ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை: லஞ்சம் பெற்றுக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, காணாமல் போனவர் ஒருவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து மூன்றரை லட்சம் ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிலாபம் காவல் நிலையத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள எட்டு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சந்தேக…
-
- 0 replies
- 287 views
-
-
காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கி யுவதி மரணித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோ ஷன் பெர்னாண்டோ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில் மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்யசாகரி (வயது 19) எனும் யுவதி தலையில் படுகாயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனும…
-
- 13 replies
- 1.7k views
-
-
வட மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் விசாரிக்கப்பட வேண்டும்; அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை வட மாகாண சபையின் அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என சபையின் உறுப்பினர் அரியக்குட்டி பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபை உறுப்பினர் அரியக்குட்டி பரஞ்சோதி, அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு பிரேரணையொன்றை அனுப்பி வைத்துள்ளார். வட மாகாண சபையின் அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 276 views
-
-
சங்கரியுடன் விக்கி ஆதரவு அணி நள்ளிரவில் திடீரெனச் சந்திப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவு அணி யைச் சேர்ந்த மூவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணி யின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் கொழும்பு இல்லத்திலேயே இந்தத் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வடக்கு அரசியலில் பெரும் குழப்பந…
-
- 2 replies
- 555 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எல்லையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் ; தயாசிறி - அமைச்சரவைத் தீர்மானங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பதை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். எவ்வாறெனினும் விரைவில் சைட்டம் பிரச்சினைக்கு தீர்வைக்காணுவோம் என்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அர…
-
- 0 replies
- 305 views
-
-
தனது ஆதரவு அணியுடன் சி.வி. இன்று அவசர சந்திப்பு!! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தனது இல்லத்தில் அவசர கலந்துரையாடல் ஒன்றை இன்று பி.ப. 6 மணிக்கு நடத்தவுள்ளார் என்று தெரியவருகின்றது. முதலமைச்சர் தனக்கு ஆதரவு வழங்கும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டுமே இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் கல்வி, விவசாய அமைச்சுக்களுக்கு இதுவரை அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில், கல்வி அமைச்சுக்கு இ.ஆனோல்ட்டின் பெயரை தமிழரசுக் கட்சி பரிந்துரைத்திருந்தது. இந்த நிலையிலேயே வடக்கு முதலமைச்சர் தனது ஆதரவு அணியுடன் இன்று பிற்பகல் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இது வடக்கு அரசியல் களத்தில் பல்வேறு ஊகங்களைக் க…
-
- 0 replies
- 353 views
-
-
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி இன்று ஆயிரகணக்கான மக்கள் நகரின் மத்தியில் பதாதைகளை ஏந்தியும், கறுப்பு கொடிகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் தமது வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும் மற்றும் சேதத்திற்கான நேர்த்தியான கொடுப்பனவுகள் இன்மை காரணமாகவும் அவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நகரின்…
-
- 0 replies
- 372 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 28-06-2017
-
- 0 replies
- 169 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் ; சட்டமா அதிபர் நீதிமன்றில் ஆரம்ப உரை வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை நாளை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் ஆரம்ப உரையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21266
-
- 1 reply
- 382 views
-
-
ருவான் தலைமையிலான குழு இன்று இரணைதீவு விஜயம் : போராட்டம் நடத்தும் மக்களையும் சந்திக்க ஏற்பாடு கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சி…
-
- 1 reply
- 372 views
-
-
சிகிச்சையின் பின் உடலில் பிக்குகள் குருதியே ஓடும் வடக்கு ஆளுநர் குரே கூறுகிறார் தென்னிலங்கையில் இருந்து நூறு பிக்குகள் யாழ்ப்பாணம் வந்து குருதிக் கொடை வழங்கியுள்ளனர். எமது சகோதர மக்களுக்குச் சுகவீனம் ஏற்படும் போது எமது குருதியைக் கொடுங்கள் என்று பிக்குகள் குருதிக் கொடை வழங்கியுள்ளனர். சுகவீனம் அடையும் நீங்கள் நலம் பெற்று வீடு செல்லும்போது அவர்களின் குருதியே உங்களின் உடலில் இருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையால் நடத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும…
-
- 5 replies
- 635 views
-
-
உறவுகளை இழந்த நிலையில் வீதியோரங்களில் அழுகை ஓலங்களுடன் தமிழ் மக்கள் இன்றும் திரிகின்றார்கள்
-
- 0 replies
- 306 views
-
-
சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு விடிவு இல்லை – சிறிதரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இல்லையென்றால் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் விடிவு இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், அண்மையில் நடைபெற்ற வடமாகாண குழப்பத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவுசெய்யாமையே காரணமென கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கு எந்தவொரு இடையூறுகளும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இதில் இணைந்துள்ள மூன்று கட்சிகளும் சம அந்தஸ்துக் கேட்…
-
- 15 replies
- 2.3k views
- 1 follower
-
-
