ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
யாழ். வருகின்றார் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்! இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார். யாழ். நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யப்பட்டும் என்றும், நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பியல் திணைக்களத்துக்கு சிங்கப்பூர் உதவ உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/12249.html
-
- 2 replies
- 656 views
-
-
மாணவியை வீடு புகுந்து கடத்திச் செல்ல முயற்சி! மடக்கிப் பிடிக்கப்பட்டவர் நையப்புடைப்பு இமையாணனில் நேற்றுச் சம்பவம் வீடு புகுந்து மாணவியைக் கடந்த முயன்ற குழுவை ஊர் இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்களை நன்றாகக் கவனித்த பின்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதுடைய மாணவி ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று கூறி இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளா. பெற்றோர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்தனர். இருவரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த…
-
- 0 replies
- 591 views
-
-
இதுவே தருணம் புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் 'இலங்கை மக்கள்' நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ரணில் (க.கமலநாதன்) நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றினால் பிரச்சினைகளை தீர்க்கப் பார்த்தோம். சமாதானம் இல்லாத காரணத்தினால் அது சாத்தியப்படவில்லை. தற்போது ஒற்றுமையான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான தருணத்திலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பணிகளை மேற்கொள்கின்றோம். இதுவே எமக்கான சரியான தரு ணமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் நடத்தப்…
-
- 0 replies
- 485 views
-
-
வவுனியா, முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரன்டினா தொழில்வள நிலையத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. வவுனியா, முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். க.…
-
- 0 replies
- 240 views
-
-
1956 தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் போராட்டமும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இலங்கை பொலிஸ் நிலையத்திற்கு தவறவிடப்பட்ட எனது அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தேன். என்னிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்தவர் ஒரு சிங்களப் பெண் பொலிஸார். கொச்சையான தமிழில் உரையாடியபடி எனது வாக்மூலுத்தை சிங்களத்தில் எழுதினார். அந்த சிங்கள முறைப்பாட்டின் நடுவில் எனது தமிழ் கையெழுத்தை இட்டேன். இலங்கையில் தமிழ்மொழியின் நிலமையை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் வெளிப்பாடாக 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே வடகிழக்கை இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாவற்குழி விகாரை சீரமைப்புக்கு வடக்கு அரசியல்வாதிகளே தடை குற்றம் சாட்டுகின்றார் விகாராதிபதி வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல் வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம் சுமத்தி யுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விகாரை அமைப்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து, சாவகச்சேரிப் பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவ…
-
- 1 reply
- 222 views
-
-
"அமைச்சரின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் வைத்திய கல்லூரியை நிறுவினேன்" முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபாலவின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் நிறுவனத்தை நான் நிறுவினேன். எனவே இது இலாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கற்கை நிறுவனம் அல்லவென சைட்டம் நிறுவனத்தின் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்தார். நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையை அரச உடமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலாபமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தினால் மாத்திரம் நாம் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்ச…
-
- 0 replies
- 174 views
-
-
விவியன் பாலகிருஸ்ணன் – சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாகிருஸ்ணனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்ப நடைபெற்றுள்ளது. http://uthayandaily.com/story/12218.html
-
- 1 reply
- 340 views
-
-
திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம்திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம் இந்திய – ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) திருகோணமலையில் இந்தியா, ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனம் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதற்…
-
- 0 replies
- 261 views
-
-
ஊடகவியலாளரிடம் சிஐடீ விசாரணை - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது என்றும் முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெ…
-
- 1 reply
- 255 views
-
-
ஞானசார தேரருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் ; கொழும்பு மேலதிக நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் 'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதி வானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீ…
-
- 0 replies
- 395 views
-
-
கூட்டமைப்பும் – ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு அரசமைத்தால் நாட்டுக்குப் பேராபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பது நாட்டுக்குப் பேராபத்தாக அமையும். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அபாய எச்சரிக்கையை நேற்று விடுத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் மகிந்த சமரசிங்க கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது கூட்டு அரசில் அங்கம் வகிப்பவர்களெல்லாம் விரும்பி வந்தவர்களே தவிர, அழுத்தங்களால் சேர்ந்தவர்கள் அல…
