ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143356 topics in this forum
-
வடமாகாண சபை செய்யாத பலதை வணிகர் கழகம் செய்தது என கடும் விமர்சனங்களை முதலாவது உ ரையில் ஜெயசேகரம் முன்வைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் அணிதிரண்டு தங்களது பலத்தைக் காட்டி இந்த மாகாணசபையை தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் பல எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்த சபை தவறியுள்ளது. என வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனத்தில் ஒன்று அயூப் அஸ்மீனுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்…
-
- 2 replies
- 618 views
-
-
வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்த வேண்டாம் – படையினர் முகாம்களுக்கு முடக்கப்பட மாட்டார்கள் – இராணுவத் தளபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் இடம்பெற்று வரும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் அனைத்தையும் புலிகளின் மீது சுமத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் எல்லா சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 397 views
-
-
மாகாண சபை தேர்தல் விவகாரம் நாளை அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சியானது சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலத்தினை நீடித்து அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதெனவும் அதற்காக தற்போதுள்ள அரசியலமைப்பில் 20ஆவது திருத்தமொன்றினை முன்வைப்பதெனவும் தீர்மானித்துள்ளது. எனினும் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் அவற்றுக்கான தேர்தலை பிற்போடாது உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்தினை ஆதரிக்கப்போவதில்லை எனவ…
-
- 0 replies
- 222 views
-
-
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒக்டோபர் முதல் விநியோகம் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் விநியோகிப்படவுள்ளது. இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க தெரிவிக்கையில், உத்தேச புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உயிரியியல் தொடர்பான தரவுகள், விரல் அடையாளம் உட்பட சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திலிருந்து புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். …
-
- 0 replies
- 249 views
-
-
எமது கொள்கையே மோதலுக்கு காரணம் Published by RasmilaD on 2017-08-14 08:44:44 சாதாரண விடயங்கள் என கருதி கைவிட்ட அரசியல் விடயங்களே இறுதியில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. வடக்கு, கிழக்கு ஆயுத மோதலுக்கும் இளைஞர் புரட்சிக்கும் எமது அரசியல் கொள்கையே காரணமாக அமைந்தது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். இவற்றை மாற்றியமைக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனவாதம் என்பதை விடுத்து இன ஐக்கியத்தில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முன்செல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலான கற்கைக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று இலங்கை …
-
- 0 replies
- 119 views
-
-
தமிழர்கள் ஏன் தனிநாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள் Published by RasmilaD on 2017-08-14 08:47:43 புதிய அரசியலமைப்பில் மறைமுகமாக அதிகாரப் பரவலை முன்னெடுக்க ஒரு போதும் நாம் முயற்சிக்கவில்லை. சுயநல அரசியல் கருத்துக்களை இனியும் முன்வைக்க வேண்டாம். சமஷ்டியே வேண்டாம் என்று போராடிய தமிழர்கள் ஏன் தனி நாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் என்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பிரிவினை வாதத்தையும், ஆயுத கலாசாரத் தையும், அரசியல் கொலைகளையும் தெற் கில் ஆரம்பித்துவிட்டு, வடக்கின் மேல் பழிசுமத் தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்…
-
- 0 replies
- 285 views
-
-
‘கட்டுப்பாட்டுக்குள் சட்டவிரோத மண் அகழ்வு’ யாழ். வடமராட்சி கிழக்கினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மண் கடத்தல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பீ.ஆர் சமன் ஜெதிலக தெரிவித்தார். “மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை இணைத்து, வடமராட்சி பகுதிகளில் இரவு, பகல் நேர ரோந்துக் கடமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்புத் தேவைக்காக, விசேட அதிரடிப் படையினரும் தயார் நிலையில் வை…
-
- 1 reply
- 201 views
-
-
மன்னாரில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை: வன ஜீவராசிகள் திணைக்களம் வழக்குத்தாக்கல் மன்னார் – பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்செய்கை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவர் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 160 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்பெ…
-
- 2 replies
- 553 views
-
-
