ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
உல்லாசக் கடற்கரை விவகாரம் மக்களைச் சந்தித்தார் அமைச்சர் அனந்தி தொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பின்போது இவ் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வினைத் தான் பெற்றுத் தருவதாக அமைச்சர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்தித்த அமைச்சர் உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடி இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வினை மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/sto…
-
- 0 replies
- 435 views
-
-
முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்: ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள்…
-
- 2 replies
- 501 views
-
-
இடைக்கால அறிக்கை இன்று புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்பு சபை இன்று காலை கூடவுள்ளது. இதன்படி அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகாததனை அடுத்து ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன்படி தற்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகியுள்ளது. இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அரசியலமைப்பு ச…
-
- 1 reply
- 346 views
-
-
கைதுசெய்யப்பட்ட 4 தமிழகத்தவர்களும் விடுதலை விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை விடுதலை செய்தனர். பண்டாரவளைப் பகுதி ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நால்வரும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கைது செய்யப்பட்ட நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டுக்களை, பொலிசாரிடம் காண்பித்ததும், அவர்கள் அதனை பரிசீலனை செய்தபின்னர், கைது செய்யப்ப…
-
- 0 replies
- 242 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (20) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வின் நிமித்தம், கடந்த 11 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஆற்றிய ஆரம்ப உரை, இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியான தலையீடாக அமைந்திருந்தது” என்றும் சுட்டிக்காட்டினார். “சர்வதேச மட்டத்தில், இலங்கை அனைத்து பிரச்சினைகளில்…
-
- 0 replies
- 456 views
-
-
மைத்திரி, மகிந்தவை இணைத்தேதேர்தலில் களமிறங்கவேண்டும் பதவி பறிக்கப்பட்ட அருந்திக்க தெரிவிப்பு அடுத்த அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட விரும்பினால் மகிந்தவையும் இணைத்துக்கொண்டே களத்தில் இறங்க வேண்டும். மீண்டும் அன்னச் சின்னத்தில் பொது வேட்பாளராக அவர் போட்டியிடத் திட்டமிட்டால் மைத்திரியை நிராகரித்துவிட்டு தகுதியான ஒருவரை சுதந்திரக் கட்சி சார்பில் நிறுத்து வோம். இவ்வாறு பிரதி அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்ட அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் அரசில் இருந்து விலகப்போவதாகக் கூறிக்கொண…
-
- 0 replies
- 188 views
-
-
டச்சு நாட்டு ஆவணப் படம் ஒன்றில், 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர் இலங்கைத் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளை ‘வாங்கி’ச் சென்றுள்ளதாக அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாவுக்கு, புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறித்த காலப் பகுதியில் மட்டும் சுமார் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்…
-
- 0 replies
- 291 views
-
-
‘3 வாரங்களில் பதில்’ “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனிடையே எழுந்த, தினேஷ் குணவர்தன எம்.பி, “இது நாட்டுக்கு அச்சுறுத்தல் மிக்க விவகாரம் என்பதால், விரைந்து பதிலளிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலளிப்பதற்கு, 3 வார காலம் எடுத்து…
-
- 0 replies
- 360 views
-
-
முஸ்லிம்களின் மீள்குடியமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பாரபட்சம் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியமர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 3417 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன என யாழ். மாவட்டச் செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டுக…
-
- 0 replies
- 227 views
-
-
புறக்கோட்டையில் தீ விபத்து; பதினாறு கடைகள் சேதம் புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. அதிகாலை வேளை என்பதால், ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான பதினாறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.virakesari.lk/article/24722
-
- 0 replies
- 186 views
-
-
நேற்றைய தினம்(19-09-2017) இரவு மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த பொதுமக்களின் 26சைக்கில்கள் மாங்குளம் பொலீஸாரினால் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இவ் வீதியால் பயணித்த அனைத்து சைக்கில்களும் பறிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பொலீ்ஸாரிடம் காரணத்தினை கேட்ட போது இரவில் டைனமோ இல்லாமல் பயணித்தமையாலே தாம் பறிமுதல் செய்ததாகவும் மறுநாள் டைனமோவினை தம்மிடம் காட்டி சைக்கில்களை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றையதினம் காலை பாடசாலை மாணவன் ஒருவர் தன்னுடைய சைக்கிலை மீட்பதற்க்காக பொலீஸ் நிலையத்திற்கு சென்று தான் சைக்கிலை கேட்ட போதும் பொலீஸார் தர மறுத்ததாக தெரிவித்ததுடன் நேற்றையதினம் பறிக்கப்பட்ட ச…
-
- 1 reply
- 573 views
-
-
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கிவைப்பதில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு ஆளாகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அண்மை நாட்களாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட இயக்கம் என்னும் அமைப்பினரால் ஒரு விஷேட கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வெளியீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்னும் நோக்கில் இங்கும் தரப்படுகின்றது. குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு. அன்புமிக்க யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், 1990களிலே பலவந்தமாக வெளியே…
