0 replies
- 719 views
-
-
Facebook Twitter Google Plus Pinterest LinkedI File Photo பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட்ட தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ டெல்லி செல்கிறார்.. ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சதிகாரர் இத்தாலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ந…
-
- 0 replies
- 356 views
-
-
அரசியல் வாதிகளுக்குச் சிலை வைப்பதை விட, நாட்டில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கு சிலை வைத்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்த அவர் அங்கு பணியாற்றுகின்ற பொதுவைத்திய அதிகாரி னுச.காந்தநேசனுடைய சேவைமனப்பாங்கை பாராட்டி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில்: இவ் வைத்தியசாலையலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் னுச.காந்தநேசன் இரவு, பகல் பார்க்காது நோயாளர்களின் நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறார். இங்கு தாதியர் ஒரு…
-
- 0 replies
- 368 views
-
-
வல்வெட்டித்துறை பகுதியில் குழு மோதலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் ஒரே இரவில் 15 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்திலையே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. அதன் போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி , மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்திய சாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொட…
-
- 2 replies
- 728 views
-
-
கவனிப்பார் இன்றி படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி! மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார். இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார். இவரது குடும்பத்தில்…
-
- 0 replies
- 558 views
-
-
கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் - மாவை தகவல் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை உரிய நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையை இழந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே ஏற்க வேண்டும் என குற்றம் சுமத்தியிருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் (வெள்ளிக்கிழமை) எமது செய்தி சேவை வினவியபோது, ஏற்ற நேரத்தில் கிழக்கு முதலமைச்சர் தொடர்பி…
-
- 0 replies
- 535 views
-
-
யாழில் 63 பேருக்கு போலி அரச நியமனம் 3 - 4 இலட்சம் பெற்று கைவரிசை யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலைகளில் 63 பேருக்கு கொடு க்கப்பட்ட அரச நியமனங்கள் போலியானவை எனத் தெரியவந் துள்ளது. நேற்று புதன்கிழமை வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் தேவரையாளி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா இரண்டிலும் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச் சாமி இராதாகிருஷ்ணன் இக்கருத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கல்விசார ஊழியர்கள்,முகாமைத்துவ உதவியாளர், பாடசாலைகளிற்கான நியமன ங்கள் என 63 பேருக்கு தேசிய பாடசாலை களில் நியமனம் கொடுக்கப்பட்டது என அறி ந்தேன். இது பிரத…
-
- 0 replies
- 565 views
-
-
சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல் கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது. எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆய்வுகளில் சிறிலங்கா, மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர். சிறிலங்கா- நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மீன்களின் வளம் உ…
-
- 0 replies
- 559 views
-
-
சிறையில் காவியுடன் உலாவரும் ஞானசார தேரர் – கைதிகளுக்கான உடையை அணியவில்லை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர், சிறைக் கைதிகளுக்கான உடையை அணியவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தியா எக்னெலிகொடவை, நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு நேற்றுமுன்தினம், ஆறு மாதங்கள் அனுபவிக்கும் வகையில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையை ஹோமகம நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையை ஞான…
-
- 0 replies
- 723 views
-
-
நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி கார்வண்ணன்Jun 16, 2018 by in செய்திகள் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். இதன்…
-
- 0 replies
- 385 views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய மேஜர் ஜெனரல் கல்லகே ஓய்வு பெறுகிறார் கார்வண்ணன்Jun 16, 2018 | 3:39 by in செய்திகள் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இ…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழரசுக்கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது: கனடா காசு இன்று விவகாரமாகலாம்! June 16, 2018 தமிழரசுக்கட்சியின் மையச்செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. தமிழரசுக்கட்சி பத்திரிகையான புதிய சுதந்திரன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது விற்பனையில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கட்சி உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறார்களே தவிர, மற்றும்படி மக்களை சென்றடையவில்லை. பத்திரிகையை எப்படி விஸ்தரிப்பது, மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது. …
-
- 0 replies
- 432 views
-
-
அமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு… June 16, 2018 1 Min Read Jun 15, 2018 @ 22:02 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதாபிமான பணிகளைக் கூட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால தடுக்கின்றார்- முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழ்வார உதவிகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என வடமாகாண சபை முதமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் சுவாமிநாதனால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் நியாயமானது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளார். இது மனிதாபிமானம் அற்ற செயல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். அதவேளை, கொழும்பு அரசாங்கம் ம…
-
- 0 replies
- 528 views
-
-
குடிமக்களின் கடமை சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் அந்த வகையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தாம் திருப்தி அடைவதாக, சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று (14.06.18) வழங்கப்பட்டதன் பின்னரே சந்தியா எக்னெலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று நீதிமன்ற வளாகத்திலிலுந்து வெல…
-
- 0 replies
- 355 views
-
-
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று(15.06.2018) கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் , பாடசாலையின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/83760/
-
- 0 replies
- 465 views
-
-
தங்கத்தை தேடி இயந்திரத்துடன் சென்ற நால்வர் கைது… இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கானர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை காவற்துறையின் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள்…
-
- 0 replies
- 416 views
-
-
மன்னார் – பெரிய கருசல் பகுதியில் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது தாக்குதல் : June 15, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி பெரிய கருசல் பகுதியில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மாதா திருச் சொரூபத்தின் கண்ணாடிகள் இனம் தெரியாத நபர்களினால் நேற்று வியாழக்கிழமை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று மாலை ஆலயத்திற்கு சென்ற கிராமத்தவர்கள் அவதானித்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக சின்ன கருஸல் பங்குத்தந்தை இ.செபமாலை அடிகளாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பேளையின் கண்ணாடி கற்கள் வீசப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதுடன் வீசப்பட்ட கல்லும் சிறிய ரீப்பை த…
-
- 0 replies
- 315 views
-
-
யுவதிகளை உங்கள் வீட்டுபிள்ளைகளாக பார்க்க வேண்டும்: தனியார் நடத்துனர்களிற்கு முதலமைச்சர் அறிவுரை! June 14, 2018 வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கமும் வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து நடாத்துகின்ற நிரந்தர வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை- இன்றைய தினம் வடமாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களால் இயக்கப்படுகின்ற தனியார் போக்குவரத்து பேரூந்துகளுக்கான நிரந்தர வழித்தட அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்து உங்…
-
- 0 replies
- 378 views
-
-
எதிர்ப்பின் எதிரொலி: இந்து கலாசார அமைச்சை துறக்கிறார் மஸ்தான்! June 13, 2018 இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். இந்து கலாசார பிரதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றும் கூறியுள்ளார். இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார். “இந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழில் ஒரே மேடையில் விக்னேஸ்வரன், சம்பந்தன்: காட்சிகள் மாறுகிறதா? June 14, 2018 வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்க்கட்சி தலைவருக்கு நெருக்கமானவர்கள், இந்த தகவலை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்துள்ளனர். எதிர்வரும் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மாணவனான, பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவர் இந்த நூலை தொகுத்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற முதல் இரண்டு வருடங்களில் முதலமைச்சர் ஆற்றிய உரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் தொகுப்பாளர், பிரித்தானியாவில் தமிழ் தேசிய கூட்…
-
- 0 replies
- 379 views
-
-
ஞானசாரருக்கு சிறை- மன்னிப்புச்சபை வரவேற்பு ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமையை பாதுகாப்பதற்காக போராடும் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியிதுவென சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் ஓமர் வரைச் தெரிவித்துள்ளார். நீதிகோருபவர்களை மிரட்டி மௌமாக்க நினைப்பவர்களிற்கு தெளிவான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/35037
-
- 1 reply
- 753 views
-
-
மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் - டிலான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 ஆண்டுகால அரசியல்வாதியாகவும் 17 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்…
-
- 0 replies
- 347 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தேவைக்காகவே கதிர்காமம் கிரிவேஹெர விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரரை சுட்டுக்கொல்ல முயற்சிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கதிர்காமத்தில் உள்ள வீடு தொடர்பான செய்திகளை தம்மிந்த தேரரே ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் இதன் காரணமாகே கோத்தபாய ராஜபக்ச அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவற்றில் கூறப்பட்டுள்ளன. எது எப்படி இருந்த போதிலும் இந்த கொலை முயற்சியின் பிரதான சந்தேக நபர், கிரிவேஹெர விகாரைக்…
-
- 2 replies
- 595 views
-