Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச முயற்சி தமிழ் மக்களின் ஆதரைவப் பெறும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தமிழ் பிரமுகர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடுகின்றார். அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை மாலையும் முக்கியமான தமிழ் பிரமுகர் ஒருவரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையடினார் என தமிழ் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெறும் நோக…

  2. சக்தி டிவி செய்திகள் 29 09 2017 , 8PM

  3. இலங்கை அகதிகளும் புலம்பெயர்ந்தனர் Share கடந்த காலங்­க­ளில் இலங்­கை­யி­லி­ருந்து 20 லட்­சம் பேர் அக­தி­க­ளாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். அதைத் தெரிந்து கொள்­ளாத பௌத்­த­வா­தி­களே ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு எதி­ரா­கக் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­ற­னர். இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அக­தி­க­ளைப் பௌத்த பிக்­கு­கள் தாக்­கி­யி­ருந்­தால் அவர்­க­ளைக் கைது …

  4. தமிழ் அரசியற் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம்; வைத்தியசாலையில் அனுமதி! அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரில் ஒருவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோருக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வவுனியா நீதிமன்றில் வழக்கு நடைபெற்றது. இந்த வருடம்…

  5. ஆமை வேகத்தில் இலங்கை சாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம் Share ஜிஎஸ்பி பிளஸ் வரிச்­ச­லு­கைக்­காக இலங்கை அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் சில விட­யங்­க­ளில் மெது­வான முன்­னேற்­றங் ­களே இருப்­ப­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யம் கவலை வெளி­யிட்­டுள்­ளது. தனது வாக்­கு­று­தி­களை நிறைவேற் ­ ­றும் ஆற்­றல் இலங்கை அர­சுக்கு இருப்­ப­தா­க­வும், ஐரோப்­பிய ஒன்­றி­யம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது. அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­ப­ன­வு­டன் நடந்த சந்­திப்­பின் போது, ஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­யா­ளர் கிறிஸ்­ரோஸ் ஸ்ரைலி­ய­னி­டெஸ் இந்­தக் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளார். …

  6. மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள 37 பெண்கள் உட்­பட 1167 கைதி­களில் 826 பேர் மேன்­மு­றை­யீடு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள 1167 கைதி­களில் 826 பேர் தமக்­கெ­தி­ரான மரண தண்­ட­னைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­துள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­களில் 37 பெண்கள் அடங்­கு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­ம­ரண தண்­டனை கைதிகள் அனை­வரும் வெலிக்­கடை, மஹர, பல்­லே­கலை, அநு­ரா­த­புரம் மற்றும் பதுளை ஆகிய சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சா­லைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. http://metronews.lk/?p=14538

  7. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடம் திறப்பு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப பீடத்தினை இன்று (29) கல்வி இராஜாங்க அமைச்சல் வே.ராதாகிருஸ்ணன் திறந்து வைத்துள்ளார். தேசிய பாடசாலையான கிளிநொச்சி மத்திய மாகா வித்தியாலயத்தில் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பாடசாலை அதிபர் இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (அத தெரண நிருபர்) http://tamil.adaderana.lk/news.php?nid=95938

  8. ஜனாதிபதியின் மன்னார் விஜயம் ரத்து: சிவகரன் காரணமா? மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த ஜனாதிபதியின் நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பாக பல்வேறு நபர்களினால் அதிருப்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மன்னார் - மாந்தை - திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான காணியை அபகரித்து பௌத்த விகாரை அமைப்பது நல்லாட்சியா என மன்னார் …

  9. ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாறிய அதிசயம் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் தொழில்நுட்ப பீடமும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனினால் திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றிய அவர், 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் ஒரு ஆயுத களஞ்…

  10. மஹிந்தவிற்கு சார்பாக தொடுத்த வழக்கு தள்ளுபடி.! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்ககோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு போட்டியிட்டவரே கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ நகரசபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25079

  11. பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம் புகலிடம் தேடி ஸ்ரீலங்காவுக்குவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை கடும்போக்குவாத பிக்குகள் விரட்டியடிக்க முயற்சித்த செயற்பாட்டினால் தாங்களும் சிங்கள பௌத்தர்களா என்று ஒருதடவை சிந்திக்கத் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்கே பேரவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பு கல்கிஸை பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 30 பேரை நாடு கடத்தும்படி தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பௌத்…

  12. இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உப குழு கூட்டமொன்றில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டிருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உப குழு கூட்டத்தில் பெரும் களேபரமான நிலைமை ஏற்பட்டதுடன் இரண்டு தரப்பினரும் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது…

  13. மேலும் 5 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில்.! வடமத்திய மாகாண சபையின் அநுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 5 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/25075

  14. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப ஏற்றப்பட்ட அணையாத விளக்கு அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையினூடாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்கை அணைய விடாமல் மேலும் பல விளக்குகளை ஏற்றுவதற்கான முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியிருக்கின்றார். வருடத்திற்கு ஒரு தடவை தீபாவளி தினத்தன்று ஏற்றப்படும் தீப ஒளி போன்று நாடு முழுவதிலும் அணையாத விளக்குகளை பிரகாசிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். கொழும்பு மாநகர சபையினூடா…

