ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் சிறப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்ககையில் இன்று காலைமுதல் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில், பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர். துன்னாலைப் பகுதியில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையிலையே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு நேற்று, நெல்லியடி- விராலிப் பகுதியில் பொலிஸ் அதிகாரிமீது தாக்குதல் இடம்பெற்ற இடத்தினையும் பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார். http://uthayandaily.com/story/14274.html
-
- 2 replies
- 1k views
-
-
பெற்றோல் விநியோகத்தில் இராணுவம் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். முப்படையினரின் ஒத்துழைப்புடன் முப்படையின் சாரதிகள் ஊடாக பௌசர் மூலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை சீனாவுக்கும் சீன துறைமுகத்தின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்…
-
- 7 replies
- 827 views
-
-
சரணடைந்த சந்தேகநபர் தனிக் கூண்டில் அடைப்பு நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சரணடைந்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார். நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை சரணடைந்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் நீதிவான் வீட்டில் முற்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி…
-
- 1 reply
- 318 views
-
-
‘பொலிஸா என்று கேட்டு அடித்தனர்’ -செல்வநாயகம் கபிலன் “நீ பொலிஸா” என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோத்தரான எஸ். சிந்துராஜ் தெரிவித்தார். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரான இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு (26), வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான், வீட்டிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இதன்போது ம…
-
- 2 replies
- 427 views
-
-
பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே வழமைபோல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதாவது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்கப்பட்ட கொள்கலனிலிருந்து 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம். இக்கடத்தலின் பின்னணியில் அரசியல் இருப்பதால் இந்நிறுவனத்தின் பொறுப்பாளரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதி பதவி விலக்கி விட்டு நியாயமான விசாரணை நடாத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்விடயமாக இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள ச.தொ.ச. களஞ்சியசாலைக்கு சீனி கொண்டுவரப்பட்டது பற்றி கைத்தொழில் மற்றும் வர்த்…
-
- 3 replies
- 582 views
-
-
வவுனியாவில் பொருத்து வீட்டால் பதற்றம் வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின…
-
- 0 replies
- 264 views
-
-
கொக்குவிலில் வாள்வெட்டு; விரல் துண்டானது கொக்குவில் கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று மதியமளவில், இளைஞன் மீது இனந்தெரியாதோர் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் இளைஞனது விரல் துண்டாகியுள்ளது. உடனடியாகவே அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். http://uthayandaily.com/story/14286.html
-
- 1 reply
- 688 views
-
-
(விடிவெள்ளி பத்திரிகை இன்று 27 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கிச் செல்வதாகவும் அதிலிருந்து கிழக்கை மீட்பதற்கு தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கருணா அம்மானின் இந்தக் கருத்து இந்த முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரணி…
-
- 2 replies
- 562 views
-
-
நினைவேந்தல்... வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கறுப்பு ஜுலையை நினைவு கூறும் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், எம்.நடராஜா மற்றும் ரெலோ இயக்கத்தின் பிரசார செயலாளரும் சிவன் பௌண்டேசன் நிறுவனத்;தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் உட்பட ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர்கள…
-
- 0 replies
- 304 views
-
-
நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: முரண்பாடான கருத்துக்களும் வதந்திகளும் வருவதாக நாமல் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில், நீதிபதி ஒரு கருத்தையும் பொலிஸார் ஒரு கருத்தையும் சரணடைந்த சந்தேகநபர் வேறொரு கருத்தையும் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். சவாலுக்காக தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சரணடைந்த நபர் கூறுவதால், சவாலை நிறைவேற்ற எவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ தெரியாது என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். உண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டாரென யாழ்ப்…
-
- 0 replies
- 322 views
-
-
ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இரண்டாவது பிரதிவாதியான லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதி தங்கியுள்ளதாகக் கூறப்படும் கடற்படைத் தலைமையகம் மற்றும் அவரது தனிப்பட்ட முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததுடன், அதற்கு இதுவரை அவர் பதில் வழங்கவில்லை என்றும் தெரிவித்தது. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத…
-
- 0 replies
- 249 views
-
-
சக்தி டிவி செய்திகள் 27th July 2017, 8PM
-
- 0 replies
- 296 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 27-07-2017
-
- 0 replies
- 155 views
-
-
“புலிகளுக்கு ஆதரவு என தமிழரின் கட்டடத்தை மகிந்த ராஜபக்ஷ பறித்தது செல்லாது” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்து செய்துள்ளது. படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI இதன்படி பயங்கரவாத புலனாய்வு பிரிவு இந்த கட்டடத்தை எட்டு வாரங்களுக்குள் அதன் உரிமையாளரிடம் கையளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டடத்தை பறிமுதல் செய்ய முன்னாள் பாதுகாப்பு அம…
-
- 0 replies
- 377 views
-
-
