ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’ “சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல. என்றாலு…
-
- 0 replies
- 467 views
-
-
கையுறைக்குள் நாற்பது இலட்சம்; சாவகச்சேரி நபர் கைது இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில், நேற்று (5) மாலை சென்னையில் இருந்து இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த நபர் (41) போலியான கையுறை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் தோன்றவே அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் வசமிருந்த சுமார் ஒன்றேகால் இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அவரது கையுறையைச் சோதனை…
-
- 0 replies
- 360 views
-
-
மஹிந்தவின் சிவில் உரிமை ரத்துச் செய்யப்படும் அவதானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமை ரத்து செய்யப்படும் அவதானம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின்போது இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி தொடர்புபட்டுள்ளதாக குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இதன…
-
- 1 reply
- 380 views
-
-
காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட கிராமம் மீண்டும் காடாகியது; எப்போது சட்ட நடவடிக்கை? புத்தளம் தில்லையடி அல் காஸிம் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 500 வீடுகள் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவது தொடர்பில் எமக்கு அறியக் கிடைத்துள்ளது. தற்கால அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கும் பிரபல அமைச்சரான றிசாட் பதியுதீனால் சுமார் 1000 வீடுகள் இப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த எமது செய்திக்குழுவிற்கு, சுமார் 500 இற்கும் அதிகமான வீடுகள் மனிதப் பாவனையற்ற…
-
- 3 replies
- 464 views
-
-
பொருளாதார ரீதியாக பின்னடைவு கண்டுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு உதவத் தயார்:- பொருளாதார ரீதியாக பின்னடைவு கண்டுள்ள யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க தம்மாலான உதவிகளை மேற்கொள்ள முடியும் என, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனெடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ் பெரிய ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரியிடம் எடுத்த…
-
- 0 replies
- 264 views
-
-
2018 ஆம் ஆண்டில் பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயார் (லியோ நிரோஷ தர்ஷன்) இவ்வருடத்தில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் சில மாதங்களில் மேலும் குறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ச.தொ.ச .மெகா வர்த்தக நிலைய அங்குரார்ப் பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை வெலிசறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையா…
-
- 0 replies
- 335 views
-
-
அனைத்தும் பொய் நாடகம் சாடுகிறார் கெஹெலிய எம்.பி. (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அனை த்து விடயங்களும் பொய் நாடகங்களேயாகும். இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 0 replies
- 317 views
-
-
மாயக்கல்லிமலை பிரச்சினைக்கு தீர்வுகாணவே யானையை மரத்தில் கட்டிப்போட்டிருக்கிறோம் (சம்மாந்துறை மேலதிக நிருபர்) யானைக்கு வாக்களித்தால் மாயக்கல்லிமலையில் சிலைவைப்பார்கள் என்று, அந்தப் பிரச்சினை வந்தபோது அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காத சிலர் கூறிக்கொண்டு திரிகின்றனர். மாயக்கல்லிமலையில் சிலைவைத்து ஆக்கிரமிப்புச் செய்வதை தடுப்பதற்கான ஆயுதமாகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறோம். அதற்காகத்தான் யானையை மரத்தில் கட்டிப் போட்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் அசைக்க…
-
- 0 replies
- 218 views
-
-
தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரவில் இராணுவத்தினர் கைது;கோட்டாபய பிரிவினைவாத சிந்தனை கொண்ட தமிழ் அரசியல்வாதிகளினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்கா இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகள் கைது செய்யப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ரணில் – மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறந்த பாடமொன்றை புகட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர் படையணியை மீளக் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பின் கீழ் கொழும்பு 5 நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் இரவு விசேட மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில்…
-
- 1 reply
- 289 views
-
-
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? இறுதித்தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை என்கிறார் விமல் (எம்.சி.நஜிமுதீன்) மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது. எனவே, அது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பா…
-
- 0 replies
- 186 views
-
-
வீட்டுக்குள் ஆயுதங்கள் எப்படி வந்ததென்றே தெரியாது: சந்தேக நபர்! யாழில் அண்மையில் ஆயுதங்களுடன் கைதாகிய சந்தேக நபர் ஒருவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்" இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வ…
-
- 3 replies
- 507 views
-
-
அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது ஜனாதிபதி தப்பிக்க முடியாது என்கிறார் ஜீ.எல்.பீரிஸ் (எம்.சி.நஜிமுதீன்) மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதியின் அறிக்கையானது நடைமுறை சாத்தியமற்றது. எனவே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும் மத்திய வங்கியில் இரண்டாம் முறைமோசடி இடம்பெறுவதற்கான வழிவகைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்படுத்திக்கொடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலை வரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். …
-
- 1 reply
- 301 views
-
-
நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை கையளிக்குமாறு மா.இளஞ்செழியன் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதி நீதிபதியுடன் கலந்துரையாடி இருந்தார். பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உள்ளது. அந்த காணியில் முன்னர…