‘ஆவா ஒரு மாயை’ வடக்கில், ஆவாக்குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஷெல்களை தோள்களில் சுமந்துச்சென்று தாக்குதல்களை நடாத்தி, ஜனநாயக பாதைக்கு திரும்பியுள்ள முன்னாள் போராளிகள், கத்திகளுடனும் பிளேட்டுகளுடனும் அலையவேண்டிய தேவையில்லை என்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் துளசி தெரிவித்தார். மட்டக்களப்பு, உப்போடை லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் துளசி மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும் சட்ட வ…
-
- 0 replies
- 377 views
-
-
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்ய முயற்சி: சிலோன் டுடே பத்திரிகையில் செய்தி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிலோன் டுடே பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது. நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் குற்றவியல் விசாரைணைப்பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வௌியிட்டுள்ளது. முக்கிய நபர்கள் மற்றும் குற்றவியல் விசாரணை தொடர்பான 62 கோவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
சக்தி டிவி செய்திகள் 12 08 2017 , 8PM
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மொகமட் கேசாப் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் உணர்வுபூர்மாக அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரடியில் தனது உத்தியோகபூர்வ காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, நீதிபதி இளஞ்செழியனைக் கண்டதும், அமெரிக்க தூதுவர் ஓடோடிச் சென்று கைலாகு கொடுத்து, அவ…
-
- 0 replies
- 343 views
-
-
நெடுந்தீவில் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்தன நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. கடும் காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வீடுகள், சமுர்த்தி வங்கிக் கூரை என்பன சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. மரங்கள் வீதிகளின் குறுக்காக வீழ்ந்தால் போக்குவரத்துத தடைப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19162.html
-
- 0 replies
- 304 views
-
-
அமைச்சுப் பதவி தொடர்பில் டெனீஸ்வரனின் முடிவு நாளை? வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெலோவின் தலைமைக் குழு நேற்று காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும் அதில் கலந்து கொண்டார். கூட்டத்தில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்துக்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ரெலோ தலைமைக் குழு கோரியிருந்தது. உடனடியாக பதவி விலகுவதற்கு மறுப்பு…
-
- 0 replies
- 288 views
-
-
அந்த நேரத்தில் பதிலளிப்பேன் – ரவி கருணாநாயக்க! நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ளது என்று கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அந்த நேரத்தில் பதிலளிப்பேன் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதியை இன்று முற்பகல் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்தாவது- புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கியதன் பின்னர் மஹாநாயக்க தேரரை சந்தித்தேன். நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்தேன். எனக்கு எதிராக 48 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுக்க முடியுமாயின், தயவுசெய்து ஏனையவை தொடர…
-
- 0 replies
- 241 views
-
-
புகலிடம் கோரியுள்ள சிரிய அகதிகள் சிரியாவை சேர்ந்த குழு ஒன்று இலங்கையில் புலிடம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அகதி அந்தஸ்து கோரிய இவர்களில் ஆறு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரை அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் அகதி அந்தஸ்து கோரியுள்ள சிரிய மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாதெனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம் ரணசிங்க தெரிவித்துள்ளார். http://newuthayan.com/story/19128.html
-
- 0 replies
- 307 views
-
-
யாழ்.சிறையில் இருந்து உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்தவாறு உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் - கொக்குவில் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டைமை தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களே இவ்வாறு சிறைச்சாலைக்குள் இருந்தவாறு உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளனர். எனினும் - கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக தனது மகனிற்கு தொடர்பு உள்ளது என குறித்த மாணவர்களில் ஒருவரது தந்தை பொலிஸாரிடம் …
-
- 4 replies
- 452 views
-
-
நெருக்கடியில் தேசிய அரசு : மனமுடைந்த விஜயதாச லியோ நிரோஷ தர்ஷன் சுசிலுக்கு மஹிந்த ஆதரவுக்கரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கம் நெருக்கடி களை சந்தித்துள்ளது. அரசாங்கத்தில் இர ண்டு முக்கிய அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியில் மிக விரைவில் இணைந்து கொள்ளவுள்ளனர். அரசாங்கத் தின் மீதுள்ள அதிருப்தி மற்றும் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரங்கட்டப்படுகின்றமை இதற்கு முக்கிய காரணங்கள் என தெரியவருகிறது. மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடி விவகாரத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ். நகரப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை!! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தற்போது காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து நீடித்த வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கன மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தொடரும் மழையால் வீதிகளில் வெள்ள நீர் ஓடுவதைக் காண முடிகின்றது. யாழ். நகரப் பகுதியில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் கன மழை தற்போது பொழிகின்றது. http://newuthayan.com/story/18942.html
