ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார். இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன…
-
- 2 replies
- 745 views
-
-
வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார். முன்னதாக புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அதிகாரத…
-
- 0 replies
- 220 views
-
-
பாடசாலை அதிபர் பவானிக்கு கடிதம் மூலம் அச்சுறுத்தல் பா.நிரோஸ் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவினால் முழந்தாழிட நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பதுளை மாவட்ட தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் ஆர்.பவானிக்கு, கடிதம் மூலம் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (16), பாடசாலை முகவரிக்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக, தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அதிபர் ஆர்.பாவனி, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், அதிபர் கூறியதாவது, “தானாக முன்வந்து, நீ மண்டியிட்டுவிட்டு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர …
-
- 0 replies
- 470 views
-
-
கொழும்பில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!!! கொழும்பு - மெஸேன்ஜர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன. இவ்வாறு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் கொழும்பு - தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதான அன்டனி ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தவரின் மனைவி ஆவார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அரு…
-
- 0 replies
- 599 views
-
-
கிளிநொச்சி பூநகரியில் இறால் அறுவடை… கிளிநொச்சி பூநகரி பரமன்கிராயில் இறால் அறுவடை நேற்றைய தினம்(18) இடம் பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஆனி மாதத்தில் பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினால் ஜஎல்ஓ நிறுவனத்தின் நிதி உதவியுடன் பரமன்கிராய் கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட இறால் அறுவடையே நேற்று(18) இடம் பெற்றது. பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் யோசப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள்ஜஎல்ஓ நிறுவன அதிகாரிகள் கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர…
-
- 4 replies
- 726 views
-
-
தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டம் யாழில் நாளை ஆரம்பம்! சிங்கள பிரதேச சிறுவர்களுக்கான தமிழ்மொழியில் பௌத்தத்தை கற்பிக்கும் செயற்திட்டமும், அவ்வாறு கற்க வரும் துறவிகளை பௌத்தராக்கும் நிகழ்வும், நாளையதினம்(19-03-2018) திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சர்வமத குழுவினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்..... யாழ்ப்பாண சர்வமத குழுவினர் 2008 ஆம் ஆண்டில் இருந்து மொழி, இன, சாதி அடிப்படையில் …
-
- 1 reply
- 383 views
-
-
மாதம்பையில் பதற்றம் :இரு இன தனிநபர்களுக்கிடையில் மோதல் : பொலிஸ் மற்றும் இராணுவம் குவிப்பு!!! சிலாபம் - மாதம்பை பகுதியில் முஸ்லிம் நபர் ஒருவர், வயோதிப சிங்கள நபர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதம்பையில் பேக்கரித் தொழிலில் ஈடுபடும் 27 வயதுடைய திருமணமான முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வயோதிபரை நேற்று இரவு மாதம்பையில் வைத்துத் தாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் மாதம்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மாதம்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை: "வன்முறையை வளர்ப்பது மதங்கள் அல்ல, மனிதர்கள்தான்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா? அல்லது வன்முறையை தடுக்கவும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி தமிழ் நேயர்க…
-
- 0 replies
- 288 views
-
-
இன்றைய விவாதத்தில் இலங்கையிடம் கேள்வி எழுப்பவுள்ள சர்வதேச நாடுகள் திலக் மாரப்பன, சரத் அமுனுகம பதிலளிப்பர் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் இன்று மாலை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான பரபரப்பான கருத்தாடல்களுக்கு மத்தியில் இன்றைய விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழ்மக்களின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள், சர்வதேச நாடுக…
-
- 0 replies
- 152 views
-
-
’உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு’ -எஸ்.நிதர்ஷன் 'சர்வதேச சட்டத்தின் பிரகாரம், எமது உரித்து, எமது உரிமை, சிவில் - அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தம் மற்றும் பொருளாதார சமூக கலாசார விடயங்கள் சம்மந்தமான சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துண்டு. அதை எவரும் மறுக்க முடியாது. அவ்விதமான உள்ளக சுயநிர்ணய உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இதைத் தான் சர்வதேசத்திடம் கேட்டு நிற்கிறோமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுழி…
-
- 0 replies
- 459 views
-
-
மகிந்த அணிக்கு செக் வைக்கும் ஜேவிபி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகளுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டை பிரதமர் மீது முன்வைத்தால் மாத்திரமே, இந்தப் பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், மகிந்த ராஜபக்ச விசுவாசிகளைக் கொண்ட கூட்டு எதிரணி இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜேவிபி மூத்த …
-
- 0 replies
- 146 views
-
-
தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்திரிகையான புதிய சுதந்திரனில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பத்தி முழுமையாக இங்கு தரப்படுகின்றது. “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம…
-
- 6 replies
- 624 views
-
-
“இவ்வாறு நடக்கும் என தெரிந்திருந்தால் சமஸ்டி ஆட்சி முறையை நாங்கள் இலங்கையில் விட்டுச் சென்றிருப்போம்” 1833ல் பிரிந்திருந்த அரசியல் அலகுகளை ஒரே நிர்வாக அலகாக மாற்றியிராவிட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகவே இருந்திருக்கும்.. தமிழ் மக்கள் பேரவை மக்களுக்கான அறிவு விருத்திப் பணி கருத்தமர்வும் கலந்துரையாடலும் நகரசபை மண்டபம் , திருகோணமலை 18.03.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணிக்கு தலைவருரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி இலக்ஸ்மன் அவர்களே, இணைத்தலைவர் திரு. வசந்தராஜா அவர்களே, எம் மக்களுக்கு அறிவு விருத்திப் பணியாற்ற வந்திருக்கும் கலாநித…
