Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விகாரைகளில் அரசியல் செய்து வஞ்சகப் பேச்சால் மக்களை குழப்பும் மஹிந்த துரோகி ; மங்கள ஆவேசம் (லியோ நிரோஷ தர்ஷன்) வஞ்சகப் பேச்சால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோல்வியடையச் செய்த மக்கள் பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்தும் செயற்படுகின்றார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டதன் ஊடாக நாட்டிற்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கைவிடும் மஹிந்த ராஜபக்ஷ…

  2. அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு முறாவோடை மாணவர்கள் மற்றும் சிங்கள தமிழ் மக்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிங்கள – தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு – முறாவோடை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான மைதானத்தை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாத்தாக கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். மட்டகளப்பு பிள்ளையாரடி …

  3. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜெனிவாலிருந்து வருகைதந்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 179 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த இவா்கள் அவா்களுடன் கலந்துரையாடியுள்ளனா். காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் நிலைமைகளை கேட்டறிந்த…

  4. வடக்கில் விடுபடும் புகையிலை உற்பத்தி மத்தியில் எடுபடுகிறதா?- டக்ளஸ் 2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்ற மக்களுக்கு மாற்று பயிர்ச் செய்கைகளை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தற்போது, வடக்கில் புகையிலை உற்பத்தி தொடர்பில் அரச அதிகாரிகள் தரப்பில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவரும் நிலையில், தம்புள்ளை பகுதியில் ஏற்கனவே நெல் மற்றும் உப உணவுப் பயிர்கள் பயிரி…

  5. வடமாகாண சபை சாதித்தது என்ன ? முதலமைச்சரின் பதில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நோக்கி வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தொடுத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கடந்த அமர்வில் முதலமைச்சரை நோக்கி எழுப்பட்ட கேள்விகளுக்கு இன்றைய தினம் முதலமைச்சர் பதிலள…

  6. அரசமைப்பு இடைக்கால அறிக்கை விரைவில் – லக்ஸ்மன் கிரியெல்ல புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. வெகு விரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில்அரசமைப்புக்கான வரைபு உருவாக்கப்பட்டது. அவரே அதன் ஆசிரியர். அதில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசமை்பு உர…

  7. கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் கடந்த வார, இறுதிப் பகுதியில் கிளிநொச்சி கமநல அபிவிருத்தித் திணைக்களப் பணியாளர் மீது மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வெளிக்கள பணியாக சென்ற கமநல சேவைகள் நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது நால்வர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இதன்போது மாவட்டச் செயலரிடம் மனு ஒன்றும் கையளி்கப்பட்டது கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். …

  8. சுயமரியாதையை காப்பாற்ற ஒன்றிணையுங்கள் – கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வாரஏட்டின் ஆசிரியர் தலையங்கம்:- தமிழ் மக்களின் பிரதான அரசியல் கோரிக்கையின் முக்கியத்துவத்தை அழித்துவிடும் வகையில் சிலவெளிச் சக்திகள் திட்டமிட்டு இயங்கி வருவதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வாரஏட்டின் ஆசிரியர் தலையங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுயமரியாதையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம் வருமாறு தேசியவிடுதலை வேண்டிநிற்கும் இனம் ஒன்று சமூகக் கட்டுப்கோப்பை பேண வேண்டியது பிரதானமாகும். சமூகக் கட்டுக்கோப்பை பேணுவதும் கண்காணிப்பதும் ஒவ்வொரு பொதுமகனுக்கும் உ…

  9. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் ; மீட்புப் பணிகள் தீவிரம் ; நீர்கொழும்பில் சம்பவம் கட்டடநிர்மாண வேலைகள் இடம்பெற்றுவரும் மாடிக் கட்டிடமொன்றின் கொங்றீற் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி மூவர் காயமடைந்துள்ள நிலையில், மீட்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேவேளை குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நீர்கொழும்பு, பெரியமுல்லை பாலத்திற்கருகில் இன்று இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/23254

  10. எம் மொழியை - எம் இனத்தை - எம் உரிமையை - எம் வரலாற்றை காக்க என் உயிருக்கு நிகரான தலைவர் மேதகு பிரபாகரன் போன்று சமரசமில்லாத ஒரு தலைவன் தேவை . - இயக்குநர் வ. கௌதமன் ஆவேசப்பேட்டி!