  15. 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மலையத்தில் உள்ள பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்த கைச்சாத்திடல் நேற்று கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக ராஜாங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்துக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்திய…

  16. ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் மீதான அத்­து­மீறல்: குற்றத்தடுப்பு பிரிவிடம் விசாரணை கையளிப்பு தாக்கல் செய்­யப்பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செய­லாளர் ஜகத் பீ விஜே­வீர வெளி­யிட்டு அறி­வித்­துள்ளார். இந் நிலையில் நேற்று முதல் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குறித்த ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த அத்து மீறல்கள் தொடர்…

  17. வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது ஒரு இலட்சத்து 80ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கவில்லை. அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது நல்லதல்ல. அவர்களை அகற்றும் நோக்கமும் எமக்கு இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுவகின்றனர். எனினும் இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இருப்பின் வௌிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டுகளில் கலந்துகொண்ட தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேன…

  18. தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.! தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் குறித்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக 214 பேர் தக­வல்கள் கோரி­யுள்­ளனர். இதன் மூல­மாக 176 பேருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி இவர்­க­ளிடம் இருந்து தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு மொத்­த­மாக 933 ரூபா அற­வி­டப்­பட்­டுள்­ள­தாக தகவல் வழங்கல் அதி­கா­ரியும் பொது நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சின் மேல­திக செய­லா­ள­ரு­மான பி.எம்எம்.எம் பஸ்­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு நிதி மற்றும் ஊட…

  19. எம்.பி.க்களை விலைக்கு வாங்­கி­யுள்ள அரசு.! நாட்டை பிள­வு­ப­டுத்தும் பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்பை உரு­வாக்க அர­சாங்கம் அமைச்­சர்­க­ளையும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் விலைக்கு வாங்­கி­யுள்­ளது. மாகா­ண­சபை சட்­டத்தை நிறை­வேற்ற எவ்­வாறு விலை பேசப்­பட்­டதோ அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திலும் சதிகள் இடம்­பெ­று­வ­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச தெரி­வித்தார். அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை நிரா­க­ரிக்க மக்கள் விடு­தலை முன்­னணி துணை­வ­ர­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சியல் அமைப்பை தடுக்கும் மக்கள் தெளி­வூட்டல் செயற்­பா­டாக தே…

  20. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தத்தில் இலங்கையும் சிக்கக்கூடும் அமெரிக்காவின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது நாட்டில் பாதுகாப்புச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேவைக்கு அமையவே இலங்கையில் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகம் தொடர்பில் உடன்படிக்கை கைச்சாத்திட்டு அரசாங்கம் அமெரிக்காவின் தேவைக்கு அமைய படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ள…

  21. மக்கள் இயக்­கத்தின் அடுத்த சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் கண்­டியில் அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு முன்­னின்று உழைத்த 62 இலட்சம் மக்கள் இயக்­கத்தின் இரண்­டா­வது சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தை எதிர்­வரும் 3ஆம் திகதி கண்டி ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்­தையில் நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த போராட்­டத்தின் மூலம் அர­சாங்கம் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு அழுத்தம் கொடுப்­ப­துடன் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு இன­வாத சாயம் பூசு­ப­வர்­க­ளுக்கு பதில் அளிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என இவ்­ அ­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­யான நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன த…

  22. ரஷ்­யா­விடம் இருந்து ஆழ்­கடல் ரோந்­து கப்பல் கொள்­வ­னவு செய்­யப்­ப­டுமா? ரஷ்­யா­விடம் இருந்து ஆழ்­கடல் ரோந்­துக்­கப்பல் வாங்கும் திட்டம் பேச்­சு­வார்த்தை மட்­டத்தில் உள்­ள­போ­திலும் அர­சாங்­கத்­திடம் இருந்து இன்னும் அனு­மதி கிடைக்­க­வில்லை என இலங்கை கடற்­படை தெரி­வித்­துள்­ளது. இலங்கை கடற்­ப­டையின் தேவைக்­காக ரஷ்­யா­விடம் இருந்து 158.5 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்­கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை இலங்கை அர­சாங்கம் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தாக கூறப்­பட்ட நிலையில் இந்த முயற்­சிகள் இன்­னமும் பூர­ண­ம­டை­ய­வில்லை என இலங்கை கடற்­படை தெரி­வித்­துள்­ளது. எனினும் இரு நாடு­க­ளுக்கிடை­யி­லான பேச்­சு­வா­ர்த…

  23. பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை செலுத்தியநபர் உயிரிழந்துள்ளார். எனினும் படுகாயமடைந்த மற்றைய நபர் அம்பாறை மாவ…

  24. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்கான உடன்படிக்கை, எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இறந்த காலத்திற்குரியதல்ல என்றும் இலங்கைப் பிரதமர் கூறியிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சிகரமானது. ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, பல்லாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.