-
- 0 replies
- 433 views
-
-
’வட - கிழக்கில் பெரும்பான்மை இனத்தவரும் வாழலாம்’ -அப்துல்சலாம் யாசீம் “பிற மாகாணங்களில், ஆவணங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருக்க, தமிழ் மக்கள் அங்கு எவ்வாறு வாழ்ந்து வருகின்றார்களோ, அதே போலத்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வட- கிழக்கில் பெரும்பான்மையின மக்கள் தொடர்ந்து சட்டத்துக்கு அமைவாக வாழ்ந்து வரலாம்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர்ன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கருத்தமர்வும் கலந்துரையாடலும், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/வட-கிழக்…
-
- 1 reply
- 446 views
-
-
இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி : பளையில் சம்பவம் பளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்தவர் என்பதுடன் தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது…
-
- 0 replies
- 218 views
-
-
மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ; ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை வடக்கு முதலமைச் சராக்கிவிட்டு சி.வி.விக்கினேஸ்வரனை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும். அவரை தேசியத் தலைவராக்கி சர்வதேச விடயங்களை கையாள இடமளிக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞா னம் சிறிதரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா வந் துள்ள சிறிதரன் எம்.பி. மாவை கேசரி…
-
- 2 replies
- 335 views
- 1 follower
-
-
அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன் – மாற்று வழிகளுக்கு தலைமையேற்குமாறு கோருவார் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் நேற்று வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது. இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள் பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதன் முற்கூட்டிய பிரதியை அவ…
-
- 3 replies
- 514 views
-
-
உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு வரதரின் அணி ஆதரவு உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கப் போவதாக, வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், வரும் 20ஆம் நாள், புதிய உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஆரம்பமாகவுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் முதல் கூட்டத்தில், சபைகளின் தலைவர்கள் தெரிவு இடம்பெறும். பெரும்பான்மை பலம் யாருக்கும் கிடைக்காத நிலையில் தலைவர்கள் தெரிவின் போது குழப்பநிலை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த…
-
- 1 reply
- 218 views
-
-
தேவைப்பட்டால் அரசியலில் நுழைவேன் – கோத்தா தேவைப்பட்டால் அரசியலில் நுழைவது பற்றி முடிவு செய்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச அரசியலில் நுழையவுள்ளதாக பரவும் செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு- கேள்வி – அரசியலில் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா?, பதில் – நான் அதற்குத் திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் முடிவு செய்வேன். கேள்வி – அதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது… பதில் – சாத்தியமான எல்லா வழிகளிலும் நாட்டுக்குச் சேவையாற்றுவதற்கே நான் விரும்புகிறேன். அரசியலில் இறங்க…
-
- 1 reply
- 246 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சந்தித்தார். இவர்கள் 382 ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 395 views
-
-
யாழில் மைத்திரி..! யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை திறந்து வைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்களின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியில் இக்கட்டடம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை 9.30 மணிக்கு திறந்துவைக்கப்படுகிறது. யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ் ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. …
-
- 0 replies
- 256 views
-
-
அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கவேண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழமான முறையில் செயற்படவேண்டும். இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலங்கை குறித்து செயற்படும் அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் வலியுறுத்தினர். இலங்கைக்கான கால அவகாசம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையப்போகின்றது. இக்…
-
- 0 replies
- 180 views
-
-
ஈழம் மலரப்போவதாகக் கூறி நாட்டில் இனவாதத்தை தூண்டியது ராஜபக் ஷ குடும்பமே : மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது எஸ்.வினோத் நாட்டில் இனவாதத்தை அதிகமாக தோற்றுவித்தது ராஜபக் ஷ குடும்பத்தினரே. அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் பிரிவினை வாதத்தை முதன்மையாகக் கொண்டு மக்களைத் திசைதிருப்பினர். அவர்கள் கூறும் பொய்யான இனவாதக் கருத்துக்களின் உண்மைத்தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். இது…
-
- 0 replies
- 321 views
-
-
கறுப்பு ஜூலையை அரசு மறந்து விடக்கூடாது: மோடியின் பாதையில் நாடு பயணிப்பதே வன்முறைக்கு கராணம் என்கிறார் - திஸ்ஸ விதாரண லியோ நிரோஷ தர்ஷன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சாயலில் இலங்கை பயணிக்கின்றமையே நாட்டில் இன வன்முறைகள் ஏற்படக் காரணமாகியுள்ளது என தெரிவித்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண மூன்று தசாப்தகால உள்நாட்டு போரின் வடுக்களையும் கறுப்பு ஜுலையினையும் நல்லாட்சி அரசாங்கம் மறந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார் இலங்கையில் அண்மைக்காலமாக இன மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் நாட்டை சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ள…
-
- 0 replies
- 154 views
-
-
யாழ். மாநகரசபை ஆசனப் பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சபைகளின் அமர்வுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கணிசமான நிதி செலவ…
-
- 0 replies
- 260 views
-