கருணாநிதி வழியில் வடக்கு முதல்வர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தானே கேள்வியைத் தயாரித்து அதற்குப் பதிலையும் குறிப்பிட்டு பொது மக்களுக்குத் தெரியப் படுத்துவதைப் போன்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனும் ஊடக அறிக்கை ஒன்றை நேற்றுக் காலை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமது கட்சிக்குரிய அமைச்சுப் பதவியை இ.ஆனோல்ட்டுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியிருந்தது. இதன்பின்னணியில் வடக்கு முதலமைச்சர் நேற்று ஊடக அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது…
-
- 1 reply
- 337 views
-
-
தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு முதல்வர் ஏன் அச்சப்படுகிறார் ? கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு, சட்டரீதியான -– சுதந்திர மான தெரிவுக் குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதற்காக அச்சப்படுகிறார் – தயங்குகின்றார். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன். சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் இருவரையும் கட்டாய விடுப்பில் இருக்க முதலமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முத…
-
- 1 reply
- 272 views
-
-
தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் என்னை திட்டுகின்றார்கள் – மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் தன்னைத் திட்டுகின்றார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாள் தோறும் முகநூலில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்படுவதாகவும், அமைதியாக அவற்றுக்கு பதிலளிப்பதாகத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தேர்தல் நடத்தக் கூடிய பின்னணியை உருவாக்கினால் உடனடியாக தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உத்தேச உள்ளுராட்சி மன்றத் திருத்தச் சட்டத்…
-
- 0 replies
- 177 views
-
-
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள் வடக்கைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு தென்னிலங்கை சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஒரு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்…
-
- 2 replies
- 429 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை விமர்சிப்பது ‘எளிதான இலக்கு’ - சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இப்போது பலராலும் விமர்சிக்கப்படக் கூடியளவுக்கு உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், அது எளிதான இலக்காக உள்ளது என்றும் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். இலண்டன் சட்ட சங்கத்தில் ஆற்றிய உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் எம்.பியும், ஓய்வுபெற்ற கடற்படையைச் சேர்ந்த ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட மனு பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன…
-
- 1 reply
- 278 views
-
-
கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமனம் நாளை பதவியேற்பு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி நியமனம் பெற்றுள்ளார். நாளை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதியாக செயற்பட்டு வரும் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இவ்வாறு இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். மே…
-
- 0 replies
- 205 views
-
-
நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர் மீது தாக்குதல் : வவுனியாவில் சம்பவம் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபா…
-
- 3 replies
- 489 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (27/06/2017)
-
- 0 replies
- 267 views
-
-
பல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த பிரஜைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இத்தாலி அனுப்பி வைப்பதாக கூறி இந்த இலங்கையர்கள் துருக்கியில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். பின்னர் இத்தாலி செல்லும் நோக்கில் அவர்கள் பல்கேரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக பல்கேரியாவின் 38 அதிகாரிகளும் விமானத்தில் பயணித்துள்ளனர். இலங்கையர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
-
- 0 replies
- 957 views
-
-
புதிய அரசமைப்பு நாட்டை இரண்டாக்கும் – மகிந்த ஆருடம்!! நாட்டை இரண்டாக துண்டாடும் வகையில் புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்த கூட்டரசு முயற்சிக்கின்றது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற சமய வாழிபாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- அரசிசமைப்பில் பௌத்த மதத்துக்கு உரித்தான விடயங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என அரசு கூறினாலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சர்வதேச நீதிபதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித…
-
- 0 replies
- 281 views
-
-
கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை இன்று முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. குறித்த முன்பள்ளியின் கூரை வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் குறித்த கட்டிடத்துக்குள் இருந்துள்ளனர் இருப்பினும் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. குறித்த முன்பள்ளிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கிராமமட்ட அமைப்புக்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராமசேவையாளர் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நடந்த சம்பவம் தொடர்பாகவும் கலந்த…
-
- 0 replies
- 231 views
-
-
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடைமையாக்க அமைச்சரவை அனுமதி மாலபேயிலுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடைமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுபடுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. http://www.virakesari.lk/article/21268
-
- 0 replies
- 292 views
-