ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
பரபரப்பான சூழலில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று ஐதேக போர்க் கொடி உயர்த்தியுள்ளது. அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள், தாம் பதவியில் இருந்து விலக அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளனர். …
-
- 0 replies
- 186 views
-
-
ஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில், மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம் ,சரத் பொன்சேகா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போதே, கூட்டு எதிரணியினர் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக…
-
- 0 replies
- 183 views
-
-
மஹிந்தவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! – சம்பந்தனுக்கு வலை விரிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஒருவர் என்பது தற்போது தெளிவாகத் தெரிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இதன்காரணமாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியை, அரசாங்கத்தின் எதிர்கட்சியாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரு…
-
- 2 replies
- 581 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் முறை பெரும் தவறு – சிறிலங்கா அதிபர் புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது மிகப் பெரிய தவறு என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். ”இந்த அசாதாரணமான முறையினால், உண்மையில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் வெற்றி பெற்றவர்களால் அந்த சபைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது போயுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும், உள்ளூராட்சி நிர்வாகங்கள் உருவாக்கப்பட்டதும், மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், உள்ளூராட்சி சபைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில், உள்ளூராட்ச…
-
- 2 replies
- 466 views
-
-
தமிழரை தெரிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் குதிப்பு! கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனையில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசலுக்க முன்னால் கூடிய மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள். பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகர சபையின…
-
- 6 replies
- 664 views
-
-
தொண்டா , டக்லஸுக்கு அமைச்சு பதவிகள் அமைச்சரவை மாற்றத்தின் போது இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அவர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3 http://www.samakalam.com/செய்திகள்/தொண்டா-டக்லஸுக்கு-அமைச்/
-
- 1 reply
- 351 views
-
-
வலி.வடக்கு காணி விடுவிப்புக்கான வரைபடம் கிடைக்க பெறவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிகின்றன. தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார். வறுதலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் பொ.சுரேஷ் எதிர்வரும…
-
- 0 replies
- 335 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கூட்டமைப்பு பட்ஜட்டை எதிர்த்து வாக்களிக்கும்; செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. எச்சரிக்கை எஸ்.கே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் எதிர்வரும் வரவு -செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமென வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்க…
-
- 3 replies
- 439 views
- 1 follower
-
-
"இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம்" ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசுகளை முழுமையாக இலங்கை அரசாங்கம் ஏற்றுகொண்டதன் விளைவாகவே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் நிறுத்தப்பட்டுள்ளது. இனியொருபோதும் இலங்கையில் இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளது என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் இராணுவ வெற்றி விழாக்கள் இடம்பெறக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள நிபந்தனைகள் வெளிவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கையின் பிரதிநிதியாக மனித உரி…
-
- 2 replies
- 698 views
-
-
ஜே.வி.பி.யின் 20ம் திருத்தச் சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்குமா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் ஜே.வி.பி 20ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த 20ம் திருத்தச் சட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்காத போதிலும், இந்த யோசனைக்கு ஆதரவாகவே செயற்படத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது. முழு அளவில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. எனினும் இந்த சட்டத்திற்கு ஆளும் கட…
-
- 0 replies
- 193 views
-
-
இறுதிக்கட்ட போரில் படை நகர்வுகளை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகள் கைதாவார்களா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட இறுதிக்கட்ட போரில் படை நகர்வுகளை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் கைதுசெய்யும் இரகசிய திட்டம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் இந்த இராணுவ அதிகாரிகளை கைதுசெய்வதே மனித உரிமை பேரவையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. குறித்த அதிகாரிகளின் பெயர்கள் ஐ,நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 471 views
-
-
யஷ்மின் சூகாவுக்கு அழைப்பு – புலிகளின் நிதியில் இயங்குவதாக குற்றச்சாட்டு… போரில் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்திய, ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகாவை, இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம், ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 25 பேர் போர் குற்றங்களை செய்துள்ளதாக உள்ளதாக கூறி, யஷ்மின் சூகா இலங்கைக்கு எதிராக 75 அறிக்கைகளை ஐ.நா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ளதாக சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. புலம்பெயர் பு…
-
- 0 replies
- 364 views
-
-
கொடிகாமத்தில் புகையிரதத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதி விபத்து – ஒருவர் காயம் குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் புகையிரதம் மற்றும ஆர்டிஏ ( RDA )க்கு சொந்தமான பிக்கப் ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. தவசிக்குளம் வீதியில் இருந்து வருகை தந்த பிக்கப் வாகனம் தண்டவாளத்தைக் கடந்து ஏ9 பிரதான வீதிக்கு வரும் போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் மோதியுள்ளது. இதனால் வாகனத்தில் பயணித்த 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவ…
