ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இலங்கையில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்று இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார். அமைதிக்கான அனைத்துலக நாள் நேற்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியை அமைதிக்கான அனைத்துலக நாளாக கொண்டாடுகிறோம். எல்லா நாடுகள், மற்றும் மக்களிடையே அமைதியை வலுப்படுத்துவதற்காக இந்த நாளை ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்ப…
-
- 0 replies
- 352 views
-
-
சகல அறிக்கைகள் மீதும் ஒக். இறுதியில் விவாதம் இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகள் மீது ஒக்ரோபர் மாதம் இறுதிப் பகுதியிலேயே விவாதம் இடம்பெறும் என்று தெரியவருகின்றது. விவாதத்துக்கான திகதியை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மா னிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் நேற்று முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கை மீதான விவாதம் ஒக்ரோபர் மாதம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒக்ரோபர் முதல் வாரங்களில், சபாநாயகர், தலைமை அமைச்சர் ரணில் உள்ளிட்டோர் நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பத…
-
- 0 replies
- 253 views
-
-
மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு செப்ரம்பர் 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் …
-
- 5 replies
- 758 views
-
-
‘ஜனவரியிலும் மார்ச்சிலும் இரு தேர்தல்கள்’ “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (21) மாலை நடைபெற்றது. அங்கு அவர்…
-
- 0 replies
- 409 views
-
-
‘கொடூர ஆட்சியை முடிப்பதற்கு அம்மணியே முக்கிய பங்கு வகித்தார்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…
-
- 0 replies
- 690 views
-
-
ரோஹிங்யா அகதிகளுக்கு கைகொடுக்க நாம் தயார் மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரிசனையின்றி செயற்படாமல் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சபையில் தெரிவித்தார். பெளத்த நாடு என்ற அடிப்படையில் நாம் கவலை கொள்கின்றோம்.மியன்மாரில் சமாதானம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மு…
-
- 0 replies
- 320 views
-
-
ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம் புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரிவிக்குமானால் அதற்கு இணங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படு…
-
- 1 reply
- 438 views
-
-
பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது, சுங்க அதிகாரிகள், விசாரணை, நாணயத்தாள், சுங்க அ…
-
- 1 reply
- 702 views
-
-
யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஆட்சி முறைமை தொடர்பிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சுமந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். htt…
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு !! இலங்கை, பங்களாதேஸ் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்தியாவின் பி.ரீ.ஐ.(p.t.i ) இணையத்தளம் தெரிவித்துள்ளது. முகநூல் மற்றும் ஏனைய சமுக வலைத்தளங்களின் ஊடாக நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் முன்னெடுக்கின்றனர். இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள், பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவ…
-
- 0 replies
- 442 views
-
-
மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சித் தீர்வை தமிழர் கேட்கும் நிலமை உருவாகியுள்ளது வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களிடம் சென்று கூட்டாட்சித் தீர்வைக் கேட்கும் அளவுக்கு இன்று நிலமை மோசமாகியுள்ளது. இந்த அமைச்சர்கள் நடுவீதியில் நின்றுகொண்டு தேரர்களை அவமதிப்பதால்தான் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே செல்கின்றது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடி. மறுபுறம், படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை. இது போதாதெ…
-
- 0 replies
- 207 views
-
-
மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சியைக் கோரினால் அவர்களால் அதனை வழங்கமுடியுமா ? இப்படிக் கேள்வி எழுப்புகிறார் துஸார எம்.பி. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கூட்டாட்சித் தீர்வைக் கேட்டதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படிக் கேட்டாலும் அந்தத் தீர்வைத் தேரர்களால் வழங்க முடியுமா என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டவரைவு தொடர்பில் எதுவும் அறியாமல் பேசுகின்றனர் மகிந்த அணியினர். அந்தச் சட்டவரைவுக்…
-
- 0 replies
- 128 views
-
-
இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இ…