-
- 1 reply
- 413 views
-
-
வரட்சியால் கிளிநொச்சியில் பல குடும்பங்களுக்கு குடிநீர் இல்லை வரட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுவது குடிநீர்ப் பிரச்சனையாகும். இதனால் மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயாலாளர் பிரிவு அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவாகும். பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 க்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக உள்ளது. இந்த நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப் பிரதேச சபை ஆகியன இணைந்து, குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன. எனினும் வரட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பங்களில் 2160 குடும்பங்களுக்கு மாத்திரம் குடிநீர…
-
- 0 replies
- 161 views
-
-
புதிய அரசமைப்பு விடயத்தில் மைத்திரியின் அவசரமான தலையீட்டை கூட்டமைப்பு வலியுறுத்தும் புதிய அரசமைப்பு முயற்சி தாமதமடைந்து வருவதால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு புதிய அரச மைப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துமாறு அரச தலை வர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதற்காக அவரைச் சந் திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கட்சி கேட்டுள்ளது. எனினும் இதுவரை சந்திப்புக்கு நேரம் வழங்கப்படவில்லை. ‘‘அரச தலைவரைச் சந்திப்பதற்கு நாம் ஏற்கனவே நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தோம். இன்னும் கிடைக்க வில்லை. வடக்கில் ஏற்பட்ட அமைத…
-
- 0 replies
- 184 views
-
-
பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந் துள்ள இந்து ஆலயத்திற்கு அருகில் புதிதாக புத்தருடைய சிலை ஒன்றை இராணுவத்தினர் அடாத்தாக அமைத்துள்ளனர். வழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் போது உள்@ராட்சி திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது இலங்கையின் சட்டமாகும். ஆனால் இந்த நடை முறை குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதில் பின்பற்றப்படவில்லை என உள்@ராட்சி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர். பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் உள்ள வைரவ கோவிலிற்கு பக்கத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் சிறிதாக புத்தர் சிலை ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டள வில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டி ருந்தது. இந்த சிலை சிறி…
-
- 1 reply
- 569 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி அடுத்த சில நாட்களில் கைது.? கடற்படையினர் ஐந்து தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடையை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்யவுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கன்சைட் முகாமில் தடுத்து வைத்து கொடூரமாக சித்தரவதை செய்ததாகவும் அங்கு அவர்களைக் கொலை செய்தமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்ததாகவும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இரகசிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாகவும் அதன் படி…
-
- 0 replies
- 231 views
-
-
சிறிதரன் எம்.பி. பதவிமுத்திரை விவகாரம் – குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நாடாளுமன்றப் பதவி முத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவற்றை மோசடியான முறையில் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலயத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை யடுத்து அந்த விசாரணைகள் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனக் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவிமுத்திரை மற்றும் நாடாளுமன்றக் கடிதத் தலைப்பு போன்றவை களவாடப்பட்டுத் தவறானமுறைய…
-
- 0 replies
- 193 views
-
-
வடக்கில் நடக்கும் சிறு விடயங்களை தெற்கில் பெரிதாக்குகின்றனர் – சஜித் வடக்கில் இடம்பெற்ற சில சிறிய குற்றச் செயல்களை வைத்து வடக்கு மாகாணத்தில் மீண்டும் மோசமான சூழ்நிலை உருவாகி விட்டது என்று தெற்கில் சிலர் பொய் உரைக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேசிய பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் மேசன் கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருமறைக் கலா மன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது-; நாட்டில் சமாதானமும், சாந்தியும் ஏற்பட்டுள்ளமையை ஒர…
-
- 0 replies
- 184 views
-