    • 0 replies
    • 234 views
  11. 2020 இல் மஹிந்தவின் ஆட்சி எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையிலான அணி­யினர் ஆட்­சிக்கு வரலாம் என்ற தொனியில் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன நேற்று கருத்து வெளி­யிட்டார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ல­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:- ஒன்று அல்­லது இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக மாற்றி கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தொடர்­பான ஊழல் குற்­றச்­சாட்­…

  12. இலங்கை வருகிறது பிரிட்டோவ் நன்சன் “2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வருகை தரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது” என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த, தெரிவித்தார். வங்காளவிரிகுடாவுக்குள் இக்கப்பலின் வருகையைத் திட்டமிட்டு இற்றைப்படுத்தும் நிகழ்வை அங்கிகரிக்கும் நிகழ்வு, நேற்று (16) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில், கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார். …

  13. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு ஏ.எச்.ஏ. ஹுஸைன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களுளையும் இன்று (17) முதல் மறுஅறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை (18) வெள்ளக்கிழமை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தின் பேரவை, திருகோணமலை வளாகம் தவிர்ந்த வந்தாறுமூலை வளாகம் மற்றும…

  14. இந்திய இராணுவத்தினருக்கு யாழில் அஞ்சலி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று (15) பலாலியில் அமைந்துள்ள இந்திய இராணுவவீரர்கள் நினைவுத்தூபிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக கொன்சிலர் ஜெனரல் ஆர் நடராஜன், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர், அமைதிப்படை எனும் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது, ஒக்டோபர் 12ஆம் திகதி நள்ளிரவு, விமானத்தில் இருந்து பரசூட் மூலம் தரையிறங்க முற்பட்ட வேளை, விடுதலைப்புலிகளால் நடுவானில் வைத்துச் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை …

    • 8 replies
    • 801 views
  15. வவுனியாவில் இயங்கும் முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட சமூகசேவை அலுவலகம் ஊடாக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். கூமாங்குளம், வெளிக்குளம்,பூந்தோட்டம் ,வவுனியா நகரம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளே இன்றைய தினம் (17) இவ்வாறு பயணிக்கின்றனர். மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன் உளசமூகப் பணியாளர்கள் இ.கிஸாந்தினி ஆகியோர் இதில் கலந்து மூத்தோருக்கு வழி காட்டிகளாக சேவை ஆற்றுகின்றனர். காலை 7 மணிக்கு வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பயணம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் காலை தரிசனங்களை மேற்கொண்டு பின் கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள …

    • 0 replies
    • 449 views
  16. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை அறிக்கை ஒன்றின் மூலம் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச கருத்துக் கூறுவதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் மேடை நாடகங்களுக்கு இனி இடமில்லை என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/01/155471?ref=home-feed

    • 0 replies
    • 295 views
  17. கிழக்கு ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வு­டன் கைகோர்ப்பு சு.க.வின் திட்­டம் இது என்­கி­றார் ஹிஸ்­புல்­லாஹ் மகிந்த அணி­யு­டன் கை கோர்த்து கிழக்கு மாகாண சபை­யின் ஆட்­சியை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கைப்­பற்­றும். இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்­சர் ஹிஸ்­புல்­லாஹ் தெரி­வித்­தார். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் முஸ்­லிம் சம்­மே­ள­னக் கூட்­டம் அதன் தலை­வர் இரா­ஜாங்க அமைச்­சர் ஏ.எச்.எம்.பௌசி தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்­றது. இங்கு இரா­ஜாங்க அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பத­விக்­கா­லம் நிறை­வ­டை­யும் கிழக்கு மாகாண சபை உள்­ளி…

