ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
கிளிநொச்சியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஐக்கியதேசியக்கட்சி,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கட்டுப்பணம் செலுத்தின குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்று முற்;பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழுவும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தலைமையிலான குழுவும் ஐக்கியதேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி அமைப்பாளர் விஜயராஜன் தலைமையிலான குழுவும் கரைச்சி,பூநகரி ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தி உள்ளன இதுவரை தமிழ்தேசியக் கூட்டமைப்பு , ஐக்கியதேசியக்கட்சி ,ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ,தமிழ் தேசிய வ…
-
- 0 replies
- 185 views
-
-
'இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை" கணிதம், விஞ்ஞானம் மற்றும் உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனாலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்தோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் தெளிவு படுத்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28277
-
- 1 reply
- 331 views
-
-
சட்டவிரோதமாக இத்தனை மருத்துவர்களா???? இலங்கையில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கிவருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரின் உதவியைத் நாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் சுமார் பதினைந்தாயிரம் வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சொந்த வைத்தியசாலைகளிலும் பணியாற்றுகிறார்கள். எனினும் இவர்களில் எவரேனும் முறையான அனுமதியைப் பெறாமல் இருந்தால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/28282
-
- 0 replies
- 316 views
-
-
தமிழா் தாயக பிரதேசத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வு! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழா் தயாக பகுதிகளில் நினைவுகூரப்பட்டது. முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு கைவேலியில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைமையகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நினைவுகூரப்பட்டது. இன்று (14)மாலை 4 மணியளவில் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் நினைவுரைகளும் இடம்பெற்றது. இதேவேளை தமிழ்த் தேசிய…
-
- 2 replies
- 926 views
-
-
தமிழ் அரசு – ரெலோ முறுகல் ஆயர் இல்லம் தீர்க்க முயற்சி! மன்னார் நகரசபை தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைக்கு மன்னார் ஆயர் இல்லம் ஊடாகத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மன்னார் நகர சபை ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டது. அது தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனையடுத்து மன்னார் நகர சபையின் ஆட்சிக் காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் அரசுக் கட்சியும், அடுத்த …
-
- 0 replies
- 218 views
-
-
தேர்தல் + வேட்புமனு + தமிழரசுக்கட்சி + ஏமாற்று + குத்து வெட்டு = கூட்டமைப்பு: சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்ப நிலையால் இறுதி நேரத்திலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று வியாழக்கிழமை மதியம் 12மணியுடன் நிறைவடைந்துள்ளது. அந்நிலையில் இறுதி நாளான இன்று காலை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வேட்பாளர்பட்டியல் நிரப்ப பட்டு வேட்பாளர்கள் கையொப்பம்மிட அழைக்கப்பட்டு இருந்தனர். வேட்பாளர்களின் பெயர்கள் நீக்கம். ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் தமிழரசு கட்சியால் தீர்மானி…
-
- 2 replies
- 419 views
-
-
புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை சிறிலங்கா மனதில் கொள்ள வேண்டும் – இந்தியா அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்புச் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதுடெல்லியில்நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம், அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கேள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிறிலங்காவுடனான எங்கள் உறவுகளின் வலிமை மற்றும் உறுதியான தன்மை குறித்து நாங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அது ஆழமாக வேரூன்றிய, பல பரிமாணங்களைக் கொண்டது. சிறிலங்காவுடனான…
-
- 3 replies
- 428 views
-
-
ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது! உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்…
-
- 2 replies
- 473 views
-
-
பிரிவுக்கு காரணம் என்ன?விளக்குகிறார் மஹிந்த ராஜபக் ஷ (எம்.ஆர்.எம்.வஸீம்) ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவா இல்லையா என்பதை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நிரூபிக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நாட்டை சுயாதீன ராஜ்ஜியங்களுக்கு சமமான 9 சமஷ்டி பிரிவுகளாக பிரிப்பதற்கு தேவையான புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படு்த்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் …
-
- 0 replies
- 270 views
-
-
தீவிரமாக தொடரும் இணைப்பு முயற்சிகள் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில் (ரொபட் அன்டனி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. தற்போது இரண்டு தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் …
-
- 0 replies
- 133 views
-
-
குடாநாட்டின் முதல் தேர்தல் வன்முறை- சங்கானையில் நேற்றுப் பதிவு!! குடாநாட்டின் முதல் தேர்தல் வன்முறை- சங்கானையில் நேற்றுப் பதிவு!! யாழ்ப்பாணத்தில் முதலாவது தேர்தல் வன்முறை நேற்றுப் பதிவாகியது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரது வீடு மீது கழிவு ஒயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வலி. மேற்குப் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக்…
-
- 0 replies
- 264 views
-
-
மருத்துவர் சங்கத்தில் இருந்து சமஷ்டி கேட்போர் விலகட்டும்!! மருத்துவர் சங்கத்தில் இருந்து சமஷ்டி கேட்போர் விலகட்டும்!! அதிகாரப் பகிர்வை அல்லது கூட்டாட் சியை (சமஷ்டியை) கேட்டுநிற்கும் மருத்துவர்கள், இதற்கு எதிரான போக்கைக் கொண்டிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலிருந்து விலகவேண்டும். தேவையென்றால் புதிய சங்கத்தை அவர்கள் உருவாக்கலாம் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சபையில் நேற்று வலியுறுத்தினார். …
