ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
கிளிநொச்சியில் ஜனாதிபதி உரையாற்றும் போது உறங்கிய காவல்துறை மா அதிபா் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து அங்கு கலந்துகொண்ட மக்கள் மத்தயில் உரையாற்றினார். இதன் போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பீ. ஹரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் மாவட்ட அரச அதிபா் ஆகியோருடன் பொலீஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தரவும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரையாற்றிக்கொண்டிருந்த போத…
-
- 0 replies
- 249 views
-
-
நாளை திறக்கப்படுகிறது 'சுப்பர் சிறைச்சாலை' சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது சிறைச்சாலை நாளை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸயிலுள்ள மேற்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையே தற்போது 'சுப்பர் சிறைச்சாலை ' என்று அழைக்கப்பட்டுவருகின்றது. ஏனென்றால் சிறைக்கைதிகளுக்கும் பார்வையிட வருபவர்களுக்கும் உயர் சொகுசு வசதிகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 9.5 பில்லியன் ரூபா செலவில் 658 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிற…
-
- 0 replies
- 365 views
-
-
தங்கல்லையில் முகாமிட்டுள்ள மஹிந்த அணி : இன்று சந்திப்பு ; நாளை ஆர்ப்பாட்டம் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கல்லையில் முகாமிட்டுள்ளனர். இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்…
-
- 0 replies
- 325 views
-
-
சு.கவின் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிப்பு? சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பிரதிநிதிகள் நால்வரின் பதவிகள் பறிபோகும் சாத்தியம் நிலவுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச , விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்சா, அருத்திக்க பெர்ணான்டோ ஆகியோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிபோகும் எனத் தெரிவிக்கப்பட்டது. கட்சி மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் இவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளனர் என்றும் தெரியவருகிறது. http://newuthayan.com/story/37196.html
-
- 0 replies
- 252 views
-
-
எட்டும் தூரத்தில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. புதுடெல்லியில் நேற்று (14) ஆரம்பமான மீன்பிடித்துறையின் உயர்மட்டப் பிரநிதிகளின் கூட்டத்திலேயே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை சார்பில் மீன்பிடித்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீரவும், இந்தியா சார்பில் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கும் கலந்துகொண்டனர். தீர்வு குறித்த முழு விவரமும் இன்னும் அறியத்தரப்படவில்லை. http://www.virakesari.lk/article/25806
-
- 0 replies
- 185 views
-
-
தொடர் அடைமழை; முடங்கியது நுவரெலியா நுவரெலியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் மக்கள் வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் நேற்று முன்தினம் (13) ஆரம்பித்த மழை சிறு சிறு இடைவெளிகளுடன் தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது. இந்நிலையில், நேற்று (14) மாலை வேளையில் பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை, டொரிங்டன் தோட்டப் பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதி விவசாயக் காணிகள் நீரில் மூழ்கின. இதனால், காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டன. டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான பாதையில் உள்ள மண்மேடுகளில் இருந்து கற்பாற…
-
- 0 replies
- 249 views
-
-
வெள்ளைவான் கடத்தலின் சாட்சி ஒருவர் மரணம் கொழும்பில் 2007 ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவரின் தாயாரான ஜெசிந்தா பீரீஸ் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார். தனது கணவரையும் மகனையும் கடத்திய விவகாரத்தில் நீதிகோரி கடந்த பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தநிலையிலே இன்று காலை காலமானார் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை தனது மகன் தொடர்பான வழக்கில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 1 reply
- 570 views
-
-
அமைச்சர் சிவநேசன் மட்டும் நிகழ்வில் பங்கேற்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என எல்லோரும் நேற்றைய தினம் அரச தலைவர் மைத்திரிபாலவின் வடக்கு மாகாண நிகழ்வுகளைப் புறக்கணித்தபோதும் வட மாகாண விவசாய அமைச்சரும் புளொட் அமைப்பின் உறுப்பினருமான க.சிவநேசன் (பவான்) மட்டும் நிகழ்வில் பங்கேற்றார். வெற்றிலை கொடுத்து அரச தலைவரை நேரில் வரவேற்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்…
-
- 0 replies
- 601 views
-
-
நுணாவில் பகுதியில் வாள்வெட்டு : இருவர் படுகாயம் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இனம்தெரியாத நபர்களே இவ்வாறு இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிய தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-persons-in…
-
- 3 replies
- 810 views
-
-
”பொலிஸ் பாதுகாப்பும் வாகனமும் தருகிறேன் எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுங்கள்”.. கிளிநொச்சிக்கு பயனித்த ஜனாதிபதி மைதிரிபால சிறசேன காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது நிகழ்வில் சந்தித்து கலந்துரையாடினாா். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்தித்திக்குமாறும் கூறினாா். இதனை ஏற்றுக்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளி…
-
- 3 replies
- 511 views
-
-
மன்னார் மனித புதைகுழியை பார்வையிடச் சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை கண்ட நிலையில்,மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது மன்னாருக்கு திரும்பிய சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமைகளை…
-
- 2 replies
- 589 views
-
-
உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்கைதிகளது உடல்நிலை மோசம் – அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்கைதிகளது உடல்நிலை மீண்டும் இரண்டாவது தடவையாக மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை மோசமடைந்ததையடுத்தே சிறைச்சாலை அதிகாரிகள் பலாத்காரமாக மீண்டும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிந்திய தகவல்களின் பிரகாரம் அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையின் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள அவர்களது உடல்நிலை அச்சந்தருவதாக அமைந்துள்ளதாக வைத்தியசா…