-
- 0 replies
- 411 views
-
-
சிங்களக் குடியேற்றத்தை எதிர்த்து முல்லை மண்ணில் மாபெரும் போராட்டம்! முல்லைத்தீவில் மகாவலி குடியேற்றப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதை எதிர்த்து வட மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நாளை மறுதினம் 10ஆம் திகதி மாலை 3மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரீ.ரவிகரன் நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார். போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பிவைக்கும் வகையில் மகஜர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்படும் என்றும் கூறினார். இது தொட…
-
- 0 replies
- 327 views
-
-
"சம்பந்தன் பதவி விலக வேண்டும்" (இராஜதுரை ஹஷான்) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை …
-
- 0 replies
- 265 views
-
-
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த முக்கிய நாடுகளுடன் கவனம் செலுத்தும் இலங்கை; ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் லியோ நிரோஷ தர்ஷன் நட்பு நாடுகளுடன் கடல்சார் பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கையின் அமைவிடம் மற்றும் ஏனைய பூகோள சிறப்புகளை சீனா உள்ளிட்ட நாடுகள் தனக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ளன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் தெற்காசியாவின் முக்கிய மையமாக பரிணமித்துள்ளது. எனினும் இவ்வாறான சிறப்புத் திட்டங்களினால் இலங்கைக்கு க…
-
- 0 replies
- 144 views
-
-
அரசுக்குள் பிளவை ஏற்படுத்தி விட்டோம்; பவித்ரா பெருமிதம் எம்.சி.நஜிமுதீன் பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்துக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கே நாம் எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப…
-
- 0 replies
- 396 views
-
-
ஐ.தே.க.வின் மறுசீரமைப்புக்கு 10 பேர் கொண்ட குழு நியமனம்; பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 பேர் குறித்து முடிவில்லை எம்.சி.நஜிமுதீன் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்களிலிருந்து பத்துப்பேர் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. எனவே அக்குழுவிற்கு அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெனான்டோ, அகிலவிராஜ் காரியவசம்,ருவன் விஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்ரமரட்ம உள்ளடங்கலாக பத்துப்பேர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியி…
-
- 0 replies
- 138 views
-
-
654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் யாழ் மாவட்டத்தில் நல்லிணக்க அமைச்சின் முன்னெடுப்பில் 654 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்களை அமைச்சராகக் கொண்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் 2017 அம் ஆண்டில் படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் 654 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தையிட்டி, மைலிட்டி, வறுத்தலைவிளான், பலாலி, சண்டிலிப்பாய் பிரதேசங்களில் படையினரால் கட்டம் கட்டமா…
-
- 0 replies
- 365 views
-
-
காலம் கடந்த பின்னர் சூரிய வணக்கம் கடைசியில் ஆயுள் முடியப்போகும் நேரத்தில், வடக்கு மாகாணத்தின் எல்லையில் நடக்கும் அக்கிரமங்களுக்குக் குறைந்தது அடையாள எதிர்ப்பையாவது காட்டுவதற்கு வடக்கு மாகாண சபைதயாராகி இருக்கிறது. எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு எதிராகக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாகச் சபை அறிவித்துள்ளது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங் களை தடுக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் முடிந்துவிட்டன. எஞ்சியிருப்பது இன்னும் 6 மாதங்கள்தான். மாகாண சப…
-
- 0 replies
- 322 views
-
-
இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளில் ‘மொட்டு’ ஆட்சி மலர்ந்தது சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தலின் போது, 167 உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை. இந்தநிலையில், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சபைகளில், 56 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கைப்பற்றி, சிறிலங்கா பொதுஜன முன்னணி அவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், இதுவரை 211 உள்ளூராட்சி சபை…
-
- 0 replies
- 267 views
-
-
"எல்லாவற்றையும் இழந்தோம்! ஆனால் எங்களுடைய கலை,கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது" "நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்.ஆனால் எங்களுடைய கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது" என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு பெருவிழா இன்று காலை 7 மணியளவில் ஆண்டாங்குளம் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார். கேதீஸ்வரன் அங்கு தொடர்ந்தும் உரையாற்…
-
- 0 replies
- 268 views
-
-
மைத்திரி- ரணில் சந்திப்பில் சூடான வாக்குவாதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஐதேக அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று ஐதேக தரப்பு, சிறிலங்…
-
- 0 replies
- 274 views
-
-
கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி, பரந்தன் ஆகிய நகர்களை உள்ளடக்கிய கரைச்சிப் பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் குழப்ப நிலையும் போட்டியும் காணப்படுகிறது. நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கரைச்சிப் பிரதேச சபையில் தனிப்பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்சியமைப்பதற்குரிய பலத்தை எந்தவொரு கட்சியும் கொண்டிருக்கவில்லை. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்டிக்கும் கரைச்சிப் பிரதேச சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்த்தரப்பிலுள்ள 18 உறுப்பினர்களில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக் குழுவினர் 11 ஆசனங்…
-
- 0 replies
- 329 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் காலமானார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளரும், தமிழீழ நிதர்சனப் பிரிவின் தொழில்நுட்ப வல்லுநருமான குணாளன் மாஸ்டர் 29.03.2018 சுவிஸ் நாட்டில் காலமானார். ஆரம்ப காலத்தில் சாவகச்சேரியுள்ள Teleconer என்னும் நிறுவனத்தில் இலத்திரனியல் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றிய இவர் 1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுளை காண்பொளியாக (video ) பதிவு செய்தார். தாயகத்தில் இலத்திரனியல் தொழிநுட்ப கலைக்கூடத்தை நிறுவி அங்கு பல போராளிகளை இலத்திரனியல் தொழிநுட்ப கலையில் பயிற்றுவித்தவர். சுவிஸ் நா…
-
- 2 replies
- 910 views
-