Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். நீதிமன்றம் செல்வோர் பொலிஸாரால் சோதனை Share யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்குகளுக்கு வருகை தரும் பொது மக்கள் பொலிஸாரால் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் புதன்கிழமை சிறப்புத் தீர்ப்பாயத்தால் வழங்கப்படவுள்ளது. http://newuthayan.com/story/31716.html

  2. 11 கிலோ கஞ்சாவுடன் வடமராட்சி இளைஞர் கைது Share பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே 11 கிலோ கஞ்சாவுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பிரியந்தவின் வழிகாட்டுதலில் பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31700.html

  3. வடக்கு அமைச்­ச­ரவை விவ­கா­ரம் தமி­ழ­ர­சு­வின் கூட்­டத்­தில் நிசப்­தம் Share வடக்கு மாகாண சபை­யில் அமைச்­சுப் பொறுப்­புக்­களை இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஏற்­ப­தில்லை என்று அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மேற்­கொண்ட தீர்­மா­னம் தொடர்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் நேற்று ஆரா­யப்­ப­ட­வில்லை. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் அம்­பா­றை­யில் நேற்­றுக் கூடி­யது. இந்­தக் கூட்­டத் தி்ல், வடக்கு மாகாண சபை அமைச்­சுப் பதவி ஏற்­ப­தில்லை என்ற விவ­கா­ரம் ஆரா­யப்­ப­டும் என்ற…

  4. வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்தி வந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு மேலாக மேல் சபை என்ற ஒரு சபையும் உருவாக்குவதற்கான பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் தேசிய நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையின் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர…

  5. தமிழ் மக்களின் பயணத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது இடைக்கால அறிக்கை குறித்து வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விசனம் (நமது நிருபர்) புதிய அர­சியல் அமைப்­புக்­கான இடைக்கால அறிக்­கை­யா­னது சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்­கை­களை முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது. ஒற்­றை­யாட்சி முறை­மை­யினை தக்­க­வைக்கும் பொருட்டு வார்த்தைப் பிர­யோ­கங்­களில் ஏமாற்ற முற்­பட்­டுள்­ளமை அரு­வ­ருப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஏகி­ய­ரட்ட என்ற சொற்­பதம் பாவிக்­கப்­பட்­டமை அறிக்­கையை தயா­ரித்­தோரின் கப­டத்­த­னத்தை வெ ளிக்­காட்­டு­கின்­றது என்று வட­மா­க…

  6. இலங்கை வந்தடைந்தார் மைத்திரி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா சென்றிருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று காலை 8.45 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 72 ஆவது ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரை­யாற்­றி­ய­துடன் பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நட­த்தி­யி­ருந்தார். குறிப்­பாக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடு­களின் பிர­த­மர்­களை சந்­தித்து இரு­த­ரப்பு உறவு குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாடி­யி­ருந்தார். அத்­துடன் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் …

  7. அர­சி­யல் கைதி­கள் மூவர் உணவு ஒறுப்பு வழக்கு விசா­ரணை இட­மாற்­றம்: வவு­னியா மேல் நீதி­மன்­றி­லி­ருந்து வழக்கு இட­மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராகத் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரும் இன்று தொடக்­கம் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். இவர்­க­ளது வழக்கு அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றி­லேயே இன்­றைய தினம் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா மேல் நீதி­மன்­றில் 4 ஆண்­டு­க­ளா­கத் தொட­ரும் வழக்கை வேறு நீதி­மன்­றங்­க­ளுக்கு இட­மாற்ற வேண்­டாம் எனக் கூறி தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் உணவு ஒறுப்­புப் போராட்­டம் கடந்த மாதம் நடத்­தி­யி­ருந்­த­னர். இருப்­பி­னும் அந்த வழக்கை அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி…