-
- 0 replies
- 205 views
-
-
"கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு" சுவாமிநாதன் தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் 140 நாளான நேற்றைய தினம் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர். 480 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்படவேண்டி உள்ள நிலையில் நாளையத்தினம் முதல்கட்டமாக 180 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்படும் என அமை…
-
- 3 replies
- 865 views
-
-
விக்கியிடம் ரெலோ கடிதம் கையளிப்பு வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் உள்ள அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை நியமிக்கக் கோரும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் ந.சிறீக்காந்தா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளித்துள்ளார். http://uthayandaily.com/story/12182.html
-
- 2 replies
- 799 views
-
-
பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவ…
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார் என்றார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி ம…
-
- 6 replies
- 637 views
-
-
ஊடகவியலாளர்களை வெளியேற்றிய வட மாகாண சபை அமைச்சர் வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன வெளியேற்றினார். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து குறித்த பேருந்து நிலையம் மூடப்பட்டது. இந் நிலையில் குறித்த பேருந்து நிலையத்தினை மீள் இயங்க செய்வது …
-
- 0 replies
- 235 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18th July 2017, 8PM
-
- 0 replies
- 339 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என ஜேர்மன் தொழிநுட்பவியலாளர் ஒருவர் சவால் விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகவியலாளர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமாக வடக்கத்தையான் எனத் திட்டிய ஒலிவடிவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அவர் நேற்று மலையக மக்களைச் சந்தித்து தனது உரையாடலை தற்போதுள்ள தொழிநுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறும், அவ்வாறு உறுதிப்படுத்தினால் தான் பதவி விலகுவதாகவும் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சிறிதரனின் சவாலினை ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சுவுடு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் வொய்ஸ் அனலைசிஸ் (Voice Analysis) து…
-
- 0 replies
- 344 views
-
-
சூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்திய படகு ஒன்று முல்லைத்தீவு கடற் பரப்பில் சஞ்சரிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இந்த படகு கடந்த நாட்களில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சஞ்சரித்தது என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கடற்படையின் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய படகுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும் அவை கடலில் வி…
-
- 0 replies
- 213 views
-
-
நேர்மையே தேவை அரச வளங்களைப் பங்கிடுவதில் உள்ள பாரபட்சம், நீதியின்மை, அரசியல் தலையீடுகள் என்பவை இனங்களுக்கு இடையே விரிசல்களையும், முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவது இன்னமும் நின்றபாடாக இல்லை. இத்தகைய போக்குகளால் கடந்த காலங்களில் நீண்ட ஆயுதப் போராட்டம் ஒன்றைச் சந்தித்து நொந்துபோனதன் பின்னரும்கூட வரலாற்றிலிருந்து எவரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்திருக்கும் இளைஞர்களின் ஊர்வலம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இதைத்தான் எண்பிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது இனம்சார் தூண்டல்கள் போன்…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கையில் சிறுமிகள் அதிகம் கர்ப்பம் தரிக்கும் மாவட்டம் எது தெரியுமா ? ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் நாட்டில் மிகச் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் அதிகமுள்ளதாக பகுதியாக மாத்தளை மாவட்டத்தில் லக்கல, வில்கமுவ, நாவுல, அம்பங்கஸ்க ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். மாத்தளை செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சு முன்னெடுத…
-
- 0 replies
- 323 views
-
-
சந்தைக் குறைபாடுகளை அறிய நேரில் சென்றார் வடக்கு முதலமைச்சர்! படங்கள்: செ.நிருஜன் (facebooK) கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்றார். மு.ப. 10 மணியளவில் அங்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார். 2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லை. மலசலகூட வசதிகள் சீரில்லை. உரிய முறையில் சந்தை சுத்தப்படுத்தப்படுவதில்லை. சந்தைத் கட்டடத் தொகுதியில் மேல் மாடியில் அமைந்துள்ள கடைகள் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை திறக்கப்படுவதில்லை. அவற்றை …
-
- 1 reply
- 425 views
-
-
வல்லையில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு - செல்வநாயகம் கபிலன், கே.மகா பருத்தித்துறை, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள, வல்லை பாலத்தின் கீழ், துப்பாக்கியின் பாகங்கள், நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பாலத்தின் கீழ் இறால் பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் வரட்சி காரணமாக கடல் நீரேரியில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதுவரை காலமும் நீருக்குள் புதையுண்டிருந்த நிலையில் துப்பாக்கியின் பாகங்கள் வெளியில் தென்பட்டுள்ளது. கடல் நீரில் இருந்தமை காரணமாக, மிகவும் உ…
-
- 0 replies
- 297 views
-
-
மன்னார் குழப்பம் ; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு மன்னார் கரிசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயக் காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனி…
-
- 0 replies
- 300 views
-