Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காத்தான்குடியில் குண்டு வெடிப்பு : 8 குண்டுகள் மீட்பு!!! மட்டக்களப்பு - காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 3.50 மணியளவில் புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 8 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகரசைபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தே…

  2. கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பாட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:- தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பக்கமே நிற்கின்றனர். அதனால் தான் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் மோசடிகளையும், நம்பிக்கைத்துரோகத்தையும் எடுத்து கூறினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதா…

  3. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்! கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எமது மக்களது…

  4. வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம் புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 35 உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. எனினும், 40 உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதாக இன்று மாலை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். திருகோணமலையில்- 02, யாழ்…

  5. எனக்கும் தமிழ் தேசிய உணர்வு உண்டு…. என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது. என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது , எனது அரசியல் யுகப்பயணத்திலே பல ஆண்டுகளாக என்னோடு கைகோர்த்து வெற்றிப் படிகளை அடைய பலம் சேர்த்தவர்கள். மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும். உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாகவும் உன்னதமான உயிரோட்டமான முறையில் தமிழ் மக்களுக்கான எனது சேவை எந்நேரத்திலும்…

  6. மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ் ) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே மக்கள் ஆணை அவ்வாண்டின் ஆகஸ்ட் மாதமும் கிடைக்கபெற்றது. இந்நிலையில் எமது மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள்…

  7. உள்ளூராட்சி தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகு…

  8. சேவலும், மொட்டும் இணைந்தது நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தேர்தல் வெற்றியின் பின்னர் ஹட்டன் நகரில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் சீ.பீ. ரத்னாயக்கவும் கலந்துக்கொண்டார். சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியமைத்து உயர்ந்த சேவையினை வழங்கவுள்ளதாக இலங்…

  9. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதலாவது கட்சித்தாவல் தற்போதைய அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சரான சுசில் பிரேமஜயந்த் இன்று (11) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவருடன் மேலும், 7 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் எதிர்வரும் சில நாட்களில் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளமைத் தொடர்பில் அமைச்சர்கள…

  10. மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரின் வீட்டுக்குச் சென்ற FCID அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் வீட்டுக்கு இன்று (11) பிற்பகல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீ. எஸ்.என். அலைவரிசையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடித் தொடர்பான வாக்கு மூலத்தை வழங்கவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைத் தருமாறு FCID அதிகாரிகள் ரொஹான் வெலிவிட்டவிடம் தெரிவித்துள்ளனர். ரொஹான் வெலிவிட்ட பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணப்…

  11. பாராளுமன்றை கலைக்குமாறு கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்றை கலைக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரியுள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டை பிளவடையச் செய்தல், நாட்டுக்குள் சொத்துக்களை விற்பனை செய்தல், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தல் போன்றனவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் ஆணைக்கு தலை சாய்த்து அரசாங்கம் பாராளுமன்றை கலைக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமெனவும் அவர் கோரியுள…

  12. தேசிய அரசாங்கம் 2020 வரை தொடரும்- ஐ.தே.க இன்று தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான தேசிய அரசாங்கத்தினை 2020ஆம் ஆண்டுவரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன், இன்று (11) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள தகவலை அவதானத்தில் எடுத்துக்கொண்டு எதிர்வரும் நாட்களில் சில பல மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பத…

  13. மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது : மஹிந்த (இராஜதுரை ஹஷான் ) மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினைகளுக…

  14. தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்காவிலிருந்து கோட்டாபய கருத்து நாட்டு மக்கள் எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது முகப் புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவிலேயே கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Gotabaya-comment-on-LG-Poll-results-

  15. உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பின்னர் அர­சியல் சிக்கல் ஏற்­ப­டலாம்? ( எஸ்.கே ) ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான மோதலால் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களின் பின்னர் ­பா­ரிய அர­சி­ய­ல­மைப்பு சிக்­கல்­க­ளுக்குள் நாடு தள்­ளப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இப்­போ­துள்ள மும்­முனைப் போட்­டியில் ஐ.தே.கட்­சி­யையும், மஹிந்த தரப்­பையும் பின் தள்ளி ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஸ்ரீல.சு. கட்சி வெற்றி பெறத்­த­வ­றினால் ஜனா­தி­ப­தியின் நிலை பல­வீ­ன­ம­டைந்து, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் நிலை பல­ம­டைந்து நாட்டில் அர­சி­ய­ல­மைப்பு சிக்­க­லுக்கு வழி­வ­குக்­கு­மென சிங்­கள வார இத­ழொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. பஷில் ராஜபக் ஷவுக்…