  8. மாநாயக்க பீடங்கள் எச்சரிக்கை.! புதிய அரசியல் அமைப்பு மூலமாக தீர்வு உண்டாகும் என கூறிய போதிலும் அதிகார பரவலாக்கல் பாரிய சிக்கல்களை உருவாக்கும். இதனால் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர் வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசாங்கம் நினைப்பது ஒன்றாகவும், கூறுவது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் உள்ளன. ஏமாற்று வேலைகளை நிறுத்த வேண்டும் எனவும் இந்தப் பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் மல்வத்து, அஸ்கிரிய மாநாயக தேரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் அமைப்பு குற…

  9. வவுனியாவில் இனந்தெரியாத குழுக்களின் அட்டகாசம் வவுனியா, குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி, தோனிக்கல் போன்ற வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடக்கம் இனந்தெரியாத இளைஞர் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இளைஞர் குழு வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடமிருந்து நகைகள், பணம் என்பவற்றை அபகரிக்க முயன்றுள்ளனர் எனவும் இதன் போது காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸிற்கு மூன்றுக்கும் ம…

  10. யாழ் -கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு:ஒருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Jaffna-Kodigamam-area-of-…

  11. ‘தமிழ்,முஸ்லிம் மக்கள் அஞ்சத் தேவையில்லை’ “அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பில், சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்ப தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தொடர்ந்து கருத்துரைக்கையில், …

  12. சி.ஐ.டியில் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சி-ஐ-டியில்-அமைச்சர்-ரிஷாட்-முறைப்பாடு/175-204425

  13. கதிர்காமர் கொலை வழக்கு:குறுக்குக் கேள்விகளால் நெஞ்சுவலிக்கிறது முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின், படுகொலை வழக்கில், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியினால் கேட்கப்படும் கேள்விகளால் தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக, உதவிச் சட்ட வைத்திய அதிகாரி எச்.பி. விஜயவர்த்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைதொடர்பில், சட்டமா அதிபரினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதல…

  14. காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல: பிரசாத் விளக்கம் காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமே என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும், இதுகுறித்து சர்வதேசம் என்ன கூறுகின்றது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்கபடவுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் பாராட்டுகின்றன, இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் …

  15. வரலாற்று சூரியனை கைகளால் மறைக்க முயலும் ஒரு பகீரத(ன்) பிரயத்தனம் -------------------------------------------------------- -ச.ச.முத்து- அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் என்பவர் 09.09.2017 அன்று வீரகேசரிக்கு ஒரு பேட்டி வழங்கி இருந்தார். '1972ல் தமிழ் புதிய புலிகள் அமைப்பு செட்டியால் (தனபாலசிங்கம்) ஆரம்பிக்கப்போது அதில் அமிர்தலிங்கத்தின் மூத்தமகன் காண்டீபன் இருந்தார்.பிரபாகரன் அதில் வந்து சேர்ந்தார் பிறகு பிரிந்து சென்று தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார்"" என்பதே இந்த வரலாற்று மேதையின் புதிய கண்டுபிடிப்பு. இரண்டுவிதமான நச்சுக்கருத்துகளை இதில் பகீரதன் படு நேர்த்தியாக கலக்க முயலுகின்றார். 1) இந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தலைவரால் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை,…

  16. நாளை முதல் இலவச வைபை.! காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/24875

  17. துன்னாலை வாள்வெட்டு : சந்தேக நபர் வட்டுக்கோட்டையில் கைது Share துன்னாலை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று அதிகாலை வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரைத் தாக்கினார் எனவும் பொலிஸ் காவலரன் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31532.html

  18. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளான வட – கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு என்ற ஒன்றையுமே வலியுறுத்தவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஆங்கில பின்னிணைப்பினை வாசித்தீர்களானால், தமிழர்களின் 70 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கோரிக்கையை வெறும் ஒன்றே கால் பக்கத்தில் அடக்கியுள்ளனர். அதாவது, குறித்த பின்னிணைப்பில் வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள…

  19. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலை தூசுதட்டப்பட்டு விசாரணை நடக்கிறது வெலிக்­க­டைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரம் அதன் போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதி­கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில், கடந்த இரு­தி­னங்­க­ளில் 12 சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் சிறப்­புக் குழு­வி­னால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். வெலிக்­கடைச் சிறைச்­சா­லைக்­குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வ­ரத்­தி­னால் 27 கைதி­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் சிறைச்­சா­லைக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­திய இரா­ணுவக் கொமா…