  18. இலங்கை – தமிழ்நாடு பயணிகள் கப்பல்சேவை தமிழக அரசு முனைப்பு இலங்­கைக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் இடை­யில் பய­ணி­கள் கப்­பல் சேவையை மீண்­டும் ஆரம்­பிப்­ப­தற்குத் தமி­ழக அரசு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. தூத்­துக்­கு­டிக்­கும் கொழும்­புக்­கும் இடை­யில் நடந்து வந்த பய­ணி­கள் கப்­பல் சேவை இடை­நி­றுத்­தப்­பட்டு ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் இந்­தப் புதிய முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் உள்ள ஈழ அக­தி­கள் தன்­னார்வ அடிப்­ப­டை­யில் நாடு திரும்­பு­வ­தற்கு வச­தி­யாக, இந்­தக் கப்­பல் சேவையை மீண்­டும் ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்­சுக்கு, தமி­ழக அரசு கடி­தம் அனுப…

  19. 10 நீதி­மன்­றங்­களை அமைத்­தா­வது திரு­டர்­களை தண்­டிக்க வேண்டும்.! துப்­பாக்­கி­களை காட்டி யாரையும் கட்­டுப்­ப­டுத்தும் அர­சியல் கலா­சாரம் எமது நல்­லாட்­சியில் இல்லை. சுயா­தீ­ன­மான சட்ட நகர்­வு­களின் மூலமே நல்­லாட்சி அர­சாங்கம் சகல பிரச்­சி­னை­க­ளையும் கையாள்­கின்­றது என பாரிய நகர மற்றும் மேல்­ மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஒரு நீதி­மன்றம் அல்ல பத்து நீதி­மன்­றங்­களை அமைத்­தா­வது திரு­டர்­களை தண்­டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரிய நகர மற்றும் மேல்­ மா­காண அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் இந்தக் கருத்­தினை முன்­வைத்தார். அவர் மேல…

  20. மாகாண சபைத் தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­தவே 20 ஆவது திருத்தம் மாகா­ண ­சபைத் தேர்­தல்­களை ஒரே தினத் தில் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைக் கொண்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­திற்கு மாகா­ண­ச­பை­களின் அங்­கீ­கா­ரத்­தையும் பெறு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது. மாகா­ண ­ச­பை­களின் கருத்­துக்­களை கேட்­ட­பின்­னரே இது­தொ­டர்பில் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். மேலும் மாகா­ண ­ச­பைத்­ தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளை யும் அர­சாங்கம் எடுக்­க­வில்லை. மாறாக மாகா­ண­ சபைத் தேர்­தல்­களை ஒரே தினத் தில் நடத்­து­வ­தற்கே அர­சாங்கம் ம…

  21. ஊடகவியலாளர்களின் கேள்விக்கணைகளை சரமாரியாக எதிர்கொண்ட பொலிஸ் பேச்சாளர் : மௌனம் காத்த அமைச்சர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகரவிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தனர். பொலிஸ் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் வசைபாடுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளமை தொடர்பிலேயே பொலிஸ் பேச்சாளரிடம் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இது தொடர்பில் பல வழிகளில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர பதிலளித்தபோதும் …

  22. மஹிந்­தவின் பாரியார், மகன்களுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தீவிரம் ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ மற்றும் அவர்­க­ளது புதல்­வர்­க­ளான யோஷித்த ராஜ­பக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி இன்று மஹிந்­தவின் மனைவி ஷிராந்தி ராஜ­ப­க்ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவும், இளைய மக­னான ரோஹித்த ராஜ­ப­க்ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் விசா­ர­ணை­களை நடாத்­த­வுள்­ள­தா­கவும் நாளை இரண்­டா­வது மக­னான யோசித்த ராஜ­ப­க்ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை நட…

    • 10 replies
    • 933 views
  23. நிதி கிடைத்தவுடன் காணிகள் விடுவிக்கப்படும் – இராணுவப் பேச்சாளர் முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் உள்ள இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்குவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரியவர்களிடம் வழங்குவது தொடர்ப…

  24. “புறோக்கர் வேலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைவிடவேண்டும்” வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் , யுவதிகள் இணைந்து செயற்படவேண்டும் என தெரிவித்திருக்கும் கருத்துக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் பதில் கருத்தினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு , அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் படையில் இணைந்துகொள்ளுமாறு பகிரங்கமாகவே ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார். …

    • 6 replies
    • 1.4k views
  25. சக்தி டிவி செய்திகள் 16 08 2017 , 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.