ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
சரணடைந்த புலிகளை இராணுவம் ஏன் கொன்றது? சொல்கெய்மின் சந்தேகம்! (காணொளி) நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதானியுமான எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் இறுதிப் போர் தொடர்பாகவும் தற்பொழுது சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது அனுபவங்களை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சமாதான காலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக இருந்த சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப…
-
- 5 replies
- 567 views
-
-
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்திற்கு வடமாகாண சபை ஆதரவளிக்காது என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாகாண சபை வளாகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தமானது நாடாளுமன்றத்துடன் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவதை இலக்காகக் கொண்டது என முதல்வர் விளக்கினார். இந்நிலையில், அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் ஊவா …
-
- 0 replies
- 305 views
-
-
யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிரான்ஸ் சென்றிருந்தார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்காக அவர் தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அந்த விஜயத்தில் இணைத்து கொண்டிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் 153,608 ரூபாய் மது அருந்துவதற்கு மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விலை பட்டியல் ஒன்று தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஷிரந்தி ராஜபக்சவினால் மே மாதம் 22ஆம் திகதி 45,864 ரூபாய் மதுப…
-
- 3 replies
- 481 views
-
-
குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்!! வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது கட்சியைச் சேர்ந்த பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்கி, கட்சியைச் சேர்ந்த விந்தன் கனகரத்தினத்தை நியமிக்க வேண்டும் என்று ரெலோ கட்சி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை நிராகரித்த வடக்கு முதலமைச்சர் ரெலோ கட்சியைச் சேர்ந்த ஞா.குணசீலனை வடக்கு சுகாதார அமைச்சராக நியமித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சைத் தன் வசம் எடுத்துக் கொண்டார். சுகாதார அமைச்சராகச் செயற்…
-
- 6 replies
- 850 views
-
-
-
- 0 replies
- 338 views
-
-
முறிப்புக் குளத்தையண்டிய ஊற்றுப்புலம் எனும்காட்டுப் பகுதியில் 2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீது வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து வனத்தை அழிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து மக்களின் வீடுகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து அச்ச நிலையில் வாழ்கின்றனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த காணிகளற்ற 36 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பதிவுகளை மேற்கொண்டனர். இதற்கமைவாக, குறித்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் முறிப்புக் குளத்தையண்டிய ஊற்று…
-
- 0 replies
- 265 views
-
-
மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். தமிழ்பேசும் மக்கள் ஒருகட்சிதலைவரின் நடத்தை ஒழுக்கம் எப்படியானது என்பதை அறியவேண்டும் என்பதற்காக இதை எமது வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர், பின்வருமாறு எழுதியிருந்தார். மாஷா அழ்ழாஹ்- அவன் நாடிவிட்டான் ஹக்கீமின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்ட, அவர் எப்போது ஏறாவூர் சென்று என்னைப்பற்றி பேசுவார் என்று காத்திருந்தேன…
-
- 0 replies
- 464 views
-
-
கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் மீண்டும் பதற்றம் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று மாலை வரை வெளியேறாமல் பல்கலைகழக நிர்வாக கட்டிடத்தொகுதியில் அனுமதியின்றி தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் காவலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைகழக வளாகத்தில் தரித்து நிற்கும் மாணவர்ககளில் ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கரவண்டியை பல்கலைகழக வளாகத்திற்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே மாணவர்களுக்கு…
-
- 0 replies
- 262 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24 08 2017 , 8PM
-
- 0 replies
- 456 views
-
-
தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!! காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து சற்று முன்னர் சுன்னாகம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது. இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/22626.html
-
- 1 reply
- 286 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்களுக்குப் பூட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பிரதான உணவகங்கள் இரண்டு இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவை தற்காலிகமாக மூடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நேரடியாகச் சென்று உணவகங்களைப் பார்வையிட்டனர். உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது. இரண்டு உணவகங்களுக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகர்கள் வழக்…
-
- 0 replies
- 324 views
-
-
யாழ். பண்ணைக் கடலில் படகு விபத்து! – ஒருவரின் உடல் மீட்பு யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மற்றொருவரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு ஒரு படகில் நால்வர் சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் காப்பாற்றப்பட இருவர் நீரில் மூழ்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. காப்பாற்றப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் நாவாந்துறையைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். அதில் …
-
- 1 reply
- 396 views
-
-
பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அபிவிருத்தி திட்டத்திற்கு மணல் வழங்காது மன்னார் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி முறையற்ற ரீதியில் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தொடர்பாக கிராம மக்களால் பொருத்தமான அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்திய போதும் தடுத்து நிறுத்துவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் மக்களால் குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற…
-
- 1 reply
- 347 views
-
-
