Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னைய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பு நடந்துள்ளது. விமானப்படை தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. விமான படையின் கொழும்பு முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வருனு குணவர்தன மூலம் சம்பிரதாய முறைப்படி கடற்படை தளபதி வரவேற்கப்பட்டார். சந்திப்பின் இறுதியில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. http://newuthayan.com/story/24325.html

    • 0 replies
    • 287 views
  2. ‘‘பொறுப்­புக்­கூ­ற­லில் இருந்து அரசு பின்­வாங்­க­வில்லை. அதற்­கு­ரிய ஏற்­பா­டு­கள் இலங்­கைக்கே உரிய பாணி­யில் மெது­வாக நிறை­வேற்­றப்­ப­டும்.” இவ்­வாறு சாவ­கா­ச­மா­கத் தெரி­வித்­தார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அரச தலை­வர் மாளி­கை­யில் நேற்­றுக் காலை நடை­பெற்ற பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­கள், ஊட­கப் பிர­தா­னி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் தனது பொறுப்­புக்­கூ­றலை நிறை­வேற்ற இலங்கை அரசு பின்­வாங்­கு­கின்­றது என்று பன்­னாட்டு மட்­டத்­தில் விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றதே? என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார். ‘‘பொறுப்­புக்­ க…

    • 0 replies
    • 352 views
  3. இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை - கிளிநொச்சி மக்கள் கவலை கிளிநொச்சியின் பெரும்பாலான கிராமங்களில் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில், தற்போது எமது மாவட்டத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. தற்போது இரண்டு வேளை…

  4. சௌமியமூர்த்தி தொண்டமானின் 104 ஆவது ஜனன தினம் மலையகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 104 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு அன்னாரின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கொழும்பு காலி முகத்திடலின் அரச தலைவர் செயலகத்தில் காணப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மாலை அணுவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டது. மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணனும் மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினார். http://newuthayan.com/story/24151.html

  5. இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதிகாரி ப்ரயன் புரக் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார். இனப் பிரச்சின…

  6. கருத்தடை மாத்திரைகளுடன் இலங்கை வந்த இந்தியருக்கு நடந்த விபரீதம் இந்தியாவின் டெல்லி நகரில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதான நபர் எனவும் சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று இரவு யூ.எல்.196 ரக விமானத்தில் இந்நாட்டிற்கு வந்துள்ள நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் பயண பொதியில் இருந்து 16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. …

  7. சக்தி டிவி செய்திகள் 30 08 2017 , 8PM

  8. காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. "தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா" காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு", இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவ…

  9. புரிந்துணர்வையும், நல்லுறவையும் ஏற்படுத்த சர்வமத உறவுப்பால நிகழ்வு மன்னார் கரிற்றாஸ், வாழ்வுதயம் – குருநாகல் கறிற்றாஸ் உடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நேற்று புதன் கிழமை வரையான மூன்று நாட்கள் சர்வமத உறவுப்பால நிகழ்வை நடாத்தியுள்ளது. 20 சர்வமத உறுப்பினர்களாகிய பௌத்த மதக் குருக்கள், இஸ்லாமிய மௌளவிகள், கத்தோலிக்க குருக்கள், அருட் சகோதரிகள், இந்துக் குருக்கள் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர். நிகழ்வின் முதலாம் நாள் மடு தேவாலயத்தில் தங்கி இருந்து மடுத் தேவாலய பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரை சந்தித்து நேர்முக உரையாடலை மேற்கொண்டனர். மடு திருத்தலத்தில் பாரம்பரிய வரலாறு, அதன் அமைவிடம், புனிதத் தன்மை பற்றி …

  10. புதிய அரசமைப்புத் திருத்தம் செப்ரெம்பர் மக்கள் பார்வைக்கு!! புதிய அரசமைப்புத் திருத்தச் சட்ட வரைபு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் மக்கள் பார்வைக்கு விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அரசமைப்புச் சயைின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 6ஆம் திகதி நடைறெவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உத்தேச சட்ட வரைபு தொடர்பான உபகுழு அறிக்கை தற்போது அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. …

  11. சம்பந்தன் - ஹாபீஸ் இடையே மந்திராலோசனை! அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுக் காலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸீர் அஹமட் குறித்த சட்டமூலம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். …

  12. "நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம்" ஜனாதிபதி நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நல்லாட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெறும் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23761

  13. யாழில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்; நடந்தது என்ன? யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு யானைக…

  14. ரெஜினோல்ட் குரேயை சந்திக்கிறது அஸ்கிரிய மகாநாயக்கர் குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் குழு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை இன்று சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில் இன்று 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – கச்சேரியில் இன்று மாலை சர்வமத கூட்டம் இடம்பெறவுள்ளது. சர்வமத கூட்டத்தை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/Reginolt-meets-Asgiriya-Maganayakkar-group

