ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சர்வதேச சமவாய சட்டம் பேராபத்தை ஏற்படுத்தும் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியை சந்தித்து கூட்டு எதிரணியினர் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வலுக்கட்டாயமாக காணா மல் ஆக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நாட்டையும் தேசிய படைகளையும் சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கும் விடயமாகும். எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டு கொண்டுவரப்பட…
-
- 0 replies
- 413 views
-
-
22 ஆம் திகதி அல் ஹுசைனை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி ஹுசைனின் அதிருப்திக்கு பதிலளிப்பார்? ஐ.நா. அரசியல் உதவி செயலர் செனனையும் சந்திப்பார் (நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ,ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செய லர் தோமஸ் செனன் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய நாடுகளுக்கா…
-
- 0 replies
- 408 views
-
-
ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றந்தார்...! ஐக்கிய நாகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூவராலய உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியையும் ஜயந்தி சிறிசேன அம்மையாரையும் மிகுந்த கோலாகலமாக வரவேற்றனர். http://www.virakesari.lk/article/24584
-
- 0 replies
- 274 views
-
-
ஞானசார தேரர் நாட்டைவிட்டு ஓட்டம் சிங்கள ஊடகச் செய்தியால் பரபரப்பு பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. எனினும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆதரவும் பாதுகாப்பும் இருப்பதாக அப்போது பல்வேறு தரப்பினராலும் கு…
-
- 0 replies
- 194 views
-
-
தேர்தல் நடக்கட்டும் மாகாண சபைகள் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்கிற பேச்சு மீண்டும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என்றும் எதிர்வுகூறப்படுகின்றது. மாகாண சபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கான அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதானால், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும், மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெறவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படும் நிலையிலேயே தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களின் ஆயுள் இந்த மாதத்த…
-
- 0 replies
- 187 views
-
-
எந்தவொரு தேர்தலுக்கு முன்பாகவும் அரசமைப்புக்கான கருத்துக் கணிப்பே முதலில்வேண்டும் நாட்டில் எந்தவொரு தேர்தலை நடத்துவதற்கு முன்னரும், புதிய அரசமைப்புக்கான பொது வாக்கெடுப்பே நடத்தப்படவேண்டும் என்று அரசிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசெம்பரில் நடைபெறலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த விடயத்தை அரசிடம் மீண்டும் ஆணித்தரமாகக் கூட்டமைப்புக் கூறியுள்ளது. 3 மாகாண சபைகளுக்கும் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் அது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி…
-
- 0 replies
- 171 views
-
-
தொடரும் சீரற்ற காலநிலையினால் டெங்கு காய்ச்சல் தீவிரம் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் தொகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த இருவார காலமாக நாட்டில் தொடரும் சீரற்ற …
-
- 0 replies
- 291 views
-
-
மஹிந்த பறித்த வீட்டை கையளிக்குமாறு கடிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், அரசுடமையாக்கப்பட்ட மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, உரிமையாளரிடமே கையளிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அந்த வீட்டை உரிமையாளரிடமே கையளிக்க, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணி அனுப்பிவைத்துள்ள, கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு சொந்தமான, கொழும்பு- 6 வெள்ளவத்தை சப்…
-
- 0 replies
- 189 views
-
-
மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம் புள்ளிவிவர தகவலின் பிரகாரம், மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறுகள் மற்றும் நீரோடைகள…
-
- 0 replies
- 422 views
-
-
அரசாங்கம் 20 ஐ கைவிடும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மிகவும் நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களை தாக்கல் செய்திருந்தன. சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 289 views
-
-
சீன எக்சிம் வங்கி அதிகாரிகள் குழு இலங்கை வருகிறது.! இலங்கைக்கு பெருமளவு கடன்களை வழங்கியுள்ள சீனாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கியின் (எக்சிம் வங்கி) உயர்மட்டக் குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வர வுள்ளது. சீன எக்சிம் வங்கியின் சலுகைக்கடன் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் லி டான் உள்ளிட்ட அதிகாரிகள் இந் தக் குழுவில் இடம்பெறவுள்ளனர். அடுத்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மதிப்பீடுகளைச் செய்யவே இந்தக் குழு இலங்கை வரவுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கி ஏற்கனவே இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அம்பாந் தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அன ல்ம…
-
- 0 replies
- 207 views
-
-
