ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வடக்கிலுள்ள இந்துக்களின் மத வழிபாட்டு தலங்களை புத்தர் சிலைகளின் மூலம் ஆக்கிரமிக்கும் இரா ணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா மூளாய்மடு, பேயாடி கூழாங்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களின் வளாகத்திற்குள் புத்தர் சிலைகளை அமைத்து வரும் இராணுவம் அதனை தொடர்ந்தும் பராமரித்து வருகின்றது. வவுனியா மூனாய்மடு பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள நாகபூ சணி அம்மன் ஆலய வளாகத்திற்குள் பெரியதொரு புத்தர் சிலையை 56 டிவிசன் படைமுகாமை சேர்ந்த இராணுவம் அமைத்துள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலையானது நாகபூசணி அம்மன் ஆலயத்தை விட உயரமான நிலம் எழுப்பி பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் இந்து ஆலயத்திற்குள் வெ…
-
- 0 replies
- 538 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது
-
- 10 replies
- 624 views
-
-
இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்தியாவின் அனுசரணையின்றி தமிழர்களின் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழர் விடயத்தில் கொண்டிக்கும் கரிசனையைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு உரிய வலியுறுத்தலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான வைத்திய கலாநிதி பகீரதன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், விடுதலைப்புலிகள் போரியல் முறைமையை மாற்றியமையும், இந்தியாவின் அனுசர ணையை இழந்தமையுமே தோல்விக்…
-
- 0 replies
- 465 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அண்மையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கரங்கோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர் ராஜபக்ஷவை சந்தித்துமிருந்தார். ராஜபக்ஷவினால் மட்டுமே சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மாத்திரமே சமூகங்களை ஒருநாள் ஐக்கியப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். பூமொட்டு சின்னத்தைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கும் பசில் ராஜபக்ஷ எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்காலத் தேர்தல…
-
- 0 replies
- 315 views
-
-
செங்கலடியில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று (09) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்…
-
- 0 replies
- 411 views
-
-
நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம் கடந்த வருடத்தையும்விட இம்முறை அதிகரிப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 2 கோடியே 5 லட்சம் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்தார். இதுதொடர்பில் அவர் அனுப்பிய செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2017ஆம் ஆண்டு நல்லூர் திருவிழாவின் போது கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருந்து விற்பனை, சஞ்சிகை விற்பனை, சேதன உர விற்பனை மற்றும் நன்கொடை மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைக்கப்பெற்ற மொத்த வருமானம் வரிகள் உள்ளடங்கலாக 2 கோடி…
-
- 1 reply
- 374 views
-
-
ஜெகத்தை விரைவில் சந்திப்பார் மைத்திரி அவருக்கெதிரான போர்க்குற்ற விசாரணை வழக்கு குறித்து ஆராய பிரேசில் நாட்டில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவை விரைவில் சந்தித்துப் பேச உள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. அதற்கு முன்னதாக இருவரும் நேற்றுமுன்தினம் இரவு அலைபேசிமூலம் உரையாடினர். தான் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை, சவால்களை நேரில் எடுத்துரைப்பதற்கு தனக்கு வாய்ப்பு வழங்குமாறுஜென ரல் ஜெகத் ஜயசூரிய அரச தலைவரிடம் அப்போது கோரிக்கை விடுத்தார். அதனை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். எனி…
-
- 0 replies
- 418 views
-
-
டெனீஸ் தாக்கல் செய்த வழக்கு மீது 19ஆம் திகதியே விசாரணை வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட வடக்கு அமைச்சரவைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியிருந்தார். அமைச்சரை நீக்குவதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை எனத் தெரிவித்து முதலமைச்சருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த மாதம் 30ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந…
-
- 0 replies
- 191 views
-
-
புதிய அரசமைப்புக்கு ஆதரவு தரக் கோரி மகாநாயக்கர்களை சந்திப்பார் சம்பந்தன் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கக்கோரி இந்த மாத இறுதி வாரத்தில் மகா நாயக்க தேரர்களைச் சந்திக்க உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியிருந்த னர். அரசமைப்பு…
-
- 0 replies
- 179 views
-
-
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்பேற்படும் பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நில…
-
- 0 replies
- 302 views
-
-