-
- 0 replies
- 438 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு அம்பாறை மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு, வீடு சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமையினாலேயே, இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேவேளை, கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி, காரைதீவு பிரதேசசபைகளுக்கு…
-
- 1 reply
- 255 views
-
-
இலங்கை தமிழ் பெண்ணை நாடுகடத்த வேண்டாம்.! இலங்கைத் தமிழ் பெண்ணை நாடுகடத்த வேண்டாம் என அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது என கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைக் குடிவரவுத் துறை மேற்கொண்டதாகவும் அவரது அகதி விண்ணப்பக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவரது விண்ணப்பம் விரைவுப் பரிசீலனை முறை மூலம் ஆராயப்பட்ட பின்னர் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இப்பெண் தமிழீழ விடுதலைப் புலிகளுக்…
-
- 0 replies
- 225 views
-
-
முல்லைத்தீவிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா 300 கிலோவிற்கும் அதிகமான கேரளக்கஞ்சா வத்தளை ஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும்…
-
- 2 replies
- 298 views
-
-
சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 9 கட்சிகள் போட்டி சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக, யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட- 7 மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ள நிலையில், இன்று நண்பகலுடன், இங்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யாழ். மாவட்டச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித…
-
- 1 reply
- 321 views
-
-
கேப்பாபிலவில் 111 ஏக்கர் காணி எதிர்வரும் 28 விடுவிக்கப்படும் கேப்பாபிலவில் 111 ஏக்கர் காணி எதிர்வரும் 28 விடுவிக்கப்படும் கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி விடுவிக்கப்பட வுள்ளன என மாவட்டச் செய லகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலர் செ. பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைத்தீவு, கேப்பாபிலவு மக்கள் 287ஆவது நாளா…
-
- 2 replies
- 419 views
-
-
தமிழ் அரசியல் கைதிக்கெதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் சாட்சியமளித்தார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் இன்று சாட்சியமளித்தார். ஆதித்தனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற மற்றொரு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது. அது தொடர்பில் சாட்சியம் பெறுவதற்கே கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் இன்று அழைக்கப்பட்ட…
-
- 1 reply
- 192 views
-
-
முள்ளிவாய்க்காலில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் குடியிருக்கும் காணியில் உள்ள கிணற்றில் இருந்து சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிணற்றில் இருந்து இரண்டு கிரனைட் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் அவை வெடித்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. ஆகவே, இறுதி யுத்தக்களமான இப்பகுதியில் மீண்டும் ஒரு தடவை வெடிபொருள் அகற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெடிபொருட்களை அறியாத சிறுவர்கள் அவற்றை விளையாட்டுப் பொருளென நின…
-
- 1 reply
- 242 views
-
-
மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்? உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு பங்குதாரர் கிடைக்காதவிடத்து, அரசின் நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து சுயமாகவே மறுசீரமைத்துக்கொள்வத…
-
- 9 replies
- 935 views
-
-
பிரிந்தவர்கள் இணைய காலம் செல்லவில்லை –தமிழரசுக்கட்சி மீண்டும் அழைப்பு வடக்கிலும் கிழக்கிலும் இருவர் பிரிந்துசென்றுள்ளனர்.காலம் இன்னும் செல்லவில்லை.வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்கள் எங்களுடன் சேர்ந்துவிடலாம் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக:கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ப்pல் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் சென்று வேட்புமனு தாக்…
-
- 0 replies
- 343 views
-
-
மஹிந்த அணியின் வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுஜன பெரமுன கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. மஹரகம , வெலிகம , பாணந்துறை , அகலவத்த , பதுளை , மஹியங்கனை ஆகிய சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போதுமான பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்படாமை , கட்சியின் தகுதியுள்ள அதிகாரிகளினால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படாமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. -(3) http://www.samakalam.com/செய்திகள்/மஹிந்த-அணியின்-வேட்பு-மன/
-
- 0 replies
- 258 views
-
-
மட்டக்களப்பில் 35 அரசியல் கட்சிகள்,06 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு-உதயசூரியன் நிராகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசசபைகளுக்கும் ஒரு நகர சபைகளுக்குமாறு வேட்பு மனுதாக்கல் செய்யும் பணிகள் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுபெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 அரசியல் கட்சிகளும் 6சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான மா.உதயகுமார் தெரிவித்தார்.வேட்பு மனுத்தாக்கலின் அடிப்படையில் ஒரு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 311 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதத்தலைவர்கள் பங்களிக்க வேண்டும் நாட்டில் யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நாடு இன்னும் சமாதான சகவாழ்வை உருவாக்கிக்கொள்வதில் பாரிய சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான நாட்டில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதும் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இன்னும் பாரிய சவாலான விடயமாகவே காணப்படுகிறது. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளையும் தேசிய ஒற்றுமையையும் முன்னெடுப்பதற்கு குறிப்பிடத்தக்களவு நடவடிக்கை…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீண்டும் மூண்டது முரண்பாடு -எஸ்.றொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது. மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், ம…
-
- 0 replies
- 202 views
-