  20. இடைக்­கால அறிக்கை குறித்து வவு­னி­யா­வில் ஆய்­வுக் கூட்­டம் புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­குச் சாத­க­மான எத்­த­கைய விட­யங்­களை மேலும் சேர்ப்­பது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவு­னி­யா­வில் பொதுக் கூட்­டத்தை நடத்த ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுத் தீர்­மா­னித்­துள் ளது. வவு­னி­யா­வில் ரெலோ­வின் தலை­மைக் குழு நேற்­றுக் கூடி­யது. வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை தொடர்­பில் இதன்­போது ஆரா­யப்­பட்­டது. இடைக்­கால அறிக்கை மற்­றும் உப­கு­ழுக்­க­ளின் அறிக்கை என்­ப­வற்­றில் உள்ள சாதக பாதக விட­யங்­களை நிபு­ணத்­து­வம் வாய்ந்­த­வர்­கள் ஊடாக ஆரா­யத் தீர்­மா­னிக்­கப்­பட் டுள்­ளது.…

  21. மாகாணசபையின் ஆட்சிக்கால நீடிப்பு: ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்கால தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத மத வாதத்தினை விரும்பாத எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்ககூடிய தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மக்களின் ஆணையை மீற மாகாணசபைகளின் ஆயட்காலத்தினை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தான் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா,சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்…

  22. முன்னாள் போராளிகள் தொடர்பில் சுவிஸ் தூதரகம் கூடிய கரிசனை வடக்­கில் முன்­னாள் போரா­ளி­க­ளின் நிலை மற்­றும் அவர்­க­ளுக்­கான சவால்­கள் தொடர்­பாக, சுவிட்­சர்­லாந்­தின் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான இரா­ஜாங்க செய­ல­கத்­தின் ஆய்­வா­ளர் அன்ட்­ரேஸ் ஸ்மிட் யாழ்ப்­பா­ணம் படை­க­ளின் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெற்­றி­யா­ராச்­சி­யு­டன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார். சுவிட்­சர்­லாந்­தின் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான இரா­ஜாங்கச் செய­ல­கத்­தின் ஆய்­வா­ளர் அன்ட்­ரேஸ் ஸ்மிட் மற்­றும் கொழும்­பில் உள்ள தூத­ர­கத்­தில் புலம்­பெ­யர்­தல் தொடர்­பான முதன்­மைச் செய­ல­ரா­கப் பணி­யாற்­றும் கிசேலா ஸ்லூவெப் ஆகி­யோர், யாழ். படை­க­ளின் தலை­மை­ய­கத்­தில், மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெற்­றி­ய…

  23. சக்தி டிவி செய்திகள் 24 09 2017 , 8PM

  24. புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரங்களைத் திரும்பப் பெறும் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜாப்புருவாக்கத்தில் முன்னிற்று செயற்பட்டவரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புப் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தினால் பிரிவினைவாதம் உருவாகாது எனவும், அவ்வாறு பிரிவினைகோரிப் போராட்டங்கள் இடம்பெறுமானால் அவ்வதிகாரத்தை மீளப்பெறும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு எனும் சரத்து இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எவரும் கவலைகொள்ளத்தேவையில்லை. அத்துடன், அரசியல் அமைப்பில் அதிகார…

  25. கட்டாக்காலிகளால் அசௌகரியம்... மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதன வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, வாகன சாரதிகள் குற்றஞ்சுமத்துகின்றனர். மட்டக்களப்பு—கல்முனை வீதி, ஆஸ்பத்திரி வீதி, பிரதான வீதி, உட்பட பல முக்கிய வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் பெருமளவில் அலைந்து திரிகின்றன. இதனால் வாகன சாரதிகள், மாணவர்கள், பாதசாரிகள் எனப் பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மாநகர சபை நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்) http://www.tamilmirror.lk/பிரதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.