  15. தொடருந்துத் தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் கஞ்சாச் செடிகள் தென்மராட்சி-மீசாலை மற்றும் மண்டுவில் பகுதிகளில் டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கஞ்சாச் செடிகள் வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் குறித்த பகுதிகளில் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மண்டுவில் பிரிவில் உள்ள தொடருந்துத் திணைக்கள தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் விடுதிக்குப் பின்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அங்கே வெண்டிச் செடிகளுடன் கஞ்சாச் செடிகள் காணப்பட்டதை அவதானித்த அலுவலர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தக…

  16. காணாமல் போனோர் விவகாரத்துக்கு ‘நீதியை தா’ காணாமல் போனவர்கள் தொடர்பில், பல்வேறான போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில், தமது உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறும், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பலவந்தமாகக் க…

  17. ஏ - 9 வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி, மூவர் படுகாயம் வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஓடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிக்ஞைகளுமின்றி தரித்து நின்றது. அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் தரித்து நின்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் த…

  18. இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம் பிராந்­திய இந்து சமுத்­திர மாநாடு நாளை வியா­ழக்­கி­ழமை அலரி மாளி­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது. இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள இந்­தியா , அமெ­ரிக்கா மற் றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட 17 நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ள­தாக சட்ட ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­தார். அந்­த­வ­கையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தெற்கு , மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்க பதில் இரா­ஜாங்க செய­லாளர் ஹெலிஸ் வேல்ஸ் உள்­ளிட்­ட­வர்கள் இன்று இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். இந்து சமுத்­திர மாநாடு …

  19. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சற்றுமுன்னர் தனியார் வைத்தியசாலையில் காலமானார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சுகவீனமுற்றநிலையில், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/23741

  20. 2025 இல் கடன் இல்­லாத நாடு உரு­வாகும் என்­கிறார் பிர­தமர் இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடு­க­ளுடன் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. குறித்த நாடு­களுடன் நட்புகொண்டு பிரச்­சி­னைகள் இல்­லாமல் தொடர்ந்து பய­ணிப்போம். அத்­துடன் இந்த நாடு­களின் நிதி உத­வி­களை பெற்று நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­துவோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய மாற்றம் ஏற்­படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்­லாத நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பு மாவட்­டத்தில் நேற்று 1100 குடும்­பங்­க­ளுக்கு வீட்டு கடன…

  21. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநலத் தாக்கங்களுக்குத் தகுந்த சிகிச்சைகள் அவசியம் நீண்­ட­கா­லப்­போ­ரின் கார­ண­மாக எம்­ம­வர்­க­ளில் பலர் சோகச் சுமை­க­ளைச் சுமந்த வண்­ணம் நடைப்­பி­ணங்­க­ளாக உலாவி வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் பல­ருக்கு உள­வி­யல் தாக்­கங்­கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அவற்­றைக் குறைப்­ப­தற்­கான அல்­லது குணப்­ப­டுத்­து­வ­தற்­கான உள­வி­யல் மருத்­து­வம் மற்­றும் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­யம் – என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். கிளி­நொச்சி மாவட்ட பொது­ம­ருத்­து­வ­ம­னை­யின் உள­நல சிகிச்­சைப் பிரி­வுக்­கான புதிய கட்­ட­டம் மற்­றும் மருத்­துவ ந…

  22. சக்தி டிவி செய்திகள் 29 08 2017 , 8PM

  23. யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார…

    • 17 replies
    • 1.8k views
  24. சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பூந்தோட்டம் மகாரம்பைக்குளம் பகுதிக்கு சென்றபோது மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் முதிரை மரக்குற்றிகள் ஏற்றிய வாகனத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். …

  25. குளங்களில் மீன்களை அள்ளிச்செல்லும் தென்பகுதி வாசிகள் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் நீர் வற்­றிய நிலை­யில் உள்ள குளங்­க­ளில் காணப்­ப­டும் மீன்­களை தென்­ப­குதியிலி­ருந்து வரு­வோர் அத்­து­மீறி பிடித்­துச் செல்­கின்­ற­னர் என அப் பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­கள் தெரி­வித்­த­னர். மாவட்­டங்­களில் மழை வீழ்ச்சி குறை­வாக காணப்­பட்­ட­தால் குளங்­க­ளில் நீர்­மட்­டம் வெகு­வா­கக் குறை­வ­டைந்­துள்­ளன. கால்­ந­டை­க­ளுக்­காக விடப்­பட்ட தண்ணீரில் காணப்­ப­டும் மீன்­களை தென்­ப­கு­தி­க­ளில் இருந்து வாக­னங்­க­ளில் வரு­வோர் பிடித்­துச் செல்­கின்­ற­னர். இத­னால் குளங்­க­ளில் மீன்­வ­ளம் இல்­லா­மல் போகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சில குளங்­க­ளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.