-
- 3 replies
- 388 views
-
-
நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை துரோகியென்றார்கள்.ஆனால் அவர்களும் அதே இடத்துக்கு வந்துள்ளனர்.எங்களது வழிமுறைக்கு வந்திருந்தாலும் எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) சார்ப்pல் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்…
-
- 2 replies
- 517 views
-
-
'தமிழ் மக்கள் ஏமாற்றம்'......இரா. சம்பந்தன் மைத்திரியை ஆதரித்தமை குறித்துக் கவலையில்லை போர் முடிந்தால், முரண்பாடு முடிந்துவிட்டதா? மாற்று என்ன? மஹிந்த மீண்டும் வருவதா? கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறித்துத் திட்டமில்லை வடமாகாண சபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 525 views
-
-
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை பாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையவர் என்று முச்சக்கர வண்டி உரிமையாளரான பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கான முச்சக்கர வண்டியை இவர் வழங்கினா…
-
- 1 reply
- 308 views
-
-
முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம் முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன அளித்துள்ள பதிலிலேயே இந்த காணி சுவீகரிப்புத் திட்டம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின் முல்லைத்தீவு பிரதான தளத்தை உருவாக்குவதற்காக என்று இந்த காணி சுவீகரிப்புக்கான உத்தரவு, பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 127 views
-
-
சொத்து விவரங்களை 20க்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்படைக்காதவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் குறித்த காரியாலயங்கள், பதாகைகள், மற்றும் சுவரொட்டிகள் என்பன இம்மாதம் 31 ஆம் திகதியுடன் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவ…
-
- 0 replies
- 113 views
-
-
ஐ.தே.க., சு.க.இடையே அதிகரிக்கும் நெருக்கடிகள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடை யில் நெருக்கடிகள் அதிகரித்து செல்வதாகவே தெரியவருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் வெற்றி பெறும் நோக்கில் இரண்டு கட்சிகளும் பாரிய அளவில் பிரசார வியூகங்களை அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் கடும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தேர்தல் பிரசார மேடைகளில் இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கடுமையான வ…
-
- 0 replies
- 98 views
-
-
பூநகரி விபத்தில் ஒருவர் பலி : பொலிஸாருடன் குடும்பத்தார் முறுகல் பூநகரி செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரு பிள்ளையின் தந்தையான (வயது32 ) சிங்கராசா கேதீஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ள நிலையில் குற்றவாளியை பொலிஸார் காப்பாற்ற முயல்வதாக இறந்தவரின் குடும்பத்தினர் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர். இச் சம்பவம் நேற்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருசதாவது, வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதுண்டதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த…
-
- 0 replies
- 110 views
-
-
விஜயகாந் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்; நீதிமன்றம் உறுதி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொல…
-
- 1 reply
- 664 views
-
-
வடக்கில் வாக்குச் சேர்க்கும் கட்சிகளின் வறுமை! 01/04/2018 இனியொரு... மக்கள் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வாக்குகளாக மாற்றுவது எவ்வாறு என்பதை மட்டுமே சிந்திக்கும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உலகம் முழுவதும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றன. மக்கள் புதிய வழிகளைத் தேடிக்கொள்கிறார்கள். நாற்பது ஆண்டுகால் போராட்ட வரலாற்றின் எச்சங்களைக்கூட அழிப்பதற்கான நிகழ்ழ்சி நிரலில் வாக்குக் கட்சிகள் செயற்படுவதை மக்கள் நிச்சயமாக இனம்கண்டுகொள்வார்கள். வன்னி இனப்படுகொலையின் பின்னர் பருந்துகள் போல மக்களைச் சூறையாடும் வாக்குக் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு/தமிழரசுக் கட்சி இலங்கைப் பேரினவாத அரசின் ஊதுகுழலாக வெளிப்படையாகவே செயற்படும் நிலைய…
-
- 0 replies
- 276 views
-
-
அடுத்த கட்ட நடவடிக்கையை தாமதமின்றி முன்னெடுங்கள் மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதுதொடர்பான தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் அறிவித்தார். இதுதொடர்பில் ஜனாதிபதி எவ்வாறான அறிவிப்பை வெளியிடப்போகின்றார் என்ற ஆர்வம் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி மிகவும் தெளிவான வகையில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு எவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது என்றும் விட…
-
- 0 replies
- 205 views
-
-
வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்! வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மல்லாவி மருத்துவமனை,மாங்குளம் மருத்துவமனை,ஒட்டுசுட்டான் மருத்துவமனை, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை,புதுக்குடியிருப்பு மருத்துவ மனைகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அண்மையில் ஏற்பட்ட வைரஸ் தொற்று தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது வைத்திய நிபுணர் மற்றும் மருத்துவமனை இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட சிகிச்சை பிரிவினரையும் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் க…
-
- 0 replies
- 237 views
-
-
தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம்-சித்தார்த்தன் இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தீர்மானங்களை இலங்கை தமிழரசு கட்சி தனித்தே மேற்கொள்கிறது. பங்காளிக் கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்துவதில்லை. இதன்விளைவாகவே ஏனைய கட்சிகள் முரண்பட நேரிட்டது. ஆனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, எதற்காக ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துக் கொண்டத…
-
- 1 reply
- 260 views
-