ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
கண்டி கலவரத்தைத் தொடர்ந்து இனவாத ரீதியிலான இருமுனைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அண்மையில் பாதுகாப்பு படைகளின் உயரதிகாரியான ரவீந்திர சீ. விஜயகுணரத்ன முஸ்லிம்கள் தொடர்பாகவும். யுத்த காலங்களில் இராணுவ பிரிவுகளில் கடமையாற்றிய முஸ்லிம்கள் தொடர்பாகவும் ஊடக மாநாடொன்றில் கருத்து வெளியிட்டார். சிங்கள இனவாதிகளுக்கு இவர் கொடுத்த சாட்டையடி, சில தமிழ் சகோதரர்களின் மேனியையும் பதம்பார்த்து விட்டது. சிங்கள இனவாதிகளை நோக்கி சுழற்றப்பட்ட சாட்டையின் அடியின் வலியினால் சில தமிழ் சகோதரர்கள் அலறுவது எமது காதுகளில் விழ ஆரம்பித்திருக்கிறது. இந்த வலி சாதாரண தமிழ் சகோதரர்களை மட்டுமல்ல …
-
- 0 replies
- 446 views
-
-
போர் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு போதும் தண்டிக்கமாட்டார்கள்! போர் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள். மாறாக காப்பாற்றுவார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தாா். ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சா் மேலும் தெரிவிக்கையில்...... போர்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங…
-
- 0 replies
- 293 views
-
-
ஹக்கீம் தலைமையில் குவைத் பிரதிநிதிகள் கண்டியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் குவைத் நாட்டின் பிரதிநிதிகள் இன்று (16) கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். கண்டி மாவட்டத்தில் எந்தருதென்ன, திகன, குருந்துகொல்ல, கட்டுகஸ்தோட்டை, பூஜாப்பிட்டிய, அக்குறணை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட அழிவுகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பதாக இதன்போது தெரிவித்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும்நோக்கில் நேற்ற…
-
- 0 replies
- 151 views
-
-
கண்டி கலவரம் : திட்டமிட்ட சூழ்ச்சி முதல்கட்ட விசாரணையில் தகவல் (எம்.சி.நஜிமுதீன்) கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார். முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம்கள் வீணா…
-
- 0 replies
- 289 views
-
-
வட தமிழீழம் ,வவுனியாவில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் அலுவலகப்பணியாளர்கள் பெரும் அவல நிலையிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வடிகால் சீர் இன்மை காரணமாகவே மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் கடந்த வருடம் பெய்த கடும் மழையினாலும் இப்பகுதிக்குள் மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் சென்றுள்ளது எனினும் அப்போது இவற்றை சீர் செய்து தருமாறு கோரியபோதும் இன்று வரையில் சீர் செய்யப்படவில்லை இதன்காரணமாகவே மழை வெள்ளம் மாவட்ட செயலகத்தின் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் அலுவலக உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாவட்ட செயலகத்தில் பணிபுரிபவர்கள் மழை வெள்ளத்தில் பணியா…
-
- 0 replies
- 521 views
-
-
முரண்பட்டுக்கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறிய சரத் வீரசேகர தலைமையிலான குழு Weiterempfehlen (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்த தென்னிலங்கை எலிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களை அடுத்து சரத் வீரசேகர தலைமையிலான எலிய அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்திலிருந்து வெளியியேறினார். ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச அமைப்பையும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடுமையாக சாடிவிட்டே சரத் வீரசேகர தலைமையிலான தென்னிலங்…
-
- 1 reply
- 395 views
-
-
அரசியல் தஞ்ச கோரிக்கையை சர்வதேசம் நிராகரிக்க கூடாது | அனந்தி சசிதரன்
-
- 0 replies
- 200 views
-
-
ஐ.நா. உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தம் : இலங்கை குறித்த விவாதம் ஒத்திவைப்பு Weiterempfehlen ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் இன்றுகாலை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியெங்கும் வெறிச்சோடிக்காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாகவே இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இலங்கை தொடர்பான விவாதம் மட்டுமன்றி இன்றைய தினம் மனித உரிமை பேரவையில் நடைபெறவிருந்த அனைத்து விவாதங்களும் ரத்து செய்யப…
-
- 0 replies
- 292 views
-
-
கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை! நேற்று இரவு வேளையில் கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முரசுமோட்டை சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக் கதவுகளும் உடைக்கப்பட்டு மூலவிக்கிரகத்தையும் உடைத்துள்ளதுடன் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தங்கப் பொட்டுக்கள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் என்பவற்றுடன் ஓர் விக்ரகத்தையும் எடு…
-
- 0 replies
- 280 views
-
-
ஜப்பானில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா? ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற…
-
- 4 replies
- 373 views
-
-
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் : பன்னாட்டு சட்டவாளர் றிச்சாட் ஜே றோஜெர்ஸ் ! குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாக காட்டுகின்றது என தெரிவித்துள்ள பன்னாட்டு சட்டவாளர் றிச்சாட் ஜே றோஜெர்ஸ், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும், சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் ( Sri Lanka – Monitoring and Accountability Panel (MAP) பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கல…
-
- 1 reply
- 248 views
-
-
’அவசரகால நிலையை நீக்க வேண்டாம்’ அழகன் கனகராஜ் நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும்வகையில், பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை, விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் நீக்கவேண்டாமென, பாதுகாப்புத் தரப்பினர், அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுச் சம்பவங்களையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கடந்த 6ஆம் திகதியன்று அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றையதினம் மாலை வெளியிடப்பட்டதுடன், இந்த அவசரகால நிலை, 10 …
