Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன் மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீண்ட தாமதத்துக்குப் பின்னர் காணாமல் போனோர் பணியகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை வரவேற்கின்றோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நியமனங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். நீண்ட இழுபறியால் மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கை தகர்ந…

  2. பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம் காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் கிளைச் செயலகங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி, “தேவைகளின் அடிப்படையில் பிராந்திய ரீதியான செயலகங்களை அமைப்பதற்கு, காணாமல் ப…

  3. தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர் என்று வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


 அவர் மேலும் தெரிவிக்கையில்,“ இக் கலந்துரையாடலில், நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக பல விடயங்களை பேசியிருந்தோம். இதுவரை காலமும் தமிழ்த் தலைமைகள் கூறி வந்த கருத்துக்களில், தேர்தலின் பின்னர், எவ்வாறான மாற்றங்கள், வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன எ…

    • 0 replies
    • 587 views
  4. இந்­திய வெளி­யு­ற­வுக்­கொள்கை தொடர்­பான சி.வி.யின் கோரிக்கை அண்மைக் கால­மாக இலங்கை சம்­பந்­த­மான இந்­திய வெளி­யு­றவுக் கொள்கை வெறும் பொரு­ளா­தார வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தி­லேயே கவனம் செலுத்­தி­யது. இனி­யா­வது ஒரு வலி­மை­யான அர­சியல் ரீதி­யான நெருக்­கு­தலை மத்­திய அர­சாங்­கத்­துக்கு கொடுத்து இந்த நாட்டில் இணைப்­பாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா வழி அமைக்­க­வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் கூட இந்­தி­யாவின் அறி­வு­ரைக்­கேற்ப தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. 1992ஆம் ஆண்டு அதில் தரப்­பட்ட சொற்ப அதி­கா­ரங்­களும் மத்­திய அர­சாங்­கத்­தினால் தட்­டிப்­ப­றித்து எடுத்­துக…

  5. “முக்கியமான நகர்வு“ – அமெரிக்கத் தூதுவர் காணாமல் போனோர் பணியகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது, முக்கியமானதொரு நகர்வு என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார். இதுதொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வலுவான, சுதந்திரமான, காணாமல்போனோருக்கான பணியகத்தின் உருவாக்கமானது, சிறிலங்காவின் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடுகின்ற மக்களுக்கு…

    • 2 replies
    • 560 views
  6. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் – பிரித்தானியா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. பிரித்தானிய வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் கிரேக் ஹான்ட்ஸ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பிரெக்சிற்றின் பின்னரும் இலங்கையுடனான வர்த்தக உறவுகள் தொடரும் என தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/69104/

  7. யாழில் கேரள கஞ்சா கடத்தல் ; ஐவர் கைது யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவை நெல்லியடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து வதிரி பகுதியில் வைத்து வீட்டொன்றில் இருந்து குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்ற நிலையில் அங்கிருந்த ஏனைய 5 சந்தேகநபர்களும் பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ கேரள கஞ்சா மற்றும் சிறிய ரக வாகனமொன்று, முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் மோட்டார் சை…

  8. “மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமே காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு” (இராஜதுரை ஹஷான்) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்தின் காரணமாகவே காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்கன் தெரிவு அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, இறுதிகட்ட போரை மையப்படுத்தி இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க த்துணிந்ததை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து , அதற்கெதிராக தமது எதிர்ப்பினையும் கடந்த உள…

  9. அம்பாறை விவகாரம் ; பிரதமருடன் ஹக்கீம் இன்றிரவு அவசர சந்திப்பு சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார். அம்பாறை கலவரம் தொடர்பாக கொழும்பு 07 இல் 5ஆம் ஒழுங்கையிலுள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்புக்கு பொலிஸ் மா அதிபரும் அழைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து பிரதமர் தொலைபேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டு அம்பாறை நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். …

  10. தியத்தலாவ பேருந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தியத்தலாவ பேருந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏ.எம்.ஜே.எல்.கே. சந்திரசேன என்ற இராணுவ உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தியதலாவ கஹாகொல்ல என்னும் இடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில 12 ராணுவத்தினர் உட்பட 19 பேர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையிலேயே இவ்வாறு இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கைக்குண்டு ஒன்றை எடுத்துச் செல்வதாகது ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழான ஓர் குற்றச் செயலாகும் என்பது குறிப்…

  11. ஆனந்தசங்கரிக்கு எதிராக முறைப்பாடு - எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எஸ்.ஜெகநாதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியம் குறித்த முறைப்பாட்டை இன்று (02) பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்று (02) காலை கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிர…

  12. அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் …

    • 31 replies
    • 2.7k views
  13. ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் அழுத்தம் பிர­யோ­கிக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை மனித உரிமை நிலை­வரம் குறித்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட இலங்கை குறித்த பிரே­ரணை எவ்­வாறு இலங்கை அர­சாங்­கத்­தினால் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்தே இந்த விவாதம் நடத்­தப்­ப­டு­கின்­றது. இதில் முதலில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்­கையை வெ ளியிட்டு உரை­யாற்­றுவார். அல் ஹு…

