ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை ; தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அக்மீமன தேரர் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 477 views
-
-
போதைப்பொருள் கடத்தல்காரர்களை பொலிஸாருக்குத் தெரியும் ShareTweet வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னர் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகளை பொலிஸாருக்கு நன்கு தெரியும். தெரிந்திருந்தும் பொலிஸார் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது உள்ளனர் – என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டினார். சூர்யா அமைப்பின் ஏற்பாட்டில், சிங்களக் கற்கைநெறியைப் பூர்த்திசெ…
-
- 0 replies
- 251 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் வந்தன மலேரியா பரப்பும் நுளம்புகள் தலை மன்னார் பகுதியில் கடந்த ஆண்டு இனங் காணப்பட்ட மலேரியாவை பரப்பும் நுளம்புகள், யாழ்ப்பாணம் தொடருந்து நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளிலும் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி க.நந்தகுமார் தெரிவித்தார். மலேரியாவை ஒழித்த நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மன்னாரில் மலேரியாவைப் பரப்பும் நுளம்பு கடந்த ஆண்டு மீண்டும் கண்டறியப்பட்டிருந்த…
-
- 0 replies
- 188 views
-
-
செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ShareTweet அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரையும், பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவர்கள் நேற்றுச் சந்தித்துள்ளனர். அவர்களது உடல் நிலை குறித்து ஆராய்ந்தனர். தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 16 நாள்களாக அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மூன்று அரசியல் கைதிகளையும் பன்னாட்டுச் செஞ…
-
- 0 replies
- 206 views
-
-
நாமலின் முன்னாள் செயலாளர் கைது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் 30 மில்லியன் ரூபாய் கறுப்புப் பணத்தை, நிறுவனமொன்றின் மூலம் மாற்றுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு இன்றுக்காலை கொண்டுவரப்பட்ட போதை கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமலின்-முன்னாள்-…
-
- 6 replies
- 899 views
-
-
உண்ணாவிரத கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் அமைச்சரவையில் பிரஸ்தாபம் தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் பிரஸ்தாபித்த அமைச்சர் மனோ கணேசனிடம் இது தொடர்பில் சட்டமாதிபரிடம் உடன் விளக்கம் கோரி தீர்வை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுபற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததாவது, அமைச்சரவையில் இதுபற்றி பிரஸ்தாபித்ததையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இதுபற்றிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இந்த விவகாரம் பற்றி ஜனாதிபதியிடம் விளக்கி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 319 views
-
-
நாமல் ராஜபக்ச கைது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க பொலிஸில் ஆஜரான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை அம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25570
-
- 1 reply
- 339 views
-
-
சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை : இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல சிறுவா்கள் சித்திரவதைக்குள்ளானதாக கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி சிறுவா் நன்நடத்தை அதிகாரிக…
-
- 0 replies
- 184 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கு உதவவேண்டும் அவுஸ்திரேலிய பிரதிநிதியிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவுவதற்கு அவுஸ்திரேலியா முன்வரவேண்டும் என்று அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினரும் சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் உபதலைவருமான அன் சுட்மலிஸிடம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசிய பாராளுமன்ற…
-
- 2 replies
- 208 views
-
-
நாங்கள் சிங்களவர்களை பகைத்து வாழமுடியாது; இருப்பினும் அவர்களை அண்டி வாழ்வதென்பது எம்மை நாமே ஏமாற்றுவதாகும். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேற நாமனைவரும் ஒன்றிணையவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எமது தலைவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்படவேண்டும். நாம் சிங்களவரைப் பகைத்து எதுவும் பெறமுடியாது அவர்களை அண்டி வாழ்வதே ஒரே வழி என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதாக முடியும். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்னேற யாவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு முட்டுக் கட்டைகள் ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். இடைக்கால…
-
- 0 replies
- 387 views
-
-
கிளிநொச்சியில் முதல் தடவையாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிரியாவிடை நிகழ்வு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக இருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு செல்கின்ற பொலிஸ் உப பரிசோதகர் டிஎம் சத்துரங்க அவர்களுக்கு தர்மபுரம் கிராமமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை தர்மபுரம் பொதுநோக்குமண்டபத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. மண்டப முன்றலில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இடம்மாற்றம் பெற்றுச் செல்கின்ற பொழில் அதிகாரி சத்துரங்க அவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள், பொது அ…
-
- 0 replies
- 313 views
-
-
நாடாளுமன்றை மலசலகூடமாக்கும் இரு கட்சிகள் ShareTweet அரசின் எல்லாத் தாளங்களுக்கும் சபாநாயகர், மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (ரி.என்.ஏ) ஆகியவை ஆதரவளித்து வருகின்றன. இவர்கள் நாடாளுமன்றத்தை அரசின் மலசலகூடமாக மாற்றியுள்ளனர். இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் 54பேர் மகிந்த அணியில…
-
- 0 replies