-
- 1 reply
- 318 views
-
-
‘50 வீடுகளில் 111 பொலிஸார் நிலை கொண்டுள்ளனர்’ “காங்கேசன்துறை பகுதிகளில் 50 வீடுகளில் 111 பொலிஸார் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (15 இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நடேஸ்வரா கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றையும், பாடசாலை கிணற்றையும் பொலிஸார் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கமால் தம் வசம் வைத்துள்ளார்கள். அது தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட ப…
-
- 2 replies
- 411 views
-
-
முன்னேற்றங்களை எடுத்துரைப்போம்: ரவிநாத ஆரியசிங்க தெரிவிப்பு (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றத்தை இன்றைய விவாதத்தில் எடுத்துரைப்போம் என்று ஜெனிவாவிற்காக இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் தொடர்பில் ஜெனிவா வளாகத்தில் வைத்து கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே ரவிநாத் ஆரியசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; நாங்கள் பொறுப்புக்கூறல் மற்றம் நல்ல…
-
- 0 replies
- 224 views
-
-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்த காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உ…
-
- 3 replies
- 347 views
-
-
வடக்கில் நான்கு சபைகள் 20ஆம் திகதி ஆரம்பம்!! வடக்கில் நான்கு சபைகள் 20ஆம் திகதி ஆரம்பம்!! உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்படாத சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊர்காவற் றுறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதே சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை என்பனவே 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. பூநகரி, புதுக்குடி…
-
- 0 replies
- 394 views
-
-
சிவாஜிலிங்கம் கைதாகி விசாரணை முன்பிணை இருந்ததால் விடுவிப்பு!! சிவாஜிலிங்கம் கைதாகி விசாரணை முன்பிணை இருந்ததால் விடுவிப்பு!! வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டு, ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்று அவருக்கு ஏற்கனவே முன்பிணை வழங்கியிருந்ததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. பரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவில் முகாம் இட்டுள்ள நிலையிலும் இலங்கை தொடர்பான முதலாவது விவாதம் இன்று நடைபெறுகிறது. ஜெனிவாவில் இம்முறை இரண்டு விவாதங்கள் இலங்கை தொடர்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாவது விவாதம் இன்று இடம்பெற ஏ…
-
- 0 replies
- 227 views
-
-
மாற்றுப் பொறிமுறையை வலியுறுத்துவார் அல் ஹுசைன் ; இலங்கை தொடர்பில் கடும் அவதானம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில் இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் புதிய மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் த…
-
- 0 replies
- 187 views
-
-
சிறிலங்காவுக்கு வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்திருந்தது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெறுவதை தடுக்குமாறு முகநூல் நிறுவனத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது. இந்தியாவில் இருந்து வந்திருந்த முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் ச…
-
- 0 replies
- 179 views
-
-
இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குகிறது சிறிலங்கா போரினால் பாதிக்கப்பட்ட, உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குமான பணியகத்தை நிறுவ சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டதை அடுத்து, இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான யோசனை கடந்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்த இன, மத வேறுபாடும் இன்றி, காவல்துறை, பாத…
-
- 0 replies
- 179 views
-
-
ரணிலைக் கவிழ்க்க நெருங்கிய சகாக்களே திட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ”பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் கூட அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறும். என்னுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இந்தப் பிரேரணைக்கு ஆதரவு அளிக்க பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார் http://www.puthinappalakai.net/2018/…
-
- 0 replies
- 155 views
-
-
திங்களன்று ஜெனிவா பயணமாகிறது சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு வரும் திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. இந்தக் குழுவுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,தலைமை தாங்கவுள்ளார். சிறப்பு திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் தலைவர் மனோ தித்தவெல, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் நரேன் புள்ளே, சிறிலங்கா பிரதமரின் ஆலோசகர் பிரசாந்தி மகிந்தரத்ன, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஹிஷினி கொலன்னே ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர். இதற்கிடையே, சிறிலங்கா தொடர்பான பூகோள கால …
-
- 0 replies
- 180 views
-
-
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் – சிறிலங்கா இணக்கம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக, இருதரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக ஜப்பானிய பிரதமர் செயலகத்தை மேற்கோள்காட்டில், கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றலை, சிறிலங்கா வலுப்படுத்திக் கொள்வதற்கு ஜப்பான் உதவும் வகையி…
-
- 2 replies
- 301 views
-
-
வறுமையின் சவால்கள் : மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை 19.4% (2014) மாக இருந்து, தற்பொழுது 11.3% (2017) மாக குறைவடைந்துள்ளது. தேசியமட்ட வறுமை நிலை 6.7% மாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட மாதாந்த தலா வறுமை வருமான மட்டம் 4281/= ஆக உள்ளது. இதன் காரணமாக தேசிய வறுமைப்பட்டியலில் மட்டக்களப்பு 3 ஆவது இடத்திலுள்ளது. வறுமைக்கான காரணங்கள்: மட்டக்களப்பு மாவட்டத்தில் 7518 குடும்பங்களுக்கு மலசலகூட வசதி இல்லை. இவர்கள் பொது இடங்கள் மற்றும் அயலவர்களின் மலசலகூடங்களையே பயன்படுத்தி வருகின்றனர். 27419 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. …
-
- 0 replies
- 728 views
-