ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html
-
- 0 replies
- 119 views
-
-
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க ஜெனிவாவில் 15 உப குழுக் கூட்டங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உப நிகழ்வுகள் தொடர்பில் அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்டங்களில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பான இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உர…
-
- 0 replies
- 157 views
-
-
ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. …
-
- 2 replies
- 1k views
-
-
சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜெனிவாவில் பரப்புரைப் போர் சரத் வீரசேகரவை களமிறக்குகிறது மகிந்த அணி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத்தொடரில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பரப்புரைப் போரை முன்னெடுப்பதற்காக முன்னாள் படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை மகிந்த அணி ஜெனிவாவில் களமிறக்கவுள்ளது. சிறப்பு அறிக்கையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றார் சரத் வீரசேகர. இந்தத் தகவலை ‘உதயன்’ பத்திரிகையிடம் உறுதிப்படுத்திய அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என…
-
- 3 replies
- 391 views
-
-
ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் பொலனறுவையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று அதிகாலை இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்கின்றனா். …
-
- 3 replies
- 634 views
-
-
கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272
-
- 2 replies
- 585 views
-
-
உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…
-
- 0 replies
- 762 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM
-
- 0 replies
- 305 views
-
-
கெஹலியவுக்குப் பிணை (புத்திமால் ருபேரு) நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது தனிப்பட்ட தொலைபேசிக்கான மாதாந்த கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தி, 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பினை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில், அவரையும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டாரவையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) அனுமதியளித்தது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க, இவர்கள் இருவரையும் தலா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மாதாந்த தனிப்பட்ட தொலைபேச…
-
- 0 replies
- 268 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க முடியாது – கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று 203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக இடம்பெற்று வருகிறது. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், கண்முன்னே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் சரணடைந்தும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் காணாமல் செய்யப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். …
-
- 2 replies
- 546 views
-
-
நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து 60 தொண்டர்கள் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கவில்லை எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் உப்பு கராஜ் வீதிவழியாக நடைபவனியாக வந்து காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா…
-
- 0 replies
- 264 views
-
-
அபாயகரமான ஆயதங்களுடன் இருவர் கைது மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www…
-
- 2 replies
- 398 views
- 1 follower
-
-
பாரதியாரின் 95 ஆவது நினைவு தினம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 95வது நினைவு தினம் யாழில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். அரசடிச் சந்தியில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா மற்றும் சின்மயா மிசன் சைத்தன்ய சுவாமிகள், இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா.வாசுதேவக்குருக்கள், ஆறுதிருமுருகன் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்கள் மகாகவியின் பாடல்களை பாடியதன் பின்னர், இந்தியதுணைத் தூதுவர் நிகழ்வில் கலந்துகொண்டவர்ளுக்கு நினைவாக தென்னை மரக்கன்றுகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 505 views
-
-
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில். பத்திரிகை கண்ணோட்டம் 11.09.2017
-
- 0 replies
- 316 views
-
-
மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்ப…
-
- 0 replies
- 371 views
-
-
"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது" யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபி அநுராதபுரத்தில் அமைப்பதே பொருத்தமானதாகும். வடக்கு கிழக்கு மக்கள் இலகுவாக வருகைதரும் வகையில் அமையவேண்டும் என கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். உயிர் நீத்த மக்களை நினைவுகூர மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை நேரத்தின் போது யுத்தத்தின் போது உயிர்நீத்த மக்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியொன்றை…
-
- 5 replies
- 553 views
-
-
ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில், குறித…
-
- 0 replies
- 259 views
-
-
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் ; மக்கள் விசனம் சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் பயிற்சி தடாகம் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்குரிய அரங்குகளுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், நீச்சல் தடாகம், மற்றும் உள்ளக விளை…
-
- 0 replies
- 405 views
-
-
சமஷ்டி என்பது பிரிவினை வடக்கு முதல்வரிடம் அஸ்கிரிய பீடத்தினர் தெரிவிப்பு விக்கினேஸ்வரன் கடும் அதிருப்தி ''சந்திப்பு சங்கடமாக அமைந்தது'' (ஆர்.யசி) சமஷ்டி முறைமை என்பது பிரிவினையேயாகும். இது தொடர்பில் எம்மிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிடம் மிகவும் திட்டவட்டமாக நேற்று தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த சந்திப்பின்போது மேலாதிக்க நிலைப்பாட்டில் இருந்தே தேரர்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். சிலர் நல்லெண்ணத்துடன் செயற்பட்ட போதிலும் சிலரது மனங்க…
-
- 1 reply
- 356 views
-
-
வீதியில் அநாதரவாகக் கிடந்த இராணுவச் சீருடை! – வவுனியாவில் பரபரப்பு! வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இராணுவத்தினர் பயன்படுத்தும் இராணுவச்சீருடை வீதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9ஆம் ஒழுங்கை வீதியில் இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். …
-
- 1 reply
- 308 views
-
-
அடுத்து நிகழப்போவது என்ன ? அர்ஜுன் அலோசியஸிற்கு கடும் உத்தரவு பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் 5வது நாளாக இன்றும் பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று காலை ஆஜராகியுள்ளார். பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் விசேட அறிக்கையொன்றை வழங்க கடந்த நான்கு நாட்களாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், அர்ஜுன் அலோசியஸை வாக்குமூலம் வழங்கிய …
-
- 0 replies
- 275 views
-
-
கொழும்பை நன்கு புரிந்து வைத்துள்ளது புதுடில்லி அரசு “புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை அமைச்சருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்து வைத்துள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்” இவ்வாறு புதுடில்லியிலிருந்து அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, ‘உதயன்’ பத்தி…
-
- 1 reply
- 351 views
-
-
செயலாளர்களை மாற்றுவதில் வடக்கு அமைச்சர்கள் மும்முரம் மூன்றாம் தரப்புகள் ஊடாக ஆளுநருக்கு அழுத்தம் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுச் செயலாளர்களை மாற்றம் செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. வடக்கு மாகாணத்தில் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புக்களும் மாற்றப்பட்டன. இதற்கு அமைவாக அமைச்சுச் செயலாளர்களும் மாற்றப்பட்டிருந்தனர். புதிய அமைச்சர்கள் இருவர் தமது அமைச்சுச் செயலாளர்களை மாற்றுமாறு, மூன்றாம் தரப்புக்கள் ஊடாக அழுத்தம் கொடுத்து வருவதாக அறிய முடிக…
-
- 1 reply
- 397 views
-
-
மைத்திரியின் மனைவியை எச்சரிக்கிறார் மகிந்த தற்போதைய முதல் பெண்மணி மீதும் கூட சில் துணிகளை விநியோகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வழக்கு தொடுக்கப்படலாம். இவ்வாறு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: சில நாள்களுக்கு முன்னர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சில் துணிகளை விநியோகித்திருந் தார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தற்போதைய முதல் பெண்மணி மீதும் வழக்குத் தொடுக்கப்படலாம். 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ள லலித் வீரதுங்கவைச் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிடவுள்ளேன் – என்றார். …
-
- 1 reply
- 540 views
-
-
கிழக்கு மாகாண சபையில் கோரமின்மையால் சபை ஒத்திவைப்பு வடமலை ராஜ்குமார், ரீ.கே.றஹ்மத்துல்லா 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (11) காலை 9.30 மணிக்கு அவசரமாகக் கூடிய கிழக்கு மாகாண சபை, கோரமின்மையால் மீண்டும் 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று கூடிய போதும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டதையடுத்து, தவிசாளரால் சபை ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவத…
-
- 0 replies
- 376 views
-