ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்ைக முற்போக்கானது புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையை முற்போக்கானதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறி…
-
- 2 replies
- 332 views
-
-
வவுனியா, புளியங்குளம் பாடசாலை வகுப்பறையின் அவலத் தோற்றம் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புளியங்குளம் ஆரம்ப பாடசாலையின் இணைப்பாட விதானச் செயற்பாட்டுக்கான கொட்டகை சிதைவடைந்து மாணவர்களால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இப் பாடசாலை புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இருந்து பிரிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தரம் 1 முதல் 5 வரையிலான இப் பாடசாலையில் தற்போது 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஒரு கட்டடத்தில் சிறியதாக பிரிக்கப்பட்ட 5 வகுப்பறைக…
-
- 1 reply
- 354 views
-
-
வெளிநாட்டுப் புலிகளுக்கு எதிராக ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம் Share இலங்கைக்கு வெளியில் வாழ்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒழிப்போம் என்று வலியுறுத்தி ஜெனிவாவில் நாளை 24ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளத ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகத்துக்கு முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும், சிங்களத் தேசியவாத அமைப்புகளின் கோரிக்கையின் பிரகாரமே புலம்பெயர் வாழ் சிங்களவர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒரு…
-
- 0 replies
- 347 views
-
-
மங்களவின் கையெழுத்திடப்பட்ட புதிய 5000 ரூபா தாள் சந்தையில் மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப்பட்டது. குறித்த விநியோக நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/24800
-
- 2 replies
- 488 views
-
-
வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் இணக்கம் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) தெரிவித்தார். தமிழ் கட்சிகள் முதன் முறையாக தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பதாக கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மூலம் இந்நாட்டின் பிரச்சினைக…
-
- 1 reply
- 376 views
-
-
ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கு வரவிருந்த ஆபத்து குறைக்கப்பட்டுள்ளது மாகாணசபைகள் சட்டத்துக்கு கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முறையில் எமது ஒற்றுமைக்கும், கூட்டணிக்கு வெளியே ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கேட்போர் கூடத்தில் மட்டக்குளிய வட்டார செயற்குழு கூட்டம்…
-
- 0 replies
- 320 views
-
-
குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் அருட்தந்தை இமானுவெல் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அருட்தந்தை இமானுவெலை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் கேசப் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தினால்கு;…
-
- 6 replies
- 802 views
-
-
நல்லூர் கந்தனும் சோனகனாமே !!!!!! இந்தாள் மட்டும் தமிழ் படத்தில் நடித்து இருந்தால் வடிவேல் உண்மையாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் டுபாயில் கக்கூஸ் கழுவி தான் பிழைப்பு நடத்த வேண்டி வந்த்திருக்கும் !!!!!
-
- 14 replies
- 1.7k views
-
-
மதில்மேல் பூனையாக கட்சிகள் காத்திருப்பு Share புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகிவிட்டது. 2015 தை மாதத்திலும் பங்குனி மாதத்திலும் அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், ஆட்சி மாற்றத்துக்கு உட்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. அந்தச் சபையால் நியமிக்கப் பட்ட வழிகாட்டல் குழுவில் நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் இடமளிக்கப்பட்டது. அந்தக் குழு 2016ஆம் ஆண்டுபங்குனி மாதம் …
-
- 0 replies
- 256 views
-
-
சுகாதார அமைச்சர் ராஜித நெடுந்தீவுக்கு வருகிறார் Share நெடுந்தீவு மருத்துவமனையில் காணப்படும் குறைபாடு களைக் கண்டறிவதற்கு யாழ்ப்பாணம் வருமாறு சுகா தார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விரைவில் இங்கு வருவதாக ரஜித தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மருத்துவமனையின் குறைபாடுகள் மருத்துவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் அந்தப் பகுதிக்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நாடாளுமன்றில் வைத்து நேற்று அழைப்பு விடுத்தார். இந்த…
-
- 0 replies
- 264 views
-
-
ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை : யாழ். சிறையில் கைதி மீது தாக்குதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
-
- 0 replies
- 764 views
-
-
யாழ்ப்பாணம் அல்லது திருகோணமலையில் இந்தியாவின் ஆந்திரமாநிலத்தின் கைத்தொழில் நடைக்கூடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆந்திர மாநில கைத்தொழில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளார். அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கடல்வழிப் போக்குவரத்து வசசதிகளைக் கொண்ட சிறிலங்கா, கடலுணவு, மருந்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஆந்திர மாநிலம் சிறந்த இடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற…
-
- 0 replies
- 320 views
-
-
மறு சீரமைப்புப் பணிகளால் கல்வியங்காட்டுச் சந்தை வேறு இடத்தில் Share கல்வியங்காடு செங்குந்தா சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி, மீன் விற்பனை சந்தையின் தொகுதி மறு சீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளது. இதனால் இன்று முதல் மரக்கறி சந்தையும், மீன் சந்தையும் புதிய இடத்தில் தற்காலிகமாக மாற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். இதன்படி ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டு சந்தைக்கு இடையில் (தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) தற்காலிகமாக சந்தை மாற்றப்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. ht…