- 319 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (10-10-2017)
-
- 0 replies
- 276 views
-
-
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு (படங்கள்) விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் கல…
-
- 1 reply
- 1k views
-
-
சிங்களப் பிரதியும் தமிழ்ப் பிரதியும் ShareTweet புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கையின் சிங்களப் பிரதியில் ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்ற அனைத்துமே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆகவே எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை, இதனைத் தமிழர் தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படித் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கத்தை நிலைநாட்டி வைத்திருக்கும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரைச் சந்தித்த பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இடைக்கால அறி…
-
- 1 reply
- 401 views
-
-
சைட்டம் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் தாரை பிரயோகம் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து கொள்ளுப்பிட்டியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் தண்ணீர் தாரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பிற்பகல் நகர சபைக்கு முன்புறம் இருந்து ஆரம்பமான இந்தப் போராட்ட ஊர்வலம், காலி வீதியை பிற்பகல் மூன்று மணியளவில் வந்தடைந்தது. இதனால் அங்கு மாபெரும் பதற்ற நிலை உருவானது. இதையடுத்து போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தினால…
-
- 1 reply
- 239 views
-
-
சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஷாந்தினி கோபலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடியதோடு தனது ஆறுதலையும் தெரிவித்தார். அவர்களிடம் இது தொடர்பாக மேற்கொண்டு ஆறுதல் கூறிய சுஷாந்தினி, “சுவிஸ்லாந்தில் சுட்டு…
-
- 1 reply
- 412 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும் : தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் நோக்கி அவர்களின் விடுதலைக்கான நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், காலங்காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ள நிலையில் இது தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணவிரதப் போராட்டம் குறித்த…
-
- 0 replies
- 219 views
-
-
நடுவானில் தமிழர் மரணம் குவைட்டில் இருந்து இந்தியா செல்லும் வழியில் இலங்கை வந்திருந்த ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. மூத்தன் முருகன் (52) என்ற இந்த நபர், குவைட்டில் பணிபுரிந்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், விசாக் காலம் முடிவடைவதையடுத்து தமிழகம் செல்லவிருந்தவர். குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யு.எல்.230 விமானத்தில் புறப்பட்ட இவரது உயிர், இன்று (10) காலை சுமார் ஆறரை மணியளவில், கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே பிரிந்தது. விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. …
-
- 0 replies
- 304 views
-
-
பொதுமக்களுக்கான தெளிவுபடுத்துதல் – வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி:- யாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல் 2017.10.08 ஆம்; திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும்; ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் முக்கியமானவர் இப் பகுதியிலுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரி ஆவார். இவ…
-
- 0 replies
- 252 views
-
-
பிர்க்கோ மற்றிலாவை சந்தித்தார் பிரதமர் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்தநாட்டின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் பிர்க்கோ மற்றிலாவை இன்று சந்தித்துள்ளார். "பின்லாந்து சுதந்திரம் பெற்று நூறு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தமது நாட்டுக்கு வருகைதந்தமையை விசேடமாக கௌரவிப்பதாக மற்றிலா தெரிவித்துள்ளதுடன், ஜனநாயகம், மனித உரிமை, சமூக சமநிலை, கல்வி மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் பின்லாந்திற்கும் இடையில் இருந்துவரும் அடிப்படை சமமானதாக இருப்பதாகவும், அபிவிருத்தி மற்றும் தொழிற்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்…
-
- 1 reply
- 263 views
-
-
கடமையில் இருந்த பெண்கள் திடீர் மயக்கம் ; 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் பணியாளர்கள் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசியல்கைதிகளை ஆயுள்வரை சிறைவைத்திருக்கும் உத்தேசமா? அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் பதினாறாவது நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அம்மூவரும் அனுஷ்டித்து வந்த உண்ணாவிரதம் நேற்றுமுன்தினம் காலையுடன் பதினைந்தாவது நாளை எட்டியதையடுத்து, தாங்கள் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் நிறுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து அம்மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 263 views
-
-
சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார். …
-
- 1 reply
- 223 views
-
-
இடைகால அறிக்கையை வடக்கு கிழக்கில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இனப்பிரச்சனை குறித்த தீர்விற்கான இடைகால அறிக்கையை வடக்கு கிழக்கில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என கூட்டமைப்பினரையும் மற்றயோரையும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கேட்டுக்கொண்டுள்ளார். இடைகால அறிக்கை என்பதற்காக தயங்காது அதுபற்றி அதின் உள்ளடக்கம், அதிலுள்ள நன்மைகள்பற்றி மக்களிடையே இப்போதே கலந்துரையாடல்களை கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும் என்றும், இடைகால அறிக்கை தீர்வாக வர அதிக சாத்தியம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு மக்கள் அதனை பூரணமாக ஆதரிக்க தயாராக இருக்கவேண்டும் எனும் கருத்துபட கலாநிதி ஜயம்பதி அறிவுறுத்தியுள்ளதோடு, மக்கள் இடகால அறிக்கையை முழுமையாக ப…
-
- 0 replies
- 282 views
-