ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்பட எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 70 மில்லியன் …
-
- 0 replies
- 294 views
-
-
அமைச்சர்கள் அனைவரையும் மீண்டும் விசாரிக்க வேண்டும் தமிழக முதல்வர்கள் இந்திய நடுவண் அரசுக்கும் அதன் தலைமை அமைச்சருக்கும் அடிக்கடி கடிதங்கள் எழுதிவிட்டு அதனை ஊடகங்களில் வெளியிட்ட நடப்பைப் பார்த்து ரசித்த ஈழத் தமிழ் வெகுமக்களுக்கு, இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்களை கண்டு மகிழும் பேறு கிடைத்திருக்கிறது. இந்தக் கடிதங்களின் அடிப்படையில் நேற்றைய பகலில் (இதற்குப் பின்னரும் வேறு சில கடிதங்களுக்கு இன்னமும் இடமிருக்கிறது) முதலமைச்சர் பதவியில் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 410 views
-
-
ஊழல் அற்ற ஆட்சியே தமிழ் மக்களின் இன்றைய தேவை அமைச்சர்களின் ஊழலுக்கு எதிராக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவந்து ஊழல் விசாரணைகளை தடுக்க முயன்ற சமயோசிதமற்ற செயலானது, ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு கறை படிந்த நிகழ்வாகவும், அனைத்துத் தமிழர்களின் மனதிலும் எதிர்காலம் மற்றும் நல்லாட்சி பற்றிய ஒரு நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இடம் பெற்ற தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் முழுக் கடையடைப்பு என்பவை காரணமாக, தமிழர் வாழும் பகுதிகளில் பெருமளவு …
-
- 0 replies
- 331 views
-
-
யாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் மஞ்சுள காந்தோல தலைமையிலான எட்டு போலிஸ் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்ன…
-
- 0 replies
- 331 views
-
-
பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் ; ரில்வின் சில்வா பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். இப்போதும் அதையே மேற்கொண்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய ஒற்றுமையை வளர்ப…
-
- 0 replies
- 191 views
-
-
ஆவணங்கள் மாயம் என்று மக்கள்தான் சொன்னார்கள் வடக்கு மாகாண அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள்தான் எனக்குச் சொன்னார்கள். அதைத்தான் நான் உங்களுக்குக் கூறினேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நான் தீர்மானத்தை அறிவித்த அன்று இரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தகவல் தந்த மக்களை யாரென்று கூறமாட்டேன். அவர்கள் இப்போதும் அது உ…
-
- 0 replies
- 286 views
-
-
''கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார் : ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை'' பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம் ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷ முயற்சி செய்கிறார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ஷவே பொதுபல சேனாவை பலமான பெளத்த அமைப்பாக உருவாக்கினார். பொதுபல சேனாவினருக்கு நிதி உதவிகளையும் வாகனங்களை வழங்கி அவ்வமைப்பை பலப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையி…
-
- 1 reply
- 393 views
-
-
வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது : சம்பிக்க (ஆர்.யசி) வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் வடக்கில் தைரியமாக வாழ முடியும் ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜாதிக ஹெல உறுமைய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/21035
-
- 2 replies
- 408 views
-
-
முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம் Published by RasmilaD on 2017-06-19 12:33:29 வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, திடீரென அப்பகுதிக்குச் சென்ற முதலமைச்சரி…
-
- 4 replies
- 747 views
-
-
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் -நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம். இருந்தாலும் முதலமைச்சரின் அமைச்சு உட்பட ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும், அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிக்கான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடக பேச்சாளர் கே. சயந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்ப…
-
- 1 reply
- 293 views
-
-
அவைத் தலைவர் விவகாரத்தில் சர்ச்சை உருவாகக்கூடுமென அச்சம்! கடந்த ஒரு வாரகாலமாக வடமாகாணத்தில் நிலவிவந்த அரசியல் குழப்பம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தாலும் அவைத் தலைவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடி விவகாரம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் இரண்டு அமைச்சர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டு தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இந்நிலையில், குறித்த அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்புவதை முதலமைச்சர் விலக்கிக்கொள்ளவதாக அறிவித்த பின்னர் அவர் மீதான நம்பிக்கையில்…
-
- 3 replies
- 409 views
- 1 follower
-
-
நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவோம். – மாவை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுனரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெறுவது தொடர்பில் ஆளுனருடன் பேச இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஏற்பட்டு உள்ள சமரசம் ஏற்பட்டு உள்ளது அ…
