ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்த…
-
- 1 reply
- 696 views
-
-
புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்முனைத் தாயகத்தின் வரலாற்றினைத் திரிபுபடுத்தி இனவாதத்தீயை மூட்டுவதற்கு முயல்வதாக குற்றம் சாட்டிய பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போது அம்பாறை மாவட்டத்தின் இதயமான கல்முனைத் தாயக பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள…
-
- 3 replies
- 436 views
-
-
யாழ்.கோட்டையை இராணுவ தளமாக்க வடக்கு ஆளூநர் முயற்சி:- யாழில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்.கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்தாக வடமாகாண ஆளூநர் தெரிவித்தார் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதே என ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், கோட்டைக்குள் டச்சு போர்துக்கேய ஆங்கிலேய இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமில்லையா ? இப்ப மாத்திரம் எப்படி சொந்தமானது. …
-
- 1 reply
- 729 views
-
-
அ’ புரம் அரசியல் கைதிகள் வழக்கு – சாட்சிகளில் ஒருவர் வவு. வரச் சம்மதம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது வழக்கின் சாட்சிகளில் ஒருவர் வவுனியா நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சம்மத்தித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு கட்டளையிட வேண்டும் என்று அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு முன்வைக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே ச…
-
- 1 reply
- 317 views
-
-
அரசியலமைப்பு சபையின் பங்காளி இன்று அதனை விமர்சிப்பது வேடிக்கை விஜயதாஸவுக்கும் விக்கிக்கும் சுமந்திரன் பதில் (ஆர்.ராம்) அரசியலமைப்பு சபைக்கான யோச னையை முன்வைத்தவர்களிலொருவராக வும்,வழிநடத்தல்குழுவின் அங்கத்தவராக வும், இடைக்கால அறிக்கை வரைவில் பங்கேற்றவராகவும்,சட்டவாக்கத்தில் சிறந்த அனுபவத்தினையும் கொண்டிருக் கும் விஜயதாஸ ராஜபக் ஷவின் கூற்று வேடிக்கையாகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர் அமைச்சுபதவியிலிருந்து நீக்கப்பட்டமையின் பிரதிபலிப்பே இந்த எதிர்நிலையாகும் என்றும் ச…
-
- 1 reply
- 157 views
-
-
பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டிருந்த மூவர் கலேவெலவில் அதிரடிப் படையினரால் கைது; தனக்கு தொடர்பில்லை என மஹ்ரூப் எம்.பி.தெரிவிப்பு (ரெ.கிறிஷ்ணகாந்) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் எரிபொருள் பவுஸர்களில் காணப்படும் பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்து வந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை தம்புள்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கலேவெல மகுலுகஸ்வெவ பிரதேசத்திலுள்ள பாழடைந்த கருங்கல் ஆலை ஒன்றில் குறித்த பசரை மறைத்து வைத்து சந்தேக நபர்கள் இந்த வர்த்தகத்தினை மேற்கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்ச…
-
- 2 replies
- 289 views
-
-
சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பவே முடியாது சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. அதன் பிடிக்குள் இருந்து எவரும் தப்பிக்கக்கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும். தவறை மூடிமறைப்ப தற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தமாட்டேன். பிணைமுறி ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரம் தராதரம் பாராது, குற்றவாளி களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான மலிக் ச…
-
- 3 replies
- 449 views
-
-
சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ். வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது. ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை. …
-
- 0 replies
- 397 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு இணைத்தால் குருதி ஆறு ஓடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற…
-
- 0 replies
- 506 views
-
-
அம்மாச்சியின் யாழ்.கிளைக்கு பெயர் வைத்தப்பதில் குழப்பம் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அம்மாச்சி உணவகத்தின் யாழ்ப்பாண உணவகத்துக்கு பெயர்ப் பலகை வைப்பதில் குழப்பநிலை தொடர்கின்றது. வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபல்யமாக இயங்கி வருகின்றது. இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அம்மாச்சி உணவகம் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தி…
-
- 3 replies
- 588 views
-
-
கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம் வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானை வேலி அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்…
-
- 0 replies
- 188 views
-
-
அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளுக்காக இரா…
-
- 8 replies
- 692 views
-
-
ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்தித்த சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதியும்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அட்டோனியோ குட்டரஸை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஐ.நாவின் பொதுச்செயலாளருக்கு தெளிவுப்படுத்…
-
- 0 replies
- 245 views
-
-
1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை அரிப்புக்கு சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர். இது தடுக்கப்பட வேண்டும் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருற்படுத்தாமல் தமிழ் சகோதரர்கள் அத்துமீறி இடத்தை அபகரிப்பது சரியா. இந்த இடத்தில் கோவில் அமைக்க வேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அமைப்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கவே தவிர வேறுகாரணம் ஒன்…