-
- 0 replies
- 302 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் மீண்டும் வழக்கு பதிவு தமிழர் தாயகப்பகுதியில் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 6ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிராக மீளவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு மீளவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுமந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்கள், சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மற்றும் இந்து …
-
- 1 reply
- 314 views
-
-
வடக்கு பண்பாட்டு விழா நேற்று கோலாகல ஆரம்பம் Share வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பமாகியது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவின் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இன்றும் நாளையும் இடம்பெறுகின்றன. யூனியன் கல்லூரியின் கலா வினோதன் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை அரங்கில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நிகழை்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்ட…
-
- 0 replies
- 375 views
-
-
சுமந்திரன் எம்.பி அமெரிக்கா பயணம் Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இரண்டு வார கால பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித்த ஹேரத், ரவீந்திர சமரவீர, எம்.ஏ.சுமந்திரன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஒருவார காலம் வொஷிங்டனில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தப் பயணம் எதிர்வரும் 29ஆம் திகதி முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி நியூயோர்க் செல்லவுள்ளார். http://newuthayan.com/story/31224.html
-
- 0 replies
- 402 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 407 views
-
-
ஐந்து மாணவர்கள் கடத்தல் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு மிக விரைவில் அறிவிக்கவுள்ள நீதிமன்றம் (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்களில் மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு (ஹபயாஸ் கோப்பர்ஸ்) விசாரணைகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இந்நிலையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்த கொழும்பு பிரதான நீதிவான், இந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு யார் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளார். இதனையடுத்து அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளிப்படுத்தவுள்ளது. கடந்…
-
- 0 replies
- 228 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்: விசாரணைகளை தொடங்கியது சி.ஐ.டி. இரு நாட்களில் 12 பேர் விசாரணைக்கு (எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முன் தினமும் நேற்றும் 12 சிறைச்சாலை அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு விசாரணைக்குட்படுத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற சிறை உதவி அத்தியட்சகர் ஒருவர், சிறைச்சாலை சார்ஜன்ட், இரு சிறைக்காவலர்கள் அடங்கிய நால்வரிடமும் நேற்று 8 சிறைச்சால…
-
- 0 replies
- 191 views
-
-
தமிழ் ஈழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி, ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் செப்டெம்பர் மாதம், இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்ட மனித உரிமைகள் கவுன்ஸிலின் 30-1 தீர்மானத்தை நிறைவேற்றும் …
-
- 0 replies
- 457 views
-
-
தமிழர்கள் அனைவரும் ஒருகுடையின்கீழ் அணிதிரளவேண்டும் – வடமாகாண முதலமைச்சர்! வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள்…
-
- 0 replies
- 285 views
-
-
காணி அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பொலிஸ் அதிகாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அத்துடன் காணி அதிகாரம் பற்றிய விடயதானங்கள் தமிழ் மக்களிடையே விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காணி அதிகாரம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசிலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணி அ…
-
- 0 replies
- 178 views
-
-
அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய (ஆர்.யசி) அரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virak…
-
- 1 reply
- 401 views
-
-
மைத்திரியின் உறுதிமொழியைப் புறந்தள்ளி அரசியல் கைதிகளின் வழக்கு இடமாற்றம் வவுனியா மேல் நீதிமன்றில் 4 ஆண்டுகளாகத் தொடரும் வழக்கை வேறு நீதிமன்றங் களுக்கு இடமாற்றவேண்டாம் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தியிருந்த நிலையிலும், அந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன் றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் மூவருக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே விசாரிக்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாள…
-
- 0 replies
- 151 views
-
-
''பரம இரகசியம்'' மஹிந்த வீட்டில் கத்தியுடன் கைதானவர் நீதிமன்றில் தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கொழும்பு - விஜேராம வீட்டுக்குள் கத்தியுடன் பலாத்காரமாக உள் நுழைய முயன்ற இளைஞரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். பலாங்கொடையை சேர்ந்த 24 வயதுடைய ஜயமால் வீரசிங்க எனும் இளைஞரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜேராம - பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்க…
-
- 0 replies
- 253 views
-