ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
புதிய பயணத்திற்காக நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நூற்றுக்கு நூறு வீத ஆதரவு : சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குவதுடன் அதில் எவ்வி சந்தேகமுமில்லையென எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் தேசிய தீபாவளி விழா இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு த…
-
- 10 replies
- 954 views
-
-
என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி! என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார். யாழ் வரும் போது சில சம்பவம், சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நான் பல வருடம் அரசில் செய்து வருகிறேன். எனக்கு நன்றாக தெரியும்.என்னை ஜனாதிபதியாக எல்லாரும் தெரிவு செய்தீர்கள். பிரச்சனை தீர்க்க தான் ஜனாதிபதி ஆக்கினார்கள்.தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும். அத்தனை பேரும் என்னு…
-
- 13 replies
- 1.4k views
-
-
யாழ் பல்கலை மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து,; தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், உடனடி தீர்வினைகோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக்கோரி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 6 பேர் நாளை…
-
- 0 replies
- 491 views
-
-
பாதணிகளைப் பாதுகாவலரிடம் கொடுத்துச் சுத்தமாக்கிய பூஜித் 0 SHARES ShareTweet அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வுக்கு வந்திருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தனது பாதணியை மெய்ப் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்தார். வீதியோரத்தில் பலரும் பார்த்திருக்க இந்தச் சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய தமிழ் மொழித்தின விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வ…
-
- 2 replies
- 846 views
-
-
ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம் "தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர்…
-
- 0 replies
- 457 views
-
-
சலப்பையாற்றில் 650 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம் திருகோணமலை – சலப்பையாறு பகுதியில், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 650இற்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், சிறிலங்கா அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்டுள்ளன. சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள, குமரேசன்கடவை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, யான் ஓயாவுக்கு அருகே – கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டியே இந்த சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியு…
-
- 0 replies
- 442 views
-
-
ஜே.வி.பியினருக்கு கிடைத்த போது ஏன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை நாட்டில் வன்முறையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட மக்கள் வஜடுதலை முன்னணியினர் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஏன் விடுதலை வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளில் அரசியல் அழுத்தங்களும் காணப்படுவதால், அவை முழுமையாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில இருப்பாக கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்ச…
-
- 1 reply
- 285 views
-
-
யாழில் 5 மணிநேரத்தில் 500 வழக்கு பதிவு: காரணம் இதுதான்- மக்களே உஷாா்! டெங்கு கட்டுப்பாட்டு விசேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று யாழில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 5 மணித்தியாலங்களுக்குள் இதுவரை 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெங்கு கட்டுப்பாட்டு விசேட நிகழ்ச்சி இன்றும் நாளையும் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணிக்கு அனைத்து பிரதேசங்களிலும் ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கையில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் அதி தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெல்லிப்பழை பிரதேசத்தில் 50 வழக்குகளுக்கு மேல் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 379 views
-
-
சிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றே தேவை – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது நாட்டிற்கு தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், ஆகவே ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று தற்போது தமக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா எனவும் அனைத்து இனங்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு சமூகம் முன்…
-
- 0 replies
- 205 views
-
-
ஆளுநரைச் சந்தித்தது மாணவர் ஒன்றியம் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. (படங்கள்: எஸ். நிதர்ஷன், எஸ். ஜெகநாதன்) http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆளுநரைச்-சந்தித்தது-மாணவர்-ஒன்றியம்/71-205626 ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரவும் : வடக்கு ஆளுநரிடம்…
-
- 0 replies
- 328 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு-கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துப் பேச முடிவு? வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை வடபகுதியுடன் இணைப்பதற்கு பிரச்சினையில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கூறியமை தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் அலகு தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசியுள…
-
- 0 replies
- 352 views
-
-
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்? வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 6 replies
- 851 views
-
-
இரு குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரராம் முல்லைத்தீவில் வடமாகாணத்தில் இராணுவத்தின் அதீத பிரசன்னத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டுவருவதாக அரசாங்கதரப்பினால் அடிக்கடி செய்யப்பட்டுவந்திருக்கும் அறிவிப்புக்களை அர்த்தமாற்றதாக்கும் வகையான புள்ளிவிபரங்களுடனான அறிக்கையொன்றை இரு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டிருக்கின்றன. கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் நிலையமும், இலங்கையின் சமத்துவத்திற்கும், நிவாரணத்துக்குமான மக்கள் இயக்கமும் இணைந்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு குடிமக்களுக்கு ஒரு படை வீரர் என்ற விகிதாசாரத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத…