-
- 1 reply
- 497 views
-
-
வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்! தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான போராட்டங்களினை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டனா். http://newuthayan.com/story/46976.html
-
- 0 replies
- 222 views
-
-
வழமைக்கு மாறாக… மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று (15) அதிகாலையிலிருந்து பொழது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது. ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்தப் பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன், மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம். பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வழமைக்கு…
-
- 0 replies
- 298 views
-
-
யாழ் - கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவ குழுக்களிடையே மோதல் : 4 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றையதினம் கல்லூரி வளாகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... தொழிநுட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை (14-11-2017) பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு முடிவடைந்து மாணவர்கள் வெளியில் வந்த வேளை இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதலில் மாணவன் ஒருவரை பிறிதொரு கற்கை நெறி மாணவன் தலைக…
-
- 0 replies
- 411 views
-
-
’போர்க் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலையில்லை’ இலங்கைக்கு வேண்டுமானதை கொடுப்போம் என்கிறது சீனா மஹிந்த விசேடமானவர் அல்லர் எனவும் அறிவிப்பு - பெய்ஜிங்கிலிருந்து சந்துன் ஏ. ஜயசேகர இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காது என்று உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது. கலாசார, ஊடக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்க…
-
- 0 replies
- 210 views
-
-
'' ஹர்ஷவை ஜெனிவாவுக்கு அனுப்புவதை ஏற்க முடியாது '' (நமது நிருபர்) மனித உரிமைகள் பேரவையில் இல ங்கை தொடர்பாக முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களை தகர்க்க இந்த அரசாங் கம் எந்த விதமான முறையான உபாயங் களையும் இதுவரை மேற்கொள்ள வில்லை. அமெரிக்காவின் கட்டளைகளை மறைமுகமாக நிறைவேற்றும் வகையிலேயே செயற்படுகின்றது என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் பிரதிநிதி கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார் . ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஆரம்பமாகியுள்ள 28ஆவது பூகோல காலக்கிரம மீளாய்வு அமர்வில் இன்று இலங்கை தொடர்பான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட உள்ளன. இக் கூட்டத்தொடரிற்கு இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ…
-
- 0 replies
- 463 views
-
-
நிதி அமைச்சரின் பிரேரணையினால் அமைச்சரவையில் சர்ச்சை கப்பல் நிறுவன முகவர்களாக வெளிநாட்டவர்கள் (நமது நிருபர்) கப்பல் நிறுவன முகவர்களாக வெளிநாட் டவர்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற பிரேரணை அமைச்சரவை யில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர கப்பல் நிறுவன முகவர்களாக வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்ற பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.…
-
- 0 replies
- 189 views
-
-
எரிபொருள் தட்டுப்பாட்டு விவகாரத்தால் அமைச்சரவையில் தொடர்ந்தும் சர்ச்சை குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை வேண்டும் என்று அமைச்சர் அர்ஜுன கோரிக்கை (நமது நிருபர்) நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணமான பின்னணியைக் கண்டறிவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை நடத்தப்படவேண்டும். இதற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவேண்டும் என்று பெற் றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பெற்றோலிய வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர்களை குற்றம்சாட்டியமை தொட…
-
- 0 replies
- 141 views
-
-
மஹிந்த-வின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த இரண்டு தரப்பையும் இணைப்பதற்கு சமரச முயற்சி (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் இணைத்து களமிறக்குவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திடீரென கலந்து கொண்டு சமரச முயற்சிகைள முன்னெடுத்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூ…
-
- 0 replies
- 138 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமனம் எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.துசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றினார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்…
-
- 0 replies
- 125 views
-
-
இணைவு சாத்தியமில்லை : பிரிவே நிரந்தரம் என்கிறது கூட்டு எதிர்க்கட்சி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எனினும் அக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பங்குதாரராக இருக்கும்வரையில் தாம் அதில் இணைந்துகொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து …
-
- 0 replies
- 97 views
-
-
புலிகளும் ஜே.வி.பியினரும் யுத்தம் செய்யவில்லை. கிளர்ச்சியே செய்தனர். – சி.வி. விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக் கைபிடித்துப் பார்க்கும் ஒரு கைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன? எனும் கேள்விக்கே அவ்வாறு பதில…
-
- 2 replies
- 471 views
-