-
- 0 replies
- 331 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14-10-2017)
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளி. பொருளாதார மத்திய நிலையத்தைத் திறந்தார் மைத்திரி அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியிலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தைத் திறந்தார். கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த சிறப்புப் பொருளாதார மத்திய நிலையத்தை அரசதலைவர் சற்றுமுன் திறந்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன் ,நாடாளுமன்ற ஊப்பினர்களான அங்கையன் , மஸ்தான் வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட்குரே பொலிஸ்மா அதிபர் ,அரச அதிகாரிகள் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.com/story/37101.html
-
- 1 reply
- 451 views
-
-
வன்னிமக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியை புலம்பெயர்சமூகம் பதுக்கி வைத்துள்ளது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சேகரித்த நிதியை புலம்பெயர்சமூகத்தில் உள்ளவர்கள் இன்னமும் பதுக்கிவைத்துள்ளனர் என உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி.க்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கின்றாரோ இல்லையோ என்பது தனக்கு தெரியாத போதும் தலைவர் இருப்பதாக எண்ணிக்கொண்டு அந்த நிதியை போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு அனுப்பி உதவவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். …
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். குருநகரின் 11 இடங்களில் மலேரியா நுளம்பு கண்டறிவு நேற்றைய கூட்டத்தில் தெரிவிப்பு யாழ்ப்பாணம் குடாநாட்டின் தொடருந்து நிலையத்தை அண்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பக்கூடிய நுளம்பு குருநகர்ப் பகுதிகளில் உள்ள 11 இடங்களிலும் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் அதிக இடங்களில் தொடர்ந்தும் மலேரியா நோயைப் பரப்பக்கூடிய இந்திய நுளம்புகள் கண்டுபிடிக்கப்படுவதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார், வவுனியா என்று தற…
-
- 0 replies
- 303 views
-
-
மக்களின் கோரிக்கைக்கு கட்டாயம் மதிப்பளியுங்கள் வடக்கு முழுவதும் நேற்று முழுமையாக முடங்கியது. அரசியல் கைதிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புக்கு தமிழ் மக்களிடம் இருந்து முழுமையான ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவ மனைகள், போக்குவரத்து என்று எல்லாமும் முடங்கிப்போயிருந்தன. அரசியல் கைதிகளின் விடயத்தில் தமது மிக உறுதியான நிலைப்பாட்டை இதன் மூலம் தமிழர்கள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி அவர்கள் தெரியப்படுத்துவது இது முதற்றடவையும் அல்ல. ப…
-
- 0 replies
- 393 views
-
-
யாழ். வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர் கலந்து கொண்டுள்ளார். http://newuthayan.com/story/36835.html
-
- 6 replies
- 959 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மட்டுவில் ஆர்ப்பாட்டம் !! அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள், சமூகநலன் சார்ந்தவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25790
-
- 0 replies
- 236 views
-
-
'30 வருட கொடிய யுத்தம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம்" லக்ஸ்மன் கிரியல்ல 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாம் 30 வருட கொடிய யுத்தம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம். இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பில் உயர்தொழில் நுட்பவியல் நிறுவனம் அமைச்சார் லக்ஸ்மன் கிரியல்ல இன்று திறந்து வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்த அரசியலமைப்பில் அனைத்து சமூகத்துக்கும் நன்மை ஏற்படும் விதத்தில்தான் உரு…
-
- 0 replies
- 243 views
-
-
‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’ “எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்…
-
- 4 replies
- 512 views
-
-
போராட்டகாரரை ஜனாதிபதி சந்தித்தார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் சென்ற ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் மொழி தினம் யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் மத்தியில் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி போராட்டக்காரர்களை சந்தித்தார். http://globaltamilnews.net/archives/45274
-
- 4 replies
- 612 views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் ஜனாதிபதியுடன் சந்திப்பு இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன், தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும், இந்நிலைமை காரணமாக இன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின்போது, இது தொடர்பில் வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவ தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக மனோ க…
-
- 3 replies
- 247 views
-
-
அரசியல் கைதிகள் குறித்த கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்… ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில் பதில் : இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று பொதுவானது. மற்றது பிரத்தியேகமானது. அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதி மொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனெ…
-
- 5 replies
- 590 views
-
-
ஒருமித்த நாடு என்பதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது 2000ஆம் ஆண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் சாத்தியமானலும் தற்போது சாத்தியமல்லை நேர்மையான முறையில் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு புலிகள் தரப்பிடம் அர்ப்பணிப்பு இருக்கவில்லை. புலிகள் அமைப்பிற்கு ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்திற்கு செல்வதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் புலிகள் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தவில்லை. அவர்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற எண்ணத்தினால் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல் இருந்தனர் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கூட்டு எதிரணியின் முக்கியஸ் தரும் சிறிலங்கா பொதுஜன முன்னண…
-
- 1 reply
- 551 views
-