  14. முடியாவிட்டால் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும் ; மனோ ஜனாதிபதியையோ மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சர் பதவியை கொடுக்க முடியாவிட்டால், ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள். இதுவும் முடியாவிட்டால், எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும் என முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மட்டக்குளி போதி சமுத்ரா ராமவி…

  15. சிரியா படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டனம்.! சிரியாவில் நடைபெறும் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்கா முன்பாக கண்டன போராட்டம் ஒன்றினை நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடாத்தினர். அப்பாவி மக்களை படுகொலை செய்ய வேண்டாம், மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டாம், பொதுமக்களை பாதுகாக்க யுத்தத்தை உடன் நிறுத்தவும், யுத்தத்தின் வலி கொடுமையானது எனவே அப்பாவி மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து வெளியிட்டனர். சிரியா கௌடாவில் நடைபெற்று வரும் போரில், ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். …

  16. வெறுமனே சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். இந்த சண்டை நடந்தபோதே இந்த வீரரின் மரணமும் சலனமின்றி நிகழ்ந்திருக்கிறது. இப்போழுதெல்லாம் பத்திரிகைகளிலோ, இணையத்தளங்களிலோ முன்னாள் போராளிகள் மரணம் என்ற செய்தி வெறும் செய்தியாகிவிட்டது. ரெஸ்ட் இன் பாஸ்ட் என்றுவிட்டு கடந்து சொல்லுகிறோம். இதே வீரர்கள் அன்று களத்தில் சண்டையிட்டு சந்தனப் பேழைகள…

  17. சிறிலங்காவின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது. தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது. இதில் சிறிலங்கா படைகளின் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களின் நேரடிச் சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன. http://www.pu…

  18. மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டது தமிழ் மக்­கள் பேரவை!! மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டது தமிழ் மக்­கள் பேரவை!! தமிழ் மக்­கள் பேர­வையை வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மறு­சீ­ர­மைத்­துள்­ளார். இது­வரை பேர­வை­யின் முடி­வு­கள் அதன் மத்­திய குழு­வின் ஊடா­கவே எடுக்­கப்­பட்டு வந்­தது. தற்­போது அந்த அதி­கா­ரம் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள செயற்­கு­ழு­வுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. நாங்­கள…

  19. அம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு அம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று முதலாம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்க ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்ளது. நேற்று முன்தினம் அதி­காலை உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறு கார­ணத்­தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடை­யு­ரி­மை­யாளர் தாக்­கப்­பட்டு அதனை அண்­மித்த பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல், மோட்­டார்­வண்­டிகள் மற்றும் இஸ்­லா­மிய மத குர்ஆன் ஆகி­யன சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக சரி­யான முறையில் பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்டும் எனவும் குற்­ற­வா…

  20. இந்தியாவை விட்டு சீனாவை நாட வேண்டியேற்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் மஹிந்த இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைப்­ப­தற்கு இந்­தியா ஆர்வம் காட்­ட­வில்லை. அத­னா­லேயே குறித்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சீனாவை நாட வேண்டியேற்­பட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­விற்­கான விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்பும் வழியில் பெங்­க­ளூருவில் வைத்தே ஊட­க­வி­ய­லா­ள­ர்களிடம் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைக்கு…

  21. ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார் ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம், 7ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் …

  22. சிறிலங்காவின் விசாரணை முடியும் வரை மேலதிக நடவடிக்கை இல்லை – பிரித்தானியா பிரிகேடியர் பிரியங்க பெர்னோன்டோவுக்கு எதிரான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்த சர்ச்சைகளை அடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கடந்த மாதம் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும், அவரது மனைவி, பிள்ளைகள் லண்டனில் தங்கியுள்ள நிலையில், அவர…

  23. சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக .இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள்,அதிகபடியாக படுகொலை கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது. 2009 இல் இதே போன்ற அ…

  24. யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்று மதிலுடன் காணப்பட்ட புத்தர் சிலையை அழகுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் தகர்த்தெறியப்பட்டதுடன் மதிலில் செதுக்கப்பட்டிருந்த யானைகள் சிலவும் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.சம்பவ ம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …

  25. சுற்றுலாத் தலமாக மாறிய அறுகம்பை மீன்பிடிக் கிராமம் அறுகம்பை பிரதேசம் மீன்பிடிக் கிராமங்களை அண்மித்தவாறானதொரு சிறந்த கடற்கரையாகும்.இது இலங்கையின் சிறந்த கடல் அலை விளையாட்டு இடமாகும் தென்கிழக்கு ஆசியாவில் 4 வது சிறந்த இடமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றது.உலகின் பத்து சிறந்த கடலலை விளையாட்டு கடற்கரைகளுடன் சேர்ந்து வருகின்றது. அண்மையிலுள்ள குமண பறவை சரணாலயத்துடன் சேர்ந்துள்ள அகலமான மணலான கடற்கரைகளும் அறுகம்பைக்கு பெறுமதி சேர்க்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.