-
- 2 replies
- 505 views
-
-
‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’ “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். “கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்கள…
-
- 5 replies
- 727 views
-
-
சக்தி டிவி செய்திகள் 20 09 2017 , 8PM
-
- 0 replies
- 480 views
-
-
கிழக்கை யார் ஆள்வது என்பதை மக்களே தீர்மானிப்பர் கிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பி, மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை…
-
- 1 reply
- 323 views
-
-
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது தமிழ்க் கூட்டமைப்பினது கடமை பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றம் என்று அறிவிக்கும் சட்டவரைவின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் நடைபெற இருந்த நிலையில் அது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவின் மீதான விவாதம் நிறுத்தப்படுவது இது இரண்டாவது தடவை. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின்படியே விவாதம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரி கிறது. இதற்கு முன்னரும் ஒரு தடவை இவ்வாறே இந்த விவாதம் அரச தலைவரால் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சட்டவரைவுக்கு எதிராகப் பிக்குகள் போர்க்கொடி தூக்கியதைத் தொட…
-
- 1 reply
- 443 views
-
-
தேர்தல் சட்டமூலம். தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு. ஏனையவை புறக்கணிப்பு மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈபிஆர்எல் ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இன்று புதன்கிழமை இரவு வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவர்கள் சபையை விட்டு வெளியேறியதாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இந்த சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சி மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலை 50 வீதம் தொகுதிவரி முறை மூலமும் 50 வீதம் விகிதாசார முறையின் மூலமும் நடத்தப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்தில் 60 வீதம் தொகுதிவரி …
-
- 0 replies
- 356 views
-
-
கென்யாவில் 3 பில்லியன் ரூபா திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது கென்ய தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கை (3 பில்லியன் ரூபா) திருடிய குற்றச்சாட்டில், சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. மோஷீன் ரணதுங்க என்பவர் 2012, ஜூலை மாதம் 90 நாள் விசாவில் கென்யா சென்றிருந்தார். எனினும் சட்டவிரோதமாக 2016ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து 2 பில்லியன் ஷில்லிங்கைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கென்யாவை விட்டுத் தப்பியோடியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் க…
-
- 0 replies
- 273 views
-
-
மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்க வேண்டும் போர்க்குற்றச்சாட்டுக்கு அஞ்சும் இராணுவத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார் பொன்சேகா ‘‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லையே?’’ இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: காணாமற்போனோர் அலுவலகம் தனியே வடக்கு – கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர் மீது நட…
-
- 0 replies
- 320 views
-
-
படகில் நியூஸிலாந்து சென்றோர் இந்தோனேசியாவில் மடக்கப்பட்டனர் படகு மூலம் நியுசிலாந்து நோக்கி பயணித்த 28 பேர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல மினுவாங்கொடை நீதவான் சிலனி சதுரந்தி பெரேரா அனுமதித்தார். இதேவேளை, சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிரவிடப்பட்டுள்ளது. http…
-
- 0 replies
- 324 views
-
-
‘தொல்லைகள் அதிகரித்துவிட்டன’ வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச் செய்கைகளையும், தங்களது இருப்பிடங்களையும், உயிர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றாடம் போராடி வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற மக்களையும், அவர்களது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களையும் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக மேற்கொள்ளப் படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறியத் தர முடியுமா? என்று, நாடாள…
-
- 0 replies
- 392 views
-
-
தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி ஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் டாரஞ்சித் சிங் சந்து மற்றும் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.நடரசாலிங்கமும் கைச்சாத்திட்டனர். தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 199 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது. குறித்த மேம்படுத்தல் திட்டத்தில் புதிய உ…
-
- 0 replies
- 453 views
-
-
ஜனாதிபதி மைத்திரி - ட்ரம்ப் முதன்முறை சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முதலாகச் சந்தித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர். http://www.virakesari.lk/article/24707
-
- 0 replies
- 364 views
-
-
வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள்....அமைச்சர் மனோகணேசன் வடக்கு – தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகப்பற்றற்ற ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் உறவினர்களாவர். இப்படியான உறவினர்கள் சிறிதளவே இருக்கின்றனர். இவர்களை ஓரம்கட்டி இலங்கையர்கள் என்பதன் கீழ் பயணிப்போம். இவ்வாறு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்குக்குச் சென்று ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் உரையாற்றும்போது அங்குள்ள இனவாதக் குழுக்கள் அவருக்கெதிராகப் போராட்டங்களைச் செய்யவுள்…
-
- 0 replies
- 331 views
-
-