ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெல்லிப்பளை இளைஞர் கைது யாழ் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சற்று முன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவலின் அடிப்படையில் சற்றுமுன் தெல்லிப்பழையை சேர்ந்த 24 வயதுடைய …
-
- 0 replies
- 336 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 08 2017 , 8PM
-
- 0 replies
- 316 views
-
-
வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!! வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலி…
-
- 11 replies
- 878 views
-
-
இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவினை தடுக்க முடியாதிருப்பது ஏன்? (ஆர்.ராம்) 2009 இற்கு பின்னர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன்? என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்படுவதால் நிம்மதியற்ற சூழலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22890
-
- 0 replies
- 259 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? (ஆர்.ராம்) வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? என கூட்டு எதிர்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்மஉதயசாந்த அரசாங்கத்திடத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை, தாக்குதலின் போது சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா, தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? என பத்ம உதயசாந்த எம்.பி சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சகால ரட்நாயக்கவிடத்தில் கேள்வ…
-
- 0 replies
- 415 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 08-08-2017 IBC
-
- 0 replies
- 130 views
-
-
உறைக்கும் உண்மை ஆரம்பித்த நாளில் இருந்து சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத வடக்கு மாகாண சபைஇ தொடர்ந்தும் சர்ச்சைகளுக்குத் தீனி போட்டுக்கொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் மீள் நியமனத்தையொட்டி இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சரவையில் தனக்கு எதிரானவர்கள் என்று கருதும் சுகாதார அமைச்சரான ப.சத்திய லிங்கத்தையும் போக்குவரத்து மீன்பீடி அமைச்சரான பா.டெனீஸ்வரனையும் நீக்குவது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவான விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவும் பதவி விலகவேண்டிய சூழல் தன்னாலேயே ஏற்பட்டதைத…
-
- 0 replies
- 366 views
-
-
கைவிடப்பட்ட பகுதியா யாழ் . குடாநாடு? அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சிங்கப்பூர் அயலுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், யாழ்ப்பாணத்தவரின் பெருமைகளையெல்லாம் வானளாவப் புகழ்ந்து உரைத்தார். இதைக் கேட்டு யாழ் மக்களின் உள்ளம் புளகாங்கிதம் அடைந்தது. இத்தனை பெருமைகளுக்கு உரியவர்களா நாம்? என்ற வியப்புக் கூட ஏற்பட்டது. ஆனால் அந்த இறுமாப்பு அதிக நாள்களுக்கு நீடிக்கவில்லை. மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழி யன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பெருமையுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தவரைத் தலைகுனிய வைத்து விட்டது. நேர்மையான ஒரு நீதித்துறை உயரதிகாரி…
-
- 0 replies
- 296 views
-
-
‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’ “கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நீண்ட …
-
- 0 replies
- 309 views
-
-
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு: 10 பேர் கைது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகாதப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் 2 பேர் கடலில் குதித்து மாயமானர். படகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை, மண்டபம், ராமேஸ்வரம…
-
- 1 reply
- 292 views
-
-
பஸ் விபத்தில் பெண் பலி ; 11 பேர் காயம் அரநாயக்க, உஸ்ஸபிடிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் பலத்த காயங்களுடன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் இருந்த நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸானது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானதெனவும் விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களை மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின…
-
- 0 replies
- 363 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டார். நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு…
-
- 2 replies
- 377 views
- 1 follower
-
-
இரணைமடுக் குளத்தின் சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டது இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம்பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கிவிட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் நடாத்தும் போது குளத்தில் பத்தடி நீர் இருந்தது. உண்மையில் இந்நீர் மட்டத்தினை வைத்து சிறுபோக நெ…
-
- 0 replies
- 138 views
-
-
சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 5 replies
- 751 views
-
-
யாழ். சுற்றிவளைப்பில் 33 பேர் கைது குடாநாடெங்கும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மொத்தமாக 33 பேர் கைது செய்யப்பட்டதாக வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்புக்களில் காங்கேசன்துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்தியங்களில் இந்த கைது கள் பதிவானதாக வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்களை மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் அறிவித்தது. குடாநாட்டின் குடவத்தை , துன்னாலை, வேம்படி, அல்வாய் மற்றும் யாழ். பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்…
-
- 3 replies
- 438 views
-
-
பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!! Share யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது http://newuthayan.com/story/17099.html
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது. இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது. இந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிரு…
-
- 0 replies
- 202 views
-
-
11 பேர் ஐ.தே.கவில் இணைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில…
-
- 0 replies
- 183 views
-
-
காவல்துறையினர் மீதான வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி – நிஷா விக்டரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறையினா மீது கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர். அந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஐந…
-
- 0 replies
- 256 views
-
-
துன்னாலையில் நேற்றும் தேடுதல் துன்னாலையில் மூன்றாவது நாளாக நேற்றும் வீடு வீடாக சோதனை நடத்தினர் சிறப்பு அதிரடிப் படையினர். குடும்ப அட்டை, குடும்பப் படங்கள் அடங்கிய ‘அல்பங்களையும்’ அவர்கள் பரிசோதித்தனர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிகாலை 3.30 மணிக்கு அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார், ‘பீல்ட் பைக்’ குறூப்பினர் களமிறக்கப்பட்டனர். வீதிச் சோதனையுடன் வீடு வீடாகவும் சோதனை நடத்தப்பட்டது. குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய ஒளிப்படங்கள், அல்பங்களையும் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் பரிசோதித்தனர். இந்தச் சோதனை…
-
- 0 replies
- 218 views
-
-
புளொட்டின் பதவி யாருக்கு? மாற்றியமைக்கப்படும் வடக்கு அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும் இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளதாக அறிய முடிகின்றது. புளொட் அமைப்பினை நேரடியாகப் பிரதிநிதித்துவப்பட…
-
- 0 replies
- 232 views
-
-
சம்பந்தர் சமாளிப்பு மாவை கொந்தளிப்பு மாகாண சபை விவகாரத்தால் முறுகல் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற் பதில்லை என்ற முடிவால், கட்சியின் உயர் பீடத்தினருக்கு இடையிலும் அது முறுகலை ஏற்படுத்தியுள்ளது என்று உதயன் அறிந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் சமாளிப்பு போக்கில் நடந்துகொள்வதை அடுத்தே இந்த நிலமை தோன்றியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் நடத்தினர். மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்…
-
- 0 replies
- 218 views
-
-
அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம் வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப் பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப் படும் என்று தெரிகிறது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும் மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகி றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் …
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கு அமைச்சர் நியமனத்தில்: புவிசார் அரசியல் தலையீடு தமது எதிரிநாட்டு உளவாளிக்கு அமைச்சுப் பதவி கொடுக்காதீர் என்று அயல்நாடு வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளதாக உதயன் பத்திரிகை அறிந்தது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப் பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகிறது. தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப் ப…
-
- 0 replies
- 262 views
-
-
பதவியை இராஜினாமா செய்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/minister-sathiyalingam-resign-
-
- 4 replies
- 1.1k views
-