திங்கட்கிழமை ஆரம்பமாகிறது 36 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 29 ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இம்முறை கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்டக்குழு பங்கேற்க மாட்டாது. மாறாக ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர். திங்கட்கிழமை முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் உரையாற்றவுள்ளனர். இந்தக் கூ…
-
- 0 replies
- 334 views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் அமெரிக்கா செல்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நியூயோர்க் செல்கின்றனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார…
-
- 0 replies
- 217 views
-
-
அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றைமேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை, இரண்டு நாடுகளுக்கிடையிலான மீனவர் உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் புதிய அ…
-
- 0 replies
- 596 views
-
-
நாட்டைப் பிரிக்க அரசாங்கம் சதி : எதிர்க்க தேரர்கள் முன்வரவேண்டும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் முன்னெடுக்கும் முறையற்ற ஆட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது போதும். எனவே அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்பெற்றதைப்போன்ற யுக மாற்றத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். அப்பயணத்தில் சகல பெளத்த தேரர்களும் இணைந்து கொள்ள வேண்டும். அப்பயணத்தில் குறுக்கிடும் சகல சவால்களையும் முகம்கொடுப்பதற்கு தாம் தயாராகிவிட்டதாக முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 334 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 09 2017 , 8PM
-
- 0 replies
- 347 views
-
-
கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது Share வடக்குக் கடலில் தெற்கு மீனவர்கள் மீன்பிடிப்ப தற்கு கொழும்பிலுள்ள கடற் றொழில் அமைச்சு அனுமதி கொடுத்துவிட்டால் அதன் பின்னர் அவர்களுக்கு பிரதேச செயலர்களோ திணைக்கள அதிகாரிகளோ எந்த இடைஞ்சல்களையும் செய்யக்கூடாது. இந்த விடயத்தில் உள்ளூர் மீனவர்களின் பிரச்சினைகளைக் கரிசனைகளைச் செவிமடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அழுத்தம் திருத்தமாக, உரத்த தொனியில் வடபகுதியில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் தெரிவித்தார் கடற்றொழில் நீரியல்…
-
- 2 replies
- 501 views
-
-
பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளனர். இவர்களின் இச்செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம். http://thuliyam.com/?p=78188
-
- 0 replies
- 292 views
-
-
இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசியம்.! இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசியம் என் றும் மத்தியில் பகிரப்பட்ட அதிகாரத்தை மீளப்பெறாத வகை யில் இரண்டாம் தர சபையாக மாகாண பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய செனட் சபை அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்கு இடைக்கால பின்னிணைப்பு முன்மொழிவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வழிநடத்தல் குழு உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சளாருமான எம்.ஏ. சுமந…
-
- 2 replies
- 237 views
-
-
மஹிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற ஜனாதிபதியால் முடியும் ; ஊழல் ஒழிப்பு குழு (ந.ஜெகதீஸ்) புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மருதானை சன சமூக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…
-
- 1 reply
- 337 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 08.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 366 views
-
-
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். 200 நாட்களாக கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள் அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப்…
-
- 3 replies
- 487 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்ட…
-
- 7 replies
- 657 views
-
-
நிலத்துக்கடியிலிருந்து புலிகளின் பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு Weiterempfehlen கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும். மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விம…
-
- 0 replies
- 743 views
-
-
தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கடந்த சில தினங்களாக அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற காரணத்தினால் இதுவரையில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 899 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 374 வீடு கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்ட…
-
- 3 replies
- 935 views
-
-
அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில் அமைச்சர் சுவாமிநாதன் சபையில் அறிவிப்பு “சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 அரசியல் கைதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் சூடான வாதப்பி…
-
- 0 replies
- 156 views
-