ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
வடக்கு முதலமைச்சரை சந்தித்த செஞ்சோலைச் சிறார்கள் Share செஞ்சோலை சிறுவர் இல்லச் சிறார்கள் இன்று வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர்கள் சந்தித்தனர். http://newuthayan.com/story/17990.html
-
- 1 reply
- 311 views
-
-
புலிகள் அமைப்பில் இருந்து ஒடிவந்த சிறிதரனுக்கு அதிபா் பதவி வழங்கியதற்காக புலிகளின் கண்டனத்திற்கு ஆளாகினேன் – அரியரத்தினம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றாா் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினா் ப. அரியரத்தினம் தெரிவித்துள்ளாா். இன்று புதன் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் …
-
- 4 replies
- 509 views
-
-
-
- 2 replies
- 439 views
-
-
மடு திருத்தளத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..? மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலயப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது்டைய இரு பிள்ளைகளின் தாயாரான 'திலினி மதுசன்' என தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்டம் மடு திருத்தளத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்கள…
-
- 2 replies
- 550 views
-
-
பெரும்பான்மையின மாணவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பகுதியை பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு நேற்றையதினம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பதற்றமான சூழ்நிலை இன்று காலையும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடு…
-
- 2 replies
- 354 views
-
-
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது! நெடுந்தீவுக் கடற்பரப்பில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.com/story/17899.html
-
- 1 reply
- 213 views
-
-
தீர்மானங்களுக்கு ஏற்ப தமிழரசு கட்சி செயற்பட மறுக்கிறது :சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாணசபை அமைச்சர் விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூடி எடுத்திருக்கும் தீர்மானங்களுக்கு அமைவாக செயற்பட தமிழரசு கட்சி மறுத்து வருகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்ப…
-
- 0 replies
- 283 views
-
-
சபை நடவடிக்கை ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தின், சபை நடவடிக்கைகளில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகள் இல்லாமற் செய்யப்படுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து சபையில் உரையாற்றினார். தன்னுடைய, கேள்விக்கு அரசாங்கம் உரிய பதிலை இப்போதே வழங்கவேண்டுமென்றும் அவர் கோரிநின்றார். எனினும், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இன்மையால், இக்கேள்விக்கு, பிறிதொரு தினத்தில் பதிலளிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும்…
-
- 0 replies
- 233 views
-
-
யாழ். சுன்னாகத்தில் நால்வர் கைது Comments - 0 Views - 1 சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்செயல்கள், வாள்வெட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் நால்வரை நேற்று (08) இரவு கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கைதான நால்வரும் மானிப்பாய் நவாலி பகுதியைச் சேர்ந்த 22, 23, 24 வயதுடைய நபர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டு வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வாளால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியமை, கொக்குவில் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள…
-
- 3 replies
- 647 views
-
-
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ரணில் மீதும் கொண்டுவருவோம் அமைச்சர் ரவியைத் தொடர்ந்து அது நடக்கும் என்று நாமல் எம்.பி. நேற்று சூளுரை அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற் றதும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராகவும் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் நிதி அமைச் சரும் தற்போதைய அயலுறவுத்துறை அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கருத்துத்…
-
- 0 replies
- 186 views
-
-
நடந்து வந்த பாதையை திரும்பி பாருமேன்! வடக்கு அரசியல் மீண்டும் உச்சக் கொதிநிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விïக்னேஸ்வரன் எடுத்த முடிவால் வந்த விளைவு, வடக்கு அரசியல் அடிக்கடி கொந்தளித்து தமிழர் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. அமைச்சர்கள் மீதான விசாரணை விவகாரத்துடன் உச்சக்கட்ட வில்லங்கம் தொடங்கியது. முதலமைச்சர்மீது ஆளும் கட்சியில் ஒரு தரப்பினரே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்ற அளவுக்கு அந்த வில்லங்கம் நீண்டு – விரிந்து – படர்ந்தது. இந்த விவகாரம் கூட்டமைப்பின் தலைவரின்…
-
- 0 replies
- 368 views
-
-
நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த சுதந்திர கட்சியை சுயவிருப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்து விட்டு கட்சியிலிருந்து விலகிச் செல்ல முற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கட்சியின் வளர்ச்சிக்கு முரணாக செயற்படுகின்றார். மஹிந்தவுக்கு தனது மகனான நாமல் ராஜபக் ஷவை ஜனா திபதி பதவியில் அமர்த்துவதற்கான தேவை இருக்கின்றது போலவே தெரிவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹங்குராங்கெத்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு சுதந்திர கட்சி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவி…
-
- 0 replies
- 258 views
-
-