மன்னார் காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர். சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டள்ளனர். மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதோடு, சடலத்திற்கு அருகில் கைப்பை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்…
-
- 0 replies
- 272 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் காய்த்துள்ள பேரீச்சை மரம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பேரீச்சை மரம் பூத்து காய்த்துள்ளது. பாலைவனப் பகுதியில் விளைய கூடிய பேரீச்சை மரத்தை பணம் வரும் மரமாக மாற்றி வெற்றியடைந்திருக்கின்றனர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர். அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் 30 வருடங்களாக சாவகச்சேரி பகுதியின் வீடு ஒன்றில் பராமரித்து வந்த குடும்பத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர். அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Palm-…
-
- 3 replies
- 1.5k views
-
-
"இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றுவோம்" - சீனா உறுதி இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள் ளது. எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் சீனா செயற்படுகின்றது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவோம் என இலங்கைக்கான சீன தூதுவர் யூ ஷியான்லியாங் தெரிவித்தார். சீன உதவி திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு1.8 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தங்காலையில் நடைப்பெற்றது. இதன் போது உரையாற்றும் போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடு…
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம் யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ அதிகாரியுடைய சமாதிக் கல்லறையொன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந் நிலையில்இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியப்பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் இன்று பிற்பகல் விடுத்துள்ள…
-
- 7 replies
- 687 views
-
-
இழுபறி நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நெற்களஞ்சியம் அமைக்கும் விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நெற்களஞ்சியம் அமைக்கும் பணிகள் நாளை மறுதினம்(26) ஒட்டுச்சுட்டானில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், முன்னதாக 2015ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் நெற்களஞ்சியம் அமைப்பதற்காக சுமார் 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அதிகாரிகள் நெற்களஞ்சியம் அமைப்பதற்கு உகந்த இடத்தைத் தெரிவு செய்வதில் க…
-
- 0 replies
- 374 views
-
-
ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போது, “கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்க வேண்டும், ஆனால் ஞானசார தேரருக்கு இந்த நாட்டில் விஷேட சட்டம் உள்ளது. இந்த அரசாங்கத்தில் ஞானசார தேரருக்கு இராஜதந்திர அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு விசனம் வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 216 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை இருப்பதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை கொண்டுள்ளனர் என்ற விடயம் கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. இதன் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெப்ரல் அமைப்பு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் தகவல்களை கோரி விண்ணப்பம் செய்திருந்தது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 258 views
-
-
வெடியரசன் கோட்டையில் இருப்பது தமிழ் பௌத்த அடையாளங்களே நெடுந்தீவில் தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவிப்பு நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையில் பௌத்த ஆலயத்துக்கான அடையாளங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அவை தமிழ் பௌத்த அடையாளங்களே அன்றி சிங்கள பௌத்த அடையாளங்கள் அல்ல – என தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அ…
-
- 1 reply
- 485 views
-
-
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரசாயனவியல் விஞ்ஞான பாடம் -2017, பகுதி இரண்டு வினாத்தாளினை பரீட்சை இடம்பெறும்போதே நவீன தொலைத்தொடர்பு கருவியினைப் பயன்படுத்தி மண்டபத்துக்கு வெளியில் அனுப்பி, கேள்விகளுக்கான விடைகளை எழுதியதாக கூறப்படும் கொழும்பு பிரபல பாடசாலையின் மாணவன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர். அவருடன் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மாணவனின் தந்தையான நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் வைத்தியரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சந்த…
-
- 1 reply
- 217 views
-
-
எட்டுப் பாலங்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை வடக்கு மாகாணத்தில் புதிதாக எட்டுப் பாலங்கள் அமைக்கப்படுகின்றபோதும் மாகாண சாலை அபிவிருத்தி அதிகார சபையினரின் எவ்வித பங்குபற்றலும் இல்லாது அதிகார சபையின் கொழும்பு அதிகாரிகளே வடக்குக்கு வந்து அவற்றின் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் தொடர்பில் சாலை யின் பொறுப்பாளிகள் என்ற வகையில் நாம் இணைந் துள்ளோமே தவிர கட்டுமானம் சார்ந்த எந்தவொரு விட யங்களுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்று மாகாண சாலை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதுபற்றி மேலும் தெரிவிக்கப…
-
- 1 reply
- 214 views
-
-
மீண்டும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் குருநாகல் நாரம்மல பகுதியில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குருநாகல் நாரம்மல பகுதியில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற…
-
- 0 replies
- 490 views
-
-
அரசியல்வாதியின் ஆலோசனையால் காட்டில் அல்லலுறும் மக்கள் வடமாகாணத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டமானது வடக்கே எல்லையாக யாழ் மாவட்டத்தையும், கிழக்கு தெற்கு எல்லைகளாக முல்லைத்தீவு மாவட்டமும், தெற்கு, மேற்கு எல்லைகளாக மன்னார் மாவட்டத்தையும் கொண்டு விளங்குகின்றது. இயற்கை வளங்களாக இரணைமடுக்குளம், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், மற்றும் கௌதாரிமுனை கடற்கரை என்பன விளங்குகின்றன. கிளிநொச்சி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் நெற்செய்கையுடன், உப உணவு பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, பழமரச்செய்கை மற்றும் மீன்பிடித் தொழில் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ம…
-
- 0 replies
- 425 views
-