  16. ரணிலின் நேர்த்தியான காய்நகர்தல்! மஹிந்தவை காப்பாற்றி, மைத்திரியை ஏமாற்றிய அரசியல் நகர்வு நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்களுடன் வெளிவருவதால் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரசியல் ரீதியாக அநாதரவாக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. தாமரை சின்னத்தில் முதன்முறையாக தேர்தல் ஒன்றை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வாக்கு வேட்டையில் முன்னிலையில் உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் சுமார் 42 சதவீ…

  17. கட்சி தாவல்கள் ஆரம்பம் : பிரபல அமைச்சர்கள் பதவி துறக்கவும் முடிவு? தேர்தல் முடிவுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் கட்சி தாவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறாக பிரபல அமைச்சர் ஒருவரும் தனது அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேபோன்று ஐ.தே.கவை சேர்ந்த சிலரும் பதவியை துறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்பாராத வெற்றியை மகிந்த ராஜபக்‌ஷ பெற்றுள்ள நிலையில் அரசியலில் பாரிய குழப்ப நிலைமைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்…

  18. வடக்­கில் கூட்­ட­மைப்பு : தெற்­கில் மகிந்த அணி!! வடக்­கில் கூட்­ட­மைப்பு : தெற்­கில் மகிந்த அணி!! இரு சபை­கள் த.தே.ம. முன்­னணி வசம் மூன்­றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டது ஐ.தே.க. மிக நீண்ட இழுத்­த­டிப்­பின் பின்­னர் நடத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்கு மாகா­ணத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், தெற்­கில் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணி­யும் முன்­னிலை பெற்­றுள்­ளன. இரண்டு தரப்­பும் பெரும்­…

  19. அய­லு­றவு அமைச்­சின் மீது மைத்­திரி கடும் அதி­ருப்தி! அய­லு­றவு அமைச்­சின் மீது மைத்­திரி கடும் அதி­ருப்தி! உத­யங்க வீர­துங்க கைது செய்­யப்­பட்ட விவ­கா­ரம் மற்­றும் இலண்­டன் தூத­ரக இரா­ணுவ அதி­காரி சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட விவ­கா­ரம் ஆகி­யவை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடும் அதி­ருப்­தி­யு­டன் உள்­ளார் என்று அரச உயர்­மட்ட வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறிய முடி­கின்­றது. இத­னால் உட­னடி அமைச்­ச­ரவை மாற்­ற­மொன்றை செய்து முக்­கி­ய­மான அமைச்­சுப் பத­வி­க­ளில் மாற்­ற…

  20. தமிழ் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்கின்றோம் : நாமல் தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்”.என மேலும் குறிப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத…

  21. தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியருக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்க முடியாது!! தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியருக்கு வக்காலத்து வாங்குவதை ஏற்க முடியாது!! தமி­ழர்­க­ளுக்கு கொலை அச்­சு­றுத்­தல் விடும் வகை­யில் நடந்து கொண்ட பிரி­கே­டி­ய­ருக்கு எதி­ராக விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டாது என்று இரா­ணு­வத் தள­பதி மற்­றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ஆகி­யோர் தெரி­வித்த கருத்து கண்­டிக்­கத்­தக்­கது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பிரி…

    • 2 replies
    • 734 views
  22. மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள் கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் இன்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தாம் மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/30500

  23. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சி ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சி ஆதரவாளர்கள் காணொளி எடுத்த மறு கட்சியின் ஆதரவாளர்மீது தாக்குதல் புதுக்குடியிருப்பு , வள்ளிபுனம் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டார். புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்கானார். உதய சூரியன் மற்றும் சைக்கிள் கட்…

  24. ஆறு மணிநேரத்தில் ஐம்பது சதவீத வாக்குப் பதிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்து வருகிறார்கள். அதன்படி, காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையான, அதாவது, கடந்த ஆறு மணி நேரத்தில் புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. வவுனியாவில் 45 சதவீத வாக்குகளும் பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. http://www.virakesari.lk/arti…

  25. 340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும். முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.