ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துக் கப்பல்களை வழங்குகிறது அவுஸ்ரேலியா சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு மேலும் மூன்று ரோந்துக் கப்பல்களை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கப்பல்கள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு போர்ட் வகையை (Port Class vessels) சேர்ந்த மூன்று கண்காணிப்புக் கப்பல்கள் சிறிலங்காவின் கடலோரக் காவல்படைக்கு வழங்கப்படும். அவுஸ்ரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்ரேலியா வழங்கியிருந்த இரண்டு பே வகை (Bay Class) கண்காணிப்புக் கப்பல்களுக்குத் தேவையான இரண்டு இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று காலி துறைமுகத்தி…
-
- 0 replies
- 326 views
-
-
ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு ( எம்.எப்.எம்.பஸீர்) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் நீதிமன்றுக்கு விடுக்காத நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலகொட அத்தே ஞானசார தேரர் பொலன்னறுவையில் வைத்து மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கு கொழும்பு பிரதான நீத…
-
- 0 replies
- 425 views
-
-
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை குறித்து பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் செவ்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை குறித்து பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி காணொளி வடிவில் : http://www.virakesari.lk/article/31664
-
- 0 replies
- 203 views
-
-
ஹிரோசிமாவுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று விஜயம் செய்தார். ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி, அந்நகரின் நகர பிதாவினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்குள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார். ஹிரோசிமா நகரின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதலாவது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 வீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநே…
-
- 0 replies
- 284 views
-
-
இறுதியுத்தம் குறித்து கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் முழக்கம் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) கிளிநொச்சி வைத்தியசாலையில் நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது. மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். என்று யுத்தத்தின் போது கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்தில் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை நியமித்து நிபுணர் குழுவின் உறுப்ப…
-
- 0 replies
- 567 views
-
-
யாழில் குற்ற செயல்கள் குறைந்து விட்டன – முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , காவல்துறை அதிகாரிகள் உடனான கலந்துரையாடல்களின் போது பல விடயங்கள் பேசப்பட்டது. அதன் போது யாழில் தற்போது குற்ற…
-
- 0 replies
- 417 views
-
-
26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர் அவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் …
-
- 4 replies
- 721 views
-
-
அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31654
-
- 1 reply
- 252 views
-
-
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது எஸ்.ஜெகநாதன் “சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்புநாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 615 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது தமிழரசு கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட “புதிய சுதந்திரன் பத்திரிகையானது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. …
-
- 4 replies
- 1.6k views
-
-
பேஸ்புக் மீதான தடை நீக்கம் ! பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து கடந்த 7 ஆம் திகதிமுதல் நாட்டில் சமூகவலைத்தளங்களுக்கு தேசிய பாதுகாப்பு கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் வைபர் சமூக வலைத்தள சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் சேவையும் வழமைக்குத் திரும்பியது. இந்நிலையில் பேஸ்புக் தொடர்பில் தற்காலிக தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பேஸ்புக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இ…
-
- 0 replies
- 463 views
-
-
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த 23 இந்தியர்கள் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் அதிகாரிகளால் இந்தியப் பிரஜைகள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண்ணாவார். விசா நியமங்களை மீறியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை வந…
-
- 1 reply
- 436 views
-
-
தமிழர்களின் வழிக்கு வருமா உலகநாடுகள்? உலக நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை போன்ற பெரு மன்றங்களுக்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது தட்டிக்கழிப்பதற்காகத் தாமதிப்பதை ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கிறது இலங்கை என்று தெரிவித்திருக்கிறார் ஸ் ரீபன் ராப். ஸ் ரீபன் ராப் ஒரு அமெரிக்க வழக்குரைஞர். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதி அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர். தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்து வடக்கின் பல இடங்களுக்கும் நேரில் சென்றவர். யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்துள…
-
- 1 reply
- 438 views
-
-
தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் – இம்மானுவேல் அடிகளார் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்தியையும் அறியாமல் இங்குள்ள சிலர் விமர்சனம் செய்கின்றனர். அது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – நல்லூரில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த…
-
- 0 replies
- 264 views
-
-
வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 1532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பாலியல்,உளவியல்,உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/வருடத்தின்-முதல்-இரண்டு-மாதங்களில்-1532-சிறுவர்-துஸ்பிரயோகங்கள்/175-212712
-
- 0 replies
- 174 views
-
-
மருதங்கேணியில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவு மருதங்கேணியில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந…
-
- 0 replies
- 267 views
-
-
பேஸ்புக் தொடர்பில் பிரதமரின் அதிரடி நடவடிக்கை.! பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிடட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http:/…
-
- 2 replies
- 377 views
-
-
சனிக்கிழமை வரை தொடருமாம் அவசரகால சட்டம் ! கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்த இனவாத வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஒரு வார காலத்துக்கு அமுலில் இருக்கத்தக்கதாக ஜனாதிபதியால் அமுல் செய்யப்பட்ட, பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண் டாம் பகுதியான அவசர கால நிலைமை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமையே நாடு திரும்பும் நிலையில் 18 ஆம் திகதி ஞாயிறன்று, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானியில் கையெழுத்திடுவார் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்…
-
- 0 replies
- 340 views
-
-
பிரதமரை நீக்குவதே கூட்டு எதிரணியின் இலக்கு பிரதமருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது குறித்து ஆராயும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இன்று நடைபெறுகின்றது. நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போட்டுள்ள போதிலும் அதனை கைவிடவில்லை. விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் எனவும் கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் கடந்த காலத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாட…
-
- 0 replies
- 231 views
-
-
மன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படு…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை தொடர்பான முதலாவது விவாதம் நாளை இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்த காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உரையாற்றவுள்ளதுடன் இதன்பின்னர் உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளன. அத்துடன் இலங்கையின் சார்பில் ஜெனிவாவிற்கான வதிவிடப் பிரதிநிதி இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது இலங்கையானது 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக செயற்பட வேண்டுமெனவும் அந்தப…
-
- 0 replies
- 275 views
-
-
தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் பூர்த்தி - டி.விஜிதா யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் என வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பிறேம்குமார் தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்…
-
- 0 replies
- 303 views
-
-
யாழில் இரு இனங்களுக்கு இடையில் முறுகல். – பொலிஸ் பாதுகாப்பு…. யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் தெரியவருவதாவது , குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் தமிழ் இளைஞர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியினை பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வந்துள்ளார். அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற முஸ்லீம் இளைஞர்கள் இனி பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்த கூடாது என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து வர்த்தக நில…
-
- 7 replies
- 856 views
-
-
ரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வரும் மார்ச் 18ஆம் நாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்சவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, நாமல் ராஜபக்ச இன்று ரஷ்யாவுக்குப் புறப்படவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/03/15/news/29802
-
- 0 replies
- 135 views
-
-
உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம் (ஆர்.யசி) இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது. அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. …
-
- 0 replies
- 273 views
-