-
- 4 replies
- 707 views
-
-
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …
-
- 5 replies
- 501 views
-
-
கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணு…
-
- 1 reply
- 464 views
-
-
பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தாலும் தேர்தலில் அவர்கள் தெரிவாகுவார்களா ? பெண்களுக்கு வேட்புமனுவில் இடஒதுக்கீடு வழங்க மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றகரமானது. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் அளவுக்கு தேர்தலில் அவர்கள் தெரிவு செய்யப்படுவார்களா என்பது சந்தேகமே? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இது முக்கியமான சட்ட…
-
- 2 replies
- 486 views
-
-
மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன? வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்பாக அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்த கருத்துக்கள் சிந்திக்கத் தக் கவை. “மாகாண சபைக்கு, தமிழ் மக்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தமை, மாலை மரியாதை பெறுவதற்கோ, நாடாவெட்டிக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்கோ அல்ல. தமக்கு நல்லவற்றைச் செய்ய வேண்டும், தமது பிரச்சினைக ளுக்குத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே எம்மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இவற்றைச் சரிவரக் கடைப்பிடிக்கின் றோமா? என்பதை நாம் ஒரு கணம் சிந்திக்கப் பார்க்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபையின் அவைத் தலை…
-
- 0 replies
- 322 views
-
-
ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்க…
-
- 1 reply
- 698 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM
-
- 0 replies
- 312 views
-
-
தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாணம் முதலிடம் தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் அனைத்தும் கொழும்பு மீபேயிலுள்ள அபிவிருத்தி மூலவள நிலையத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (21.09.2017) நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியிலேயே வடமாகாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இப்போட்டியில், தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரத…
-
- 0 replies
- 672 views
-
-
வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் க…
-
- 12 replies
- 786 views
-
-
போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24748
-
- 4 replies
- 545 views
-
-
பேச்சுப் பல்லக்கு ; தம்பி கால்நடை ‘பேச்சுப் பல்லக்கு; தம்பி கால் நடை’ என்றொரு முதுமொழி தமிழில் வழக்கில் உள்ளது. நாட்டின் பொது மக்களிடமிருக்கும் மிகப்பெரும் பெறுமதிமிக்க சொத்தான வாக்குகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில், தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் பல தரப்பட்ட வாக்குறுதிகளை வழங்கி வாக்காளப் பெருமக்களது வாக்கைத் தமதாக்கித் தேர்தல்களில் வெற்றிபெற்று விடுகிறார்கள். பதவிக்கு வந்ததும் தாம் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளையெல்லாம் மறந்து தத்தம் சுய இலாப நோக்கில், வருமானம் ஈட்டும் முயற்சியில் இறங்கிவிடுவது எமது நாட்டு அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளது வழமையான செயற்பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் பாதுகாக்குமாறு வலியுறுத்தல் தீவகப்பகுதியில் பனைமரங்கள் நாளாந்தம் தறிக்கப்படுவதால் அப்பகுதியில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தீவகப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தீவகப்பகுதியில் முன்னொரு காலத்தில் பனைவளம் செழித்துக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை தறிக்கப்பட்டு வருவதால் பனைவளம் அருகிவிட்டது. அதிலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளாந்தம் பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது எமது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டம். ஆனால் வீ…
-
- 0 replies
- 343 views
-
-
வடக்கு மாகாணத்தில் உலக சுற்றுலாத்தினம் உலக சுற்றுலா தினமன்று வடக்கு மாகாணத்திலும் எமது பாரம்பரியம் மற்றும் கலைகள் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மாட்டு வண்டில் சவாரிகள், தவில், நாதஸ்வரம், பறை, தப்பு, சங்கு போன்றவற்றின் கூட்டிணைந்த இனியம் இசை நிகழ்ச்சிகள், நாட்டுக்கூத்து, காவடி, சிலம்பம், பொம்மலாட்டம் போன்ற இன்னோரன்ன ஆடல் வடிவங்களும் இதன் போது அரங்கேற்றப்படவுள்ளன. மொத்தத்தில் வடபகுதியின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கின்ற ஒரு …
-
- 0 replies
- 346 views
-