சீனாவுக்கான பயணத்தை இரத்துச் செய்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அடுத்தவாரம் சீனாவுக்கு மேற்கொள் ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென இரத்துச் செய்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச சீனா செல்லவிருந்தார். அவர் எதிர்வவரும் 23 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவும் திட்டமிட்டிருந்தார். குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்ரூயின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் இடம்பெறவிருந்தது. அடுத்தமாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் …
-
- 0 replies
- 216 views
-
-
ஜெனிவாவில் இன்று தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாவதை அடுத்து மனித உரிமைப் பேரவையின் முன்றலில் நீதிக்கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பெருமளவான தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறும் உப குழுக் கூட்டங்களில் பங்பேற்பதற்காகவும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலும் ம.தி.மு.க.வின் பொத…
-
- 0 replies
- 160 views
-
-
சரத் பொன்சேகா மூலம் இராணுவ புரட்சிக்கு வாய்ப்பு தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஜெ.ராஜன் இராணுவத்தின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா ணுவ வீரரான சரத்பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக வைத்திருப்பதன் மூலம் நாட்டில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிக மாக காணப்படுகின் றன. எவ்வாறு ஹிட்லர் இரா ணுவ வீரனாக இருந்து ஆட் சியை பிடித்தாரோ அதேபோன்று இலங்கையிலும் நடக்கலாம். ஆகவே, இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவி…
-
- 2 replies
- 433 views
-
-
க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம் வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டி…
-
- 4 replies
- 596 views
-
-
ஸ்ரீலங்கா பேருந்தில் நடந்த அதிசயம் பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவத…
-
- 7 replies
- 1.5k views
-
-
சக்தி டிவி செய்திகள் 17 09 2017 , 8PM
-
- 0 replies
- 365 views
-
-
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று சந்தித்தார். கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது. மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர், மயானத்தையும் பார்வையிட்டுள்ளார். இந்த மயானத்தை அகற்றுமாறு கோரி கடந்த 68 நாட்களாக கலைமதி கிராம மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://newsfirst.lk/tamil/2017/09/சத்தியாக…
-
- 0 replies
- 325 views
-
-
“பச்சை” உடலைப் பாழாக்கும் யாழ்ப்பாண இளைஞர்களுக்கிடையில் முளைவிடும் மற்றொரு நாகரீகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது ‘பச்சை’குத்திக் கொள்ளும் மரபு. இதைக் கொண்டு தமது உடல் அங்கங்களை அலங்கரித்து மகிழ்கிறார்கள் இவர்கள். எமது பெண்களுக்குள் முளைவிட்டுப் படர்ந்துவிட்ட நகை, நட்டுக்களால் உடலை அலங்கரித்துக் கொள்ளும் கலாசாரத்தை ஒத்த தொன்றாகவே ‘பச்சை’ குத்திக் கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடத்தில் காணப்படுகிறது. அதிலும் போருக்குப் பிற்பட்ட, வெளிநாட்டு, புலம்பெயர் தொடர்புகள் அதிகமிருக்கும் சம காலத்திலேயே இது உச்சங்கண்டிருக்கிறது. பச்சை குத்துதலில் ஏற்பட்ட மாற்றங்கள் …
-
- 0 replies
- 601 views
-
-
அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா? அமைச்சர்கள் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதும், விலக்கப்படுவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகµ மாறியுள்ளன.முதலில் திலக் மாரப்பன. அதன்பின் ரவி கருணாநாயக்க.அடுத்ததாக விஜயதாச ராஜபக்ச விலக்கப்பட்டார்.அந்த வரிசையில் இப்போது அருந்திக்க பெர்னாண்டோவும் இணைந்துள்ளார். ஜனநாயகம் வளர்ச்சியடைந்துள்ள மேற்கு நாடுகளில் மாத்திரம் இருந்து வருகின்ற இந்த அரசியல் கலாசாரம், இப்போது இலங்கையின் அரசியலுக்குள்ளும் ஊடுருவியுள்ளமையை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வது?இந்த அரசில் நல்லதோர் அரசியல் கலாசாரம் மலரத் தொடங்கியுள்ளது என்று எடுத்…
-
- 0 replies
- 291 views
-
-
(தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில் தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு …
-
- 3 replies
- 781 views
-
-
பொலிஸார் மீது கல்வீச்சு: 16 பேர் கைது -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பொலிஸார் சுற்றிவாளைப்பை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணை…
-
- 0 replies
- 338 views
-
-
மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள்… மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கல்முனை, சாய்ந்தமருது நகரங்களில் நேற்று (15) மதியம் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன இதன்போது பிரதேச செயலாளர்களிடம் மியான்மார் நாட்டுத் தூதுவருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை, காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில், ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மியான்மார் அரசாங்கத்துக்குத் தங்களது எத…
-
- 0 replies
- 509 views
-
-
’தேர்தல் வந்தாலே மட்டக்களப்பில் இனவாதம்’ தேர்தல் வரப்போகிறது என்றவுடனே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசங்களைப் பற்றிப் பேசி, மக்களிடத்தில் ஒரு குழப்பதை உண்டுபண்ணும் புற்றுநோய், அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 414 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார். விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து இறுதி வருட மாணவர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை தமது விடுதிகளுக்கு சமுகம் தருமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24560
-
- 0 replies
- 158 views
-