-
- 1 reply
- 242 views
-
-
கொழும்புதுறைமுகத்தில் இரு பிரான்ஸ் நாட்டுக் கப்பல்கள் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன. மிஸ்ரல் மற்றும் கேர்பெட் ஆகிய இரு கப்பல்களே இவ்வாறு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. குறித்த இரு கப்பல்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுடன் இலங்கை கடற்படையினர், பிரான்ஸ் கடற்படையினருடன் இணைந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். Tags http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 157 views
-
-
வட மாகாண சபை சபையின் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன்மற்றும் கந்தையா சிவனேசன்ஆகியோர் பதவியேற்கவுள்ளனர் என இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக யாழ் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மற்றும் சுற்றாடல் அமைச்சராக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசனும் பதவியேற்கவுள்ளனர். அத்துடன் அவைத்தலைவர் மாற்றங்களும் அடுத்த அமர்வில் இடம்பெற்றுள்ளது என எமது செய்திச்சேவைக்கு தகவல் கிடைத்துள்ளது. http://www.quicknewstamil.com/2017/06/20/வடக்கு-மாகாண-சபைக்கு-புத/
-
- 0 replies
- 622 views
-
-
ஐ.தே.க. - சு.க. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்ரமரட்ன திட்டவட்டம் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் தேவைக்கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்…
-
- 0 replies
- 184 views
-
-
நுவரெலியா மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில்... நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றபோது, ஹட்டன் குப்பை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் திகாரம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அமைச்சர் ப.திகாம்பரத்துக்கும் மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இ.தொ.காவின் உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டம் முறையற்றவகையில் இடம்பெறுவதாகக் கூறி, இ.தொ.காவின் மூன்று உறுப்பினர்க…
-
- 0 replies
- 167 views
-
-
சி.வீ.கே. பிரேரணையை கையளித்தது சட்டத்திற்கு புறம்பானது.- சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண அவைத்தலைவர், நம்பிக்கையில்லா பிரேரணையை , வடமாகாண ஆளுனரிடம் கையளித்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் இருக்கின்றது. அவையில் ஒரு அமைச்சருக்கு எதிராகவோ முதலமைச்சர…
-
- 0 replies
- 387 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பில் இன்று நாம் ஆராய்கின்றோம். 38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாண சபையில் 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர். மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மேற்கொண்ட சில தீர்மானங்கள் காரணமாக மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே வெளிப்படையாக பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 538 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (19/06/2017)
-
- 0 replies
- 434 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 19-06-2017
-
- 0 replies
- 239 views
-
-
கனேடியவாழ் இலங்கை முஸ்லிம்கள் அந்நாட்டுப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கனேடிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அந்நாட்டு பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியனுப்பி வைத்துள்ளனர். இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தலையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கன…
-
- 1 reply
- 465 views
-
-
http://uthayandaily.com/story/7348.html http://uthayandaily.com/story/7348.html
-
- 0 replies
- 351 views
-
-
வலியுறுத்த மாட்டேன் : சம்பந்தனுக்கு சி.வி. விக்கினேஸ்வரன் கடிதம் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்களுக்கும் விதிக்கப்பட்ட கட்டாய விடுமுறையை வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்து ஒரு மாதகால கட்டாய விடுமுறையையே தான் வலியுறுத்த மாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்வதாக, வடமாகாண முதல…
-
- 1 reply
- 395 views
-
-
கொழும்பிலிருந்து சென்ற புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் விபத்து – ஒன்றரைமணி நேர தாமதத்தின்பின் பயணம் குளோபல் தமிழ்ச்செய்தியாளர் இன்று திங்கள் கிழமை அதிகாலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ் நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வந்துகொண்டிருந்த பொழுது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது இதன்பொழுது குறித்த மாடு இறந்துள்ளதுடன் புகையிரதத்தின் முன்பகுதியில் (டீபவர் ) பகுதியில் சேதம் ஏற்ப்பட்டமையால் புகையிரத்ததை நகர்த்துவதில் சிரமம் ஏற்ப்பட்டிருந்தது அதனை பின்னர் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் புகை…
-
- 1 reply
- 203 views
-
-
ரவிராஜ் கொலை தொடர்பான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்றையதினம் நீதமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்திருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 0 replies
- 236 views
-