-
- 0 replies
- 312 views
-
-
இராணுவமா? கடற்படையா? பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம்! ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல் அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கெதிரான விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று …
-
- 0 replies
- 486 views
-
-
புத்த பெருமானின் சின்னங்களை அவமானப்படுத்திய தேரர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களையும், தலதா மாளிகையையும் பகிரங்கமாக விமர்சனங்களை மேற்கொண்டுவந்த பிட்டிதுவே சிறிதம்ம தேரர், மல்வத்துப்பீட மகாநாயக்கரிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோரிய சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மல்வத்துப்பீட மகாநாயக்கர் முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கோரியதோடு, எழுத்து மூலமும் தனது மன்னிப்பை அவர் கேட்டதை அடுத்து மல்வத்துப்பீடம் அவருக்கான மன்னிப்பை கடும் எச்சரிக்கையுடன் வழங்கியுள்ளது. பகிரங்க மேடைகளிலும் பல இடங்களிலும் தலதா மாளிகை, மல்வத்துப்பீடம் மற்றும் புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை அவமானப்படுத்தியும், பகிரங்கம…
-
- 0 replies
- 649 views
-
-
ஒருமித்த நாடு என்பதை ஒருபோதும் அனுமதியோம் தினேஷ் சூளுரை; வடக்கு,கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் என்கிறார் (ரொபட் அன்டனி) ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை முன்வைத் தால் அதனை நிச்சயமாக கூட்டு எதிரணி தோற்கடிக்கும். விசேடமாக சர்வஜன வாக்கெடுப்பின் போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். ஒருமித்த நாடு என்பது சமஷ்டி முறைமைக்கு சமனானதாகும். எனேவ ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் நிச்சயம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று விடும் …
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கை கடலில் அத்துமீறினால் என்ன நடக்கும்.? எல்லைதாண்டி மீன்பிடித்தால் ரூ.6 கோடியே 75 லட்சமாக அபராத தொகை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. வங்காளவிரிகுடா கடலில் பாக்.ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் மீன்பிடிப்பதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் இலங்கை அரசு சமீ…
-
- 0 replies
- 255 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) சுதந்திர இலங்கையின் 70 வருட பூர்த்தி யின்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையில் பூரண நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின் றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பணிகளை வேக மாக செய்துவிட முடியாது. அனைத்து விடய தானங்கள் குறித்தும் ஆராய்ந்து கலந்து ரையாடியதன் பின்னரே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என் றும் அவர் குறிப்பிட்டார். தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளி கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு …
-
- 0 replies
- 383 views
-
-
நாமல் உள்ளிட்ட 8பேருக்கு பிணை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8பேருக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிநீதிமன்ம் இன்று(16) பிணை வழங்கியுள்ளது http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமல்-உள்ளிட்ட-8பேருக்கு-பிணை/175-205620
-
- 0 replies
- 168 views
-
-
தாயகம் திரும்பிய இளைஞன் கட்டுநாயக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒக்ரோபர் 15 ஆம் திகதியான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்த இவரை விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கா விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். யுத்தம் காரணமாக ஏழு வயதில் பெற்றோருடன், சுவிடஸர்லாந்து சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சொந்த இடமாக கொண்ட தேவன் கமலீசன் 27 வருடங்களுக்கு பின்னரே தெனது பூ…
-
- 0 replies
- 438 views
-
-
மைத்திரியும் பலவீனமும் தன்னைப் பலவீனப்படுத்தினால் பேய்தான் பலம் பெறும் என்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் மொழித் தின விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் பேய் எனச் சொன்னது முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத்தான் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவரது யாழ்ப்பாணம் வருகைக்கு முன்பாக வடக்கு முழுவதும் நடத்தப்பட்ட ஒருநாள் முழு அடைப்பு மற்றும் அவரது வருகையின் போது இடம்பெற்ற கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் என்பவற்றை மனதில் கொண்டே அவர் இந்தக் கருத்தைத…
-
- 0 replies
- 484 views
-
-
டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி கே. சரா உயிரிழந்துள்ளார். கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் காய்ச்சல் காரணமாக சோர்வடைந்து காணப்பட்டதுடன் தனியார் வைத்திய சாலையில் மாத்திரை பெற்று வந்துள்ளார். நேற்று 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் சி…
-
- 1 reply
- 513 views
-
-
சிறையில் சுந்தரகாண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி. தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ எம்.பி. இராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். மத்தள விமான நிலையம் உட்பட நாட் டின் வளங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதை கண்டித்து கடந்த ஆறாம் திகதி அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடந்த 10ஆம் திகதி மாலை கலகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விசாரணைகளை அடுத்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐக…
-
- 0 replies
- 376 views
-
-
வடக்கு கிழக்கில் துரித வீட்டுத் திட்டம் வடகிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ருபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், ப…
-
- 0 replies
- 254 views
-
-
பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் இலங்கை பயணம் செய்ய உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா ( Tehmina Janjua ) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தற்பொழுது ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓமான் பயணத்தினை முடித்துக் கொண்டு அவர் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்வார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த பயணத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/archives/45511
-
- 0 replies
- 566 views
-