இணைந்ததன் நோக்கங்கள் நிறைவேறாததால் விலகுகிறோம் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவிப்பு கேள்வி: நீங்கள் கூட்டாட்சி அரசை விட்டு விலகவுள்ளீர்கள் என்று கதை அடிபடுகிறது. அதுபற்றிய தங்களது கருத்தென்ன? பதில்: நாம் நீண்ட காலமாக மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள்.கடந்த அரச தலைவர் தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததும், நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அவரை தலைமை அமைச்சராக்கி சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம்.அது சாத்தியப்படவில்லை. அதன் பின்னர் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்குவதற்கு முயற்சி செய்தோம். அந்த …
-
- 0 replies
- 320 views
-
-
சுழற்சி அடிப்படையில் பதவி;சபையிலிருந்து விடைபெற்றார் மயூரன் -எம்.றொசாந்த் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனின் பதவிக்காலம் முடிவடைந்ததையிட்டு, இன்றைய (27) அமர்வுடன் அவர், சபையிலிருந்து வெளியேறினார். வடமாகாண சபையின் 100ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று (27) இடம்பெற்றது. இவ்வமர்வுடன், செந்தில்நாதன் மயூரன் அவையிலிருந்து வெளியேறினார். இதன்போது, “இன்றுடன் நான் சபையில் இருந்து வெளியேறினாலும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில…
-
- 0 replies
- 230 views
-
-
அமர்வுகளை திறமையாக நடத்தினோம் என்கிறார் அவைத்தலைவர். – பயனற்ற அமர்வுகள் என்கிறார் எதிர்க்கட்சி உறுப்பினர். சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். இதேவேளை கடந்த 100 அமர்வுகளும் பயனற்றதாகவே நடந்து முடிந்துள்ளது. இனியாவது 101ஆவது அமர்வில் இருந்தாவது , பயனுள்ள அமர்வுகளை நடாத்துவோம் எ…
-
- 0 replies
- 162 views
-
-
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டு…
-
- 0 replies
- 206 views
-
-
நல்லூர் திருவிழா காலத்தில் பின்பற்ற வேண்டியவை மாநகர சபை அறிவுறுத்தல் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந் தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. திருவிழாக் காலங்க ளில் ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் நலன் கருதி யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் பின்வரும் அறிவுறுத்தல்க ளைப் பின்பற்று மாறு கோரியுள்ளனர். உற்சவகாலத்தில் கோயில் சுற்றாட லிலும் கோயிலுக்கு வரும் பாதைகளிலும் தாங்கள் உள்ளெடுக்கக்கூடிய குடிதண்ணீர் மற்றும் உணவுப்பொருள்கள் சுகாதாரமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அது தொடர்பில் முறைப்பாடுகளை 021 222 2645 எனும் தொலைப…
-
- 1 reply
- 468 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சருடன் கேப்பாப்பிலவு மக்கள் கலந்துரையாடல் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். கேப்பாப்பிலவில் படையினர் வசமிருந்த 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக கடந்த 19 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், இந்த காணி வௌிமாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு நடுத்தர தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் அதில் உள்வாங்கப்படவில்லை எனவும் மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர். குறித்த தினம் காணி விடுவிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந…
-
- 4 replies
- 367 views
-
-
துவாரகேஸ்வரன் மீது பகிரங்கப் பிடியாணை புதுக்கடை நீதிமன்று நேற்று உத்தரவு யாழ்ப்பாண வர்த்தகர் தி.துவார கேஸ்வரனுக்கு எதிராகப் பகிரங்கப் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது கொழும்பு, புதுக்கடை நீதிவான் மன்று. தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகத்தர்களை கடமை செய்யவிடாது அடாவடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்த வழக்கிலேயே நீதிமன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, துவாரகேஸ்வரனின் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் பேருந்து சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிவான் …
-
- 0 replies
- 490 views
-
-
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் புங்குடுதீவு மாணவி கொலை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மகளிர் விவகார மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், சம்பவம் இடம்பெற்ற போது ஊர் மக்களினால் சுற்றி வளைத்து மின் கம்பம் ஒன்றில் கட்டியிருந்ததாகவும் அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்காது விடுவித்தமை தொடர்பில் விஜயகலா மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜயகலாவிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய…
-
- 0 replies
- 246 views
-
-
9 மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் ரணிலின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி 9 மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவைத் துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தல்களைத் தனித்தனியாக நடத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஓர…
-
- 0 replies
- 344 views
-
-
‘போராளிகள் இலக்குவைப்பு’ -எஸ்.என். நிபோஜன் புனர்வாழ்வு பெற்று சமுகமயப்படுத்தப்பட்ட போராளிகளை இலக்குவைத்து, பல்வேறு சம்பவங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, ஜனநாயக போராளிகள் கட்சி, நேற்றுக் குற்றஞ்சாட்டியது. நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்தியிருக்கின்றமை மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டு, நுண்கலைக் கல்லூரியில் கடமையாற்றிய கண்ணதாசன் மீது பயங்கரவாதப்பிரிவு தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில், அவர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தினர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/போராளிகள்-இலக்குவைப்பு…
-
- 0 replies
- 261 views
-
-
ரவிராஜ் வழக்கு; நேவிசம்பத்துக்கு பிடியாணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம், சிங்கள அறங்கூறும் சபையின் ஏகமனதான முடிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விடுவித்து கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, நடராஜா ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் முதன்மைச் ச…
-
- 0 replies
- 230 views
-