சர்வஜன வாக்குரிமை கோரப்பட வேண்டும்.! உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போட்டுவிட்டு மாகாண சபைகளின் கால எல்லையையும் நீடிக்க முனைவது மக்கள் இறைமையை மீறும் செயற்பாடாகும். எனவே இதற்கு சர்வஜன வாக்குரிமை கோரப்பட வேண்டும் என குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துளார். முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச மாகாண சபை தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 238 views
-
-
வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்.! எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளுடனான ஒப்பந்தத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இல ங்கையின் ஒரு அங்குல நிலவுரிமையை கூட வழங்க முடியாது என்ற விடயத்தை சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை சீன நட்புறவுச் சங்கத்திற்கு அறுபது ஆண்டுகள் பூர்தியாவதையிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பூர்தியாவ…
-
- 0 replies
- 254 views
-
-
ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது.! பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவார் என்கின்ற மக்கள் அபிப்பிராயம் தற்போது பொய்ப்பித்துள்ளது. எனவே இளைய சமூகத்தினரை போதைக்கு அடிமையாக்கிவிட்டு தமது ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ரணில் விக்கிரமச…
-
- 0 replies
- 225 views
-
-
சாவகச்சேரி நகரைக் கண்காணிக்க விரைவில் சி.சி.ரி.விக் கமராக்கள் வணிகர் மன்றத் தலைவர் தெரிவிப்பு சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்களைப் பாதுகாப்பதற்கும், அங்கு நடக்கும் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்கும் நகரப் பகுதியில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படும் என்று சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் ந.சிவபாலன் தெரிவித்தார். நாட்டில் அதிகரித்து வரும் திருட்டுக்கள் மற்றும் சாலை விபத்துக்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் தொடர்பாக சாவகச்சேரி நகரப் பகுதி வணிகர்களுக்கான நடமாடும் சேவை நேற்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இத…
-
- 0 replies
- 228 views
-
-
’அரசமைப்பு சபையிலிருந்து வெளியேறியமை சபையை பாதிக்காது’ “அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியமை, அச்சபையின் நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில், நேற்று (09) அறிவித்தார். நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். முன்னதாக எழுந்த அவர், “புதிய அரசமைப்பு திருத்தத்தை உருவாக்குவதற்கான அசரமைப்பு நிர்ணய சபையிலிருந்து, தான் உள்ளிட்ட, …
-
- 0 replies
- 193 views
-
-
ராஜிதவுக்கும் நெருக்கடி மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகைமைகளைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிடத் தவறினால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அரச மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மருத்துவர் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அந்தச் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களில் நிச்சயமாக வெளிவருமென சுகா…
-
- 0 replies
- 317 views
-
-
20ஆவது திருத்தத்தின் மீது அக்கறை கொள்வது அவசியம் வடக்கு மாகாண சபைக் குழப்பங்களுக்கு மத்தியில் மாகாண சபை விடயத்தில் கொழும்பு அரசு எடுத்திருக் கும் நடவடிக்கை ஒன்று கவனத்தை ஈர்க்காமல் அக்கறை செலுத்தப்படாமல் விடப்பட்டுவிட்டது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கத் துடன் அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு கொழும்பு நடவடிக்கை எடுத்துள்ள விடயம்தான் அது. இது தொடர்பாக – மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கான அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான- வர்த்தமானி அறிவித்தல் தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்கவால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன டிப்படையில் கடைசியாகத் தேர்தல் நடந்த மாகாண சபை யின் பதவிக் காலம் …
-
- 0 replies
- 393 views
-
-
சக்தி டிவி செய்திகள் 09 08 2017 , 8PM
-
- 0 replies
- 515 views
-
-
வறட்சி நிவாரணத்துடன் ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய நாட்டில் இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்களை சுமந்து கொண்டு அந் நாட்டு சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ரஷ்ய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப்பொருட்களை சுமந்த சிறப்பு விமானம் இன்று நண்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ரஷ்யாவிலிருந்து வந்த குறித்த உதவிப்பொருட்களை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகார…
-
- 0 replies
- 314 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடன் சம்பந்தன் சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்றைய தினம் குறித்த சந்திப்பு எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்தும், விடுவிக்காத காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள் எதிர்நொக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/UK-Cross-party-Delegation-Meets-Hon--Sampanthan
-
- 0 replies
- 463 views
-
-
கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது. பஸ்ஸின் சாரதி கைது செய்…
-
- 25 replies
- 1.8k views
-
-
ஆவாகுழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக சந்தேகம் கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளபோதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் 'ஆவா' குழுவுக்க…
-
- 0 replies
- 493 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 09-08-2017 IBC
-
- 0 replies
- 266 views
-